மேலும் அறிய

கந்துவட்டி புகார் வந்தால் கடுமையான நடவடிக்கை - மத்திய மண்டல ஐ.ஜி. சந்தோஷ்குமார் கடும் எச்சரிக்கை

திருச்சி மத்திய மண்டலத்தில் கந்துவட்டி சம்பந்தமான குற்றங்களில் ஈடுபட்ட குற்றவாளிகளின் வீடுகளில் சோதனை செய்வதற்கும் துரிதமான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது - மத்திய மண்டல ஐ.ஜி. சந்தோஷ்குமார்

தமிழ்நாட்டில் கந்துவட்டி கொடுமை தொடர்பாக, வந்த புகார்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட காவல் அதிகாரிகளுக்கு டி.ஜி.பி சைலேந்திர பாபு உத்தரவிட்டுள்ளார். மேலும், ஆபரேஷன் கந்துவட்டி , நடவடிக்கை மூலம் கந்துவட்டி தொடர்பான அனைத்து வழக்குகளையும் உடனடியாக விசாரிக்க வேண்டும், நிலுவையில் உள்ள வழக்குகளையும் உடனடியாக விசாரித்து, தண்டனை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் டிஜிபி சைலேந்திர பாபு சுற்றறிக்கை அனுப்பி இருந்தார். அந்த சுற்றறிக்கையில், கந்துவட்டி தொடர்பாக காவல்நிலையங்களில் நிலுவையில் உள்ள வழக்குகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். கந்துவட்டிகாரர்களின் இருப்பிடங்களை உடனடியாக சோதித்து, கையெழுத்துப் பெற்ற காகிதங்கள், சட்ட விரோதமான ஆவணங்கள், தொகை குறிப்பிடப்படாத காசோலைகள் ஆகியவற்றைப் பறிமுதல் செய்ய வேண்டும். கந்துவட்டி வசூலிப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கபட்டு இருந்தது. 


கந்துவட்டி புகார் வந்தால் கடுமையான நடவடிக்கை - மத்திய மண்டல ஐ.ஜி. சந்தோஷ்குமார் கடும் எச்சரிக்கை

இதனை தொடர்ந்து திருச்சி மத்திய மண்டல புதிய ஐ.ஜி. சந்தோஷ்குமார் செய்தியாளர்களின் சந்திப்பில் தெரிவிக்கையில், “காவல் துறை இயக்குனரின் உத்தரவின் பேரில் கந்துவட்டியால் மக்களின் உயிரிழப்பை தடுப்பதற்கும் இதனால் அப்பாவி பொதுமக்கள் மூலம் பாதிக்கப்படாமல் இருப்பதற்கு ஆபரேசன் கந்துவட்டி என்ற சிறப்பு திட்டம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. கந்துவட்டி சம்பந்தமாக வரும் புகார்களுக்கு உடனடியாக துரித நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு 2021-ல் மத்திய மண்டலத்திற்குட்பட்ட 2 மாவட்டங்களில் கந்துவட்டி வசூல் தொடர்பாக 77 வழக்குகள் பதிவு செய்யப்பட்டதுடன், 116 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் 39 வீடுகளில் சோதனை செய்யப்பட்டு சொத்துப் பத்திரங்கள் மீட்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டு சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கந்துவட்டி புகார் வந்தால் கடுமையான நடவடிக்கை - மத்திய மண்டல ஐ.ஜி. சந்தோஷ்குமார் கடும் எச்சரிக்கை

நடப்பு ஆண்டில் இது வரையில் கந்துவட்டி தொடர்பான 18 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 9 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். மேலும் பொது மக்களை ஏமாற்றிய நபர்களின் வீட்டில் சோதனை மேற்கொண்டு அவர்களிடமிருந்து பெறப்பட்ட வெற்று ஆவணங்கள் மற்றும் சொத்து பத்திரங்களை மீட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. மேலும் கைது செய்யப்படாத குற்றவாளிகளை உடனடியாக கைது செய்வதற்கும், கந்துவட்டி சம்பந்தமான குற்றங்களில் ஈடுபட்ட குற்றவாளிகளின் வீடுகளில் சோதனை செய்வதற்கும் துரிதமான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கந்துவட்டி புகார்கள் எவர் மீதேனும் வந்தால் சட்டப்படியாக துரிதமாக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

'நான் சிறைக்கு செல்லவும் தயாராக இருக்கிறேன்' மேகதாது அணை விவகாரத்தில் அன்புமணி ஆவேசம்!
'நான் சிறைக்கு செல்லவும் தயாராக இருக்கிறேன்' மேகதாது அணை விவகாரத்தில் அன்புமணி ஆவேசம்!
நாளுக்கு நாள் அதிகரிக்கும் வாகன நெரிசலால் தவிக்கும் திருச்சி மக்கள்: மேம்பால பணிகளை விரைவுப்படுத்த கோரிக்கை
நாளுக்கு நாள் அதிகரிக்கும் வாகன நெரிசலால் தவிக்கும் திருச்சி மக்கள்: மேம்பால பணிகளை விரைவுப்படுத்த கோரிக்கை
திருச்சி பழைய காவிரிப் பால சீரமைப்புப் பணிகள் தீவிரம்... செப்டம்பர் இறுதிக்குள் நிறைவு?
திருச்சி பழைய காவிரிப் பால சீரமைப்புப் பணிகள் தீவிரம்... செப்டம்பர் இறுதிக்குள் நிறைவு?
1,000 ஆண்டுகள் பழமையான உய்யகொண்டான் வாய்க்காலுக்கு புத்துயிர்... ஆகாயத்தாமரைகளை அகற்ற நிதி ஒதுக்கீடு!
1,000 ஆண்டுகள் பழமையான உய்யகொண்டான் வாய்க்காலுக்கு புத்துயிர்... ஆகாயத்தாமரைகளை அகற்ற நிதி ஒதுக்கீடு!

வீடியோ

Tiruppur Crime News : 4 மாத கர்ப்பிணி.. மனைவியை கொன்ற கணவன்... திருப்பூரை உலுக்கிய கொடூரம்
Theni Theft Murder : பாட்டி கொலையில் மர்மம்.. நாடகமாடிய பேரன், பேத்தி! போலீஸ் அதிரடி கைது!
Trichy VAO: போதையில் சட்டையின்றி தூக்கம்.. அலுவலகத்தில் சிக்கிய VAO! வைரலாகும் வீடியோ
RS Bharathi vs Minister Ramesh :
Senthil Balaji : செந்தில் பாலாஜி தலைமறைவு.. ஆட்டத்தை ஆரம்பித்த CM விஜய்! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi Stalin: தவெகவுக்கு திமுக பயப்படாது.. தூசி மாதிரி தட்டுவோம்.. உதயநிதி ஸ்டாலின் விளாசல்!
Udhayanidhi Stalin: தவெகவுக்கு திமுக பயப்படாது.. தூசி மாதிரி தட்டுவோம்.. உதயநிதி ஸ்டாலின் விளாசல்!
ஊருக்கு ஒரு ஆபீஸ்.. பள்ளிக்கல்வித்துறையில் நடந்த முறைகேடு.. போட்டுடைத்த அமைச்சர் ராஜ்மோகன்!
ஊருக்கு ஒரு ஆபீஸ்.. பள்ளிக்கல்வித்துறையில் நடந்த முறைகேடு.. போட்டுடைத்த அமைச்சர் ராஜ்மோகன்!
Iran Vs Trump: 'நீங்கள் கமெனியை கொன்றீர்கள், அவரது கொள்கைகளை அல்ல'; ட்ரம்ப்புக்கு சூடான பதிலடி கொடுத்த ஈரான்
'நீங்கள் கமெனியை கொன்றீர்கள், அவரது கொள்கைகளை அல்ல'; ட்ரம்ப்புக்கு சூடான பதிலடி கொடுத்த ஈரான்
திருப்பதியில் படியேறி சாமி தரிசனம் செய்த 116 வயது தமிழ்நாட்டு மூதாட்டி.. குவியும் வாழ்த்து!
திருப்பதியில் படியேறி சாமி தரிசனம் செய்த 116 வயது தமிழ்நாட்டு மூதாட்டி.. குவியும் வாழ்த்து!
8வது சம்பள கமிஷன்: மத்திய அரசு ஊழியர்களுக்கு சம்பளம் உயர புதிய குடும்ப கணக்கீடு!
8வது சம்பள கமிஷன்: மத்திய அரசு ஊழியர்களுக்கு சம்பளம் உயர புதிய குடும்ப கணக்கீடு!
Renault Kwid New Vs Old: புது லோகோ, குறைந்த விலை; 2026 ரெனால்ட் க்விட்டுக்கும், பழைய க்விட்டுக்கும் என்ன வித்தியாசம்.?
புது லோகோ, குறைந்த விலை; 2026 ரெனால்ட் க்விட்டுக்கும், பழைய க்விட்டுக்கும் என்ன வித்தியாசம்.?
Vaiko: திமுகவுக்கு என்னை பேச தகுதியே இல்ல.. கொந்தளித்த வைகோ.. மிரண்ட மதிமுக தொண்டர்கள்!
Vaiko: திமுகவுக்கு என்னை பேச தகுதியே இல்ல.. கொந்தளித்த வைகோ.. மிரண்ட மதிமுக தொண்டர்கள்!
தூத்துக்குடி மின்வெட்டு (07.07.2026): எந்த பகுதிகளில் எத்தனை மணி நேரம் மின்தடை?
தூத்துக்குடி மின்வெட்டு (07.07.2026): எந்த பகுதிகளில் எத்தனை மணி நேரம் மின்தடை?
Embed widget