மேலும் அறிய

அரசு பேருந்தை நிறுத்த கோரி நடத்துநர் மீது சரமாரி தாக்குதல் - வந்தவாசி அருகே பரபரப்பு

வந்தவாசி அரசு பேருந்தை நிறுத்த கோரி நடத்துனர் மீது சரமாரி தாக்குதல் நடத்திய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க அரசு பேருந்தை சாலையின் குறுக்கே நிறுத்தி நடத்துனர், ஓட்டுனர், போராட்டம்.

கும்பகோணத்தில் இருந்து காஞ்சீபுரம் நோக்கி அரசு பேருந்து சென்று கொண்டிருந்தது. பேருந்தில் தஞ்சை மாவட்டம் பாபநாசம் தாலுகா மீலட்டூர் கிராமத்தை சேர்ந்த ஓட்டுநர் மேகநாதன் வயது (34) இயக்கியுள்ளார். அந்த பேருந்தில் அதே தாலுக்கா அலவாந்திபுரத்தைச் சேர்ந்த முருகானந்தம் வயது (55) இருந்துள்ளார். அரசு பேருந்து திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி வழியாக காஞ்சிபுரத்திற்கு சென்று கொண்டு இருந்தது. அப்போது பேருந்தில் பயணம் செய்த பயணி ஒருவர் வந்தவாசி அடுத்த இளங்காடு கிராமத்தில் இறங்குகிறேன் பேருந்தை நிறுத்த வேண்டும் என பயணி நடத்துநரிடம் கேட்டுள்ளார். ஆனால் நடத்துநர் முருகானந்தம், அந்த இடத்தில் பேருந்து நிற்காது என கூறியுள்ளார். இதுகுறித்து பயணி நடத்துநரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். பிறகு பேருந்து அங்கு நிச்சயமாக நிற்காது என நடத்துநர் தெரிவித்ததால், ஆத்திரம் அடைந்த பயணி இளங்காடு கிராமத்தில் உள்ளவர்களுக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு இளங்காடு கூட்ரோடுக்கு அவருடைய நபர்களை வரவழைத்துள்ளார்.

 


அரசு பேருந்தை நிறுத்த கோரி நடத்துநர் மீது சரமாரி தாக்குதல்  -  வந்தவாசி அருகே பரபரப்பு

 

அதனைத்தொடர்ந்து இளங்காடு கூட்ரோடு அருகே பேருந்து செல்லும் வழிதடத்தில் இருச்சக்கர வாகனங்களை குறுக்கே நிறுத்தியுள்ளனர். பின்னர் பேருந்து நின்றபோது அங்கு நின்றவர்களுடன் பயணி, நடத்துநரை சரமாரியாக தாக்கிவிட்டு கழுத்தில் இருந்த ஒரு பவுன் தங்கச்சங்கிலியை பறித்துக்கொண்டு தப்பித்துச் சென்றார். இதனால் பேருந்தில் பயணம் செய்த பயணிகள் அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து பேருந்தின் ஓட்டுநர், நடத்துநர் திண்டிவனம்- வந்தவாசி செல்லும் நெடுஞ்சாலையின் குறுக்கே பேருந்தை நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த அரசு பேருந்தின் நடத்துநர்கள் மற்றும் ஓட்டுநர்கள் பேருந்தை குறுக்கே நிறுத்திவிட்டு போராட்டத்தில் கலந்து கொண்டனர். இதனால் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது.

 


அரசு பேருந்தை நிறுத்த கோரி நடத்துநர் மீது சரமாரி தாக்குதல்  -  வந்தவாசி அருகே பரபரப்பு

இந்த சம்பவம் குறித்து வந்தவாசி சரக துணை காவல் கண்காணிப்பாளர் கார்த்திக் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்த வந்தவாசி துணை காவல் கண்காணிப்பாளர் கார்த்திக் மற்றும் ஆய்வாளர் விஸ்வநாதன், துணை ஆய்வாளர் பிரகாஷ் மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட ஓட்டுநர் மற்றும் நடத்துநர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். காவல்துறையினர் தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் அவர்களை கைது செய்வதாக காவல்துறையினர் உறுதியளித்தனர். இதனையடுத்து ஓட்டுநர், மற்றும் நடத்துநர் போராட்டத்தை கைவிட்டனர். மேலும் அரசு பேருந்தில் இருந்தவர்களை வேறு பேருந்தில் அனுப்பி வைத்து விட்டு தாக்குதல் குறித்து அவர்கள் வந்தவாசி காவல்நிலையத்திற்கு சென்று புகார் அளித்தனர். இந்த சம்பவத்தால் மூன்று மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து தடைப்பட்டது. பேருந்தில் வந்த பயணி நடத்துநரை தாக்குதல் நடத்திய சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

ராகுல் காந்தியின் கேள்விக்கணைகள்.. மக்களவையில் லைன் கட்டி பதில் அளித்த மத்திய அமைச்சர்கள்!
ராகுல் காந்தியின் கேள்விக்கணைகள்.. மக்களவையில் லைன் கட்டி பதில் அளித்த மத்திய அமைச்சர்கள்!
Breaking News LIVE: அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் மீது கொலை மிரட்டல் வழக்கு
Breaking News LIVE: அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் மீது கொலை மிரட்டல் வழக்கு
Watch Video: சாலையில் ஹாயாக சுற்றித் திரிந்த 8 அடி நீள முதலை! வீடியோ எடுத்த வாகன ஓட்டிகள்!
Watch Video: சாலையில் ஹாயாக சுற்றித் திரிந்த 8 அடி நீள முதலை! வீடியோ எடுத்த வாகன ஓட்டிகள்!
TN BJP Leader: அரசியலுக்கு டாட்டா? மீண்டும் படிப்பு... படிப்பு! லண்டனுக்கு பறக்க தயாராகும் அண்ணாமலை?
TN BJP Leader: அரசியலுக்கு டாட்டா? மீண்டும் படிப்பு... படிப்பு! லண்டனுக்கு பறக்க தயாராகும் அண்ணாமலை?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

DMK vs PMK : அடித்து விரட்டிய திமுக! பழி வாங்கிய பாமக! அழுது புலம்பும் ஜெகத்ரட்சகன்! நடந்தது என்ன?DK Shivakumar vs Siddaramaiah : துணை முதல்வர் பதவிக்கு ஆப்பு?வேட்டு வைக்கும் சித்தராமையா!MK Stalin Vs Vijay | திமுக அடி மடியிலேயே.. சவால் விடும் விஜய்..! BEAST MODE ஆரம்பம்Rahul Gandhi | ”அய்யோ பாவம் ராகுல் இது நியாயமா பிர்லா?” சபையில் நடந்தது என்ன?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ராகுல் காந்தியின் கேள்விக்கணைகள்.. மக்களவையில் லைன் கட்டி பதில் அளித்த மத்திய அமைச்சர்கள்!
ராகுல் காந்தியின் கேள்விக்கணைகள்.. மக்களவையில் லைன் கட்டி பதில் அளித்த மத்திய அமைச்சர்கள்!
Breaking News LIVE: அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் மீது கொலை மிரட்டல் வழக்கு
Breaking News LIVE: அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் மீது கொலை மிரட்டல் வழக்கு
Watch Video: சாலையில் ஹாயாக சுற்றித் திரிந்த 8 அடி நீள முதலை! வீடியோ எடுத்த வாகன ஓட்டிகள்!
Watch Video: சாலையில் ஹாயாக சுற்றித் திரிந்த 8 அடி நீள முதலை! வீடியோ எடுத்த வாகன ஓட்டிகள்!
TN BJP Leader: அரசியலுக்கு டாட்டா? மீண்டும் படிப்பு... படிப்பு! லண்டனுக்கு பறக்க தயாராகும் அண்ணாமலை?
TN BJP Leader: அரசியலுக்கு டாட்டா? மீண்டும் படிப்பு... படிப்பு! லண்டனுக்கு பறக்க தயாராகும் அண்ணாமலை?
Suryakumar Yadav: ”உலகக் கோப்பையை நெஞ்சில் பச்சைக்குத்திக் கொள்ள போகிறேன்” - சூர்யாவின் 2 காரணங்கள்!
Suryakumar Yadav: ”உலகக் கோப்பையை நெஞ்சில் பச்சைக்குத்திக் கொள்ள போகிறேன்” - சூர்யாவின் 2 காரணங்கள்!
Mahua Moitra: பாஜக ஒன்றும் செய்ய முடியாது: நாடாளுமன்றத்தில் அனல் பறக்க உரையாற்றிய திரிணாமுல் எம்.பி
Mahua Moitra: பாஜக ஒன்றும் செய்ய முடியாது: நாடாளுமன்றத்தில் அனல் பறக்க உரையாற்றிய திரிணாமுல் எம்.பி
"பாஜகவினர் உண்மையான இந்துக்கள் அல்ல" பிரதமர், உள்துறை அமைச்சரை அதிரவிட்ட ராகுல் காந்தி!
Gold Smuggling: 2 மாதம், 267 கிலோ, 167  கோடி.. சென்னை ஏர்போர்ட்டில் கடை வாடகைக்கு எடுத்து தங்கம் கடத்திய யூடியூபர்!
Gold Smuggling: 2 மாதம், 267 கிலோ, 167 கோடி.. சென்னை ஏர்போர்ட்டில் கடை வாடகைக்கு எடுத்து தங்கம் கடத்திய யூடியூபர்!
Embed widget