மேலும் அறிய

’மாசம் தவறாமல் மாமூல் தரோம் கொஞ்சம் பாத்து பண்ணுங்க சார்’- மணல் லாரி உரிமையாளரின் ஆடியோ வைரல்

’’செய்யாற்றில் இருந்து சென்னைக்கு இரவு நேரத்தில் வரிசையாக லாரிகள் மணல் கடத்தி செல்லப்படுவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு’’

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அடுத்த தூசி காவல்நிலையத்தில் பணிபுரியும் ஏட்டு சன்னிலாயுடு  கடந்த சில நாட்களுக்கு முன்பு வாகன தணிக்கையில் ஈடுபட்டார். அப்போது, அந்த வழியாக மணல் கடத்தி வந்த லாரியை மடக்கி பிடித்து விசாரித்தார். அதனையடுத்து லாரி ஓட்டுனர், காவலரிடம் மணல் லாரி சிக்கிய தகவலை சம்பந்தப்பட்ட லாரி உரிமையாளருக்கு தெரிவித்தார். உடனடியாக, வாகன தணிக்கையில் ஈடுபட்ட சன்னிலாயுடு ஏட்டு செல்போனுக்கு தொடர்பு கொண்ட மணல் லாரி உரிமையாளர் பேசும் ஆடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி இருக்கிறது.

செல்போனில் பேசும் லாரி உரிமையாளர், ''நம்மோட 4 லாரி ஓடுது சார், அதோடு என்னுடைய மேனேஜரின் ஒரு லாரியும் ஓடுது. எல்லாவற்றுக்கும் சேர்த்து நம்ம தூசி காவல்நிலைய ஆய்வாளர் அண்ணாதுரை சாருக்கு மாதம் தோறும் 2 ஆயிரம் கொடுத்துடறேன். ஆய்வாளருக்கு, டிரைவர் உலகநாதன் மூலமா பணம் சேர்ந்திடும். காவல்நிலையத்திற்கு சேர வேண்டியதை சிலம்பரசன் சார் கிட்ட கொடுத்து விடுகிறோம். போன தடவைகூட அண்ணாமலை ஏட்டுவிடம் கொடுத்துட்டு வந்தேன். கொஞ்சம் பாத்து பண்ணுங்க சார்' என சிரித்தபடியே சாதாரணமாக பதட்டம் இல்லாமல் பேசியுள்ளார்.

’மாசம் தவறாமல் மாமூல் தரோம் கொஞ்சம் பாத்து பண்ணுங்க சார்’- மணல் லாரி உரிமையாளரின் ஆடியோ வைரல்

அதனால் விரக்தியடைந்த அந்த காவலர் சன்னிலாயுடு ஏட்டு, ''ஒரு லாரியை கூட எங்களால் மடக்க முடியல, ஒரு வழக்கு கூட போட முடியல, கேட்டா ஆய்வாளருக்கு மாமூல் கொடுக்கிறோம்னு சொல்கிறார்கள். நாங்க வேலை செய்கிறதா இல்ல, வெளியே போயிடுறதானு முழிச்சிகிட்டு இருக்கிறோம்'' என புலம்பியபடியே செல் போனை துண்டிக்கிறார். இந்த செல்போன் உரையாடல், தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது. சம்பந்தப்பட்ட ஆடியோவில் குறிப்பிடப்படும் தூசி காவல்நிலையம்  ஆய்வாளர் அண்ணாதுரை, தனியார் பஸ் மற்றும் கல்குவாரி லாரி  முதலாளிகளிடம் ஓவர்லோடு வழக்குப்பதிவு செய்யாமல் இருக்க மாதம்தோறும் மாமூல் வசூலிப்பது குறித்த ஆடியோவும் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், இந்த ஆடியோ தொடர்பாக திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பவன்குமார் ரெட்டி விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளார்.

’மாசம் தவறாமல் மாமூல் தரோம் கொஞ்சம் பாத்து பண்ணுங்க சார்’- மணல் லாரி உரிமையாளரின் ஆடியோ வைரல்

இதுகுறித்து காவல் கண்காணிப்பாளர் தெரிவிக்கையில், 'தற்போது சமூக வலைதளங்களில் பரவி வரும் ஆடியோவில் பேசும் ஏட்டு வெளி மாவட்ட தேர்தல் பாதுகாப்பு பணிக்காக சென்றிருக்கிறார். அவர் பணி முடித்து திரும்பி வந்ததும், நடந்த சம்பவங்கள் குறித்து நேரடி விசாரணை மேற்கொள்ளப்படும். விசாரணையில், முறைகேடுகள் உறுதி செய்யப்பட்டால் சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.

’மாசம் தவறாமல் மாமூல் தரோம் கொஞ்சம் பாத்து பண்ணுங்க சார்’- மணல் லாரி உரிமையாளரின் ஆடியோ வைரல்

அதனை தொடர்ந்து சென்னைக்கு மணல் கடத்தல் மணல் கடத்தலில் ஈடுபடும் லாரி உரிமையாளர், வாகன சோதனையில் லாரி பிடிபட்ட போதும் பதட்டம் ஏதும் இல்லாமல் பேசுவதன் மூலம் இந்த மாமூல் விவகாரம் பல ஆண்டுகளாக தொடர்ந்து நீடித்து இருக்கலாம் என தெரிகிறது. மேலும், கடந்த 10 ஆண்டுகளில் அந்த பகுதியில் ஆற்று மணல் சூறையாடப்பட்டு உள்ளதாக சமூக ஆர்வலர்கள் புலம்புகின்றனர். குறிப்பாக, செய்யாற்றில் இருந்து சென்னைக்கு இரவு நேரத்தில் வரிசையாக லாரிகள் மணல் கடத்தி செல்லப்படுகின்றன. ஆனால், மாவட்ட எல்லையான தூசியில் சோதனை நடத்த வேண்டிய காவல்துறையினர், மாமூல் வாங்கிக்கொண்டு விடுவித்து ஏற்கனவே பரவலாக குற்றச்சாட்டு இருந்த நிலையில், அதை உறுதிப்படுத்தும் விதமாக இந்த ஆடியோ அமைந்திருக்கிறது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Udhayanidhi Stalin: துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. நாளை பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. நாளை பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
Breaking News LIVE 28th Sep 2024: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:-  திருமாவளவன்
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:- திருமாவளவன்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

CSK Bowling Coach : KKR-க்கு தாவிய BRAVO CSK-க்கு வரும் மல்லிங்கா? SKETCH போடும் தோனிTN Cabinet Shuffle : ”PTR நீங்களே வாங்க!” மீண்டும் நிதித்துறை அமைச்சர்? ஸ்டாலின் பக்கா ஸ்கெட்ச்!Thrissur ATM Robbery | ”நாங்க திருடாத AREA-ஏ இல்ல” கொள்ளையர்கள் பகீர் வாக்குமூலம்!Pawan Kalyan |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi Stalin: துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. நாளை பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. நாளை பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
Breaking News LIVE 28th Sep 2024: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:-  திருமாவளவன்
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:- திருமாவளவன்
அறிஞர் அண்ணா வீட்டுக்குச்சென்று பதிவேட்டில் எழுதிய முதல்வர் ஸ்டாலின்.. என்ன எழுதினார் தெரியுமா?
அறிஞர் அண்ணா வீட்டுக்குச்சென்று பதிவேட்டில் எழுதிய முதல்வர் ஸ்டாலின்.. என்ன எழுதினார் தெரியுமா?
ஜாக்பாட்! பெண்களுக்கு ரூ. 2000.. ஏழைகளுக்கு வீடுகள்.. வாக்குறுதிகளை வாரி வழங்கிய காங்கிரஸ்!
ஜாக்பாட்! பெண்களுக்கு ரூ. 2000.. ஏழைகளுக்கு வீடுகள்.. வாக்குறுதிகளை வாரி வழங்கிய காங்கிரஸ்!
Second Moon: பூமிக்கு 2-வது நிலா! நிலாவுக்கு புது நண்பன்.. ஆச்சர்யமூட்டும் நாளைய வானியல் நிகழ்வு
பூமிக்கு 2-வது நிலா! நிலாவுக்கு புது நண்பன்.. ஆச்சர்யமூட்டும் நாளைய வானியல் நிகழ்வு
என்னது மிரட்டி பணம் பறிச்சாங்களா? மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு!
என்னது மிரட்டி பணம் பறிச்சாங்களா? மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு!
Embed widget