மேலும் அறிய

Crime: தனியார் நிதி நிறுவன மோசடி; ஆயிரக்கணக்கான மக்கள் புகார் - திருவண்ணாமலையில் பரபரப்பு

தலைமறைவான நிதி நிறுவன அதிபரை கைது செய்ய வலியுறுத்தி திருவண்ணாமலை பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்தை பாதிக்கப்பட்ட மக்கள் முற்றுகையிட்டனர்.

திருவண்ணாமலை மாவட்டம் செய்யார் பகுதியைச் சேர்ந்த சீனிவாசன், ராஜ்குமார் உள்ளிட்ட இருவரும் இணைந்து செய்யாரை தலைமை இடமாகக் கொண்டு தனியார் நிதி நிறுவனத்தை தொடங்கி அதற்கு செய்யார், ஆரணி, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, சோழிங்கநல்லூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கிளை அலுவலகங்களை தொடங்கி 500 முதல் 25 ஆயிரம் வரை தீபாவளி சீட் பண்ட் பல்வேறு குழுக்களாக பிரித்து நடத்தி வந்தனர். கிட்டத்தட்ட இரண்டு ஆண்டு காலம் நடத்தி வந்த நிலையில் இதனை விரிவுபடுத்தி மளிகை பொருள், பட்டாசு, தங்க நாணயங்கள் உள்ளிட்ட வகையில் வழங்கும் சிட்பண்டுகளையும் நடத்தி வந்தனர். இதில் இவர்கள் நிதி நிறுவனத்தில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏஜென்ட்களை நியமனம் செய்து அவர்களுக்கு கவர்ச்சிகரமான அறிவிப்புகளை சலுகைகளையும் வெளியிட்டு அவர்கள் மூலமாக ஒவ்வொரு ஏஜெண்டுகளும் தலா 200 முதல் 2000 உறுப்பினர்களை சீட்டு நிறுவனத்தில் இணைத்துள்ளனர்.


Crime: தனியார் நிதி நிறுவன மோசடி; ஆயிரக்கணக்கான மக்கள் புகார் - திருவண்ணாமலையில் பரபரப்பு

மேலும் இது ஒரு புறம் இருக்க ஒரு லட்சம் ரூபாய் பணம் கட்டினால் 5 சவரன் தங்க நகை, வெள்ளி குத்துவிளக்கு உள்ளிட்டவைகள் வழங்கப்படும் என கவர்ச்சிகரமான அறிவிப்புகளை வெளியிட்டதை நம்பி ஆயிரக்கணக்கான பொதுமக்கள் இதில் தங்களை இணைத்துக் கொண்டனர். இதில் கிட்டத்தட்ட ரூ. 30 கோடி அளவிற்கு பொதுமக்களிடமிருந்து பணத்தை வசூல் செய்து சீனிவாசன் மற்றும் ராஜ்குமார் இருவரும் தலைமறைவாகியுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் பாதிக்கப்பட்ட மக்கள் செய்யார் காவல் நிலையம், சென்னை பொருளாதார குற்றப்பிரிவு, திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் என பல இடங்களில் புகார் கொடுத்தும் இதுவரை எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில் செய்யாறு காவல்துறையினர் 11 லட்சம் மோசடி செய்ததாக சீனிவாசனை மட்டும் கைது செய்து வேலூர் சிறையில் அடைத்துள்ளனர்.

 


Crime: தனியார் நிதி நிறுவன மோசடி; ஆயிரக்கணக்கான மக்கள் புகார் - திருவண்ணாமலையில் பரபரப்பு

ஆனால் மோசடிக்கு முக்கிய காரணமான ராஜ்குமாரை இதுவரை கைது செய்யப்படவில்லை. ஆகவே பாதிக்கப்பட்ட ஏஜெண்டுகள் மற்றும் பாதிக்கப்பட்ட மக்கள் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் இன்று திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் உள்ள பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்திற்கு கண்டன கோஷங்களை எழுப்பியவாறு ஊர்வலமாக வந்து அலுவலகத்தை முற்றுகையிட்டு மோசடி மன்னன் ராஜ்குமாரை கைது செய்ய வலியுறுத்தி கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

இதனை தொடர்ந்து பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி அவர்கள் எவ்வளவு தொகை பாதிக்கப்பட்டுள்ளார்கள் என தனித்தனி நபர்களாக ஆதாரங்களுடன் புகார் மனுக்களை பெற்றுக் கொண்டனர். குறிப்பாக கடந்த ஓராண்டாக வட மாவட்டங்களை குறிவைத்து பல்வேறு நிதி நிறுவனங்கள் ஏழை எளிய மக்களிடம் கோடிக்கணக்கான ரூபாய் மோசடியில் ஈடுபட்டு வருவது பெரும் அதிர்ச்சிக்குள்ளாகி உள்ளது. திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் ஊர்வலமாக வந்து போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

TVK Vijay ERD Meeting: ஈரோட்டில் தவெக மாநாடு நடைபெறுமா.? அறநிலையத்துறை வடிவில் வந்த சிக்கல்.? என்ன பிரச்னை.?
ஈரோட்டில் தவெக மாநாடு நடைபெறுமா.? அறநிலையத்துறை வடிவில் வந்த சிக்கல்.? என்ன பிரச்னை.?
IND vs SA 2nd T20 Match: பஞ்சாபில் பஞ்சரான இந்திய அணி.. 2வது டி20 போட்டியில் தென்னாப்பிரிக்கா வெற்றி!
IND vs SA 2nd T20 Match: பஞ்சாபில் பஞ்சரான இந்திய அணி.. 2வது டி20 போட்டியில் தென்னாப்பிரிக்கா வெற்றி!
SIR Date Extended: SIR படிவங்களை திருப்பி வழங்க கால அவகாசம்; தமிழ்நாட்டில் 3 நாட்கள் நீட்டித்தது தேர்தல் ஆணையம்
SIR படிவங்களை திருப்பி வழங்க கால அவகாசம்; தமிழ்நாட்டில் 3 நாட்கள் நீட்டித்தது தேர்தல் ஆணையம்
TVK VIJAY: விஜய்யை முதல்வராக ஏற்கும் கட்சியோடு மட்டுமே கூட்டணி.. தவெக அதிரடி அறிவிப்பு
விஜய்யை முதல்வராக ஏற்கும் கட்சியோடு மட்டுமே கூட்டணி.. தவெக அதிரடி அறிவிப்பு
ABP Premium

வீடியோ

Tindivanam Bus Accident - டயர் வெடித்து விபத்து ஒருவர் பலி, 15 பேர் படுகாயம்; உதவிய விழுப்புரம் கலெக்டர்
Nainar Nagendran Meet EPS | டெல்லிக்கு அழைத்த அமித் ஷா; ஈபிஎஸ்-நயினார் திடீர் சந்திப்பு; அண்ணாமலை பலே ப்ளான்!
LAW & ORDER இனிமே இவர் கையில் தமிழகத்தின் புதிய பொறுப்பு DGPயார் இந்த அபய் குமார் சிங் IPS? | Abhay Kumar Singh | MK Stalin | TN New DGP
அன்று நீதிபதி மீது காலணி எறிந்த Lawyer இன்று செருப்பால் அடிவாங்கினார் நீதிமன்ற வாசலில் சம்பவம் | Rakesh Kishore | Supreme Court | BR Gavai
”எந்த ஷா வந்தாலென்ன? தமிழ்நாடு Out of Control தான்” ஸ்டாலின் பதிலடி! | MK Stalin On Amit Shah

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Vijay ERD Meeting: ஈரோட்டில் தவெக மாநாடு நடைபெறுமா.? அறநிலையத்துறை வடிவில் வந்த சிக்கல்.? என்ன பிரச்னை.?
ஈரோட்டில் தவெக மாநாடு நடைபெறுமா.? அறநிலையத்துறை வடிவில் வந்த சிக்கல்.? என்ன பிரச்னை.?
IND vs SA 2nd T20 Match: பஞ்சாபில் பஞ்சரான இந்திய அணி.. 2வது டி20 போட்டியில் தென்னாப்பிரிக்கா வெற்றி!
IND vs SA 2nd T20 Match: பஞ்சாபில் பஞ்சரான இந்திய அணி.. 2வது டி20 போட்டியில் தென்னாப்பிரிக்கா வெற்றி!
SIR Date Extended: SIR படிவங்களை திருப்பி வழங்க கால அவகாசம்; தமிழ்நாட்டில் 3 நாட்கள் நீட்டித்தது தேர்தல் ஆணையம்
SIR படிவங்களை திருப்பி வழங்க கால அவகாசம்; தமிழ்நாட்டில் 3 நாட்கள் நீட்டித்தது தேர்தல் ஆணையம்
TVK VIJAY: விஜய்யை முதல்வராக ஏற்கும் கட்சியோடு மட்டுமே கூட்டணி.. தவெக அதிரடி அறிவிப்பு
விஜய்யை முதல்வராக ஏற்கும் கட்சியோடு மட்டுமே கூட்டணி.. தவெக அதிரடி அறிவிப்பு
Bangladesh Election: வங்கதேசத்தில் பொதுத் தேர்தல் எப்போது.?; தேர்தல் ஆணையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
வங்கதேசத்தில் பொதுத் தேர்தல் எப்போது.?; தேர்தல் ஆணையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
Ather Rizta Record Sales: குடும்பங்களை கவர்ந்த ஏதர் ரிஸ்டா இ-ஸ்கூட்டர்; 2 ஆண்டுகளில் 2 லட்சம் யூனிட்கள் விற்று அசத்தல்
குடும்பங்களை கவர்ந்த ஏதர் ரிஸ்டா இ-ஸ்கூட்டர்; 2 ஆண்டுகளில் 2 லட்சம் யூனிட்கள் விற்று அசத்தல்
Mexico Vs India Tariff: ட்ரம்ப்பை பின்பற்றி இந்தியாவுக்கு ஆப்பு வைத்த மெக்சிகோ; இறக்குமதிகளுக்கு 50% வரி விதிப்பு
ட்ரம்ப்பை பின்பற்றி இந்தியாவுக்கு ஆப்பு வைத்த மெக்சிகோ; இறக்குமதிகளுக்கு 50% வரி விதிப்பு
Trump ‘Gold Card‘ Visa: 1 மில்லியன் டாலர்; அமெரிக்க குடியுரிமை; ட்ரம்ப் ‘கோல்டு கார்டு‘ விசா அறிமுகம்; விண்ணப்பிப்பது எப்படி?
1 மில்லியன் டாலர்; அமெரிக்க குடியுரிமை; ட்ரம்ப் ‘கோல்டு கார்டு‘ விசா அறிமுகம்; விண்ணப்பிப்பது எப்படி?
Embed widget