மேலும் அறிய

பெரம்பலூர்: மருந்துக்கடை உரிமையாளர் கொலை: மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முற்றுகை

பெரம்பலூர் மாவட்டத்தில் மருந்துகடை உரிமையாளர் அடித்து கொலை செய்த வழக்கில் குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும், இழப்பீடு வழங்க வேண்டும் என கிராம மக்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பெரம்பலூர் மாவட்டம்  லாடபுரம் சிவன் கோவில் தெருவை சேர்ந்த மருந்தக உரிமையாளர் நாகராஜன் மாமூல் தர மறுத்ததால், அவரை அடித்துக்கொலை செய்த வழக்கில் 4 பேரை பெரம்பலூர் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள ஒருவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். இந்த நிலையில் நாகராஜன் கொலைக்கு நீதி கேட்டு லாடபுரம் கிராம மக்கள் பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர்  அலுவலகத்தை முற்றுகையிட்டு, தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது அவர்கள், நாகராஜன் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளிகளான சந்தோஷ், நவீன் ஆகிய 2 பேரை கைது செய்ய வேண்டும். ஏற்கனவே கைது செய்யப்பட்ட குற்றவாளிகள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும். மாமூல் கேட்கும் ரவுடிகளை கைது செய்ய வேண்டும். கிராமத்தில் சட்ட விரோதமாக மது விற்பனை செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இறந்த நாகராஜன் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்க வேண்டும். கிராம மக்களுக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டும். எங்கள் பகுதியில் குற்ற சம்பவங்களை தடுக்க காவல் நிலையம் அமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு கோஷங்களை எழுப்பினர். 


பெரம்பலூர்: மருந்துக்கடை உரிமையாளர் கொலை: மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முற்றுகை

மேலும் இது தொடர்பாக கலெக்டரை சந்தித்து மனு கொடுக்க வேண்டும் என்றனர். பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர்களிடம், சிலர் சென்று கலெக்டரிடம் மனு கொடுக்கலாம் என்றனர். இதனால் போலீசாருக்கும், கிராம மக்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து  மருந்தக உரிமையாளர் நாகராஜன் கொலைக்கு நீதி கேட்டு பெரம்பலூர்-அரியலூர் மாவட்ட பா.ம.க. சார்பில் பெரம்பலூர் பாலக்கரை ரவுண்டானா அருகே நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் பெரம்பலூர் மாவட்ட செயலாளர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். கட்சியின் அரியலூர் மாவட்ட செயலாளர் தனிவீடு காடுவெட்டி ரவி, முன்னாள் மாநில துணை பொதுச் செயலாளர் திருமாவளவன், மாவட்ட தலைவர்கள்  ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் சிறப்பு விருந்தினராக கட்சியின் வழக்கறிஞர்கள் சமூக நீதி பேரவையின் தலைவர் பாலு கலந்து கொண்டு, மருந்தக உரிமையாளர் நாகராஜன் கொலைக்கு கண்டனம் தெரிவித்து பேசினார். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட பா.ம.க.வினர், நாகராஜன் கொலை வழக்கில் உண்மையான 2 குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என்றனர்.


பெரம்பலூர்: மருந்துக்கடை உரிமையாளர் கொலை: மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முற்றுகை

மேலும் கைது செய்யப்பட்ட குற்றவாளிகளை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த வழக்கை சி.பி.ஐ.-க்கு மாற்ற வேண்டும். மாமூல் கேட்கும் ரவடிகளை கைது செய்ய வேண்டும். லாடபுரம் கிராமத்தில் சட்ட விரோத மது விற்பனை செய்வோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். கொலை செய்யப்பட்ட நாகராஜன் குடும்பத்தினருக்கு இழப்பீடு தொகையை அரசு வழங்க வேண்டும் என்பதனை வலியுறுத்தி பல்வேறு கோஷங்களை எழுப்பினர். இதனால் அப்பகுதியில் சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கபட்டது. மேலும் குற்றவாளிகளை உடனடியாக கைது செய்யாவிட்டால் பெரிய அளவில் போராட்டம் நடைபெறும் எனவும் தெரிவித்தனர். 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

ரூ. 236 கோடி மதிப்பீட்டில் பிரம்மாண்டம்: ஜூன் மத்தியில் பஞ்சப்பூர் மார்க்கெட் கடைகளுக்கு ஏலம் தொடக்கம்!
ரூ. 236 கோடி மதிப்பீட்டில் பிரம்மாண்டம்: ஜூன் மத்தியில் பஞ்சப்பூர் மார்க்கெட் கடைகளுக்கு ஏலம் தொடக்கம்!
Trichy Power Shutdown: திருச்சியில் நாளைய(30-05-26)மின் தடை.. அறிவிப்பை வெளியிட்ட மின்சார வாரியம்
Trichy Power Shutdown: திருச்சியில் நாளைய(30-05-26)மின் தடை.. அறிவிப்பை வெளியிட்ட மின்சார வாரியம்
திருச்சி - சார்லபள்ளி வாராந்திர ரயில் நிரந்தரச் சேவையாக மாறுகிறது... ரயில்வே நிர்வாகத்தின் அறிவிப்பு
திருச்சி - சார்லபள்ளி வாராந்திர ரயில் நிரந்தரச் சேவையாக மாறுகிறது... ரயில்வே நிர்வாகத்தின் அறிவிப்பு
பிரபஞ்சத்தின் ரகசியங்களை அறியலாம்! திருச்சியில் 'டீப் ஸ்கை' விண்வெளி காட்சி அறிமுகம்
பிரபஞ்சத்தின் ரகசியங்களை அறியலாம்! திருச்சியில் 'டீப் ஸ்கை' விண்வெளி காட்சி அறிமுகம்
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

92.22% VOTING
West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

92.67% VOTING
Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

85.01% VOTING
Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

வீடியோ

Minister Keerthana |
Minister Ramesh | அமைச்சரிடமே லஞ்சம் வாங்கி கையும் களவுமாக சிக்கிய அர்ச்சகர்! ”4000 ரூபாய் கொடுங்க”
Nara Lokesh on Keerathana | Troll-ல் சிக்கிய கீர்த்தனா! சந்திரபாபு மகன் Support
Vijay warns Ministers |
சுத்துப்போட்ட திமுக கவுன்சிலர்கள்! “பேசவே விடமாட்றாங்க” கடுப்பாகி கிளம்பிய தவெக MLA

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
EPS: என்ன செய்யப்போகிறார் எடப்பாடி பழனிசாமி? அடுத்தடுத்து காத்திருக்கும் சவால்!
EPS: என்ன செய்யப்போகிறார் எடப்பாடி பழனிசாமி? அடுத்தடுத்து காத்திருக்கும் சவால்!
TN RAIN ALERT: அடுத்த 3 நாள் டார்கெட்.! இடி, மின்னலோடு கன மழை- எந்த எந்த மாவட்டங்களுக்கு அலர்ட்- லிஸ்ட் இதோ...
அடுத்த 3 நாள் டார்கெட்.! இடி, மின்னலோடு கன மழை- எந்த எந்த மாவட்டங்களுக்கு அலர்ட்- லிஸ்ட் இதோ...
Russia Ukraine War: ரஷ்யாவுக்கு தண்ணி காட்டும் உக்ரைன்; போர்களத்தில் புதிய யுக்தி; அதிரவிடும் ரோபோ ஃபைட்டர்ஸ்
ரஷ்யாவுக்கு தண்ணி காட்டும் உக்ரைன்; போர்களத்தில் புதிய யுக்தி; அதிரவிடும் ரோபோ ஃபைட்டர்ஸ்
US Iran War: கிழிஞ்சுது போ.! பிடிவாதமாக இருக்கும் ஈரான்; பாதியிலேயே வெளியேறிய ட்ரம்ப்; முடங்கிய பேச்சுவார்த்தை
கிழிஞ்சுது போ.! பிடிவாதமாக இருக்கும் ஈரான்; பாதியிலேயே வெளியேறிய ட்ரம்ப்; முடங்கிய பேச்சுவார்த்தை
Virat Kohli VS Siraj: அண்ணன் கோலியும்.. தம்பி சிராஜும்..! கோப்பைக்காக நேருக்கு நேர் மோதல்!
Virat Kohli VS Siraj: அண்ணன் கோலியும்.. தம்பி சிராஜும்..! கோப்பைக்காக நேருக்கு நேர் மோதல்!
MK Stalin: மு.க.ஸ்டாலினுக்கு சவாலாக மாறி நிற்கும் இடைத்தேர்தல்! வெற்றி பெற தீயாய் வேலை செய்யும் திமுக! ஜெயிக்குமா?
MK Stalin: மு.க.ஸ்டாலினுக்கு சவாலாக மாறி நிற்கும் இடைத்தேர்தல்! வெற்றி பெற தீயாய் வேலை செய்யும் திமுக! ஜெயிக்குமா?
IPL 2026 Final RCB vs GT: ஐபிஎல் பட்டம் யாருக்கு? கோப்பையை எடுத்து வைக்கச் சொல்லும் ஆர்சிபி - குஜராத்! இன்னும் சற்று நேரத்தில் குஸ்தி!
IPL 2026 Final RCB vs GT: ஐபிஎல் பட்டம் யாருக்கு? கோப்பையை எடுத்து வைக்கச் சொல்லும் ஆர்சிபி - குஜராத்! இன்னும் சற்று நேரத்தில் குஸ்தி!
Ruturaj Gaikwad: மோசமான ஃபார்மில் சிஎஸ்கே கேப்டன்! காயம் காரணமாக விலகிய பராக்... கூப்பிட்ட பிசிசிஐ வாய்பை பயன்படுத்துவாரா ருதுராஜ்
Ruturaj Gaikwad: மோசமான ஃபார்மில் சிஎஸ்கே கேப்டன்! காயம் காரணமாக விலகிய பராக்... கூப்பிட்ட பிசிசிஐ வாய்பை பயன்படுத்துவாரா ருதுராஜ்
Embed widget