![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
கணவரை கழற்றி விட்டு தோழியுடன் ‛எஸ்கேப்’ ஆன புதுப்பெண்; மேற்கு வங்கம் விரைந்தது தனிப்படை!
ரயில் புற்பட்டு விட்டதே என்று தனது மனைவியை தேட ஆரம்பித்த காமராஜிற்கு அதிர்ச்சி. அவரது மனைவியும் கடைசி நிமிடத்தில் ரயிலில் புறப்பட்டு சென்றது தெரியவந்தது.
![கணவரை கழற்றி விட்டு தோழியுடன் ‛எஸ்கேப்’ ஆன புதுப்பெண்; மேற்கு வங்கம் விரைந்தது தனிப்படை! newly married girl went absconding with her north indian girl friend கணவரை கழற்றி விட்டு தோழியுடன் ‛எஸ்கேப்’ ஆன புதுப்பெண்; மேற்கு வங்கம் விரைந்தது தனிப்படை!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/07/23/b192625f32658d545e7144688be1231e_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
ஜோலார்பேட்டை அருகே திருமணமான 2 மாதத்தில் புதுப்பெண்ணும் அவரது வடநாட்டு தோழியும் தலைமறைவான சம்பவம் காவல் துறையினரிடம் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது .
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த நாயக்கனேரி நடுவூர் கிராமத்தை சேர்ந்தவர் காமராஜ் (28) தனியார் டிராவல்ஸ் கம்பெனி நடத்திவருகிறார். திருப்பத்தூர் மாவட்டத்தில் அதே பகுதியை சேர்ந்தவர் ஷோபா (20) திருமணத்துக்கு முன்பு வரை திருப்பூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்துவந்த ஷோபாவுக்கும் காமராஜ்க்கும் 2 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது .
திருப்பூரில் பணிபுரியும் பொழுது ஷோபாவுக்கும் மேற்கு வங்காளத்தை சேர்ந்த ஜெயஸ்ரீ என்ற பெண்ணும் வேலை செய்யும் இடத்தில நட்பாய் பழகியுள்ளனர் . கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு ஷோபாவை சந்திக்க நாயக்கனேரி நடுவூர் கிராமத்திற்கு வந்த ஜெயஸ்ரீ , ஷோபா மற்றும் அவரது கணவர் காமராஜுடன் தங்கியுள்ளார்.
காமராஜ் வீட்டில் இருந்த அனைவரிடமும் மிகவும் அன்பாய் பழகிய ஜெயஸ்ரீ , தனக்கு சொந்த ஊரில் ஒரு முக்கியமான வேலை இருப்பதாகவும் , அதற்காக சொந்த ஊருக்கு செல்வதற்காக ட்ரெயின் டிக்கெட் புக் செய்து இருப்பதாகவும் , எனவே தன்னை ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தில் வந்து வழி அனுப்பி வைக்க ஷோபா கண்டிப்பாக வர வேண்டும் என்று , ஜெயஸ்ரீ காமராஜிடம் கூறியுள்ளார் .
இதற்கு சம்மதித்த காமராஜ் ,ஜெயஸ்ரீயை வழியனுப்பி வைக்க தனது மனைவியை அழைத்துக் கொண்டு , புதன் கிழமை இரவு ஜோலார்பேட்டை ரயில் நிலையம் சென்றுள்ளார் .
கல்கத்தா போகும் ட்ரைனில் ஏறி அமர்த்தபடி ஷோபாவிடம் ஜன்னல் வழியாக பேசி கொண்டிருந்துள்ளார் ஜெயஸ்ரீ , ட்ரெயின் கிளம்பும் கடைசி நேரத்தில் தனது தோழிக்கு தண்ணீர் வாங்கி வந்து கொடுக்கும் படி ஷோபா தனது கணவரை கேட்டுள்ளார் .
அவசரஅவசரமாக தண்ணீர் வாங்கிவர காமராஜ் சென்று வருவதற்குள் , அந்த கல்கத்தா ட்ரெயின் நடை மேடையில் இருந்து புறப்பட்டு சென்றுகொண்டு இருந்தது .
ரயில் புற்பட்டு விட்டதே என்று தனது மனைவியை தேட ஆரம்பித்த காமராஜ்க்கு பேர் அதிர்ச்சி காத்திருந்தது . நடைமேடையில் இருந்தவர்களிடம் விசாரித்ததில் , அவரது மனைவியும் கடைசி நிமிடத்தில் ரயிலில் புறப்பட்டு சென்று விட்டதாக தெரிவித்தனர் . ஒரு வேலை தவறுதலாக ரயிலில் ஏறியிருக்கலாம் என்று சந்தேகித்து , தனது மனைவியின் தோழி ஜெயஸ்ரீ செல் போனுக்கு முயற்சி செய்த காமராஜ் , ஜெயஸ்ரீயின் நம்பர் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது என்று தெரிந்த உடன் அதிர்ச்சிக்கு உள்ளாகி இருக்கிறார் .
அன்று இரவே ஜோலார்பேட்டை ரயில்வே போலீசாரிடம் இது குறித்து புகார் தெரிவித்துள்ளார் காமராஜ் , அவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் ரயில்வே இன்ஸ்பெக்டர் மனோகரன் வழக்கு பதிவு செய்து . திருப்பூரில் அவர்கள் வேலை செய்துவந்த தனியார் நிறுவனத்தை தொடர்புகொண்டு , ஜெயஸ்ரீயின் விலாசத்தை பெற்று, அவர்களை தேடி இன்று (வெள்ளிக்கிழமை ) ஒரு தனிப்படை மேற்கு வங்காளத்துக்கு விரைந்துள்ளது .
திருமணமான 2 மாதத்திலே புதுப்பெண் தனது பெண்தோழியுடன் தலைமறைவான சம்பவம் போலீஸ் மற்றும் காமராஜின் உறவினர்கள் மத்தியில் வியப்பை ஏற்படுத்தியுள்ளது . அவர்கள் இருவரையும் மீட்ட பின்னரே அவர்கள் மாயமானத்திற்கான முழு காரணமும் தெரிய வரும் என்று போலீஸ் தரப்பில் தெரிவித்துள்ளனர் .
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)