மேலும் அறிய

உள்ளாட்சித் தேர்தல்: ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் கடந்த 2 நாட்களில் 1,181 பேர் மனுதாக்கல்

வேட்பாளர்கள் வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்ய வரும்போது சமூக இடைவெளியைப் பின்பற்றியும், கையுறை, முககவசம் அணிவது போன்ற கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை அவசியம் கடைப்பிடிக்க வேண்டும்.

தமிழகத்தில் விடுபட்ட 9 மாவட்டங்களில் அடுத்த மாதம் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக  ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடக்கிறது. இதனைத் தொடர்ந்து வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டங்களிலும் உள்ளாட்சித் தேர்தல் நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் நேற்று முன்தினம் தொடங்கியது. ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் 7,251 ஊரக உள்ளாட்சி பதவிகளுக்கான தேர்தலில் வேட்பு மனுத் தாக்கல் நேற்று முன்தினம் தொடங்கியது .
 

உள்ளாட்சித் தேர்தல்: ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் கடந்த 2 நாட்களில் 1,181 பேர் மனுதாக்கல்

இதில், வேலூர் மாவட்டத்தில் உள்ள 247 கிராம ஊராட்சி மன்ற தலைவர், 2,079 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர், 7 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள 138 ஊராட்சி ஒன்றிய வார்டு கவுன்சிலர், 14 மாவட்ட ஊராட்சி வார்டு கவுன்சிலர் பதவிகளுக்கு நேரடி தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலுக்காக மாவட்டத்தில் 1,331 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. வேலூர் மாவட்டத்தில் உள்ள 7 ஊராட்சி ஒன்றியங்களுக்கும் தேர்தல் நடத்தும் அலுவலர்களாக அந்தந்த வட்டார வளர்ச்சி அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள 13 மாவட்ட ஊராட்சி வார்டு கவுன்சிலர், 125 ஊராட்சி ஒன்றிய வார்டு கவுன்சிலர், 208 ஊராட்சி மன்ற தலைவர், 1,779 கிராம ஊராட்சி வார்டு கவுன்சிலர் பதவிகளுக்கான தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக மொத்தம் 1,221 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இதுபோலவே ராணிப்பேட்டை மாவட்டத்தில் 13 மாவட்ட ஊராட்சி வார்டு கவுன்சிலர், 127 ஊராட்சி ஒன்றிய வார்டு கவுன்சிலர், 288 ஊராட்சி மன்ற தலைவர், 2,220 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு நடைபெற உள்ள தேர்தலுக்காக மொத்தம் 1,410 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.


உள்ளாட்சித் தேர்தல்: ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் கடந்த 2 நாட்களில் 1,181 பேர் மனுதாக்கல்

தற்போது கொரோனா நோய்த் தொற்றின் இடையே நடத்தப்படும் தேர்தல் என்பதால் வேட்பாளர்கள் வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்ய வரும்போது சமூக இடைவெளியைப் பின்பற்றியும், கையுறை, முககவசம் அணிவது போன்ற கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை அவசியம் கடைப்பிடிக்க வேண்டும். மாநில தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி வேட்பாளர்கள் அனைவரும் கொரோனா தடுப்பு பணிகளைச் சரியாகப் பின்பற்றுவதை உறுதிசெய்ய வேண்டும் என்று வேட்பாளர்களுக்கு ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து வேலூர் மாவட்டத்தில் ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிக்கு 11 பேரும், கிராம பஞ்சாயத்துத் தலைவர் பதவிக்கு 109 பேரும், கிராம பஞ்சாயத்து வார்டு உறுப்பினர் பதவிக்கு 350 பேரும் மனு தாக்கல் செய்திருந்தனர். அதன்படி நேற்று ஒரே நாளில் 470 பேர் மனுத் தாக்கல் செய்துள்ளனர். 2 நாட்களையும் சேர்த்து 526 பேர் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.
 

உள்ளாட்சித் தேர்தல்: ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் கடந்த 2 நாட்களில் 1,181 பேர் மனுதாக்கல்
 
ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள 7 ஊராட்சி ஒன்றிய அலுவலங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் வேட்புமனு தாக்கல் நேற்று 2-வது நாளாக நடந்தது. 2-வது நாளான நேற்று மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் பதவிக்குப் போட்டியிட ஒருவரும், ஒன்றியக் குழு உறுப்பினர் பதவிக்குப் போட்டியிட 5 பேரும், ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்குப் போட்டியிட 99 பேரும், கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்குப் போட்டியிட 227 பேரும் என மொத்தம் 332 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.
உள்ளாட்சித் தேர்தல்: ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் கடந்த 2 நாட்களில் 1,181 பேர் மனுதாக்கல்
 
திருப்பத்தூர் மாவட்டத்தில் திருப்பத்தூர், கந்திலி, ஜோலார்பேட்டை, நாட்டறம்பள்ளி, ஆலங்காயம், மாதனூர் ஆகிய 6 ஊராட்சி ஒன்றியங்களிலும் நேற்று 2-வது நாளாக வேட்புமனு தாக்கல் நடந்தது. 2-வது நாளான நேற்று ஊராட்சிமன்ற தலைவர் பதவிக்கு 83 பேரும், ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 235 பேரும், ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு 5 பேரும் என மொத்தம் 323 பேர் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.  மாவட்ட கவுன்சிலர் பதவிகளுக்கு யாரும் நேற்று மனுத்தாக்கல் செய்யவில்லை.
 
2-வது நாளான நேற்று 3 மாவட்டங்களிலும் மொத்தம் 1,181 பேர் மனுதாக்கல் செய்துள்ளனர் .
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IND vs ZIM Match Highlights: ஜிம்பாப்வேக்கு பதிலடி கொடுத்த இந்தியா! 2 வது டி20 போட்டியில் அபார வெற்றி!
IND vs ZIM Match Highlights: ஜிம்பாப்வேக்கு பதிலடி கொடுத்த இந்தியா! 2 வது டி20 போட்டியில் அபார வெற்றி!
ஜம்மு காஷ்மீரில் என்கவுண்டர்.. வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்கள்.. நடந்தது என்ன?
ஜம்மு காஷ்மீரில் என்கவுண்டர்.. வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்கள்.. நடந்தது என்ன?
Breaking News LIVE, July 7 : இரவு 10 மணிவரை 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு ! வானிலை மையம் அறிவிப்பு
Breaking News LIVE, July 7 : இரவு 10 மணிவரை 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு ! வானிலை மையம் அறிவிப்பு
Abhishek Sharma: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 போட்டி.. மொரட்டு அடி..மிரட்டல் சதம்! அசத்திய அபிஷேக் ஷர்மா!
Abhishek Sharma: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 போட்டி.. மொரட்டு அடி..மிரட்டல் சதம்! அசத்திய அபிஷேக் ஷர்மா!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Armstrong Funeral | உடல் அடக்கம் எங்கே? நீதிமன்றம் சொன்னது என்ன? சம்மதித்த ஆம்ஸ்ட்ராங் மனைவிMayawati in Armstrong Funeral |  Armstrong Murder | உண்மையான குற்றவாளிகள் யார்?அஸ்ரா கர்க் அதிர்ச்சி தகவல் ஆம்ஸ்ட்ராங் படுகொலை..Armstrong Murder : சாமானியன் To தலைவன்!படுகொலை - பகீர் தகவல்! யார் இந்த ஆம்ஸ்ட்ராங்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IND vs ZIM Match Highlights: ஜிம்பாப்வேக்கு பதிலடி கொடுத்த இந்தியா! 2 வது டி20 போட்டியில் அபார வெற்றி!
IND vs ZIM Match Highlights: ஜிம்பாப்வேக்கு பதிலடி கொடுத்த இந்தியா! 2 வது டி20 போட்டியில் அபார வெற்றி!
ஜம்மு காஷ்மீரில் என்கவுண்டர்.. வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்கள்.. நடந்தது என்ன?
ஜம்மு காஷ்மீரில் என்கவுண்டர்.. வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்கள்.. நடந்தது என்ன?
Breaking News LIVE, July 7 : இரவு 10 மணிவரை 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு ! வானிலை மையம் அறிவிப்பு
Breaking News LIVE, July 7 : இரவு 10 மணிவரை 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு ! வானிலை மையம் அறிவிப்பு
Abhishek Sharma: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 போட்டி.. மொரட்டு அடி..மிரட்டல் சதம்! அசத்திய அபிஷேக் ஷர்மா!
Abhishek Sharma: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 போட்டி.. மொரட்டு அடி..மிரட்டல் சதம்! அசத்திய அபிஷேக் ஷர்மா!
TNPL 2024: NRK vs CSG: கடைசி ஓவரில் கெத்து காட்டிய நித்திஷ்! - 3 விக்கெட் வித்தியாசத்தில் சேப்பாக்கை வீழ்த்திய நெல்லை ராயல்!
TNPL 2024: NRK vs CSG: கடைசி ஓவரில் கெத்து காட்டிய நித்திஷ்! - 3 விக்கெட் வித்தியாசத்தில் சேப்பாக்கை வீழ்த்திய நெல்லை ராயல்!
Kanchana 4: காஞ்சனா 4 ரெடி! முக்கிய அப்டேட்டை கொடுத்த ராகவா லாரன்ஸ்
Kanchana 4: காஞ்சனா 4 ரெடி! முக்கிய அப்டேட்டை கொடுத்த ராகவா லாரன்ஸ்
Sunil Gavaskar: ட்ராவிட்டிற்கு இதுதான் உயர்ந்த கெளரவமாக இருக்கும்! அரசுக்கு கவாஸ்கர் வைத்த முக்கிய கோரிக்கை!
Sunil Gavaskar: ட்ராவிட்டிற்கு இதுதான் உயர்ந்த கெளரவமாக இருக்கும்! அரசுக்கு கவாஸ்கர் வைத்த முக்கிய கோரிக்கை!
EPS - Annamalai: நான் துரோகியா? அண்ணாமலைதான் பச்சோந்தி; சுயநலவாதி ஓபிஎஸ்: வச்சி செய்த இபிஎஸ்
EPS - Annamalai: நான் துரோகியா? அண்ணாமலைதான் பச்சோந்தி; சுயநலவாதி ஓபிஎஸ்: வச்சி செய்த இபிஎஸ்
Embed widget