மேலும் அறிய

'எங்களை ஏமாத்திட்டாங்க.. எங்க மரணத்துக்கு யாரும் காரணமில்ல” : கணவன், மனைவி தற்கொலை கடிதம்..!

சம்பவம் நடந்த வீட்டில் சோதனை நடத்தியபோது, அங்கு அவர்கள் இறப்பதற்கு முன்பு எழுதி வைத்திருந்த 9 பக்கங்களை கொண்ட உருக்கமான கடிதம் ஒன்றை கைப்பற்றினர்

தொழில் நஷ்டம் அடைந்ததாலும் ,  திருமணம் நடந்து 3 வருடங்கள் ஆகியும் , குழந்தை பிறக்காத மனவேதனையில் அரிசிக் கடை உரிமையாளர் மற்றும் அவரது  மனைவி ஒரே புடவையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தற்கொலை செய்துகொள்வதற்கு முன் அரிசிக் கடை உரிமையாளர்தான் கைப்பட எழுதி வைத்திருந்த  கடிதத்தைக்  கைப்பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வேலூர் மாவட்டம் காட்பாடி தாலுகா வள்ளிமலை கூட்ரோடு போடிநத்தம் கிராமத்தைச் சேர்ந்தவர் சிவாஜி என்கிற வரதராஜ் (வயது 35). சிவாஜி அணைக்கட்டு போலீஸ் நிலையம் எதிரில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் அரிசி மற்றும் கால்நடைகளுக்குத் தேவையான தீவனங்கள் விற்கும் கடை நடத்தி வந்தார். மேலும் இவர் மாதாந்திர ஏலச்சீட்டும் நடத்தி வந்துள்ளார்.
 

எங்களை ஏமாத்திட்டாங்க.. எங்க மரணத்துக்கு யாரும் காரணமில்ல” : கணவன், மனைவி தற்கொலை கடிதம்..!
 
சில வருடங்களுக்கு முன்பு இவருக்குத் திருமணம் நடைபெற்று அவரது முதல் மனைவி இறந்த நிலையில் , சிவாஜி . அணைக்கட்டை அடுத்து வசந்தநடை கிராமத்தைச் சேர்ந்த ஆஷா (23) என்பவரை  கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்துகொண்டார் . திருமணத்திற்குப் பின்பு சிவாஜி மற்றும் ஆஷா  இருவரும் அணைக்கட்டு தாலுகா அருகேயுள்ள  பெரியஊனை கிராமத்தில் வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளனர். திருமணம் ஆகி 3 வருடங்கள் ஆகியும் குழந்தை இல்லாததால் கணவன்- மனைவி இடையே அடிக்கடி தகராறு நடந்து வந்துள்ளது. இந்நிலையில் தான் சிவாஜி தனது கடைக்கு வரும் வாடிக்கையாளர்களுக்குக் கடனுக்கு அதிகளவில் அரிசியைக் கொடுத்துள்ளார். மேலும் கொரோனா  ஊரடங்கு காரணமாகச்  சீட்டு நடத்தியதில் பலர் சீட்டுக் கட்டாமல் ஏமாற்றி விட்டதாகவும் கூறப்படுகிறது. 
 
இதனைத் தொடர்ந்து நேற்று காலை இவர்களுடைய வீடு  நீண்டநேரமாகத் திறக்கப்படாததால் காலை 10 மணி அளவில் அக்கம்பக்கத்தினர் அவர்களை எழுப்ப  முயற்சி செய்துள்ளனர் . ஆனால் வெகு நேரம் ஆகியும் இருவரும் கதவைத் திறக்காததால் அவரது அக்கம்பக்கத்தினர் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்துள்ளனர். அப்பொழுது  அவர்களது வாடகை வீட்டின் படுக்கையறையில், தம்பதியினர் இருவரும்  ஒரே புடவையில்  தூக்கில் பிணமாகத் தொங்கிக் கொண்டிருந்ததாக தெரியவந்துள்ளது.
 

எங்களை ஏமாத்திட்டாங்க.. எங்க மரணத்துக்கு யாரும் காரணமில்ல” : கணவன், மனைவி தற்கொலை கடிதம்..!
 
இது குறித்து அணைக்கட்டு போலீஸ் நிலையத்திற்குத் தகவல் கொடுத்தனர். அதன்பேரில், ஆய்வாளர் சுபலட்சுமி,  உதவி ஆய்வாளர் குணசேகரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கணவன்- மனைவி இருவரின் உடல்களை மீட்டு  பிரேதப் பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 
 
உருக்கமான தற்கொலை கடிதம் : 
 
இதுகுறித்து வேலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு ஆல்பர்ட் ஜான் அணைக்கட்டு போலீஸ் நிலையத்திற்கு வந்து விசாரணை நடத்தினார். மேலும் சம்பவ நடந்த வீட்டில் சோதனை நடத்தியபோது அங்கு அவர்கள் இறப்பதற்கு முன்பு எழுதி வைத்திருந்த 9 பக்கங்களை கொண்ட உருக்கமான கடிதம் ஒன்றை கைப்பற்றினர் அதில் சிவாஜி "எங்கள் சாவுக்கு யாரும் காரணமல்ல . பலர் என்னை ஏமாற்றி விட்டதாலும், குழந்தை இல்லாததாலும் தற்கொலை செய்து கொள்கிறோம் என்று குறிப்பிட்டிருந்தார். மேலும் அவரிடம் அரிசி மற்றும் பணம் கடன் வாங்கியர்கள் குறித்த தகவல்களையும், மற்றும் சிவாஜி யார் யாருக்கு சீட்டு பணம் நிலுவை தொகை திருப்பி தர வேண்டும் என்ற தகவல்களையும் விரிவாக எழுதி பதிவு செய்துள்ளார் .
 
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Magalir Urimai Thogai: இது தொடக்கமே.. மகளிர் உரிமைத் தொகை மேலும் உயரும்; முதலமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
இது தொடக்கமே.. மகளிர் உரிமைத் தொகை மேலும் உயரும்; முதலமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
ADMK BJP: அதிமுக கூட்டணி.. அமித்ஷாவிற்கு தலைவலி - இதுதான் சங்கதி!
ADMK BJP: அதிமுக கூட்டணி.. அமித்ஷாவிற்கு தலைவலி - இதுதான் சங்கதி!
Chennai Metro Rail Work: சென்னை மெட்ரோ பணியில் கலக்கும்
சென்னை மெட்ரோ பணியில் கலக்கும் "மயில்"; எந்த மயில்னு யோசிக்கிறீங்களா.? இத படிங்க தெரியும்
PM Kisan 22nd Installment: பிரதம மந்திரி கிசான் நிதியின் 22-வது தவணை எப்போ வரும்.? அதுக்குள்ள விவசாயிகள் இத செஞ்சுடுங்க
பிரதம மந்திரி கிசான் நிதியின் 22-வது தவணை எப்போ வரும்.? அதுக்குள்ள விவசாயிகள் இத செஞ்சுடுங்க
ABP Premium

வீடியோ

Magalir Urimai Thogai | ''மகளிருக்கு இன்னொரு CHANCE..!''கலைஞர் மகளிர் உரிமைத்தொகை
Rajinikanth 75th Birthday Celebration|’’ரஜினி என் குலசாமி!’’வீடு முழுக்க RAJINISMவியக்க வைத்த ரசிகர்
Tindivanam Bus Accident - டயர் வெடித்து விபத்து ஒருவர் பலி, 15 பேர் படுகாயம்; உதவிய விழுப்புரம் கலெக்டர்
Nainar Nagendran Meet EPS | டெல்லிக்கு அழைத்த அமித் ஷா; ஈபிஎஸ்-நயினார் திடீர் சந்திப்பு; அண்ணாமலை பலே ப்ளான்!
LAW & ORDER இனிமே இவர் கையில் தமிழகத்தின் புதிய பொறுப்பு DGPயார் இந்த அபய் குமார் சிங் IPS? | Abhay Kumar Singh | MK Stalin | TN New DGP

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Magalir Urimai Thogai: இது தொடக்கமே.. மகளிர் உரிமைத் தொகை மேலும் உயரும்; முதலமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
இது தொடக்கமே.. மகளிர் உரிமைத் தொகை மேலும் உயரும்; முதலமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
ADMK BJP: அதிமுக கூட்டணி.. அமித்ஷாவிற்கு தலைவலி - இதுதான் சங்கதி!
ADMK BJP: அதிமுக கூட்டணி.. அமித்ஷாவிற்கு தலைவலி - இதுதான் சங்கதி!
Chennai Metro Rail Work: சென்னை மெட்ரோ பணியில் கலக்கும்
சென்னை மெட்ரோ பணியில் கலக்கும் "மயில்"; எந்த மயில்னு யோசிக்கிறீங்களா.? இத படிங்க தெரியும்
PM Kisan 22nd Installment: பிரதம மந்திரி கிசான் நிதியின் 22-வது தவணை எப்போ வரும்.? அதுக்குள்ள விவசாயிகள் இத செஞ்சுடுங்க
பிரதம மந்திரி கிசான் நிதியின் 22-வது தவணை எப்போ வரும்.? அதுக்குள்ள விவசாயிகள் இத செஞ்சுடுங்க
Trump's C5 Plan.?: ஐரோப்பாவிற்கு G7; ஆசியாவிற்கு C5; ட்ரம்ப்பின் பலே பிளான்.? எந்தெந்த நாடுகள் தெரியுமா.?
ஐரோப்பாவிற்கு G7; ஆசியாவிற்கு C5; ட்ரம்ப்பின் பலே பிளான்.? எந்தெந்த நாடுகள் தெரியுமா.?
Gold Rate Dec.13th: அய்யய்யோ.! தங்கம் விலை ரூ.99,000-த்தை நெருங்கியது; ஒரே நாளில் ரூ.2560 உயர்வு - இன்று விலை என்ன.?
அய்யய்யோ.! தங்கம் விலை ரூ.99,000-த்தை நெருங்கியது; ஒரே நாளில் ரூ.2560 உயர்வு - இன்று விலை என்ன.?
Magalir Urimai Thogai: மகளிர் உரிமை தொகை ரூ. 1000 கிடைக்கவில்லையா.! மீண்டும் ஒரு வாய்ப்பு- எப்போ தெரியுமா.?
மகளிர் உரிமை தொகை ரூ. 1000 கிடைக்கவில்லையா.! மீண்டும் ஒரு வாய்ப்பு- எப்போ தெரியுமா.?
Hyundai Verna: ரூ.13 லட்சம்தான் ஆரம்பம்.. ஹுண்டாய் Verna காரை வாங்கலாமா? வேண்டாமா?
Hyundai Verna: ரூ.13 லட்சம்தான் ஆரம்பம்.. ஹுண்டாய் Verna காரை வாங்கலாமா? வேண்டாமா?
Embed widget