மேலும் அறிய

Crime: ஏ.டி.எம். மையங்களில் கொள்ளை: துப்பாக்கி முனையில் முக்கிய குற்றவாளி கைது!

திருவண்ணாமலை மாவட்டத்தில் 4 ஏ.டி.எம். மையங்களில் நடந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட முக்கிய குற்றவாளியை துப்பாக்கி முனையில் கைது செய்தனர்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த பிப்ரவரி மாதம் 12-ந் தேதி ஒரே இரவில் திருவண்ணாமலை, தண்டராம்பட்டு சாலை, கலசபாக்கம், போளூர் ஆகிய பகுதிகளில் உள்ள 4 ஏடிஎம் இயந்திரங்களை கேஸ் வெல்டிங் மூலம் இயந்திரத்தை வெட்டி எடுத்து அதில் இருந்த 72 லட்சத்து 79 ஆயிரம் கொள்ளையர்கள் கொள்ளையடித்தனர். இந்த சம்பவம் தமிழகத்தில் உள்ள பொதுமக்களை அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தில் கொள்ளையர்களை பிடிக்க வடக்கு மண்டல ஐ.ஜி. கண்ணன் உத்தரவின் பேரில் வேலூர் சரக டி.ஐ.ஜி. முத்துசாமி மேற்பார்வையில் திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன், வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜேஸ் கண்ணன் , திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலகிருஷ்ணன் , ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிரண்ஸ்ருதி ஆகியோரின் தலைமையில் 9 தனிப்படைகள் அமைக்கப்பட்டு மாவட்டதில் உள்ள சிசிடிவி கேமராக்களின் பதிவுகளை தீவிர விசாரணை மேற்கொண்டனர். 

 


Crime: ஏ.டி.எம். மையங்களில் கொள்ளை: துப்பாக்கி முனையில் முக்கிய குற்றவாளி கைது!

இந்த கொள்ளை சம்பவத்தில் வெளி மாநிலத்தை சேர்ந்த 6-க்கும் மேற்பட்டவர்கள் ஈடுபட்டது காவல்துறையினருக்கு தெரியவந்தது. மேலும் காவல்துறையினர் தீவர விசராணையில் ஈடுப்பட்டனர். அப்போது கொள்ளையர்கள் கர்நாடக மாநிலம் கோலார் பகுதியில் தங்கியிருந்து குற்றம் நடந்த பகுதிகளை ஏற்கனவே நோட்டமிட்டு அதன் பின்பு கொள்ளையில் ஈடுபட்டது விசாரணையில் தெரியவந்தது.

அதனைத்தொடர்ந்து காவல்துறையினர் மேற்கொண்ட நடவடிக்கையில் இதுவரை இவ்வழக்கில் 8 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு இருந்தனர். இதில் ஈடுபட்ட அனைவரையும் தனிப்படை காவல்துறையினர் கைது செய்ய திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் உத்தரவின்பேரில் இந்த கொள்ளை சம்பவத்தில் மூளையாக செயல்பட்ட முக்கிய குற்றவாளியான அரியானா மாநிலம் மேவாத் மாவட்டம் பாதஸ் கிராமத்தை சேர்ந்த ஆசீப்ஜாவேத் வயது (30) என்பவரை காவல்துறையினர் தேடி வந்தனர்.

 


Crime: ஏ.டி.எம். மையங்களில் கொள்ளை: துப்பாக்கி முனையில் முக்கிய குற்றவாளி கைது!

அவர் நேரடியாக இந்த கொள்ளையில் ஈடுபட்டிருந்தார். அவரை பிடிக்க டெல்லி மற்றும் அரியானா பகுதிகளில் தனிப்படையினர் முகாமிட்டிருந்தனர். நேற்று முன்தினம் அரியானா- ராஜஸ்தான் எல்லைப்பகுதியில் தவுரு காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட ஆரவல்லி மலைப்பகுதியில் பாழடைந்த கட்டிடத்தில் ஆசீப்ஜாவேத் பதுங்கி இருந்தது தெரியவந்தது.

அவர் ஆபத்தானவர் என்பதால் தனிப்படையினர் துணிச்சலுடன் செயல்பட்டு அங்கு சென்றனர். ஆசீப்ஜாவேத்தை தனிப்படயினர் கைது செய்தனர். அவரிடம் இருந்து 15 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் அவரை தனிப்பட்டையினர் மேவாட் மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி விமானம் மூலம் தமிழகத்துக்கு கொண்டு வந்தனர். பின்னர் அவரை காவல்துறையினர் நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர்.

இந்த வழக்கு தொடர்பாக 9 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். அவர்களிடம் இருந்து 20 லட்சத்தையும், 3 கார்கள் மற்றும் ஒரு கண்டெய்னர் லாரியையும் காவல்துறையினர் கைப்பற்றி உள்ளனர். மேலும் இக்குழுவின் துணிகரமான செயலை பாராட்டி காவல் துறை டி.ஜி.பி.சைலேந்திர பாபு 1 லட்சம் வெகுமதி அறிவித்து உள்ளார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Rahul Dravid: ஒரு கேப்டனா ஜெயிக்க முடியல.. ஆனால் பயிற்சியாளரா சாதிச்சிட்டேன்.. ராகுல் டிராவிட் நெகிழ்ச்சி!
ஒரு கேப்டனா ஜெயிக்க முடியல.. ஆனால் பயிற்சியாளரா சாதிச்சிட்டேன்.. ராகுல் டிராவிட் நெகிழ்ச்சி!
Breaking News LIVE: குற்றாலத்தில் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீர்.. குவியும் சுற்றுலா பயணிகள்!
Breaking News LIVE: குற்றாலத்தில் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீர்.. குவியும் சுற்றுலா பயணிகள்!
Hardik Pandya: ஜீரோ டூ ஹீரோ - அவசரப்பட்டு திட்டிட்டோம்..!  ஹர்திக் பாண்ட்யாவை கொண்டாடும் இந்திய ரசிகர்கள்..!
Hardik Pandya: ஜீரோ டூ ஹீரோ - அவசரப்பட்டு திட்டிட்டோம்..! ஹர்திக் பாண்ட்யாவை கொண்டாடும் இந்திய ரசிகர்கள்..!
Rasipalan: மேஷத்துக்கு கவனம், ரிஷபத்துக்கு லாபம்- இன்னைக்கு உங்க ராசிக்கு என்ன பலன் தெரியுமா?
Rasipalan: மேஷத்துக்கு கவனம், ரிஷபத்துக்கு லாபம்- இன்னைக்கு உங்க ராசிக்கு என்ன பலன் தெரியுமா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Dog Attack Boy | மகனை சுத்துப்போட்ட நாய்கள் நொடியில் காப்பாற்றிய  தந்தை பதற வைக்கும் வீடியோT20 World Cup Final :  இறுதிப்போட்டியில் இந்தியா..வீழ்த்துமா தென்னாப்பிரிக்கா?மகுடம் சூடப்போவது யார்?Dharmapuri Gender Reveal Issue : வசமாக சிக்கிய கும்பல்..LEFT&RIGHT வாங்கிய அதிகாரிBussy Anand Angry |கறார் காட்டிய புஸ்ஸி ஆனந்த்..முகம்சுழித்த தவெக நிர்வாகிகள்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Rahul Dravid: ஒரு கேப்டனா ஜெயிக்க முடியல.. ஆனால் பயிற்சியாளரா சாதிச்சிட்டேன்.. ராகுல் டிராவிட் நெகிழ்ச்சி!
ஒரு கேப்டனா ஜெயிக்க முடியல.. ஆனால் பயிற்சியாளரா சாதிச்சிட்டேன்.. ராகுல் டிராவிட் நெகிழ்ச்சி!
Breaking News LIVE: குற்றாலத்தில் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீர்.. குவியும் சுற்றுலா பயணிகள்!
Breaking News LIVE: குற்றாலத்தில் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீர்.. குவியும் சுற்றுலா பயணிகள்!
Hardik Pandya: ஜீரோ டூ ஹீரோ - அவசரப்பட்டு திட்டிட்டோம்..!  ஹர்திக் பாண்ட்யாவை கொண்டாடும் இந்திய ரசிகர்கள்..!
Hardik Pandya: ஜீரோ டூ ஹீரோ - அவசரப்பட்டு திட்டிட்டோம்..! ஹர்திக் பாண்ட்யாவை கொண்டாடும் இந்திய ரசிகர்கள்..!
Rasipalan: மேஷத்துக்கு கவனம், ரிஷபத்துக்கு லாபம்- இன்னைக்கு உங்க ராசிக்கு என்ன பலன் தெரியுமா?
Rasipalan: மேஷத்துக்கு கவனம், ரிஷபத்துக்கு லாபம்- இன்னைக்கு உங்க ராசிக்கு என்ன பலன் தெரியுமா?
INDIA T20 Worldcup: ரோகித்தின் மாஸ்டர் பிளான் - இந்தியா உலகக்கோப்பையை வெல்ல காரணமான 6 முக்கிய தருணங்கள்..!
ரோகித்தின் மாஸ்டர் பிளான் - இந்தியா உலகக்கோப்பையை வெல்ல காரணமான 6 முக்கிய தருணங்கள்..!
T20 World Cup 2024 Prize Money: டி20 உலகக் கோப்பை சாம்பியன்.. கோடிகளை அள்ளிய இந்திய அணி! எவ்வளவு தெரியுமா?
T20 World Cup 2024 Prize Money: டி20 உலகக் கோப்பை சாம்பியன்.. கோடிகளை அள்ளிய இந்திய அணி! எவ்வளவு தெரியுமா?
Rohit Sharma Retirement: அடுத்த இடி.. விராட் கோலியை தொடர்ந்து ஓய்வை அறிவித்த ரோஹித் ஷர்மா
Rohit Sharma Retirement: அடுத்த இடி.. விராட் கோலியை தொடர்ந்து ஓய்வை அறிவித்த ரோஹித் ஷர்மா
T20 World Cup: கோப்பையை வென்ற இந்திய அணி - நாடு முழுவதும் ஒலித்த “இந்தியா..இந்தியா” முழக்கம்!
T20 World Cup: கோப்பையை வென்ற இந்திய அணி - நாடு முழுவதும் ஒலித்த “இந்தியா..இந்தியா” முழக்கம்!
Embed widget