மேலும் அறிய

திருவண்ணாமலை: பாலியல் குற்றங்களை தடுக்க இலவச தொலைபேசி எண் அறிமுகம்

திருவண்ணாமலையில் பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களை தடுப்பது குறித்து காவல்துறையினர் சார்பில் இலவச தொலைபேசி எண் மற்றும் விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.

திருவண்ணாமலை டேனிஷ் மிஷன் பள்ளி வளாகத்தில் இருந்து விழிப்புணர்வு ஊர்வலத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பவன்குமார் தலைமை தாங்கி கொடியசைத்து துவங்கி வைத்தார். இதில் திருவண்ணாமலை நகரில் உள்ள 10 பள்ளிகளில் இருந்து 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவிகள் கலந்துகொண்டனர். இந்த டேனிஷ் மிஷன் பள்ளி வளாகத்தில் இருந்து பெரியார் சிலை, மத்திய பஸ் நிலையம், அண்ணா நுழைவு வாயில் வழியாக வந்து வேங்கிக்காலில் உள்ள ஆண்டாள் சிங்கார வேலு திருமண மண்டபத்தில் நிறைவடைந்தது. இந்த ஊர்வலத்தின் போது போக்சோ சட்டம், குழந்தை திருமணம் தடுப்பு, சிறுமிகளை சீண்டினால் சிறை தண்டனை என்று விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கையில் பதாகைகளை ஏந்தியபடியும், கோஷங்கள் எழுப்பிய படியும் மாணவிகள் சென்றனர். பின்னர் மண்டபத்தில் மாணவிகளுக்கு விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி நடைபெற்றது. அதைத் தொடர்ந்து நடைபெற்ற விழிப்புணர்வு கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளர்களாக திருவண்ணாமலை மாவட்ட போக்சோ நீதிமன்ற நீதிபதி வசந்தி, மாவட்ட சமூல நல அலுவலர் மீனாம்பிகை, மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் செல்வி ஆகியோர் கலந்துகொண்டு பேசினர்.  

 


திருவண்ணாமலை: பாலியல் குற்றங்களை தடுக்க இலவச தொலைபேசி எண் அறிமுகம்

 

 

போக்சோ நீதிமன்ற நீதிபதி பேசுகையில்,

பள்ளி சிறுமிகளுக்கு பாலியல் தொடர்பாக எந்தவித பிரச்சினைகள் ஏற்பட்டாலும் உடனடியாக பெற்றோரிடமும், காவல்துறையினரிடமும் தகவல் தெரிவிக்க வேண்டும். காலதாமதம் செய்தால் குற்றவாளிகள் தப்பிக்கக்கூடும். பெண் குழந்தைகள் தெரியமாக செயல்பட வேண்டும்’ என்றார். இதனையடுத்து பள்ளி மாணவ-மாணவிகள் மனஉளச்சலால் தற்கொலை செய்வது போன்ற தவறான நடவடிக்கையில் ஈடுபடுவதை தடுப்பதற்காக காவல் துறை சார்பில் அவர்களுக்கு ஆலோசனை வழங்குவதற்காக 95491 74174 இலவச எண் தொடங்கப்பட்டு உள்ளது. இந்த எண்ணை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பவன்குமார் அறிமுகம் செய்தார். இதற்கான அறிமுக பதாகையை போக்சோ நீதிமன்ற நீதிபதி வசந்தி பெற்றுக்கொண்டார். 

 


திருவண்ணாமலை: பாலியல் குற்றங்களை தடுக்க இலவச தொலைபேசி எண் அறிமுகம்

 

 

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பவன்குமார் பேசுகையில்:  

நீங்கள் பள்ளியில் படித்து கொண்டிருக்கும் போதே திருமணம் செய்து வைப்பதாக பெற்றோர்கள் பேசினால். இதுகுறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். அதேபோன்று மாணவிகளை கேலி, கிண்டல் செய்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். பள்ளி தேர்வில் மதிப்பெண் குறைந்தால் வீட்டில் திட்டுவார்கள் என பலர் மன உளச்சலில் தற்கொலை செய்வது போன்று தவறான நடவடிக்கையில் ஈடுபடுகின்றனர். இதுபோன்ற தவறான செயலில் ஈடுபடக்கூடாது. மன உளச்சல் ஏற்பட்டால் காவல்துறையினர் அறிமுகம் செய்துள்ள ஆலோசகர் எண்ணை தொடர்பு கொண்டால் உங்களை தேடி அவர்கள் வந்து ஆலோசனை வழங்குவார்கள்.

 

 


திருவண்ணாமலை: பாலியல் குற்றங்களை தடுக்க இலவச தொலைபேசி எண் அறிமுகம்

 

மாணவிகளுக்கு பாலியல் ரீதியாக பிரச்சினைகள் இருந்தாலும் காவல்துறையினரிடம் புகார் தெரிவிக்க வேண்டும். கோடை விடுமுறைக்கு பின் நீங்கள் பள்ளிக்கு வரும் போது அனைத்து பள்ளிகளிலும் இதுகுறித்து புகார் தெரிவிக்க காவல் துறை சார்பில் புகார் பெட்டி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. மாணவிகள் எந்த பிரச்சினையாக இருந்தாலும் தைரியமாக எதிர்கொள்ள வேண்டும். காவல்துறையினர் உங்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள் என இவ்வாறு அவர் பேசினார். இந்த விழிப்புணர்வு கூட்டத்தில் திருவண்ணமாலை உதவி காவல் கண்காணிப்பாளர் கிரண்ஸ்ருதி, துணை போலீஸ் சூப்பிரண்டு அண்ணாதுரை, ஆய்வாளர் ஹேமமாலினி, கவிதா உள்பட காவலர்கள், சைல்டு லைன் அதிகாரிகள் என பல்வேறு துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Udhayanidhi Stalin: துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. இன்று பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. இன்று பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
Breaking News LIVE 28th Sep 2024: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:-  திருமாவளவன்
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:- திருமாவளவன்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

CSK Bowling Coach : KKR-க்கு தாவிய BRAVO CSK-க்கு வரும் மல்லிங்கா? SKETCH போடும் தோனிTN Cabinet Shuffle : ”PTR நீங்களே வாங்க!” மீண்டும் நிதித்துறை அமைச்சர்? ஸ்டாலின் பக்கா ஸ்கெட்ச்!Thrissur ATM Robbery | ”நாங்க திருடாத AREA-ஏ இல்ல” கொள்ளையர்கள் பகீர் வாக்குமூலம்!Pawan Kalyan |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi Stalin: துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. இன்று பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. இன்று பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
Breaking News LIVE 28th Sep 2024: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:-  திருமாவளவன்
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:- திருமாவளவன்
அறிஞர் அண்ணா வீட்டுக்குச்சென்று பதிவேட்டில் எழுதிய முதல்வர் ஸ்டாலின்.. என்ன எழுதினார் தெரியுமா?
அறிஞர் அண்ணா வீட்டுக்குச்சென்று பதிவேட்டில் எழுதிய முதல்வர் ஸ்டாலின்.. என்ன எழுதினார் தெரியுமா?
ஜாக்பாட்! பெண்களுக்கு ரூ. 2000.. ஏழைகளுக்கு வீடுகள்.. வாக்குறுதிகளை வாரி வழங்கிய காங்கிரஸ்!
ஜாக்பாட்! பெண்களுக்கு ரூ. 2000.. ஏழைகளுக்கு வீடுகள்.. வாக்குறுதிகளை வாரி வழங்கிய காங்கிரஸ்!
Second Moon: பூமிக்கு 2-வது நிலா! நிலாவுக்கு புது நண்பன்.. ஆச்சர்யமூட்டும் நாளைய வானியல் நிகழ்வு
பூமிக்கு 2-வது நிலா! நிலாவுக்கு புது நண்பன்.. ஆச்சர்யமூட்டும் நாளைய வானியல் நிகழ்வு
என்னது மிரட்டி பணம் பறிச்சாங்களா? மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு!
என்னது மிரட்டி பணம் பறிச்சாங்களா? மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு!
Embed widget