மேலும் அறிய

Cyclone Mandous:‌ திருவண்ணாமலையில் மாண்டஸ் புயல் ருத்ர தாண்டவம் - விவசாயிகள் வேதனை

மாண்டஸ் புயலின் ருத்ரதாண்டவத்தால் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள வாழை மரங்கள் மின்கம்பங்கள் சாய்ந்து விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் வேதனை அடைந்துள்ளனர்.

மாமல்லபுரம் அருகில் உள்ள கடற்கரைகளில் நேற்று இரவு 9.30 மற்றும் இன்று நள்ளிரவு 2.30 மணி அளவில் புயலாக அதிகபட்சமாக 65-75 கிமீ வேகத்தில் காற்று வீசி புயல் கரையைக் கடந்தது. இதன் எதிரொலியாக திருவண்ணாமலை மாவட்டத்தில் சூறைக் காற்றுடன் கூடிய கன மழை விடிய விடிய கொட்டித் தீர்த்தது. இந்த கனமழையால் திருவண்ணாமலை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் வாழைமரம் சாய்ந்தும், மின்கம்பங்கள் சாய்ந்ததில் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர்.  

 


Cyclone Mandous:‌ திருவண்ணாமலையில் மாண்டஸ் புயல் ருத்ர தாண்டவம் -  விவசாயிகள் வேதனை

 

ஆரணியில் வாழை மரங்கள்  சேதம்:

கரையைக் கடந்த மாண்டஸ் புயலால் திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த படவேடு கிராம பகுதியில் உள்ள விவசாயிகள் தங்களுடைய விவசாய நிலங்களில் அதிக அளவில் வாழை மரம் விவசாயம் செய்து வருகின்றனர். இப்பகுதி முழுவதும் விவசாயம் மட்டுமே செய்து வருகின்றனர். வருடந்தோறும் வரக்கூடிய பருவநிலை மாற்றத்தினால் இப்பகுதியில் பயிரிடப்பட்ட பயிர்கள் அனைத்தும் புயல் காற்றிலும், மழை நீரினாலும் சேதமாகி வருகிறது. இதுவரையில் சேதமாகிய பயிர்களுக்கு அரசு சரியான முறையில் நிவாரணம் வழங்கப்பட வில்லை. இந்நிலையில் படவேடு பகுதியில் பயிரிடப்பட்ட 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாழைமரங்கள் புயலால் சேதமடைந்துள்ளது. இதனால் பயிரிடப்பட்ட விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். பாதிக்கப்பட்ட விவசாயிகள் அனைவரும் சேதமான வாழைமரங்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். 

 


Cyclone Mandous:‌ திருவண்ணாமலையில் மாண்டஸ் புயல் ருத்ர தாண்டவம் -  விவசாயிகள் வேதனை

 

வந்தவாசியில் வேரோடு மரம் சாய்ந்து மின்கம்பங்கள் சேதம்:

வங்கக் கடலில் உருவான மாண்டஸ் புயலால் வந்தவாசி பகுதியில் பலத்த காற்று வீசி வருகிறது. மேலும் தற்போது மழை பெய்து வந்த நிலையில் வந்தவாசி ஆரணி சாலையில் 50 ஆண்டு காலம் மிகப்பெரிய மரம் ஒன்று திடீரென வேரோடு சாலையின் குறுக்கே சாய்ந்தது. இதில் அருகில் இருந்த மூன்று மின்கம்பங்கள் துண்டு துண்டாக உடைந்து கீழே விழுந்தது. பொதுமக்கள் அதிகம் நடமாடக்கூடிய இந்த இடத்தில் மரம் வேரோடு சாலையின் குறுக்கே சாயும் போது அருகில் யாரும் இல்லாததால் பெரும் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. மரம் வேரோடு சாய்ந்ததில் வந்தவாசி ஆரணி மற்றும் செய்யாறு சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து பேருந்துகள் மற்றும் இதர வாகனங்கள் மாற்று வழி ஏற்பாடு செய்யப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டது. தற்போது மின்சார துறை தீயணைப்புத்துறை மற்றும் நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் மரத்தை அப்புறப்படுத்தும் பணியில் தற்போது ஈடுபட்டு வருகின்றனர். மின்சாரம் கம்பம் துண்டு துண்டாக உடைந்ததால் தற்போது வந்தவாசி பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது .இதனால் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Dhoni wish to indian Team | தட்டி தூக்கிய இந்தியா தோனி கொடுத்த SURPRISE Virat & Rohit Retirement |இடியை இறக்கிய KING - HITMAN.. உச்சக்கட்ட சோகத்தில் ரசிகர்கள்Hardik Pandya | ZERO TO HERO அவசரப்பட்டு திட்டிட்டோம் கொண்டாடிய ஹர்திக் FANSDog Attack Boy | மகனை சுத்துப்போட்ட நாய்கள் நொடியில் காப்பாற்றிய  தந்தை பதற வைக்கும் வீடியோ

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
Sundar Pichai: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ரசிகருக்கு நன்றி சொன்ன சுந்தர் பிச்சை - ஏன்?
Sundar Pichai: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ரசிகருக்கு நன்றி சொன்ன சுந்தர் பிச்சை - ஏன்?
Vidamuyarchi : அஜித் ரசிகர்களே காத்திருந்தது போதும்! விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!
Vidamuyarchi : அஜித் ரசிகர்களே காத்திருந்தது போதும்! விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!
கொடைக்கானலில் மான் வேட்டை! 6 பேரை பிடித்து உள்ளே தள்ளிய போலீஸ்!
கொடைக்கானலில் மான் வேட்டை! 6 பேரை பிடித்து உள்ளே தள்ளிய போலீஸ்!
CHIEF OF THE ARMY: மனோஜ் பாண்டே ஓய்வு! ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்ற உபேந்திர திவேதி!
CHIEF OF THE ARMY: மனோஜ் பாண்டே ஓய்வு! ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்ற உபேந்திர திவேதி!
Embed widget