மேலும் அறிய

பெரம்பலூர்: மருந்துக்கடை உரிமையாளர் கொலை: மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முற்றுகை

பெரம்பலூர் மாவட்டத்தில் மருந்துகடை உரிமையாளர் அடித்து கொலை செய்த வழக்கில் குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும், இழப்பீடு வழங்க வேண்டும் என கிராம மக்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பெரம்பலூர் மாவட்டம்  லாடபுரம் சிவன் கோவில் தெருவை சேர்ந்த மருந்தக உரிமையாளர் நாகராஜன் மாமூல் தர மறுத்ததால், அவரை அடித்துக்கொலை செய்த வழக்கில் 4 பேரை பெரம்பலூர் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள ஒருவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். இந்த நிலையில் நாகராஜன் கொலைக்கு நீதி கேட்டு லாடபுரம் கிராம மக்கள் பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர்  அலுவலகத்தை முற்றுகையிட்டு, தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது அவர்கள், நாகராஜன் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளிகளான சந்தோஷ், நவீன் ஆகிய 2 பேரை கைது செய்ய வேண்டும். ஏற்கனவே கைது செய்யப்பட்ட குற்றவாளிகள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும். மாமூல் கேட்கும் ரவுடிகளை கைது செய்ய வேண்டும். கிராமத்தில் சட்ட விரோதமாக மது விற்பனை செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இறந்த நாகராஜன் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்க வேண்டும். கிராம மக்களுக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டும். எங்கள் பகுதியில் குற்ற சம்பவங்களை தடுக்க காவல் நிலையம் அமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு கோஷங்களை எழுப்பினர். 


பெரம்பலூர்: மருந்துக்கடை உரிமையாளர் கொலை: மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முற்றுகை

மேலும் இது தொடர்பாக கலெக்டரை சந்தித்து மனு கொடுக்க வேண்டும் என்றனர். பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர்களிடம், சிலர் சென்று கலெக்டரிடம் மனு கொடுக்கலாம் என்றனர். இதனால் போலீசாருக்கும், கிராம மக்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து  மருந்தக உரிமையாளர் நாகராஜன் கொலைக்கு நீதி கேட்டு பெரம்பலூர்-அரியலூர் மாவட்ட பா.ம.க. சார்பில் பெரம்பலூர் பாலக்கரை ரவுண்டானா அருகே நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் பெரம்பலூர் மாவட்ட செயலாளர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். கட்சியின் அரியலூர் மாவட்ட செயலாளர் தனிவீடு காடுவெட்டி ரவி, முன்னாள் மாநில துணை பொதுச் செயலாளர் திருமாவளவன், மாவட்ட தலைவர்கள்  ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் சிறப்பு விருந்தினராக கட்சியின் வழக்கறிஞர்கள் சமூக நீதி பேரவையின் தலைவர் பாலு கலந்து கொண்டு, மருந்தக உரிமையாளர் நாகராஜன் கொலைக்கு கண்டனம் தெரிவித்து பேசினார். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட பா.ம.க.வினர், நாகராஜன் கொலை வழக்கில் உண்மையான 2 குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என்றனர்.


பெரம்பலூர்: மருந்துக்கடை உரிமையாளர் கொலை: மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முற்றுகை

மேலும் கைது செய்யப்பட்ட குற்றவாளிகளை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த வழக்கை சி.பி.ஐ.-க்கு மாற்ற வேண்டும். மாமூல் கேட்கும் ரவடிகளை கைது செய்ய வேண்டும். லாடபுரம் கிராமத்தில் சட்ட விரோத மது விற்பனை செய்வோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். கொலை செய்யப்பட்ட நாகராஜன் குடும்பத்தினருக்கு இழப்பீடு தொகையை அரசு வழங்க வேண்டும் என்பதனை வலியுறுத்தி பல்வேறு கோஷங்களை எழுப்பினர். இதனால் அப்பகுதியில் சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கபட்டது. மேலும் குற்றவாளிகளை உடனடியாக கைது செய்யாவிட்டால் பெரிய அளவில் போராட்டம் நடைபெறும் எனவும் தெரிவித்தனர். 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

TVK VIJAY: விஜய்யிடம் சிபிஐ கேட்கப்போகும் கேள்விகள் இது தான்.! வெளியான லிஸ்ட் இதோ
விஜய்யிடம் சிபிஐ கேட்கப்போகும் கேள்விகள் இது தான்.! வெளியான லிஸ்ட் இதோ..
Parasakthi: ஆன்லைனில் புலம்பிய பராசக்தி தயாரிப்பாளர்.. புரட்டி எடுக்கும் விஜய் ரசிகர்கள் - நடந்தது என்ன?
Parasakthi: ஆன்லைனில் புலம்பிய பராசக்தி தயாரிப்பாளர்.. புரட்டி எடுக்கும் விஜய் ரசிகர்கள் - நடந்தது என்ன?
TVK Vijay: தொடர் மௌனம்.. டெல்லியில் சிபிஐ முன் வாயை திறக்கும் விஜய் - சிக்கப்போவது யார்?
TVK Vijay: தொடர் மௌனம்.. டெல்லியில் சிபிஐ முன் வாயை திறக்கும் விஜய் - சிக்கப்போவது யார்?
3 எம்.எல்.ஏக்கள் பாமகவில் இருந்து அதிரடி நீக்கம்.! அன்புமணிக்கு செக் வைத்த ராமதாஸ்- இது தான் காரணமா.?
3 எம்.எல்.ஏக்கள் பாமகவில் இருந்து அதிரடி நீக்கம்.! அன்புமணிக்கு செக் வைத்த ராமதாஸ்- இது தான் காரணமா.?
ABP Premium

வீடியோ

Annamalai 2026 election | அரவக்குறிச்சிக்கு NO! தொகுதி மாறும் அண்ணாமலை? பாஜகவின் கொங்கு கணக்கு
Mamata banerjee on Amitshah | ”சீண்டிப் பார்த்தா அவ்ளோதான்! என்கிட்ட PEN DRIVE இருக்கு” அமித்ஷாவை மிரட்டும் மம்தா
Owaisi vs BJP | ’’முஸ்லிம் பெண் பிரதமாராவார்’’பற்ற வைத்த ஓவைசிகொதிக்கும் பாஜகவினர்
Vijay CBI Enquiry | ‘WITNESS’ to ‘SUSPECT’ !CBI விசாரணையில் TWIST?சிக்கலில் விஜய்?
Pongal Celebration |''பொங்கலோ பொங்கல்’’சமத்துவ பொங்கல் விழா களைகட்டிய தர்மபுரி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK VIJAY: விஜய்யிடம் சிபிஐ கேட்கப்போகும் கேள்விகள் இது தான்.! வெளியான லிஸ்ட் இதோ
விஜய்யிடம் சிபிஐ கேட்கப்போகும் கேள்விகள் இது தான்.! வெளியான லிஸ்ட் இதோ..
Parasakthi: ஆன்லைனில் புலம்பிய பராசக்தி தயாரிப்பாளர்.. புரட்டி எடுக்கும் விஜய் ரசிகர்கள் - நடந்தது என்ன?
Parasakthi: ஆன்லைனில் புலம்பிய பராசக்தி தயாரிப்பாளர்.. புரட்டி எடுக்கும் விஜய் ரசிகர்கள் - நடந்தது என்ன?
TVK Vijay: தொடர் மௌனம்.. டெல்லியில் சிபிஐ முன் வாயை திறக்கும் விஜய் - சிக்கப்போவது யார்?
TVK Vijay: தொடர் மௌனம்.. டெல்லியில் சிபிஐ முன் வாயை திறக்கும் விஜய் - சிக்கப்போவது யார்?
3 எம்.எல்.ஏக்கள் பாமகவில் இருந்து அதிரடி நீக்கம்.! அன்புமணிக்கு செக் வைத்த ராமதாஸ்- இது தான் காரணமா.?
3 எம்.எல்.ஏக்கள் பாமகவில் இருந்து அதிரடி நீக்கம்.! அன்புமணிக்கு செக் வைத்த ராமதாஸ்- இது தான் காரணமா.?
Top 10 News Headlines: பாஜக கூட்டணியில் விஜய்? இஸ்ரோ ஏமாற்றம், தங்கம் விலை, கோலி புதிய சாதனை..11 மணி வரை இன்று
Top 10 News Headlines: பாஜக கூட்டணியில் விஜய்? இஸ்ரோ ஏமாற்றம், தங்கம் விலை, கோலி புதிய சாதனை..11 மணி வரை இன்று
T20 World Cup: அடம்பிடிக்கும் வங்கதேசம்.. சென்னைக்கு அடித்த ஜாக்பாட்? டி20 உலகக் கோப்பையில் மாற்றம்?
T20 World Cup: அடம்பிடிக்கும் வங்கதேசம்.. சென்னைக்கு அடித்த ஜாக்பாட்? டி20 உலகக் கோப்பையில் மாற்றம்?
Porur Vadapalani Metro: பிப்ரவரி முதல் வடபழனி - போரூர் மெட்ரோ ரயில் சேவை - பூந்தமல்லிக்கு எப்போது? முக்கிய அறிவிப்பு
Porur Vadapalani Metro: பிப்ரவரி முதல் வடபழனி - போரூர் மெட்ரோ ரயில் சேவை - பூந்தமல்லிக்கு எப்போது? முக்கிய அறிவிப்பு
Gold rate today: ஒரே நாளில் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை.! ஒரு கிராமுக்கே இவ்வளவு உயர்வா.?
ஒரே நாளில் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை.! ஒரு கிராமுக்கே இவ்வளவு உயர்வா.? அலறும் இல்லத்தரசிகள்
Embed widget