மேலும் அறிய

பருவமழை தொடங்குவதற்கு முன் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் - அதிகாரிகளுக்கு திருவண்ணாமலை ஆட்சியர் அறிவுறுத்தல்

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள நீர்நிலைகள், நீர்வரத்து கால்வாய்களை உள்ள ஆக்கிரமிப்புகளை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனடியாக அகற்ற வேண்டும் - மாவட்ட ஆட்சியர் முருகேஷ்

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளுதல் குறித்து அனைத்து துறை அலுவலர்களுடன் ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு தலைமை தாங்கி மாவட்ட ஆட்சியர் பா. முருகேஷ் பேசிய போது;  திருவண்ணாமலை மாவட்டத்தில் வடகிழக்கு பருவ மழையை எதிர்கொள்ளும் விதமாக 12 தாலுகாக்களுக்கும் துணை துணை ஆட்சியர்கள், 12 நியமன அலுவலர்கள் நியமிக்கப்பட்டு அவர்களின் தலைமையில் முன்னெச்சரிக்கை அறிவிப்பு குழு, தேடுதல் மற்றும் மீட்பு குழு, வெளியேற்றக் குழு மற்றும் நிவாரண மையம், தங்குமிடம் மேலாண்மை குழு ஆகிய 4 குழுக்கள் மற்றும் 4 நகராட்சிகளுக்கும் நகராட்சி ஆணையர்களை நியமன அலுவலர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

 


பருவமழை தொடங்குவதற்கு முன் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் -  அதிகாரிகளுக்கு திருவண்ணாமலை ஆட்சியர் அறிவுறுத்தல்

திருவண்ணாமலை மாவட்டத்தில் இயல்பை விட அதிகமாக பருவமழை பெய்து வருகிறது. மழை வெள்ளம் தொடர்பாக பொது மக்கள் தங்கள் சந்தேகங்களுக்கு தொடர்பு கொள்ளும் வகையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 24 மணிநேரமும் செயல்படும் வகையில் கட்டுப்பாட்டு அறை செயல்பட்டு வருகிறது. மேலும் பொதுமக்கள் வடகிழக்கு பருவமழை தொடர்பான தங்களின் சந்தேகங்களை, மழை வெள்ளகாலங்களில் அத்தியாவசிய தேவைகளுக்கு கட்டணமில்லா தொலைபேசிஎண் - 1077, மற்றும் 04175-232377 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம் என்றும், திருவண்ணாமலை தாலுகாவை தவிர மற்ற தாலுகாக்களில் வசிப்பவர்கள் தொலைபேசி எண். 04175-1077 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு புகார்களை தெரிவிக்கலாம் என்றும், மேலும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள், பழைய பழுதடைந்த வீடுகளில் வசிக்கும் மக்களை தொடர் மழையின் போது பாதுகாப்பாக தங்க வைப்பதற்கு தற்காலிக நிவாரண மையங்கள் தயார் நிலையில் வைத்துக் கொள்ள வேண்டும் என்றும் கூறினார்.

 


பருவமழை தொடங்குவதற்கு முன் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் -  அதிகாரிகளுக்கு திருவண்ணாமலை ஆட்சியர் அறிவுறுத்தல்

 

கட்டணமில்லா தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு நிவாரண மையத்தில் தங்குவது குறித்து பொதுமக்கள் தகவல் தெரிவித்தால் உடனடியாக அவர்களை நிவாரண மையங்களுக்கு கொண்டு சென்று தங்க வைத்து அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க மாவட்ட நிர்வாகம் தயாராக உள்ளது என்றும் தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து பொது மக்கள் மழை வெள்ள காலத்தில் சுவர் இடிந்து விழுந்து ஏற்படும் மனித உயிரிழப்புகளை தவிர்க்க மழைக்காலத்தில் பாதுகாப்பான இடத்தில் தங்க வேண்டும். ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் மாவட்டத்தில் 96 நீர்நிலைகள் முழுவதும் நிரம்பிய நிலையில் நீர் தேக்கம் மற்றும் அணைகளை கனமழை பெய்யும் காலங்களில் அவ்வப்போது நீர்தேக்க அளவினை கண்காணிக்க வேண்டும் என்றும் கூறினார்.

 


பருவமழை தொடங்குவதற்கு முன் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் -  அதிகாரிகளுக்கு திருவண்ணாமலை ஆட்சியர் அறிவுறுத்தல்

 

மேலும் பொதுமக்கள் பாதுகாப்பற்ற முறையில் அங்கு சென்று புகைப்படம் எடுப்பது, குளிப்பது மற்றும் சிறுவர்கள் அப்பகுதிகளில் சென்று விளையாடுவது போன்ற செயல்பாடுகளின் போது கவனக்குறைவால் நீரில் மூழ்கி மனித உயிரிழப்பு ஏற்படும் அபாய நிலையும் உள்ளது. எனவே பொதுமக்கள் அப்பகுதிகளுக்கு செல்வதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். நீர்நிலைகளில் மற்றும் நீர்வரத்து கால்வாயில் உள்ள ஆக்கிரமிப்பை சம்பந்தப்பட்ட துறையின் மூலமாக உடனடியாக அகற்றப்பட வேண்டும் என்று இவ்வாறு பேசினார். இந்த கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் கார்த்திகேயன், மாவட்ட வருவாய் அலுவலர் பிரியதர்ஷினி, வேளாண்மை இணை இயக்குனர் பாலா, ஆட்சியர் நேர்முக உதவியாளர்கள் கணேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

’ஆதவ் Vs சார்லஸ்’ குடும்ப பிரச்னைக்காக மக்களை பயன்படுத்துவதா? ஜோஸ் சார்லஸ் மீது புதுச்சேரி மக்கள் அதிருப்தி..!
’ஆதவ் Vs சார்லஸ்’ குடும்ப பிரச்னைக்காக மக்களை பயன்படுத்துவதா? ஜோஸ் சார்லஸ் மீது புதுச்சேரி மக்கள் அதிருப்தி..!
Modi Putin Meet: கூடங்குளத்தில் மிகப்பெரிய அணுமின் நிலையம் உருவாக்க உதவும் ரஷ்யா; மோடி-புதின் பேசியது என்ன.?
கூடங்குளத்தில் மிகப்பெரிய அணுமின் நிலையம் உருவாக்க உதவும் ரஷ்யா; மோடி-புதின் பேசியது என்ன.?
Pakistan Asim Munir CDF: அட ஆண்டவா.! அசிம் முனீர் கையில் பாகிஸ்தான் முப்படைகளின் கட்டுப்பாடு; இனி என்ன நடக்குமோ.?
அட ஆண்டவா.! அசிம் முனீர் கையில் பாகிஸ்தான் முப்படைகளின் கட்டுப்பாடு; இனி என்ன நடக்குமோ.?
ED Vs Anil Ambani: அனில் அம்பானியின் ரூ.1,120 கோடி சொத்துக்கள் முடக்கம்; ED அதிரடி; யம்மாடி, இதுவரை இவ்ளோ கோடிகளா.?
அனில் அம்பானியின் ரூ.1,120 கோடி சொத்துக்கள் முடக்கம்; ED அதிரடி; யம்மாடி, இதுவரை இவ்ளோ கோடிகளா.?
ABP Premium

வீடியோ

Durga Stalin |காஞ்சி கோயிலில் தங்கத்தேர்!பக்தி பரவசத்தில் துர்கா மெய்சிலிர்த்து வேண்டும் காட்சிகள்
Madurai Loganathan IPS Profile | ‘’WE ARE NOT ALLOWING’’ஒற்றை ஆளாக சம்பவம்! யார் இந்த லோகநாதன் IPS?
தமிழ்நாடு வரும் அமித்ஷா திருப்பரங்குன்றம் விவகாரம் கையிலெடுக்கும் பாஜக | Amitsha in Tamilnadu
ஆதவ் Vs ஜோஸ் சார்லஸ் கட்சி தொடங்கும் முன்னே சரிவு விஜய்யுடன் கூட்டணிக்கு END CARD | Aadhav Vs Joes Charles
Thiruparankundram Dheepam|”இன்னும் சில நிமிடங்களில் தீபம்”144 ரத்து போய் பாதுகாப்பு குடுங்க!-நீதிபதி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
’ஆதவ் Vs சார்லஸ்’ குடும்ப பிரச்னைக்காக மக்களை பயன்படுத்துவதா? ஜோஸ் சார்லஸ் மீது புதுச்சேரி மக்கள் அதிருப்தி..!
’ஆதவ் Vs சார்லஸ்’ குடும்ப பிரச்னைக்காக மக்களை பயன்படுத்துவதா? ஜோஸ் சார்லஸ் மீது புதுச்சேரி மக்கள் அதிருப்தி..!
Modi Putin Meet: கூடங்குளத்தில் மிகப்பெரிய அணுமின் நிலையம் உருவாக்க உதவும் ரஷ்யா; மோடி-புதின் பேசியது என்ன.?
கூடங்குளத்தில் மிகப்பெரிய அணுமின் நிலையம் உருவாக்க உதவும் ரஷ்யா; மோடி-புதின் பேசியது என்ன.?
Pakistan Asim Munir CDF: அட ஆண்டவா.! அசிம் முனீர் கையில் பாகிஸ்தான் முப்படைகளின் கட்டுப்பாடு; இனி என்ன நடக்குமோ.?
அட ஆண்டவா.! அசிம் முனீர் கையில் பாகிஸ்தான் முப்படைகளின் கட்டுப்பாடு; இனி என்ன நடக்குமோ.?
ED Vs Anil Ambani: அனில் அம்பானியின் ரூ.1,120 கோடி சொத்துக்கள் முடக்கம்; ED அதிரடி; யம்மாடி, இதுவரை இவ்ளோ கோடிகளா.?
அனில் அம்பானியின் ரூ.1,120 கோடி சொத்துக்கள் முடக்கம்; ED அதிரடி; யம்மாடி, இதுவரை இவ்ளோ கோடிகளா.?
Udhayanidhi Stalin: ''இது திராவிட மண், தமிழ் மண், குழப்பம் ஏற்படுத்த நினைத்தால் முடியாது“; பாஜகவுக்கு உதயநிதி பதிலடி
''இது திராவிட மண், தமிழ் மண், குழப்பம் ஏற்படுத்த நினைத்தால் முடியாது“; பாஜகவுக்கு உதயநிதி பதிலடி
Top Searched People: ஒரு நிமிஷம்.. இவங்கல்லாம் யாரு?.. 2025ல் கூகுளில் அதிகம் தேடப்பட்ட பிரபலங்கள்!
Top Searched People: ஒரு நிமிஷம்.. இவங்கல்லாம் யாரு?.. 2025ல் கூகுளில் அதிகம் தேடப்பட்ட பிரபலங்கள்!
Live-In is not illegal: “18 வயதை கடந்தவர்கள் லிவ்-இன் முறையில் வாழ சட்டப்படி தடை இல்லை“ - ராஜஸ்தான் நீதிமன்றம் அதிரடி
“18 வயதை கடந்தவர்கள் லிவ்-இன் முறையில் வாழ சட்டப்படி தடை இல்லை“ - ராஜஸ்தான் நீதிமன்றம் அதிரடி
Kanimozhi Slams BJP: ''திருப்பரங்குன்றத்தை மற்றொரு அயோத்தியாவாக மாற்ற நினைக்கிறார்கள்''; பாஜகவை சாடிய கனிமொழி
''திருப்பரங்குன்றத்தை மற்றொரு அயோத்தியாவாக மாற்ற நினைக்கிறார்கள்''; பாஜகவை சாடிய கனிமொழி
Embed widget