மேலும் அறிய

Crime: கத்தியால் தன்னை தானே கிழித்து கொண்ட நபர் - திருச்சியில் பரபரப்பு

திருச்சி மாநகரில் அரசு வேலை வாங்கி தருவதாக 9 லட்சம் ரூபாய் மோசடி செய்த நபரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.

திருச்சி மாநகர், கோட்டை ரெயில் நிலையம் பகுதியை சேர்ந்தவர் ஜெகன்நாதன். எம்.பி.ஏ. பட்டதாரியான இவர் திருச்சியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவருக்கு உறையூர் கல்நாயக்கன் தெருவை சேர்ந்த தர்மலிங்கம் என்பவர் கடந்த 4 வருடங்களுக்கு முன்பு அறிமுகமானார். அப்போது, ஜெகன்நாதனிடம் சுகாதாரத்துறை ஆய்வாளர் பணி வாங்கி தருவதாக கூறி ரூ.9 லட்சம் வாங்கியுள்ளார். ஆனால் தற்போது வரை அவருக்கு வேலை வாங்கி தராமல் இழுத்தடித்து வந்துள்ளார். மேலும் என்னிடம் வாங்கிய பணத்தை திரும்பி கொடுக்கும்படி ஜெகன்நாதன் கேட்டு உள்ளார். இந்நிலையில் தர்மலிஙகம் தலைமறைவாக இருந்துள்ளார். 

இதனால் ஜெகன்நாதன் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்தார். இந்த நிலையில் நேற்று முந்தினம் இரவு அல்லிமால் தெரு அருகே ஜெகன்நாதன், தர்மலிங்கத்தை பார்த்து உள்ளார். அப்போது அவரை பிடிக்க முயன்ற போது, தர்மலிங்கம் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து, என்னை பிடிக்க வந்தால் என் உடலை கத்தியால் கிழித்து விடுவேன் என்று கூறியுள்ளார். தொடர்ந்து அவர் பிடிக்க முயன்றபோது, தனது உடலை கத்தியால் கிழித்துக்கொண்டு சிங்காரத்தோப்பு சூப்பர் பஜார் வழியாக இப்ராஹிம் பார்க் வரை ஓடினார்.


Crime: கத்தியால் தன்னை தானே கிழித்து கொண்ட நபர் - திருச்சியில் பரபரப்பு

இதனை பார்த்த அப்பகுதி மக்கள் அவரிடம் இருந்த கத்தியை பிடிங்கினர். இதனையடுத்து இந்த சம்பவம் குறித்து கோட்டை போலீசார் விசாரணை நடத்தினர். தர்மலிங்கம் தன்னை அமைச்சரின் உதவியாளர் என்று கூறி பலரிடம் அரசு வேலை வாங்கி தருவதாக ஏமாற்றியது தெரியவந்தது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். கத்தியால் கிழித்ததில் காயம் அடைந்த தர்மலிங்கத்தை போலீசார் திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

தமிழ்நாட்டில் கடந்த சில வருடங்களாக அரசு வேலை வாங்கித் தருவதாக பலர் தொடர்ந்து மோசடி சம்பவங்களில் ஈடுபட்டு வருகிறார்கள். ஆகையால் பொதுமக்கள் விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டுமென தமிழ்நாடு அரசு மற்றும் காவல்துறை சார்பாக தொடர்ந்து அறிவுரை வழங்கப்பட்டு வருகிறது. அரசு தரப்பில் அறிவிக்கப்படும் தேர்வுகளை முறைப்படி எழுதினால் மட்டுமே அரசு வேலை பெற முடியும். பணம் கொடுத்தால் அரசு வேலை வாங்கி தரப்படும் என ஆசை வார்த்தை கூறி பணம் பறிக்கும் கும்பல் அதிகரித்துள்ளது. அவ்வாறு ஈடுபடுபவர்கள் மீது சட்ட ரீதியான நடைமுறைகள் எடுக்கப்பட்டு வருகிறது. ஆகையால் பொதுமக்கள் மிகுந்த விழிப்புடன் இருக்க வேண்டுமென காவல்துறை தரப்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Old Pension Scheme: மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம்? இதில் இவ்ளோ லாபம் இருக்கா? முதலமைச்சர் ஸ்டாலின் இன்று அறிவிப்பு
Old Pension Scheme: மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம்? இதில் இவ்ளோ லாபம் இருக்கா? முதலமைச்சர் ஸ்டாலின் இன்று அறிவிப்பு
JCD Prabhakar: தவெகவில் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ., ஜேசிடி பிரபாகரன்.. தனித்து விடப்படும் ஓபிஎஸ்!
JCD Prabhakar: தவெகவில் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ., ஜேசிடி பிரபாகரன்.. தனித்து விடப்படும் ஓபிஎஸ்!
ரெடியா மக்களே! தமிழகமெங்கும் 'குறள்' புயல்! வியக்கவைக்கும் அரசு ஏற்பாடுகள்!
ரெடியா மக்களே! தமிழகமெங்கும் 'குறள்' புயல்! வியக்கவைக்கும் அரசு ஏற்பாடுகள்!
திருப்பரங்குன்றம் கந்தூரி விழா: தடை கோரிய வழக்கில் பரபரப்பு.. பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு!
திருப்பரங்குன்றம் கந்தூரி விழா: தடை கோரிய வழக்கில் பரபரப்பு.. பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு!
ABP Premium

வீடியோ

Police Helps Pregnant Women|'’மனைவிக்கு பிரசவ வலி’’DRUNK & DRIVEல் வந்த கணவன் போலீஸ் நெகிழ்ச்சிசெயல்
Tambaram Boys Atrocity | பட்டாக்கத்தி உடன் REELSதாம்பரம் சிறுவர்கள் அராஜகம்தட்டித்தூக்கிய போலீஸ்
Jananayagan Bhagavanth Kesari | பகவந்த் கேசரி ரீமேக்கா? ஜனநாயகன் பட சீக்ரெட்! இயக்குநர் OPENS UP
Manickam Tagore | ”வைகோ, திருமா தலையிடாதீங்க” மாணிக்கம் தாகூர் பரபர POST! நடந்தது என்ன?
DMK Congress Alliance | ”ஆட்சியில பங்கு கேட்காதீங்க” முடிவு கட்டிய திமுக! ப.சிதம்பரத்திடம் மெசேஜ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Old Pension Scheme: மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம்? இதில் இவ்ளோ லாபம் இருக்கா? முதலமைச்சர் ஸ்டாலின் இன்று அறிவிப்பு
Old Pension Scheme: மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம்? இதில் இவ்ளோ லாபம் இருக்கா? முதலமைச்சர் ஸ்டாலின் இன்று அறிவிப்பு
JCD Prabhakar: தவெகவில் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ., ஜேசிடி பிரபாகரன்.. தனித்து விடப்படும் ஓபிஎஸ்!
JCD Prabhakar: தவெகவில் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ., ஜேசிடி பிரபாகரன்.. தனித்து விடப்படும் ஓபிஎஸ்!
ரெடியா மக்களே! தமிழகமெங்கும் 'குறள்' புயல்! வியக்கவைக்கும் அரசு ஏற்பாடுகள்!
ரெடியா மக்களே! தமிழகமெங்கும் 'குறள்' புயல்! வியக்கவைக்கும் அரசு ஏற்பாடுகள்!
திருப்பரங்குன்றம் கந்தூரி விழா: தடை கோரிய வழக்கில் பரபரப்பு.. பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு!
திருப்பரங்குன்றம் கந்தூரி விழா: தடை கோரிய வழக்கில் பரபரப்பு.. பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு!
TN Power Shutdown: சென்னை, கோவை, மதுரை உட்பட முக்கிய பகுதிகளில் மின்வெட்டு! உங்கள் பகுதி உள்ளதா?
TN Power Shutdown: சென்னை, கோவை, மதுரை உட்பட முக்கிய பகுதிகளில் மின்வெட்டு! உங்கள் பகுதி உள்ளதா?
Jothimani MP: “அழிவின் பாதையில் செல்கிறது தமிழ்நாடு காங்கிரஸ்“; எம்.பி ஜோதிமணி பரபரப்பு குற்றச்சாட்டு
“அழிவின் பாதையில் செல்கிறது தமிழ்நாடு காங்கிரஸ்“; எம்.பி ஜோதிமணி பரபரப்பு குற்றச்சாட்டு
SETC Volvo Bus: பறக்கும் Volvo! திருச்சி டூ சென்னை கிளாம்பாக்கம்! 5 மணி நேரத்தில் மின்னல் பயண அனுபவம்..
SETC Volvo Bus: பறக்கும் Volvo! திருச்சி டூ சென்னை கிளாம்பாக்கம்! 5 மணி நேரத்தில் மின்னல் பயண அனுபவம்..
Chennai Metro Train: சென்னை மெட்ரோ ரயிலில் 9 ஆண்டுகளில் பயணித்தவர்கள் இத்தனை கோடியா? - ஆச்சர்ய தகவல்!
Chennai Metro Train: சென்னை மெட்ரோ ரயிலில் 9 ஆண்டுகளில் பயணித்தவர்கள் இத்தனை கோடியா? - ஆச்சர்ய தகவல்!
Embed widget