மேலும் அறிய

புறங்கூறி வாழ்வதைவிட உயிர்விடுவது மேல்..திருக்குறளை பகிர்ந்து நிவேதா பெத்துராஜ் விமர்சனம்?

உதயநிதி - திரிஷா சர்ச்சை பரபரப்புக்கு மத்தியில் நடிகை நிவேதா பெத்துராஜ் பகிர்ந்த திருக்குறள் பதிவு சமூக வலைதளங்களில் புதிய விவாதத்தை கிளப்பியுள்ளது.

நடிகை திரிஷா குறித்து தமிழக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாக எழுந்துள்ள சர்ச்சை தொடர்ந்து அரசியல் மற்றும் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்த விவகாரம் தொடர்பாக பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், பெண்கள் அமைப்புகள் மற்றும் திரையுலகப் பிரபலங்கள் தங்களது கருத்துகளை பதிவு செய்து வரும் நிலையில், தற்போது நடிகை நிவேதா பெத்துராஜின் எக்ஸ் பதிவு சமூக வலைதளங்களில் கவனம் ஈர்த்துள்ளது.

திருக்குறளை பகிர்ந்த நிவேத பெத்துராஜ்

நிவேதா பெத்துராஜ் தனது எக்ஸ் பக்கத்தில் எந்த விளக்கமும் இல்லாமல் திருக்குறள் 183-ஐ மட்டும் பதிவிட்டுள்ளார். அவர் பதிவில் எந்த அரசியல் தலைவரின் பெயரையோ, எந்த சம்பவத்தையோ குறிப்பிடவில்லை. இருப்பினும், அந்த பதிவு வெளியாகியுள்ள நேரம் காரணமாக, அது உதயநிதி ஸ்டாலின் பேச்சை மறைமுகமாக விமர்சிப்பதாக ரசிகர்கள் மற்றும் சமூக வலைதள பயனர்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

"புறங்கூறிப் பொய்த்துயிர் வாழ்தலின் சாதல்
அறங்கூறும் ஆக்கம் தரும்."
திருக்குறள் 183

குறளின் விளக்கம்

இந்தக் குறளின் பொருள், பிறரைப் பற்றி பொய்யாகப் புறங்கூறி வாழ்வதைவிட அப்படிப்பட்ட வாழ்க்கையை விடுவது உயர்ந்த அறமாகும் என்பதாகும். பிறரை இழிவுபடுத்துதல், உண்மையற்ற குற்றச்சாட்டுகளை கூறுதல் போன்றவை அறநெறிக்கு முரணானவை என்பதையும், மனிதன் கண்ணியத்துடனும் நேர்மையுடனும் வாழ வேண்டும் என்பதையும் திருவள்ளுவர் இந்தக் குறள் மூலம் எடுத்துரைக்கிறார்.

முன்னதாக, உதயநிதி ஸ்டாலின் பேச்சுக்கு நடிகையும் பாஜக நிர்வாகியுமான குஷ்பு சுந்தரும் கடும் கண்டனம் தெரிவித்திருந்தார். தனது எக்ஸ் பதிவில், நடிகை திரிஷாவிடம் உதயநிதி நிபந்தனையற்ற பொதுமன்னிப்பு கேட்க வேண்டும் என்றும், பெண்களை இழிவுபடுத்தும் பேச்சுக்கு அரசியல் மேடைகளில் இடமில்லை என்றும் அவர் வலியுறுத்தியிருந்தார்.

இந்த நிலையில், நிவேதா பெத்துராஜின் பதிவு சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. எனினும், தனது பதிவின் பின்னணி குறித்து நிவேதா பெத்துராஜ் எந்த விளக்கமும் அளிக்கவில்லை.

Advertisement

தலைப்பு செய்திகள்

புறங்கூறி வாழ்வதைவிட உயிர்விடுவது மேல்..திருக்குறளை பகிர்ந்து நிவேதா பெத்துராஜ் விமர்சனம்?
புறங்கூறி வாழ்வதைவிட உயிர்விடுவது மேல்..திருக்குறளை பகிர்ந்து நிவேதா பெத்துராஜ் விமர்சனம்?
Premalatha : ஆங்கிலேயர் காலத்தில் வாய் பூட்டு சட்டம் போல் எதிர்கட்சிகளை முடக்கும் விஜய் அரசு.! இறங்கி அடித்த பிரேமலதா
ஆங்கிலேயர் காலத்தில் வாய் பூட்டு சட்டம் போல் எதிர்கட்சிகளை முடக்கும் விஜய் அரசு.! இறங்கி அடித்த பிரேமலதா
உதயநிதி பேச்சும், கைதும் கண்டிக்கத்தக்கவை: ஆக்கப்பூர்வ அரசியல் செய்ய பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்!
உதயநிதி பேச்சும், கைதும் கண்டிக்கத்தக்கவை: ஆக்கப்பூர்வ அரசியல் செய்ய பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்!
செவிலியர் பணியிடங்கள் ஒழிப்பு: மருத்துவ சேவையில் தமிழக அரசு செய்யும் அநீதி- அன்புமணி கடும் கண்டனம்
செவிலியர் பணியிடங்கள் ஒழிப்பு: மருத்துவ சேவையில் தமிழக அரசு செய்யும் அநீதி- அன்புமணி கடும் கண்டனம்
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi Arrest : சிஎம் விஜய் போட்ட உத்தரவு.? உதயநிதியை கைது செய்ய வீட்டிற்குள் சென்ற போலீஸ்
சிஎம் விஜய் போட்ட உத்தரவு.? உதயநிதியை கைது செய்ய வீட்டிற்குள் சென்ற போலீஸ்
Udhayanidhi Arrest : உதயநிதியை கைது செய்ய இது தான் காரணம்.! தவெக புகாரில் இருப்பது என்ன.?
உதயநிதியை கைது செய்ய இது தான் காரணம்.! தவெக புகாரில் இருப்பது என்ன.?
Udhayanidhi: ”உதயநிதியை கைது செய்யக்கூடாது” 12 மணி வரை கெடு விதித்த சென்னை உயர்நீதிமன்றம்
”உதயநிதியை கைது செய்யக்கூடாது” 12 மணி வரை கெடு விதித்த சென்னை உயர்நீதிமன்றம்
நடிகை பற்றி உதயநிதி சர்ச்சை பேச்சு.. நடவடிக்கை எடுங்க.. தேசிய மகளிர் ஆணையத்தில் தவெக புகார்!
நடிகை பற்றி உதயநிதி சர்ச்சை பேச்சு.. நடவடிக்கை எடுங்க.. தேசிய மகளிர் ஆணையத்தில் தவெக புகார்!
Dabur Products: முன்னணி நிறுவனம் தேன், நெய் உள்ளிட்டவற்றை விற்க தடை..! காரணம் என்ன? மத்திய அரசு அதிரடி
முன்னணி நிறுவனம் தேன், நெய் உள்ளிட்டவற்றை விற்க தடை..! காரணம் என்ன? மத்திய அரசு அதிரடி
Kanimozhi: அருவருப்பான பேச்சு, மருமகனை கண்டிப்பாரா? கனிமொழி வாய் திறக்காதது ஏன்? - TVKவினர் சரமாரி கேள்வி
அருவருப்பான பேச்சு, மருமகனை கண்டிப்பாரா? கனிமொழி வாய் திறக்காதது ஏன்? - TVKவினர் சரமாரி கேள்வி
Donald Trump: ட்ரம்பே ஷாக்..! கூடுதல் வரிக்கு எதிராக அமெரிக்காவின் 25 மாநிலங்கள் போட்ட வழக்கு - இந்தியா ஹாப்பி..!
ட்ரம்பே ஷாக்..! கூடுதல் வரிக்கு எதிராக அமெரிக்காவின் 25 மாநிலங்கள் போட்ட வழக்கு - இந்தியா ஹாப்பி..!
முதல்வர் பற்றி சர்ச்சை பேச்சு.. அவை அடக்கம் இல்லாத ஆபாசநிதி.. உதயநிதியை வெளுத்து வாங்கிய ஆனந்த்!
முதல்வர் பற்றி சர்ச்சை பேச்சு.. அவை அடக்கம் இல்லாத ஆபாசநிதி.. உதயநிதியை வெளுத்து வாங்கிய ஆனந்த்!
Embed widget