மேலும் அறிய

திருச்செந்துறை கிராம மக்கள் நிலங்களை வாங்கவும், விற்கவும் இனி தடை இல்லை - ஆட்சியரின் மகிழ்ச்சி அறிவிப்பு

திருச்சி மாவட்டம் திருச்செந்துறை கிராமத்தில் பத்திரப்பதிவு செய்யவும் நிலங்களை வாங்கவும் விற்கவும் தடை இல்லை - மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் பேட்டி

திருச்சி மாவட்டம், முள்ளிக்கருப்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜகோபால். அவருக்கு, அருகில் உள்ள அந்தநல்லுார் ஒன்றியத்தைச் சேர்ந்த திருச்செந்துறை கிராமத்தில் விவசாய நிலம் உள்ளது. அவசர தேவைக்காக, 1 ஏக்கர் 2 சென்ட் நிலத்தை, ராஜராஜேஸ்வரி என்பவருக்கு விற்க ஒப்பந்தம் செய்தார். 3.50 லட்சம் ரூபாய்க்கு கிரைய பத்திரம் ஏற்பாடு செய்து, அதை பதிவு செய்ய, கடந்த 2022 ஆம் ஆண்டு , திருச்சி மூன்றாம் எண் சார்பதிவாளர் அலுவலகத்துக்கு சென்றார். 

அங்கு அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. 'நீங்கள் பத்திரம் பதிய வந்திருக்கும் நிலம், வக்பு வாரியத்துக்கு சொந்தமானது. 'வக்பு வாரிய உத்தரவுபடி, இந்த பத்திரத்தை பதிய முடியாது.

சென்னையில் உள்ள வக்பு வாரியத்தில் தடையில்லா சான்றிதழ் பெற வேண்டும்' என, சார்பதிவாளர் முரளி கூறியுள்ளார். அதற்கு ராஜகோபால், '1992ல் வாங்கிய என் நிலத்தை விற்க, வக்பு வாரியத்திடம் ஏன் தடையில்லா சான்றிதழ் வாங்க வேண்டும்? என் கேட்டுள்ளார். 

திருச்செந்துறை மக்கள் நிலங்களை விற்கவும், வாங்கவும் தடை - வக்பு வாரியம்

அப்போது பதில் அளித்த சார்பதிவாளர் கூறியது..  திருச்சி மாவட்டத்தில் உள்ள பத்திரப்பதிவுத் துறையைச் சேர்ந்த 12 சார் பதிவாளர் அலுவலகங்களுக்கு தமிழ்நாடு வக்பு வாரிய தலைமைச் செயல் அலுவலர் ஏ.பி.ரபியுல்லா 11.08.2022 அன்று கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அந்தக் கடிதம் தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், அந்தக் கடிதத்தில் கூறியிருந்தது..  திருச்சி மாவட்டத்தில் உள்ள செம்பங்குளம், பெரியநாயகிசத்திரம், மண்ணச்சநல்லூர், திருச்செந்துறை, சித்தாநத்தம், கோமாகுடி, மணமேடு, பாகனூர் ஆகிய கிராமங்களில் உள்ள அனைத்து நிலங்களும் வக்பு வாரியத்துக்கு சொந்தமானவை. 

மேலும் இங்குள்ள நிலங்களை விற்பனை செய்யவோ, பரிமாற்றம் செய்யவோ, அடமானம் வைக்கவோ பத்திரப்பதிவுத் துறை அனுமதிக்கக்கூடாது என்று குறிப்பிட்டுள்ளது என தெரிவித்தார். இதனால் அந்த பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் மிகவும் அதிர்ச்சி அடைந்தனர். 

குறிப்பாக திருச்செந்துறை கிராமமே முழுமையாக வக்பு வாரியத்திற்கு சொந்தமானது , ஆகையால் அந்த இடங்களை அந்த பகுதியில் வசிக்கும் மக்கள் விற்க முடியாது என அறிவித்தனர். 

இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் அப்பகுதி மக்கள் சார்பாக தொடரப்பட்டது. இந்நிலையில் மத்திய அரசு வக்பு வாரிய சட்டத்தில் சில திருத்தங்களை மேற்கொண்டு உள்ளது. 

இந்த சட்ட திருத்தம் எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சி அளித்துள்ளது என திருச்செந்துறை கிராம மக்கள் தெரிவித்தனர்.


திருச்செந்துறை கிராம மக்கள் நிலங்களை வாங்கவும், விற்கவும் இனி தடை இல்லை - ஆட்சியரின் மகிழ்ச்சி அறிவிப்பு

திருச்செந்துறை மக்கள் நிலங்களை விற்கவும், வாங்கவும் தடை இல்லை 

மேலும் இதுகுறித்து திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் தெரிவித்தது.. .திருச்சி திருச்செந்துறை கிராமத்தில் 389 ஏக்கர் பரப்பளவில் வக்பு வாரியத்திற்கு சொந்தமான இடம் என முறையிடப்பட்டது. பத்திர பதிவுகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது.

இந்நிலையில் அப்பகுதி மக்கள் அனைவரும் தொடர் போராட்டங்களை நடத்தி தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர். வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் அமைதி பேச்சுவார்த்தை நடைபெற்றது.

மேலும், அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தையில், திருச்செந்துறை கிராமத்தில் பத்திரப்பதிவு செய்வதற்கு எந்த தடையும் இல்லை , நிலங்களை வாங்கவும், விற்கவும் செய்யலாம் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

இதற்கு வக்பு வாரியம் எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை தடை நீக்கப்பட்டுள்ளது என்பதை திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் பேட்டியில் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

எந்த பந்து வீசினாலும் நம்ம கிட்ட வந்தா சிக்ஸர் தான்! கேடு கெட்ட அரசியல் செய்யும் பாஜக! இறங்கி அடிக்கும் ஸ்டாலின்
எந்த பந்து வீசினாலும் நம்ம கிட்ட வந்தா சிக்ஸர் தான்.! கேடு கெட்ட அரசியல் செய்யும் பாஜக! இறங்கி அடிக்கும் ஸ்டாலின்
Smriti Mandhana Wedding Cancelled: ஸ்மிருதி மந்தனா-பலாஷ் திருமணம் ரத்து; ஸ்டேட்டஸ் போட்டு உறுதி செய்த கிரிக்கெட் ஸ்டார்
ஸ்மிருதி மந்தனா-பலாஷ் திருமணம் ரத்து; ஸ்டேட்டஸ் போட்டு உறுதி செய்த கிரிக்கெட் ஸ்டார்
Smriti Mandhana: ஸ்மிருதி மந்தனா திருமணம் ரத்து செய்யப்பட்டது ஏன்.? இது தான் காரணமா.?
ஸ்மிருதி மந்தனா திருமணம் ரத்து செய்யப்பட்டது ஏன்.? இது தான் காரணமா.?
Chennai Indigo Flight Issue: என்னது ஒரே நாள்ல 100 விமானங்கள் ரத்தா.? சென்னை பயணிகளை தவிக்கவிட்ட இண்டிகோ; என்னதான் நடக்குது.?!
என்னது ஒரே நாள்ல 100 விமானங்கள் ரத்தா.? சென்னை பயணிகளை தவிக்கவிட்ட இண்டிகோ; என்னதான் நடக்குது.?!
ABP Premium

வீடியோ

Sabareesan Meet Rahul | DEAL-ஐ முடித்த சபரீசன்! OK சொன்ன ராகுல்.. பிரவீன் சக்ரவர்த்தி அதிர்ச்சி
”பி.ஆர். பாண்டியனுக்கு 13 ஆண்டு சிறை”திருவாரூர் நீதிமன்றம் அதிரடிதீர்ப்பு முழு விவரம்
Durga Stalin |காஞ்சி கோயிலில் தங்கத்தேர்!பக்தி பரவசத்தில் துர்கா மெய்சிலிர்த்து வேண்டும் காட்சிகள்
Madurai Loganathan IPS Profile | ‘’WE ARE NOT ALLOWING’’ஒற்றை ஆளாக சம்பவம்! யார் இந்த லோகநாதன் IPS?
தமிழ்நாடு வரும் அமித்ஷா திருப்பரங்குன்றம் விவகாரம் கையிலெடுக்கும் பாஜக | Amitsha in Tamilnadu

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
எந்த பந்து வீசினாலும் நம்ம கிட்ட வந்தா சிக்ஸர் தான்! கேடு கெட்ட அரசியல் செய்யும் பாஜக! இறங்கி அடிக்கும் ஸ்டாலின்
எந்த பந்து வீசினாலும் நம்ம கிட்ட வந்தா சிக்ஸர் தான்.! கேடு கெட்ட அரசியல் செய்யும் பாஜக! இறங்கி அடிக்கும் ஸ்டாலின்
Smriti Mandhana Wedding Cancelled: ஸ்மிருதி மந்தனா-பலாஷ் திருமணம் ரத்து; ஸ்டேட்டஸ் போட்டு உறுதி செய்த கிரிக்கெட் ஸ்டார்
ஸ்மிருதி மந்தனா-பலாஷ் திருமணம் ரத்து; ஸ்டேட்டஸ் போட்டு உறுதி செய்த கிரிக்கெட் ஸ்டார்
Smriti Mandhana: ஸ்மிருதி மந்தனா திருமணம் ரத்து செய்யப்பட்டது ஏன்.? இது தான் காரணமா.?
ஸ்மிருதி மந்தனா திருமணம் ரத்து செய்யப்பட்டது ஏன்.? இது தான் காரணமா.?
Chennai Indigo Flight Issue: என்னது ஒரே நாள்ல 100 விமானங்கள் ரத்தா.? சென்னை பயணிகளை தவிக்கவிட்ட இண்டிகோ; என்னதான் நடக்குது.?!
என்னது ஒரே நாள்ல 100 விமானங்கள் ரத்தா.? சென்னை பயணிகளை தவிக்கவிட்ட இண்டிகோ; என்னதான் நடக்குது.?!
TVK Vijay: ஈரோட்டில் 16ம் தேதி தவெக பொதுக்கூட்டம்.. விஜய்க்காக களமிறங்கிய செங்கோட்டையன்
TVK Vijay: ஈரோட்டில் 16ம் தேதி தவெக பொதுக்கூட்டம்.. விஜய்க்காக களமிறங்கிய செங்கோட்டையன்
Hero Splendor+ vs Hero HF Deluxe: தினசரி பயன்பாட்டிற்கு எந்த பைக் சிறந்தது.? வாங்குறதுக்கு முன்னாடி விவரங்கள தெரிஞ்சுக்கோங்க
தினசரி பயன்பாட்டிற்கு எந்த பைக் சிறந்தது.? வாங்குறதுக்கு முன்னாடி விவரங்கள தெரிஞ்சுக்கோங்க
Kohli Rohit: அடுத்த கோலி, ரோகித் தரிசனம் எப்போது? விஜய் ஹசாரே திருவிழா? உள்ளூரிலா? வெளியூரிலா?
Kohli Rohit: அடுத்த கோலி, ரோகித் தரிசனம் எப்போது? விஜய் ஹசாரே திருவிழா? உள்ளூரிலா? வெளியூரிலா?
Justin Trudeau Katy Perry: உறவை உலகுக்கு அறிவித்த பிரபல ஜோடி; வலைதள பதிவின் மூலம் வைரலான ஜஸ்டின் ட்ரூடோ-கேட்டி பெர்ரி
உறவை உலகுக்கு அறிவித்த பிரபல ஜோடி; வலைதள பதிவின் மூலம் வைரலான ஜஸ்டின் ட்ரூடோ-கேட்டி பெர்ரி
Embed widget