மேலும் அறிய

திருச்சி மாவட்டத்தில் தொடர் கொலை சம்பவத்தால் பொதுமக்கள் அச்சம் - காவல்துறை நடவடிக்கை எடுக்குமா?

திருச்சி மாவட்டம் சமயபுரம் பகுதியில் மதுபான கடைகள் அருகே தொடர்ந்து நடைபெறும் கொலை சம்பவங்களால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

திருச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளராக வருண்குமார் பொறுப்பேற்றதிலிருந்து பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். குறிப்பாக அரசால் தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் விற்பனை, கள்ளச்சாராயம், கொலை, கொள்ளை சம்பவங்களை தடுப்பதற்கும், சரித்திர பதிவேடுகளில் இருக்கக்கூடிய முக்கிய குற்றவாளிகளை தொடர்ந்து கண்காணித்து குற்றச் செயல்களில் ஈடுபட முயன்றால் அவர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுத்து சிறையில் அடைக்கவும் உத்தரவிட்டுள்ளார. அதேசமயம் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் குற்றச்சம்பவங்கள் நடைபெறாத வண்ணம் அனைத்து பகுதிகளிலும் காவல் துறை தரப்பில் தனி படைகள் அமைக்கப்பட்டு தீவிரமாக செயலாற்றி வருகிறார்.


திருச்சி மாவட்டத்தில் தொடர் கொலை சம்பவத்தால் பொதுமக்கள் அச்சம் - காவல்துறை நடவடிக்கை எடுக்குமா?

திருச்சி மாவட்டத்தில் தொடர் குற்றச்சம்பவங்கள்

திருச்சி மாவட்டம் சமயபுரம் பகுதியில் உலக புகழ்பெற்ற அருள்மிகு மாரியம்மன் கோவில் உள்ளது. வருடத்தில் அனைத்து நாட்களிலும் பக்தர்கள் பாதயாத்திரை ஆகவும் வாகனங்களிலும் வந்த வண்ணம் உள்ளனர். சமயபுரம் நால்ரோடு பகுதியில் மிகவும் பரபரப்பாக காணப்படும் திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலை செல்வதற்கும் மண்ணச்சநல்லூர் பகுதி செல்வதற்கும் வழியாகவும் கடைகள் நிறைந்த பகுதியாக எப்பொழுதும் பரபரப்பாக காணப்படுகிறது. இந்த சமயபுரம் நான்கு ரோடு பகுதியில் நான்கு மதுபான கடைகள் இருந்தன. குற்ற சம்பவங்களை தடுக்கும் பொருட்டு இரண்டு மதுபான கடைகள் அங்கிருந்து அகற்றப்பட்டன. சமயபுரம் நால்ரோடு பகுதியில் அருகருகே 2 டாஸ்மாக் மதுபான கடை அமைந்துள்ளது. இந்த டாஸ்மாக் மதுபானக்கடை பார்களில் உரிய நேரங்களை தாண்டி 24 மணி நேரமும் கள்ளச்சந்தையில் மது விற்பனை நடைபெறுவதாக தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன.


திருச்சி மாவட்டத்தில் தொடர் கொலை சம்பவத்தால் பொதுமக்கள் அச்சம் - காவல்துறை நடவடிக்கை எடுக்குமா?

பொதுமக்கள் அச்சம் - போலீஸ் நடவடிக்கை எடுக்க வேண்டுகோள்

இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பாக இந்த மதுபான கடை அருகே உள்ள சிமெண்ட் கடை ஒன்றின் பூட்டை உடைத்த மர்ம நபர்கள் கடையில் இரந்த ரூ.35 ஆயிரம் பணத்தை கொள்ளையடித்து சென்றனர். இந்நிலையில் நேற்று முன்தினம் ஆட்டோ டிரைவர்களான அஜீத், விஜய் ஆகியோர் அதிகாலை 3.30 மணி அளவில் இங்குள்ள டாஸ்மாக் பார்களில், கள்ளச்சந்தையில் விற்கப்படும் மது பானத்தை வாங்கி அங்கேயே நின்று குடித்த போது தகராறு ஏற்பட்டது. இதில் பாட்டிலால் தாக்கப்பட்டு விஜய் என்பவர் உயிரிழந்தார்.

இந்நிலையில் நேற்று முந்தினம் காலை அங்குள்ள ஒரு மெக்கானிக் கடை, ஹார்டுவேர் கடை, பலசரக்கு கடை, குடோன் ஆகியவற்றின் பூட்டை உடைக்கப்பட்டிருப்பதை கண்ட சிலர் இது குறித்து சமயபுரம் காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர். தகவலின் பேரில் அங்கு வந்த சமயபுரம் போலீசார் கைரேகை நிபுணர்கள் உதவியுடன் விசாரணை நடத்தி வருகின்றனர். 2 டாஸ்மாக் பார்களில் விற்பனை நேரத்திற்கும் மேலாக கள்ளச்சந்தையில் மது விற்பனை நடைபெறுவதால், தொடர்ந்து பல்வேறு சம்பவங்கள் நடைபெற்று வருவதாகவும், இது குறித்து போலீசார் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் அப்பகுதி பொதுமக்கள் வலயுறுத்துகின்றனர்.இந்த மதுபான கடை முன்பு மட்டும் கடந்த இரண்டு வருடங்களில் மூன்று கொலைகள் நடந்திருப்பதும் பல்வேறு அடிதடி பிரச்சினைகள் நடந்தேறி வருவதும் தொடர்கதையாகி வருகிறது. இந்த மதுபான கடைகள் மூலமாக பொதுமக்களும் அங்கு உள்ள வியாபாரிகளும் அச்சத்துடன் தங்களது பணிகளை செய்து வருகிறார்கள். காவல்துறை உடனடியாக நடவடிக்கை எடுத்து மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டுமென வேண்டுகோள் விடுத்துள்ளனர். 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

December Rain: டிசம்பர் வந்தாச்சு.! அடுத்தடுத்து தமிழகத்தை நோக்கி வரும் பேராபத்து! அலறவிடும் டெல்டா வெதர்மேன்
டிசம்பர் வந்தாச்சு.! அடுத்தடுத்து தமிழகத்தை நோக்கி வரும் பேராபத்து! அலறவிடும் டெல்டா வெதர்மேன்
Free Spiritual Tour: இராமேஸ்வரம் டூ காசிக்கு இலவசமாக ஆன்மிக சுற்றுலா.! பக்தர்களுக்கு சூப்பரான திட்டம்- அசத்தும் தமிழக அரசு
இராமேஸ்வரம் டூ காசிக்கு இலவசமாக ஆன்மிக சுற்றுலா.! பக்தர்களுக்கு சூப்பரான திட்டம்- அசத்தும் தமிழக அரசு
’திமுக-வில் எடுக்கப்பட்ட ரகசிய சர்வே?’ தலைநகரில் யார், யாருக்கு எம்.எல்.ஏ சீட் ?
’திமுக-வில் எடுக்கப்பட்ட ரகசிய சர்வே?’ தலைநகரில் யார், யாருக்கு எம்.எல்.ஏ சீட் ?
Lower Berths: இனி ரயிலில் லோயர்பெர்த் ஈசியா கிடைக்கும்.. ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு.. குஷியில் பெண்கள்
இனி ரயிலில் லோயர்பெர்த் ஈசியா கிடைக்கும்.. ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு.. குஷியில் பெண்கள்
ABP Premium

வீடியோ

Durga Stalin |காஞ்சி கோயிலில் தங்கத்தேர்!பக்தி பரவசத்தில் துர்கா மெய்சிலிர்த்து வேண்டும் காட்சிகள்
Madurai Loganathan IPS Profile | ‘’WE ARE NOT ALLOWING’’ஒற்றை ஆளாக சம்பவம்! யார் இந்த லோகநாதன் IPS?
தமிழ்நாடு வரும் அமித்ஷா திருப்பரங்குன்றம் விவகாரம் கையிலெடுக்கும் பாஜக | Amitsha in Tamilnadu
ஆதவ் Vs ஜோஸ் சார்லஸ் கட்சி தொடங்கும் முன்னே சரிவு விஜய்யுடன் கூட்டணிக்கு END CARD | Aadhav Vs Joes Charles
Thiruparankundram Dheepam|”இன்னும் சில நிமிடங்களில் தீபம்”144 ரத்து போய் பாதுகாப்பு குடுங்க!-நீதிபதி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
December Rain: டிசம்பர் வந்தாச்சு.! அடுத்தடுத்து தமிழகத்தை நோக்கி வரும் பேராபத்து! அலறவிடும் டெல்டா வெதர்மேன்
டிசம்பர் வந்தாச்சு.! அடுத்தடுத்து தமிழகத்தை நோக்கி வரும் பேராபத்து! அலறவிடும் டெல்டா வெதர்மேன்
Free Spiritual Tour: இராமேஸ்வரம் டூ காசிக்கு இலவசமாக ஆன்மிக சுற்றுலா.! பக்தர்களுக்கு சூப்பரான திட்டம்- அசத்தும் தமிழக அரசு
இராமேஸ்வரம் டூ காசிக்கு இலவசமாக ஆன்மிக சுற்றுலா.! பக்தர்களுக்கு சூப்பரான திட்டம்- அசத்தும் தமிழக அரசு
’திமுக-வில் எடுக்கப்பட்ட ரகசிய சர்வே?’ தலைநகரில் யார், யாருக்கு எம்.எல்.ஏ சீட் ?
’திமுக-வில் எடுக்கப்பட்ட ரகசிய சர்வே?’ தலைநகரில் யார், யாருக்கு எம்.எல்.ஏ சீட் ?
Lower Berths: இனி ரயிலில் லோயர்பெர்த் ஈசியா கிடைக்கும்.. ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு.. குஷியில் பெண்கள்
இனி ரயிலில் லோயர்பெர்த் ஈசியா கிடைக்கும்.. ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு.. குஷியில் பெண்கள்
Sabareesan: லண்டனில் அம்பேத்கர்–கலைஞர் ஆய்வுப் படிப்பு.! தமிழக மாணவர்களுக்கு அசத்தல் சான்ஸை ஏற்படுத்திய சபரீசன்
தமிழக மாணவர்களுக்கு வாரி வழங்கிய சபரீசன்.! லண்டனில் 3 மாதம் தங்கி படிக்க ஜாக்பாட்- அசத்தல் அறிவிப்பு
Rain Alert: வளிமண்டல கீழடுக்கு சுழற்சி.. 13 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை!
Rain Alert: வளிமண்டல கீழடுக்கு சுழற்சி.. 13 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை!
Ramanathapuram Accident: ராமநாதபுரத்தில் கோர விபத்து.. 2 கார்கள் நேருக்கு நேர் மோதியதில் 5 பேர் பலி!
Ramanathapuram Accident: ராமநாதபுரத்தில் கோர விபத்து.. 2 கார்கள் நேருக்கு நேர் மோதியதில் 5 பேர் பலி!
Free laptop: மாணவ, மாணவிகள் கையில் இலவச லேப்டாப்.! எப்போ தெரியுமா.? தேதி குறித்த ஸ்டாலின்
மாணவ, மாணவிகள் கையில் இலவச லேப்டாப்.! எப்போ தெரியுமா.? தேதி குறித்த ஸ்டாலின்
Embed widget