மேலும் அறிய

வேலூரில் ஆளில்லாத காரில் இருந்து 25 லட்சம் மதிப்பிலான  செம்மர கட்டைகள் பறிமுதல்

வாகன சோதனைக்கு பயந்தோ அல்லது கடத்தி வந்தவர்களுக்குள் ஏற்பட்ட தகராறு காரணமாகவோ, காரை சாலையோரம் நிறுத்தி சென்றிருக்கலாம். கார் பதிவெண் மூலம் உரிமையாளரின் விவரம் பெற்று விசாரித்து வருகிறோம்

வேலூர் அருகே காரில் கடத்தி வரப்பட்ட 25 லட்சம் ருபாய் மதிப்பிலான  60 செம்மரக்கட்டைகளை போலீசார் பறிமுதல் செய்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

வேலூர் அடுத்த பொய்கை அருகே சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை அணுகுசாலையோரம் நேற்று மாலை கர்நாடக பதிவெண் கொண்ட கார் ஒன்று வெகுநேரமாக நின்று கொண்டிருந்தது. காரில் டிரைவர் உள்பட யாரும் இல்லை. அதனால் சந்தேகம் அடைந்த அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் விரிஞ்சிபுரம் உதவி ஆய்வாளர் சீனிவாசன் தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்றனர்.


வேலூரில் ஆளில்லாத காரில் இருந்து 25 லட்சம் மதிப்பிலான  செம்மர கட்டைகள் பறிமுதல்

 

காரின் டிரைவர் அல்லது உரிமையாளர் குறித்து அந்த பகுதியில் உள்ள டீக்கடை மற்றும்  ஓட்டலில் உள்ளனரா என்று போலீசார் விசாரித்தனர். ஆனால் அவர்கள் குறித்து எந்தவித தகவலும் கிடைக்கவில்லை. அதைத்தொடர்ந்து போலீசார் காரை திறந்து சோதனை செய்தனர். சோதனையின்போது காரின்  பின்பகுதியில் செம்மரக்கடைகள் வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டிருந்தது. இதுகுறித்து உயர் அதிகாரிகள் மற்றும் வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

காரில் சாவி இல்லாததால் அந்த பகுதியிலுள்ள  மெக்கானிக் ஒருவரை அழைத்து வந்து செம்மரக்கட்டைகளுடன் காரை  விரிஞ்சிபுரம் போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்றனர் . சிறிது நேரத்தில் வேலூர் உதவி போலீஸ் சூப்பிரண்டு ஆல்பர்ட் ஜான், இன்ஸ்பெக்டர் சுபா மற்றும் வேலூர் வனச்சரகர் ரவிக்குமார் தலைமையிலான வனத்துறையினர் போலீஸ் நிலையத்துக்கு வந்து காரில் இருந்த செம்மரக்கட்டைகளை பார்வையிட்டு விசாரித்தனர்.

காரில் 60 செம்மரக்கட்டைகள் இருந்தன. வனத்துறையினர் ஆய்வுக்கு பின்னர் செம்மரக்கட்டைகள் சுமார் 300 கிலோ எடை இருக்கும் என்றும்,  சிறிய அளவிலான செம்மரங்களை வெட்டி கடத்தி வந்திருப்பதாகவும் இதன் சந்தை மதிப்பு 25 லட்சத்தை தாண்டும் என்றும் தெரிவித்தனர். கைப்பற்றப்பட்ட செம்மரக்கட்டைகளுடன் கார் வேலூர் வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது.

செம்மரக்கட்டைகள் பறிமுதல் செய்ததை அடுத்து  விரிஞ்சிபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் பொய்கை மற்றும் சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையோரம் உள்ள கண்காணிப்பு கேமராக்களை போலீசார் ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், செம்மரக்கட்டைகள் ஆந்திராவில் இருந்து காரில் வேலூர் வழியாக வேறு இடத்துக்கு கடத்தி செல்ல திட்டமிட்டிருக்கலாம்.

போலீசாரின் வாகன சோதனைக்கு பயந்தோ அல்லது செம்மரக்கட்டைகளை கடத்தி வந்தவர்களுக்குள் ஏற்பட்ட தகராறு காரணமாகவோ காரை சாலையோரம் நிறுத்தி சென்றிருக்கலாம். காரின் பதிவு எண் மூலம் உரிமையாளரின் விவரம் பெற்று, அவரிடம் விசாரணை நடத்த உள்ளோம்.என்று காவல்துறை வட்டாரத்தில் தெரிவித்துள்ளனர் .

வேலூரில் ஆளில்லாத காரில் இருந்து 25 லட்சம் மதிப்பிலான  செம்மர கட்டைகள் பறிமுதல்

அதன் பின்னரே முழுவிபரம் தெரிய வரும். கார் டிரைவர் மற்றும் செம்மரக்கட்டைகளை கடத்தி வந்தவர்கள் பொய்கை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் தலைமறிவாகியுள்ளனரா என்று விசாரணை நடத்தி வருகிறோம் என்று தெரிவித்தனர்.

வனத்துறை மற்றும் காவல்துறை  செக்போஸ்டில் வாகனத் தணிக்கை தீவிரப்படுத்த வேண்டும்

ஆந்திர  மாநிலத்திலிருந்து  தமிழ்நாட்டுக்கு வேலூர் மாவட்டம் வழியாக செம்மரக்கட்டைகளை கடத்திவரும் சம்பவம் சமீப காலங்களில் அதிகரித்துள்ளது 

தமிழ்நாட்டுக்கு கடத்திவரப்படும் , செம்மரக்கட்டைகளை  வேலூரில் உள்ள  ரகசிய குடோன்களில் சில நாட்கள் பதுக்கி வைத்துவிட்டு பின்னர் , போலீஸ் கெடுபிடி குறைந்தவுடன் சென்னைக்கு கடத்தி செல்கின்றனர். சென்னையில் இருந்து தூத்துக்குடி மற்றும் பிற பகுதிகளில் உள்ள விமானநிலையம் மற்றும் துறைமுகம் மூலம் வெளிநாடுகளுக்கு செம்மர கட்டைகள் கடத்தப்படுகின்றது .

வேலூரில் ஆளில்லாத காரில் இருந்து 25 லட்சம் மதிப்பிலான  செம்மர கட்டைகள் பறிமுதல்

ஆந்திராவில் இருந்து செம்மரங்களை கடத்தி வரும் சம்பவங்கள்  தொடர்கதையாகி உள்ளதால். தமிழக-ஆந்திர எல்லையான வேலூரில் ஐந்துக்கும் மேற்பட்ட வனத்துறை மற்றும் காவல் துறை செக்போஸ்ட்களை தாண்டி தான் இந்த கடத்தல் கும்பல் செம்மரக்கட்டைகளை கடத்தி தமிழக எல்லைக்குள் நுழைகின்றனர். எனவே ஆந்திரா - வேலூர் எல்லைப்பகுதியில் உள்ள  வனத்துறை மற்றும் காவல் துறைக்கு சொந்தமான செக்போஸ்ட்களில் வாகனத் தணிக்கை தீவிரப்படுத்த வேண்டும் என  கோரிக்கை எழுந்துள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IND vs ZIM Match Highlights: ஜிம்பாப்வேக்கு பதிலடி கொடுத்த இந்தியா! 2 வது டி20 போட்டியில் அபார வெற்றி!
IND vs ZIM Match Highlights: ஜிம்பாப்வேக்கு பதிலடி கொடுத்த இந்தியா! 2 வது டி20 போட்டியில் அபார வெற்றி!
ஜம்மு காஷ்மீரில் என்கவுண்டர்.. வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்கள்.. நடந்தது என்ன?
ஜம்மு காஷ்மீரில் என்கவுண்டர்.. வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்கள்.. நடந்தது என்ன?
Breaking News LIVE, July 7 : இரவு 10 மணிவரை 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு ! வானிலை மையம் அறிவிப்பு
Breaking News LIVE, July 7 : இரவு 10 மணிவரை 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு ! வானிலை மையம் அறிவிப்பு
Abhishek Sharma: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 போட்டி.. மொரட்டு அடி..மிரட்டல் சதம்! அசத்திய அபிஷேக் ஷர்மா!
Abhishek Sharma: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 போட்டி.. மொரட்டு அடி..மிரட்டல் சதம்! அசத்திய அபிஷேக் ஷர்மா!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Armstrong Funeral | உடல் அடக்கம் எங்கே? நீதிமன்றம் சொன்னது என்ன? சம்மதித்த ஆம்ஸ்ட்ராங் மனைவிMayawati in Armstrong Funeral |  Armstrong Murder | உண்மையான குற்றவாளிகள் யார்?அஸ்ரா கர்க் அதிர்ச்சி தகவல் ஆம்ஸ்ட்ராங் படுகொலை..Armstrong Murder : சாமானியன் To தலைவன்!படுகொலை - பகீர் தகவல்! யார் இந்த ஆம்ஸ்ட்ராங்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IND vs ZIM Match Highlights: ஜிம்பாப்வேக்கு பதிலடி கொடுத்த இந்தியா! 2 வது டி20 போட்டியில் அபார வெற்றி!
IND vs ZIM Match Highlights: ஜிம்பாப்வேக்கு பதிலடி கொடுத்த இந்தியா! 2 வது டி20 போட்டியில் அபார வெற்றி!
ஜம்மு காஷ்மீரில் என்கவுண்டர்.. வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்கள்.. நடந்தது என்ன?
ஜம்மு காஷ்மீரில் என்கவுண்டர்.. வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்கள்.. நடந்தது என்ன?
Breaking News LIVE, July 7 : இரவு 10 மணிவரை 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு ! வானிலை மையம் அறிவிப்பு
Breaking News LIVE, July 7 : இரவு 10 மணிவரை 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு ! வானிலை மையம் அறிவிப்பு
Abhishek Sharma: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 போட்டி.. மொரட்டு அடி..மிரட்டல் சதம்! அசத்திய அபிஷேக் ஷர்மா!
Abhishek Sharma: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 போட்டி.. மொரட்டு அடி..மிரட்டல் சதம்! அசத்திய அபிஷேக் ஷர்மா!
TNPL 2024: NRK vs CSG: கடைசி ஓவரில் கெத்து காட்டிய நித்திஷ்! - 3 விக்கெட் வித்தியாசத்தில் சேப்பாக்கை வீழ்த்திய நெல்லை ராயல்!
TNPL 2024: NRK vs CSG: கடைசி ஓவரில் கெத்து காட்டிய நித்திஷ்! - 3 விக்கெட் வித்தியாசத்தில் சேப்பாக்கை வீழ்த்திய நெல்லை ராயல்!
Kanchana 4: காஞ்சனா 4 ரெடி! முக்கிய அப்டேட்டை கொடுத்த ராகவா லாரன்ஸ்
Kanchana 4: காஞ்சனா 4 ரெடி! முக்கிய அப்டேட்டை கொடுத்த ராகவா லாரன்ஸ்
Sunil Gavaskar: ட்ராவிட்டிற்கு இதுதான் உயர்ந்த கெளரவமாக இருக்கும்! அரசுக்கு கவாஸ்கர் வைத்த முக்கிய கோரிக்கை!
Sunil Gavaskar: ட்ராவிட்டிற்கு இதுதான் உயர்ந்த கெளரவமாக இருக்கும்! அரசுக்கு கவாஸ்கர் வைத்த முக்கிய கோரிக்கை!
EPS - Annamalai: நான் துரோகியா? அண்ணாமலைதான் பச்சோந்தி; சுயநலவாதி ஓபிஎஸ்: வச்சி செய்த இபிஎஸ்
EPS - Annamalai: நான் துரோகியா? அண்ணாமலைதான் பச்சோந்தி; சுயநலவாதி ஓபிஎஸ்: வச்சி செய்த இபிஎஸ்
Embed widget