மேலும் அறிய

அரசு பேருந்தை நிறுத்த கோரி நடத்துநர் மீது சரமாரி தாக்குதல் - வந்தவாசி அருகே பரபரப்பு

வந்தவாசி அரசு பேருந்தை நிறுத்த கோரி நடத்துனர் மீது சரமாரி தாக்குதல் நடத்திய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க அரசு பேருந்தை சாலையின் குறுக்கே நிறுத்தி நடத்துனர், ஓட்டுனர், போராட்டம்.

கும்பகோணத்தில் இருந்து காஞ்சீபுரம் நோக்கி அரசு பேருந்து சென்று கொண்டிருந்தது. பேருந்தில் தஞ்சை மாவட்டம் பாபநாசம் தாலுகா மீலட்டூர் கிராமத்தை சேர்ந்த ஓட்டுநர் மேகநாதன் வயது (34) இயக்கியுள்ளார். அந்த பேருந்தில் அதே தாலுக்கா அலவாந்திபுரத்தைச் சேர்ந்த முருகானந்தம் வயது (55) இருந்துள்ளார். அரசு பேருந்து திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி வழியாக காஞ்சிபுரத்திற்கு சென்று கொண்டு இருந்தது. அப்போது பேருந்தில் பயணம் செய்த பயணி ஒருவர் வந்தவாசி அடுத்த இளங்காடு கிராமத்தில் இறங்குகிறேன் பேருந்தை நிறுத்த வேண்டும் என பயணி நடத்துநரிடம் கேட்டுள்ளார். ஆனால் நடத்துநர் முருகானந்தம், அந்த இடத்தில் பேருந்து நிற்காது என கூறியுள்ளார். இதுகுறித்து பயணி நடத்துநரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். பிறகு பேருந்து அங்கு நிச்சயமாக நிற்காது என நடத்துநர் தெரிவித்ததால், ஆத்திரம் அடைந்த பயணி இளங்காடு கிராமத்தில் உள்ளவர்களுக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு இளங்காடு கூட்ரோடுக்கு அவருடைய நபர்களை வரவழைத்துள்ளார்.

 


அரசு பேருந்தை நிறுத்த கோரி நடத்துநர் மீது சரமாரி தாக்குதல் - வந்தவாசி அருகே பரபரப்பு

 

அதனைத்தொடர்ந்து இளங்காடு கூட்ரோடு அருகே பேருந்து செல்லும் வழிதடத்தில் இருச்சக்கர வாகனங்களை குறுக்கே நிறுத்தியுள்ளனர். பின்னர் பேருந்து நின்றபோது அங்கு நின்றவர்களுடன் பயணி, நடத்துநரை சரமாரியாக தாக்கிவிட்டு கழுத்தில் இருந்த ஒரு பவுன் தங்கச்சங்கிலியை பறித்துக்கொண்டு தப்பித்துச் சென்றார். இதனால் பேருந்தில் பயணம் செய்த பயணிகள் அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து பேருந்தின் ஓட்டுநர், நடத்துநர் திண்டிவனம்- வந்தவாசி செல்லும் நெடுஞ்சாலையின் குறுக்கே பேருந்தை நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த அரசு பேருந்தின் நடத்துநர்கள் மற்றும் ஓட்டுநர்கள் பேருந்தை குறுக்கே நிறுத்திவிட்டு போராட்டத்தில் கலந்து கொண்டனர். இதனால் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது.

 


அரசு பேருந்தை நிறுத்த கோரி நடத்துநர் மீது சரமாரி தாக்குதல் - வந்தவாசி அருகே பரபரப்பு

இந்த சம்பவம் குறித்து வந்தவாசி சரக துணை காவல் கண்காணிப்பாளர் கார்த்திக் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்த வந்தவாசி துணை காவல் கண்காணிப்பாளர் கார்த்திக் மற்றும் ஆய்வாளர் விஸ்வநாதன், துணை ஆய்வாளர் பிரகாஷ் மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட ஓட்டுநர் மற்றும் நடத்துநர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். காவல்துறையினர் தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் அவர்களை கைது செய்வதாக காவல்துறையினர் உறுதியளித்தனர். இதனையடுத்து ஓட்டுநர், மற்றும் நடத்துநர் போராட்டத்தை கைவிட்டனர். மேலும் அரசு பேருந்தில் இருந்தவர்களை வேறு பேருந்தில் அனுப்பி வைத்து விட்டு தாக்குதல் குறித்து அவர்கள் வந்தவாசி காவல்நிலையத்திற்கு சென்று புகார் அளித்தனர். இந்த சம்பவத்தால் மூன்று மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து தடைப்பட்டது. பேருந்தில் வந்த பயணி நடத்துநரை தாக்குதல் நடத்திய சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

அரசியல் கட்சிகளுக்கு செக்.. பொதுக்கூட்டம், ரோடு ஷோக்களுக்கான புதிய விதிகள்! பாதுகாப்பு நெறிமுறைகள் வெளியீடு!
அரசியல் கட்சிகளுக்கு செக்.. பொதுக்கூட்டம், ரோடு ஷோக்களுக்கான புதிய விதிகள்! பாதுகாப்பு நெறிமுறைகள் வெளியீடு!
sabarimalai temple : பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு! 10 மணி நேர காத்திருப்பு! பாதுகாப்பு பணியில் போலீசார் தீவிரம்!
sabarimalai temple : பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு! 10 மணி நேர காத்திருப்பு! பாதுகாப்பு பணியில் போலீசார் தீவிரம்!
ஆட்சியில் பங்கில்லை, ஆனால் கூடுதல் இடங்கள் கேட்போம்: மயிலாடுதுறையில் இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் வீரபாண்டியன் பேட்டி..
ஆட்சியில் பங்கில்லை, ஆனால் கூடுதல் இடங்கள் கேட்போம்: மயிலாடுதுறையில் இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் வீரபாண்டியன் பேட்டி..
திருப்பரங்குன்றம் மலை தீபம் விவகாரம்... மயிலாடுதுறை சுப்பிரமணியன் கோயில் கோபுரத்தில் தீபம் ஏற்றிய பாஜகவினர்..
திருப்பரங்குன்றம் மலை தீபம் விவகாரம்... மயிலாடுதுறை சுப்பிரமணியன் கோயில் கோபுரத்தில் தீபம் ஏற்றிய பாஜகவினர்..
ABP Premium

வீடியோ

Viluppuram Mobile Theft CCTV |நள்ளிரவில் கைவரிசை!COOL ஆக திருடிய திருடன்அதிர்ச்சி சிசிடிவி காட்சிகள்
Kanimozhi 2026 election | தேர்தலில் கனிமொழி போட்டி? லிஸ்ட்டில் 4 தொகுதிகள்! மாநில அரசியலுக்கு RETURNS?
Congress VS DMK | பங்கு கேட்ட மாணிக்கம் தாகூர்
Minister Moorthy Issue | அமைச்சர் மூர்த்தியைசுத்துப்போட்ட மக்கள்!மதுரையில் பரபரப்பு
DMK MLA Lakshmanan Kabbadi | ’’கபடி..கபடி..’’ கில்லி விஜய் ஆக மாறிய MLA.. வியந்து பார்த்த திமுகவினர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அரசியல் கட்சிகளுக்கு செக்.. பொதுக்கூட்டம், ரோடு ஷோக்களுக்கான புதிய விதிகள்! பாதுகாப்பு நெறிமுறைகள் வெளியீடு!
அரசியல் கட்சிகளுக்கு செக்.. பொதுக்கூட்டம், ரோடு ஷோக்களுக்கான புதிய விதிகள்! பாதுகாப்பு நெறிமுறைகள் வெளியீடு!
sabarimalai temple : பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு! 10 மணி நேர காத்திருப்பு! பாதுகாப்பு பணியில் போலீசார் தீவிரம்!
sabarimalai temple : பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு! 10 மணி நேர காத்திருப்பு! பாதுகாப்பு பணியில் போலீசார் தீவிரம்!
ஆட்சியில் பங்கில்லை, ஆனால் கூடுதல் இடங்கள் கேட்போம்: மயிலாடுதுறையில் இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் வீரபாண்டியன் பேட்டி..
ஆட்சியில் பங்கில்லை, ஆனால் கூடுதல் இடங்கள் கேட்போம்: மயிலாடுதுறையில் இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் வீரபாண்டியன் பேட்டி..
திருப்பரங்குன்றம் மலை தீபம் விவகாரம்... மயிலாடுதுறை சுப்பிரமணியன் கோயில் கோபுரத்தில் தீபம் ஏற்றிய பாஜகவினர்..
திருப்பரங்குன்றம் மலை தீபம் விவகாரம்... மயிலாடுதுறை சுப்பிரமணியன் கோயில் கோபுரத்தில் தீபம் ஏற்றிய பாஜகவினர்..
மதுரையில் ட்ரோன் பறக்க தடை... பாதுகாப்பு காரணங்களுக்காக அதிரடி உத்தரவு - காரணம் என்ன ?
மதுரையில் ட்ரோன் பறக்க தடை... பாதுகாப்பு காரணங்களுக்காக அதிரடி உத்தரவு - காரணம் என்ன ?
Rohit Sharma: 2027 வரைக்கும் வடா பாவ் வேண்டாம்.. ஃபிட்னஸ்சில் கறார் காட்டும் ரோகித்.. வைரல் வீடியோ
Rohit Sharma: 2027 வரைக்கும் வடா பாவ் வேண்டாம்.. ஃபிட்னஸ்சில் கறார் காட்டும் ரோகித்.. வைரல் வீடியோ
NEET 2026 Application: நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க ரெடியா? முக்கிய அறிவிப்பு வெளியீடு! தவறினால் வாய்ப்பு மிஸ்!
NEET 2026 Application: நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க ரெடியா? முக்கிய அறிவிப்பு வெளியீடு! தவறினால் வாய்ப்பு மிஸ்!
Kanimozhi Karunanidhi : ’சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் கனிமொழி?’ இறுதி பட்டியலில் 3 தொகுதிகள்..!
’சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் கனிமொழி?’ இறுதி பட்டியலில் 3 தொகுதிகள்..!
Embed widget