மேலும் அறிய

பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் தூக்குப்போட்டு பெண் தற்கொலை

பெரம்பலூர் அரசு மருத்துவமனை குளியலறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அரியலூர் மாவட்டம், செந்துறை தாலுகா, அயன் தத்தனூர், காலனி தெருவை சேர்ந்தவர் ராமசாமி. இவரது மனைவி அசலாம்பாள் (வயது 53). இவர்களுக்கு 3 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். அவர்கள் அனைவருக்கும் திருமணமாகி விட்டது. இதில் 2-வது மகள் லலிதாவை (25) பெரம்பலூர் மாவட்டம், குன்னம் தாலுகா, கீழப்புலியூரை சேர்ந்த சிலம்பரசன் என்பவருக்கு திருமணம் செய்து கொடுத்துள்ளனர். ஏற்கனவே லலிதாவுக்கு முதல் பிரசவத்தில் பெண் குழந்தை பிறந்தது. இந்த நிலையில் 2-வது முறையாக கர்ப்பமான லலிதா கடந்த 25-ந்தேதி காலை பிரசவத்திற்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அன்றைய தினம் மதியமே லலிதாவுக்கு சுகப்பிரசவம் நடந்து 2-வதும் அழகான பெண் குழந்தை பிறந்தது. இந்த நிலையில் மருத்துவமனை மகப்பேறு சிகிச்சை பிரிவு கட்டிடத்தில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த லலிதாவை அவரது தாய் அசலாம்பாள் கூடவே இருந்து கவனித்து வந்தார். இந்த நிலையில் கடந்த 2 நாட்களாகவே அசலாம்பாள் தனக்குத் தானே பேசிக்கொண்டே சற்று மனநலம் பாதிக்கப்பட்ட நபர் போல் நடந்துள்ளார். அசலாம்பாளின் செயலை கவனித்து வந்த அவரது மருமகன் சிலம்பரசன் தனது மாமனார் ராமசாமியிடம் வந்து வீட்டிற்கு அழைத்து செல்லுமாறு கூறியுள்ளார். இந்த நிலையில் நேற்று காலை 11.45 மணியளவில் மகப்பேறு சிகிச்சை பிரிவு கட்டிடத்தின் முதல் தளத்தில் உள்ள குளியலறைகளை சுத்தம் செய்வதற்காக மருத்துவமனை பெண் ஊழியர்கள் 2 பேர் சென்றனர்.


பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் தூக்குப்போட்டு பெண் தற்கொலை

இதனை தொடர்ந்து அப்போது ஒரு குளியலறையின் கதவு நீண்டநேரம் திறக்காமல் இருந்தது. இதனால் சந்தேகமடைந்த ஊழியர்கள் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது குளியலறையில் துணிகளை தொங்கவிடும் கம்பியில் அசலாம்பாள் தான் உடுத்தியிருந்த சேலையால் தூக்குப்போட்டுக்கொண்ட நிலையில் பிணமாக தொங்கினார். அசலாம்பாளின் உடலை அவரது குடும்பத்தினர் பார்த்து கதறி அழுதனர். இதையடுத்து மருத்துவமனை நிர்வாகத்தினர் இதுகுறித்து பெரம்பலூர் போலீசாருக்கு உடனடியாக தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அசலாம்பாளின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்த புகாரின் பேரில், பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அசலாம்பாள் மனநலம் பாதிக்கப்பட்டதால் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது மகளுக்கு 2-வதும் பெண் குழந்தை பிறந்ததால் மனவேதனையில் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். அரசு மருத்துவமனையில் பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண


 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
470
Active
29033
Recovered
165
Deaths
Last Updated: Sat 19 July, 2025 at 10:52 am | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

PM Modi On Tariff: நாங்க ரெடி, என்ன வந்தாலும் பாத்துக்கலாம்.. ட்ரம்புக்கு வார்னிங் கொடுத்த பிரதமர் மோடி
PM Modi On Tariff: நாங்க ரெடி, என்ன வந்தாலும் பாத்துக்கலாம்.. ட்ரம்புக்கு வார்னிங் கொடுத்த பிரதமர் மோடி
7ஆம் நாளாய் போராட்டம்; தூய்மைப் பணியாளர்கள் வாக்குறுதிகளை முதல்வர் நிறைவேற்றுவாரா?- அன்புமணி கேள்வி
7ஆம் நாளாய் போராட்டம்; தூய்மைப் பணியாளர்கள் வாக்குறுதிகளை முதல்வர் நிறைவேற்றுவாரா?- அன்புமணி கேள்வி
பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களே… இன்று முதல் அசல் மதிப்பெண் சான்றிதழ்- வாங்கிட்டீங்களா? எப்படி?
பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களே… இன்று முதல் அசல் மதிப்பெண் சான்றிதழ்- வாங்கிட்டீங்களா? எப்படி?
TNEA 2025: பொறியியல் 3ஆம் சுற்று கலந்தாய்வு சாய்ஸ் ஃபில்லிங் இன்று முதல்! உங்களுக்கான வாய்ப்பு இதோ!
TNEA 2025: பொறியியல் 3ஆம் சுற்று கலந்தாய்வு சாய்ஸ் ஃபில்லிங் இன்று முதல்! உங்களுக்கான வாய்ப்பு இதோ!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Kaliyammal In TVK | திமுக - அதிமுகவிற்கு NO.. தவெகவில்  காளியம்மாள்? தேதி குறித்த விஜய்!
சங்கீதா - கிரிஷ் விவாகரத்து? INSTAGRAM-ல் பெயர் மாற்றம்! கோலிவுட்டில் அடுத்த பூகம்பம்  | Sangeetha Kirsh Divorce
”ஏய் என்ன பேசிட்டு இருக்க”மேயருக்கு எதிராக போர்க்கொடி!அடித்துக் கொண்ட கவுன்சிலர்கள்
”ஷாருக்கானுக்கு தேசிய விருது ஒரு நியாயம் வேண்டாமா?”கொந்தளித்த நடிகை ஊர்வசி | Urvashi On  National Awards
காலியாகி கிடக்கும் கிராமம் ஒற்றை ஆளாய் நிற்கும் தாத்தா நாட்டாகுடியின் கண்ணீர் கதை | Sivagangai News

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
PM Modi On Tariff: நாங்க ரெடி, என்ன வந்தாலும் பாத்துக்கலாம்.. ட்ரம்புக்கு வார்னிங் கொடுத்த பிரதமர் மோடி
PM Modi On Tariff: நாங்க ரெடி, என்ன வந்தாலும் பாத்துக்கலாம்.. ட்ரம்புக்கு வார்னிங் கொடுத்த பிரதமர் மோடி
7ஆம் நாளாய் போராட்டம்; தூய்மைப் பணியாளர்கள் வாக்குறுதிகளை முதல்வர் நிறைவேற்றுவாரா?- அன்புமணி கேள்வி
7ஆம் நாளாய் போராட்டம்; தூய்மைப் பணியாளர்கள் வாக்குறுதிகளை முதல்வர் நிறைவேற்றுவாரா?- அன்புமணி கேள்வி
பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களே… இன்று முதல் அசல் மதிப்பெண் சான்றிதழ்- வாங்கிட்டீங்களா? எப்படி?
பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களே… இன்று முதல் அசல் மதிப்பெண் சான்றிதழ்- வாங்கிட்டீங்களா? எப்படி?
TNEA 2025: பொறியியல் 3ஆம் சுற்று கலந்தாய்வு சாய்ஸ் ஃபில்லிங் இன்று முதல்! உங்களுக்கான வாய்ப்பு இதோ!
TNEA 2025: பொறியியல் 3ஆம் சுற்று கலந்தாய்வு சாய்ஸ் ஃபில்லிங் இன்று முதல்! உங்களுக்கான வாய்ப்பு இதோ!
திருப்பூர் SSI கொலை வழக்கில் பரபரப்பு! தலைமறைவாக இருந்த மணிகண்டன் என்கவுண்டரில் சுட்டுக்கொலை!
திருப்பூர் SSI கொலை வழக்கில் பரபரப்பு! தலைமறைவாக இருந்த மணிகண்டன் என்கவுண்டரில் சுட்டுக்கொலை!
EV Discounts: லைஃப் டைம் செட்டில்மெண்ட் - ரூ.10 லட்சம் வரை தள்ளுபடி, மின்சார கார்களுக்கு அதிரடி ஆஃபர்
EV Discounts: லைஃப் டைம் செட்டில்மெண்ட் - ரூ.10 லட்சம் வரை தள்ளுபடி, மின்சார கார்களுக்கு அதிரடி ஆஃபர்
Trump Tariffs: ஓவரா ஆடும் ட்ரம்ப் - என்ன செய்தால் அமெரிக்காவை அடக்கலாம்? இந்தியா செய்ய வேண்டியது என்ன?
Trump Tariffs: ஓவரா ஆடும் ட்ரம்ப் - என்ன செய்தால் அமெரிக்காவை அடக்கலாம்? இந்தியா செய்ய வேண்டியது என்ன?
US Tariff: எதையுமே விட்டு வைக்காத ட்ரம்ப்.. அதிகபட்சமாக 63% வரி, இறாலுக்கு கூடவா? மொத்த லிஸ்ட்
US Tariff: எதையுமே விட்டு வைக்காத ட்ரம்ப்.. அதிகபட்சமாக 63% வரி, இறாலுக்கு கூடவா? மொத்த லிஸ்ட்
Embed widget