மேலும் அறிய

சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு; 3 பேருக்கு 20 ஆண்டுகள் சிறை - திருச்சி மகிளா நீதிமன்றம் தீர்ப்பு

14 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 3 நபர்களுக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், ரூ.15,000/- அபராதம் விதித்து திருச்சி மகிளா நீதிமன்றம் தீர்ப்பு.

திருச்சி மாநகர காவல் ஆணையர் காமினி, அவர்கள் திருச்சி மாநகரத்தில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்கவும், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வழக்குகளின் குற்றவாளிகளின் மீது பதிவு செய்து நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடித்து குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத்தர சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ள காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களுக்கு அறிவுரைகள் வழங்கியுள்ளார்கள். அதன்படி கடந்த  16.08.2020-ந்தேதி ஸ்ரீரங்கம் அனைத்து மகளிர் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ள வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து 14 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக பெறப்பட்ட புகாரின்பேரில் 1.பசுபதி, 27/24, த.பெ.ரமேஷ்., 2.வரதராஜ் 29/24, த.பெ.ஆனந்த் மற்றும் 3.திருப்பதி, 29/24, த.பெ.திருவரங்கம் ஆகிய 3 பேர் மீதும் ஸ்ரீரங்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் போக்சோ (POCSO) சட்டத்தின்படி வழக்குப்பதிவு செய்து புலன்விசாரணை மேற்கொள்ளப்பட்டு, வழக்கின் குற்றவாளிகள்  மூவரையும் கைது செய்து சிறையில் அடைத்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இவ்வழக்கின் புலன் விசாரணை முடிக்கப்பட்டு, மேற்படி குற்றவாளிகள் 1. பசுபதி, 2.வரதராஜ், 3.திருப்பதி ஆகிய மூவர் மீது கடந்த 23.09.2020- ஆம் தேதி குற்றப்பத்திரிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தும், மேற்படி வழக்கில் திருச்சி மகிளா நீதிமன்ற நீதிபதி  ஸ்ரீவட்சன் அவர்கள் நீதிமன்ற விசாரணையை முடித்து, நேற்று 11.01.2024-ம்தேதி, மேற்படி குற்றவாளிகள் 1. பசுபதி, 2.வரதராஜ், 3.திருப்பதி மூவருக்கும் போக்சோ ச/பி 5(g), 5(1) r/w 6- ன்படி 20 வருட சிறைத்தண்டனையும், ரூ.10,000/- அபராதமும், 450 இ.த.ச. பிரிவின்படி 5 வருட சிறைத்தண்டனையும், ரூ.4,000/- அபராதமும், மற்றும் 506(ii) இ.த.ச. பிரிவின்படி 1 வருட சிறை தண்டனையும், ரூ.1,000/- அபராதமும், விதித்து தண்டனைகளை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என்றும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.5,00,000/- இழப்பீடுத்தொகை வழங்கவேண்டும் என்று தீர்ப்பு வழங்கினார்கள்.


சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு; 3 பேருக்கு 20 ஆண்டுகள் சிறை - திருச்சி மகிளா நீதிமன்றம் தீர்ப்பு

மேலும் இவ்வழக்கில் அரசு தரப்பு வழக்கறிஞர் திரு.ஜாகீர் உசேன் அவர்கள் ஆஜராகி அரசு சார்பாக வழக்கு நடத்தி வாதாடினார்கள். இவ்வழக்கில் சிறப்பாக புலன் விசாரணை செய்து, குற்றவாளிக்கு தண்டனை பெற்று தந்த ஸ்ரீரங்கம் காவல் ஆய்வாளர் மற்றும் காவல் ஆய்வாளரின் மேற்பார்வையில் பணிபுரிந்த காவல் ஆளிநர்களை திருச்சி மாநகர காவல் ஆணையர் காமினி, அவர்கள் வெகுவாக பாரட்டினார்கள்.

மேலும் திருச்சி மாநகரத்தை பொருத்தவரை பெண்கள், குழந்தைகள் மீதான ஏற்படும் பாலியல் தொந்தரவு குறித்த புகார்களை உடனடியாக விசாரணை செய்து குற்றவாளிகளை கைது செய்து சட்டரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என திருச்சி மாநகர காவல் துறை ஆணையர் காமினி, காவல் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு உள்ளார். மேலும் பெண்களுக்கு எதிராக பாலியல் தொந்தரவு குற்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது சட்டரீதியான கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார். அதேசமயம் அனைத்துப் பகுதிகளிலும் பாலியல் தொந்தரவு தொடர்பான விழிப்புணர்வை பொதுமக்களுக்கு ,காவல்துறை தரப்பில் ஏற்படுத்த வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"வாழ்த்துக்கள் அண்ணா" துணை முதலமைச்சர் உதயநிதியை பாராட்டி தள்ளிய அதானியின் மகன்!
இளைஞர்களே! ஒரு அற்புதமான வாய்ப்பு:அரசு சார்பில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி: மிஸ் பண்ணிடாதீங்க
இளைஞர்களே! ஒரு அற்புதமான வாய்ப்பு:அரசு சார்பில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி: மிஸ் பண்ணிடாதீங்க
"மோடியை ஆட்சியில் இருந்து இறக்கும் வரை.. சாக மாட்டேன்" மயங்கி விழுந்த கார்கே.. கூட்டத்தில் பரபரப்பு
"தரம் ரொம்ப முக்கியம்" தொழில்துறையினருக்கு மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் வேண்டுகோள்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Genjee KS Masthan | ஓரம் கட்டப்பட்ட செஞ்சி மஸ்தான்.. பொன்முடி காரணமா? ஸ்டாலினின் ட்விஸ்ட் மூவ்Udhayanidhi Stalin Journey |  பாஜகவை அலறவிட்ட கலைஞர் பேரன்MLA.,அமைச்சர் to துணை முதல்வர்Salem Rajendran Profile | அடிமட்ட தொண்டர் to அமைச்சர்!சேலத்தின் செல்லப்பிள்ளை!யார் இந்த ராஜேந்திரன்?Thirumavalavan supports Vijay | ’’விஜய்-ஐ லேசா நினைக்காதீங்க’’  திருமா கொடுத்த WARNING

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"வாழ்த்துக்கள் அண்ணா" துணை முதலமைச்சர் உதயநிதியை பாராட்டி தள்ளிய அதானியின் மகன்!
இளைஞர்களே! ஒரு அற்புதமான வாய்ப்பு:அரசு சார்பில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி: மிஸ் பண்ணிடாதீங்க
இளைஞர்களே! ஒரு அற்புதமான வாய்ப்பு:அரசு சார்பில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி: மிஸ் பண்ணிடாதீங்க
"மோடியை ஆட்சியில் இருந்து இறக்கும் வரை.. சாக மாட்டேன்" மயங்கி விழுந்த கார்கே.. கூட்டத்தில் பரபரப்பு
"தரம் ரொம்ப முக்கியம்" தொழில்துறையினருக்கு மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் வேண்டுகோள்!
தமிழ்நாட்டின் புதிய அமைச்சர்கள்.. யார்? யாருக்கு எந்த துறை? முதல்வரின் மாஸ்டர் ஸ்ட்ரோக்!
தமிழ்நாட்டின் புதிய அமைச்சர்கள்.. யார்? யாருக்கு எந்த துறை? முதல்வரின் மாஸ்டர் ஸ்ட்ரோக்!
ஆளுநர் மாளிகையில் புதிய அமைச்சர்கள் பதவியேற்பு.. மொத்தமாக மாறிய அமைச்சரவை!
ஆளுநர் மாளிகையில் புதிய அமைச்சர்கள் பதவியேற்பு.. மொத்தமாக மாறிய அமைச்சரவை!
Devara Box Office : விஜயின் The Goat படத்துக்கு சவால் விடும் தேவரா.. இரண்டு நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
விஜயின் The Goat படத்துக்கு சவால் விடும் தேவரா.. இரண்டு நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
விமர்சனங்கள் வரத்தான் செய்யும்; பணிகளால்தான் எதிர்கொள்ள முடியும் - உதயநிதி ஸ்டாலின்
விமர்சனங்கள் வரத்தான் செய்யும்; பணிகளால்தான் எதிர்கொள்ள முடியும் - உதயநிதி ஸ்டாலின்
Embed widget