மேலும் அறிய

கீழாத்தூரில் அரசு கலை, அறிவியல் கல்லூரி அமைக்கும் பணிகள் தொடங்க வேண்டும் - பொதுமக்கள் கோரிக்கை

கீழாத்தூரில் தமிழக அரசால் தேர்வு செய்யப்பட்ட இடத்தில் அரசு கலை, அறிவியல் கல்லூரி அமைக்கும் பணிகள் தொடங்கப்படுவது எப்போது? என மாணவர்கள், பொதுமக்கள் எதிர்பார்பு.

புதுக்கோட்டை மாவட்டம், வடகாடு, மாங்காடு, புள்ளான்விடுதி, நெடுவாசல், கறம்பக்குடி, கீரமங்கலம், கொத்தமங்கலம், அறந்தாங்கி, மறமடக்கி, ஆலங்குடி உள்ளிட்ட சுமார் 50-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து, உயர் கல்வி பயில தினமும் மாணவ-மாணவிகள் 40 முதல் 50 கிலோ மீட்டர் தூரம் வரை பயணித்து, மாவட்ட தலைநகர் பகுதிகளில் இருக்கும் அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் கல்வி பயின்று வர வேண்டிய சூழல் நிலவி வந்தது. இதுகுறித்து பல்வேறு தரப்பினரும் அரசுக்கு கோரிக்கை விடுத்து இருந்தனர். பொதுமக்கள் மற்றும் மாணவர்களின் கோரிக்கையை ஏற்று கடந்த ஆண்டு நடந்த சட்டமன்ற கூட்டத்தொடரில், அரசு கலை, அறிவியல் கல்லூரி அமைப்பதற்கான அறிவிப்பாணை அறிவிக்கப்பட்டு ஆலங்குடி தொகுதியில் வடகாடு அருகேயுள்ள கீழாத்தூர் பகுதியில் உள்ள சுமார் 10 ஏக்கர் இடம் தமிழக அரசால் கடந்த ஆண்டு தேர்வு செய்யப்பட்டது. மேலும் ஆலங்குடியில் தற்காலிகமாக அரசு கலை, அறிவியல் கல்லூரி மாணவ-மாணவிகளின் சேர்க்கை கூட நடைபெற்று தற்சமயம் வகுப்புகள் நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. ஆனால் அரசு கலை, அறிவியல் கல்லூரி கட்ட தேர்வு செய்யப்பட்ட கீழாத்தூர் பகுதியில் இதுவரை எந்தவித கட்டுமான பணிகளும் தொடங்கப்பட இல்லை. இதற்கான பணிகள் எப்போது தொடங்கப்படுமோ? என தெரியாமல் இப்பகுதி மக்கள் மற்றும் மாணவர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர்.


கீழாத்தூரில் அரசு கலை, அறிவியல் கல்லூரி அமைக்கும் பணிகள் தொடங்க வேண்டும் - பொதுமக்கள் கோரிக்கை

மேலும் இதுக்குறித்து வடகாடு பகுதியை சேர்ந்த முன்னாள் கல்லூரி மாணவர் ஒருவர் கூறும்போது..  நாங்கள் படிக்கும் போது தான் அலைந்து திரிந்து கல்வி பயில வேண்டிய நிலை இருந்து வந்தது. இனிமேலாவது இப்பகுதி மாணவர்களின் நலன் கருதி கீழாத்தூரில் அரசு கலை அறிவியல் கல்லூரி அமைக்கும் பணிகளை விரைந்து தொடங்க வேண்டும் என்றார். இதனை தொடர்ந்து கீழாத்தூர் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கருத்து.. ஆலங்குடி பகுதியில் தற்காலிக அரசு கலை, அறிவியல் கல்லூரி தொடங்கப்பட்டு அதற்கான வகுப்புகள் நடந்து வந்தாலும், இடப்பற்றாக்குறை போன்ற பிரச்சினைகளால் மாணவர்கள் பெரிதும் சிரமப்பட்டு வருகின்றனர். அரசு கலை, அறிவியல் கல்லூரி தேர்வு செய்யப்பட்டதற்கான இடத்தில் இப்போதைக்கு கட்டிடங்கள் கட்ட பணிகள் தொடங்கினாலும் அத்தகைய பணிகள் நடந்து முடிய எத்தனை ஆண்டுகள் ஆகுமோ?. அதற்கு உரிய பணிகள் இன்னும் நடைபெறாமல் இருப்பது வருத்தமளிப்பதாக உள்ளது என்றனர். 


கீழாத்தூரில் அரசு கலை, அறிவியல் கல்லூரி அமைக்கும் பணிகள் தொடங்க வேண்டும் - பொதுமக்கள் கோரிக்கை

இதனை தொடர்ந்து கொத்தமங்கலம் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கருத்து, "எங்கள் ஊர் அருகேயுள்ள கீழாத்தூர் பகுதியில் அரசு கலை, அறிவியல் கல்லூரி அமைய இருப்பது மகிழ்ச்சியான செய்தி தான். ஆனால் கல்லூரி கட்டிடங்கள் கட்டுமான பணிகளை விரைந்து தொடங்க வேண்டும்" என்றார். இந்த பகுதியில் கல்லூரி கட்டினால் பல ஆயிரம் மாணவ, மாணவிகள் பயன்பெறுவார்கள். குறிப்பாக சுற்றியுள்ள கிராம பகுதி ஏழை, எளிய மக்களின் பிள்ளைகள் நீண்ட தூரம் சென்று கல்வி பயிலும் நிலைமை உள்ளது. ஆகையால் இந்த திட்டத்தை கிடப்பில் போடாமல் ,  தற்போது நடபெற்று வரும் சட்டமன்ற கூட்டத்தொடரின் போது தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த திட்டத்தினை பற்றி விவாதம் செய்தி உடனடியாக கல்லூரி அமைக்கும் பணிகள் தொடங்க உத்தரவிடும்படி பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ள்னர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Leader of Opposition: மக்களவை எதிர்க்கட்சி தலைவரானார் ராகுல் காந்தி.. காங்கிரஸ் அறிவிப்பு!
மக்களவை எதிர்க்கட்சி தலைவரானார் ராகுல் காந்தி.. காங்கிரஸ் அறிவிப்பு!
Chennai Rain: சென்னையில் திடீரென மின்னல்-இடியுடன் கூடிய மழை:ஆயிரம் விளக்கு, நுங்கம்பாக்கத்தில் வெளுக்கும் மழை
Chennai Rain: சென்னையில் திடீரென மின்னல்-இடியுடன் கூடிய மழை:ஆயிரம் விளக்கு, நுங்கம்பாக்கத்தில் வெளுக்கும் மழை
சபாநாயகர் பதவிக்கான தேர்தல்; காங்கிரஸ் முடிவால் மம்தா அப்செட் - சிக்கலில் இந்தியா கூட்டணி!
சபாநாயகர் பதவிக்கான தேர்தல்; காங்கிரஸ் முடிவால் மம்தா அப்செட் - சிக்கலில் இந்தியா கூட்டணி!
மதுரையில் மூட்டை, மூட்டையாக ரேஷன் அரிசிக் கடத்தல்? விசாரணைக்கு வலியுறுத்தும் சமூக ஆர்வலர்கள்
மதுரையில் மூட்டை, மூட்டையாக ரேஷன் அரிசிக் கடத்தல்? விசாரணைக்கு வலியுறுத்தும் சமூக ஆர்வலர்கள்
Advertisement
Advertisement
Advertisement
metaverse

வீடியோ

DMK MLA on kalla sarayam | ”என் தொகுதியிலேயே சாராயமா?”ON THE SPOT-ல் ரெய்டு! திமுக MLA Mass சம்பவம்!lok sabha Speaker Election | மோதி பார்க்கலாம் மோடி முஷ்டி முறுக்கும் ராகுல்!வரலாற்று சம்பவம் LOADINGAyodhya Ram Temple  rain water leakage | ”அய்யோ ராமா”அலரும் அயோத்தி அர்ச்சகர் கோவில் கூரையின் நிலைAccident News :  BIKE-ல் மோதிய பேருந்து..தூக்கி வீசப்பட்ட இளைஞர் பதற வைக்கும் CCTV காட்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Leader of Opposition: மக்களவை எதிர்க்கட்சி தலைவரானார் ராகுல் காந்தி.. காங்கிரஸ் அறிவிப்பு!
மக்களவை எதிர்க்கட்சி தலைவரானார் ராகுல் காந்தி.. காங்கிரஸ் அறிவிப்பு!
Chennai Rain: சென்னையில் திடீரென மின்னல்-இடியுடன் கூடிய மழை:ஆயிரம் விளக்கு, நுங்கம்பாக்கத்தில் வெளுக்கும் மழை
Chennai Rain: சென்னையில் திடீரென மின்னல்-இடியுடன் கூடிய மழை:ஆயிரம் விளக்கு, நுங்கம்பாக்கத்தில் வெளுக்கும் மழை
சபாநாயகர் பதவிக்கான தேர்தல்; காங்கிரஸ் முடிவால் மம்தா அப்செட் - சிக்கலில் இந்தியா கூட்டணி!
சபாநாயகர் பதவிக்கான தேர்தல்; காங்கிரஸ் முடிவால் மம்தா அப்செட் - சிக்கலில் இந்தியா கூட்டணி!
மதுரையில் மூட்டை, மூட்டையாக ரேஷன் அரிசிக் கடத்தல்? விசாரணைக்கு வலியுறுத்தும் சமூக ஆர்வலர்கள்
மதுரையில் மூட்டை, மூட்டையாக ரேஷன் அரிசிக் கடத்தல்? விசாரணைக்கு வலியுறுத்தும் சமூக ஆர்வலர்கள்
Indian 2 Trailer Review:
Indian 2 Trailer Review: "காந்திய வழியில் நீங்க! நேதாஜி வழியில் நான்" எப்படி இருக்கு இந்தியன் 2 ட்ரெயிலர்?
Breaking News LIVE: மக்களவை எதிர்க்கட்சித் தலைவராக ராகுல் காந்தி தேர்வு - காங்கிரஸ் தொண்டர்கள் மகிழ்ச்சி
Breaking News LIVE: மக்களவை எதிர்க்கட்சித் தலைவராக ராகுல் காந்தி தேர்வு - காங்கிரஸ் தொண்டர்கள் மகிழ்ச்சி
பாலாற்றில் தடுப்பணை! தமிழ்நாட்டுக்கு அதிர்ச்சியளித்த ஆந்திர முதலமைச்சர் - அதிர்ச்சியில் மக்கள்
பாலாற்றில் தடுப்பணை! தமிழ்நாட்டுக்கு அதிர்ச்சியளித்த ஆந்திர முதலமைச்சர் - அதிர்ச்சியில் மக்கள்
Indian 2:
Indian 2: "நான்கு நாட்கள் கயிற்றில் தொங்கிய கமல்" பிரமித்த இயக்குனர் ஷங்கர்!
Embed widget