மேலும் அறிய

பாஜக பிரமுகரால் ஆக்கிரமிக்கப்பட்ட இடம்: அமைச்சர் சேகர்பாபு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

தமிழ்நாடு அரசு பொறுப்பேற்று நாளில் இருந்து 4250 கோடி மதிப்பிலான இந்து சமய அறநிலையத்துறையின் இடங்கள் மீட்கப்பட்டுள்ளது.

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் வருகின்ற மே 4 மற்றும் 5 ஆகிய தேதிகளில் ஆண்டிற்கு ஒரு முறை வரக்கூடிய சித்ரா பௌர்ணமியன்று திருவண்ணாமலைக்கு 20 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கிரிவலம் வருவார்கள் சாமி தரிசனம் செய்வார்கள் அதன் அடிப்படையில் இன்று இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் பக்தர்கள் நீண்ட வரிசையில் நிற்பதற்கு தேவையான நிழல்பந்தல் அமைப்பது குறித்தும், கோடை வெயிலிலிருந்து பக்தர்கள் தங்களை காத்துக் கொள்ளும் வகையில் வழிநெடுகிலும் அவர்களுக்கு நீர் நீர்மோர் வழங்குவது குறித்தும், விரைவில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்கு உண்டான வழிகள் குறித்தும் ஆய்வு மேற்கொண்டார்.


பாஜக பிரமுகரால் ஆக்கிரமிக்கப்பட்ட இடம்: அமைச்சர் சேகர்பாபு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

 

முன்னதாக சாமி தரிசனம் செய்த இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் அவர்களுக்கு திருக்கோவில் சார்பில் மரியாதை செய்யப்பட்டது. அண்ணாமலையார் திருக்கோவிலில் பல்வேறு இடங்களில் ஆய்வுப் பணியை முடித்துக் கொண்டு வந்த அமைச்சர் நீண்ட வரிசையில் காத்திருந்த ஆன்மீக பக்தர்களுக்கு மோர் வழங்கினார்.அதனை தொடர்ந்து வடக்கு அம்மனி அம்மன் கோபுரம் அருகே பல ஆண்டுகளாக பாஜக ஆன்மீகம் மற்றும் மேம்பாட்டு பிரிவின் மாநில துணைத்தலைவர் 23800 சதுர அடியில் ஆக்கிரமிப்பில் இருந்த 100 கோடி மதிப்பிலான அம்மணி அம்மன் மடத்தை இந்து சமய அறநிலையத்துறை மீட்டதையடுத்து இன்று ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் சேகர்பாபு. 

 


பாஜக பிரமுகரால் ஆக்கிரமிக்கப்பட்ட இடம்: அமைச்சர் சேகர்பாபு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

 செய்தியாளர்களை சந்தித இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு பேசுகையில்; 

கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியத்தில் 800 ஆண்டுகள் பழமை வாய்ந்த அர்த்தனாரிஸ்வரர் திருக்கோவில் மற்றும் சங்கர வேணுகோபால சுவாமி திருக்கோவில் ஆகிய இரண்டு திருக்கோவில்களிலும் விரைவாக திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு குடமுழுக்கு நடத்த ஆலோசனை செய்யப்பட்டுள்ளதாகவும், அர்த்தநாரீஸ்வரர் திருக்கோவிலுக்கு சொந்தமான இரண்டு குளங்கள் விரைவில் புனரமைக்கப்படும் என்றும் தெரிவித்தார்.தொடர்ந்து பேசிய அவர், பாஜக பிரமுகரின் பிடியில் இருந்த 100 கோடி மதிப்பிலான இடத்தை தமிழ்நாடு பொதுப்பணித்துறை அமைச்சர் தலைமையில் மீட்கபட்டுள்ளதாகவும், விரைவில் இந்த இடத்தில் 2 கோடி மதிப்பில் அம்மணி அம்மாள் கோபுரம் புதுப்பிக்கப்படும் என்றும், மீதமுள்ள இடத்தில் திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலுக்கு பல லட்சம் பக்தர்கள் வருகையொட்டி விரைவில் பக்தர்களின் வசதிக்காக பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்படும் என்றும் தெரிவித்தார்.


பாஜக பிரமுகரால் ஆக்கிரமிக்கப்பட்ட இடம்: அமைச்சர் சேகர்பாபு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

 

திருப்பதிக்கு நிகராக படிப்படியாக திருவண்ணாமலையிலும் சிறப்பு தரிசனத்திற்கான நேரம் விரைவில் ஆலோசித்து தெரிவிக்கப்படும் என்றும் , ஆன்மீக பக்தர்களின் வசதிக்காக அனைத்து ஏற்பாடுகளும் விரைவில் செய்து தரப்படும் அதற்கு இந்து சமய அறநிலையத்துறை முன்னெடுக்கும் என்றும் தெரிவித்த அவர், விரைவில் அறங்காவலர் குழு உறுப்பினர்கள் நியமிக்கப்படுவார்கள் என்றும், தமிழ்நாடு அரசு பொறுப்பேற்று தற்போது வரையிலும் 4250 கோடி மதிப்பிலான சொத்துக்கள் இந்து சமய அறநிலையத் துறையின் சார்பில் மீட்கப்பட்டுள்ளதாகவும் மீட்பு வேட்டை தொடரும் என்றும் தெரிவித்தார். இந்த ஆண்டு மட்டும் திருவண்ணாமலை மற்றும் சென்னை ஆகிய இடங்களில் பாஜக பிரமுகர்களால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட இடத்தை பல்வேறு சட்டப் போராட்டங்கள் நடத்தி மீட்டுள்ளதாகவும், இதுபோன்று ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து மீட்கப்படும் இடங்களில் ஆன்மீக பக்தர்களுக்கு பயன்படுத்துகின்ற வகையில், பக்தர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்ய ஏற்பாடுகள் செய்யப்படும் என்றும்,


பாஜக பிரமுகரால் ஆக்கிரமிக்கப்பட்ட இடம்: அமைச்சர் சேகர்பாபு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

 

 

வருகின்ற சித்ரா பௌர்ணமி நாட்களில் அண்ணாமலையார் திருக்கோவிலில் இடைத்தரகர்கள் முற்றிலுமாக ஒழிக்கப்பட்டு ஆன்மீக பக்தர்கள் தரிசனம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்படும் என்றும் தெரிவித்தார். அண்ணாமலையார் திருக்கோவிலுக்கு யானை வருவது குறித்த கேள்விக்கு பதில் அளித்தவர், யானையை வாங்கு வாங்குவதற்கு சட்டத்தில் இடம் இல்லை என்றும், உரிய அனுமதி பெற்று யானையை வளர்த்து வருபவர்கள் திருக்கோவிலுக்கு தானமாக அளித்தால் அதனை தாங்கள் ஏற்றுக் கொள்வோம் என்றும், யானை வாங்குவது குறித்து நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்புக்கு மேல்முறையீடு தமிழ்நாடு அரசாங்கம் செய்ய உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.சித்ரா பௌர்ணமி தினத்தன்று திருவண்ணாமலைக்கு வருகை தரும் பக்தர்களுக்கு நிழற்பந்தல் அமைப்பது குறித்த கேள்விக்கு பதில் அளித்த அவர் தேவை என்றால் நிச்சயமாக பக்தர்களின் வசதிக்காக எதுவாக இருந்தாலும் செய்வதற்கு முயற்சிப்போம் என்று தெரிவித்தார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Cyclone Ditwah: வங்கக் கடலில் உருவானது ‘டிட்வா‘ புயல்; தமிழகத்தை நோக்கி நகரும் என வானிலை மையம் அறிவிப்பு
வங்கக் கடலில் உருவானது ‘டிட்வா‘ புயல்; தமிழகத்தை நோக்கி நகரும் என வானிலை மையம் அறிவிப்பு
TN RED ALERT: ரெட் அலர்ட்... உடனே இந்த 12 மாவட்டங்களுக்கு செல்லுங்க- ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு ஸ்டாலின் அதிரடி உத்தரவு
ரெட் அலர்ட்... உடனே இந்த 12 மாவட்டங்களுக்கு செல்லுங்க- ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு ஸ்டாலின் அதிரடி உத்தரவு
Sengottaiyan: தவெகவில் இணைந்ததற்கு இது தான் காரணம்.! இளவல் விஜய் தலைமையில் ஆட்சி- செங்கோட்டையன் அதிரடி
தவெகவில் இணைந்ததற்கு இது தான் காரணம்.! இளவல் விஜய் தலைமையில் ஆட்சி- செங்கோட்டையன் அதிரடி
Karthigai Deepam: ரேவதியை காப்பாற்றிய கெளசல்யா.. கார்த்தியை மிரட்டும் காளியம்மாள் - கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: ரேவதியை காப்பாற்றிய கெளசல்யா.. கார்த்தியை மிரட்டும் காளியம்மாள் - கார்த்திகை தீபத்தில் இன்று
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Sengottaiyan Joins TVK | தவெகவில் இணைந்தார்  செங்கோட்டையன்! விஜய் கொடுத்த முதல் TASK?
இன்னும் 2 நாள் தான்...நெருங்கி வரும் பேராபத்து 6 மாவட்டங்களுக்கு RED ALERT | Rain Alert | TN Rain | Weather Report
செஞ்சி மஸ்தானுக்கு செக் மா.செ-வாகும் உதய் வலதுகரம் சாட்டையை சுழற்றும் ஸ்டாலின் | DMK | Senji Masthan Vs Senji Siva
ஒரே நொடியில் பறிபோன உயிர் இந்திய வீரர் உயிரிழப்பு பரபரப்பு CCTV காட்சி | Volley Ball Player Hardik Death
தவெகவில் செங்கோட்டையன் பாஜகவின் SLEEPER CELL விஜய்யை காலி செய்ய திட்டமா? | Sengottaiyan Vs TVK

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Cyclone Ditwah: வங்கக் கடலில் உருவானது ‘டிட்வா‘ புயல்; தமிழகத்தை நோக்கி நகரும் என வானிலை மையம் அறிவிப்பு
வங்கக் கடலில் உருவானது ‘டிட்வா‘ புயல்; தமிழகத்தை நோக்கி நகரும் என வானிலை மையம் அறிவிப்பு
TN RED ALERT: ரெட் அலர்ட்... உடனே இந்த 12 மாவட்டங்களுக்கு செல்லுங்க- ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு ஸ்டாலின் அதிரடி உத்தரவு
ரெட் அலர்ட்... உடனே இந்த 12 மாவட்டங்களுக்கு செல்லுங்க- ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு ஸ்டாலின் அதிரடி உத்தரவு
Sengottaiyan: தவெகவில் இணைந்ததற்கு இது தான் காரணம்.! இளவல் விஜய் தலைமையில் ஆட்சி- செங்கோட்டையன் அதிரடி
தவெகவில் இணைந்ததற்கு இது தான் காரணம்.! இளவல் விஜய் தலைமையில் ஆட்சி- செங்கோட்டையன் அதிரடி
Karthigai Deepam: ரேவதியை காப்பாற்றிய கெளசல்யா.. கார்த்தியை மிரட்டும் காளியம்மாள் - கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: ரேவதியை காப்பாற்றிய கெளசல்யா.. கார்த்தியை மிரட்டும் காளியம்மாள் - கார்த்திகை தீபத்தில் இன்று
Sengottaiyan joined TVK: ஜெ. படத்தை தூக்கி போட்ட செங்கோட்டையன்.? பாக்கெட்டில் ஜொலிக்கும் விஜய் படம்
ஜெ. படத்தை தூக்கி போட்ட செங்கோட்டையன்.? பாக்கெட்டில் ஜொலிக்கும் விஜய் படம்
Parijatham: இசையைத் தீர்த்துக்கட்ட ஸ்ரீஜா தந்தை திட்டமா? பாரிஜாதத்தில் இன்று
Parijatham: இசையைத் தீர்த்துக்கட்ட ஸ்ரீஜா தந்தை திட்டமா? பாரிஜாதத்தில் இன்று
தஞ்சாவூரில் ஆசிரியை படுகொலை!  தமிழ்நாட்டில் யாருடைய உயிருக்கும் உத்தரவாதம் இல்லை;அன்புமணி ராமதாஸ் கண்டனம்
தஞ்சாவூரில் ஆசிரியை படுகொலை! தமிழ்நாட்டில் யாருடைய உயிருக்கும் உத்தரவாதம் இல்லை;அன்புமணி ராமதாஸ் கண்டனம்
Sengottaiyan: விஜய் கட்சியில் ஜெயலலிதாவின் தளபதி செங்கோட்டையன்... கொங்கு மண்டலத்தில் கெத்து காட்டும் தவெக
விஜய் கட்சியில் ஜெயலலிதாவின் தளபதி செங்கோட்டையன்... கொங்கு மண்டலத்தில் கெத்து காட்டும் தவெக
Embed widget