மேலும் அறிய

திருச்சி அருகே பல்வேறு வழக்கில் தொடர்புடைய 2 ரவுடிகள் அதிரடியாக கைது

திருச்சி அருகே பல்வேறு குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்த இரண்டு ரவுடிகள் அதிரடியாக கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டனர்.

திருச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் வருண்குமார் பொறுப்பு ஏற்றதிலிருந்து குற்ற சம்பவங்களை தடுப்பதற்கு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். குறிப்பாக சரித்திர பதிவேடுகளில் இருக்கக்கூடிய ரவுடிகளின் பட்டியலை தயார் செய்து அவர்களின் நடத்தையை கண்காணிக்க தனிப்படை அமைத்து தீவிரமாக செயல்பட்டு வருகிறார். 

மேலும் பொது மக்களை அச்சுறுத்தும் விதமாக தொடர் திருட்டு, கொலை, கொள்ளை, வழிப்பறி சம்பவங்களில் யார் ஈடுபட்டாலும் உடனடியாக சட்டரீதியான நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார்.

குறிப்பாக திருச்சி மாவட்டம் முழுவதும் தனிப்படை காவல்துறையினர் 24 மணி நேரமும் ரோந்து பணியில் ஈடுபட வேண்டும். அந்த சமயத்தில் சந்தேகப்படும்படி நபர்கள் சுற்றி பிரிந்தாலோ அல்லது சரித்திர பதிவேடுகள் இருக்கக்கூடிய ரவுடிகள் உரையிடத்தில் கூடினாலோ உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த ரவுடி ரங்கன் திருவெறும்பூர் அருகே முருக்கூரில் உள்ள தனது சகோதரி குழந்தையின் பிறந்தநாள் விழாவுக்குச் சென்று விட்டு, தனது நண்பர்களான திருவனைக்கா பாரதி தெருவை சேர்ந்த ரவுடி அஷ்டபுஜன் (எ) ஜீவா, திருவனைக்கா தெற்கு உள்வீதியை சேர்ந்த ரவுடி டெங்கு மணி (எ) அருண்குமார், உள்ளிட்ட 9 பேருடன் அப்பகுதியில் உள்ள மதுபான கடையில் மது அருந்தி கொண்டிருந்தனர்.


திருச்சி அருகே பல்வேறு வழக்கில் தொடர்புடைய  2 ரவுடிகள் அதிரடியாக கைது

திருச்சி அருகே பல்வேறு குற்ற செயல்களில் ஈடுபட்ட ரவுடிகள் கைது.. 

அப்போது அங்கிருந்த, வேங்கூரைச் சேர்ந்த சிவகுமார், தினேஷ், பரணி ஆகியோருக்கு இடையே அடிதடி தகராறு ஏற்பட்டுள்ளது. இச்சம்பவம் பற்றி தகவலறிந்து அங்கு வந்த திருவெறும்பூர் போலீஸார், வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் மதுபான கடையில் அடிகடி தகராறு நடந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆகையால் மேலும் எந்த குற்றச்சம்பவங்களும் நடக்காத வண்ணம் போலீசார் 24 மணி நேரமும் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 

இந்நிலையில் பல்வேறு குற்ற சம்பவங்களில் ஈடுபட்ட ரவுடிகளை உடனடியாக கைது செய்யும் நடவடிக்கையில் போலீசார்  ஈடுபட்டனர். 

இந்நிலையில் போலீஸார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது பல்வேறு வழக்குகளில் சம்பந்தப்பட்ட திருவெறும்பூர் பகுதியில் ரவுடிகள் ஜீவா மற்றும் அருண்குமார்  ஆகியோரை விசாரணை செய்வதற்காக போலீசார் சென்றனர் அப்போது அவர்கள் அந்தப் பகுதியில் இருந்து தப்பி ஓடினர். 

மேலும் ரவுடிகளை பிடிக்க  போலீஸார் விரட்டி சென்றனர் அப்போது ரவுடி ஜீவா அருகிலிருந்த குவளை வாய்க்காலில் தவறி விழுந்தார். இதில் ஜீவாவின் கால் முறிந்தது. இதையடுத்து போலீஸார், மேற்கண்ட இருவரையும் கைது செய்து, ஜீவாவை சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

மேலும், அருண்குமாரை திருச்சி 6-ஆவது குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். பல்வேறு குற்ற வழக்கில் தொடர்புடைய ரவுடி ரங்கன் உள்ளிட்டோரை தேடி வருகின்றனர்.

திருச்சி மாவட்டத்தை பொருத்தவரை பொதுமக்களை அச்சுறுத்து விதமாக குற்ற செயல்களில் யார் ஈடுபட்டாலும் உடனடியாக சட்டரீதியான கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் சரித்திர பதிவேடுகள் இருக்கக்கூடிய ரவுடிகள் மற்றும் அவர்களுக்கு உடந்தையாக யார் செயல்பட்டாலும் அவர்கள் மீது உடனடியாக கைது நடவடிக்கை எடுக்கப்படும் என திருச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் வருண்குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Delhi Railway Station Stampede: தொடர்ந்து உயிர் பலி வாங்கும் ரயில்வே..! மாறாத நிர்வாகம்..! டெல்லி கோர நிகழ்வுக்கான காரணங்கள் என்ன?
Delhi Railway Station Stampede: தொடர்ந்து உயிர் பலி வாங்கும் ரயில்வே..! மாறாத நிர்வாகம்..! டெல்லி கோர நிகழ்வுக்கான காரணங்கள் என்ன?
CM Stalin: ”பிளாக் மெயில் பண்றீங்களா” எங்க தனிகுணத்தை பாப்பீங்க - மத்திய அரசை எச்சரித்த சிஎம் ஸ்டாலின்
CM Stalin: ”பிளாக் மெயில் பண்றீங்களா” எங்க தனிகுணத்தை பாப்பீங்க - மத்திய அரசை எச்சரித்த சிஎம் ஸ்டாலின்
Delhi Railway Station Stampede: பக்தி மோகம், துடிதுடித்த மக்கள்..! டெல்லி கொடூர சம்பவத்தை விளக்கும் கோர புகைப்படங்கள்
Delhi Railway Station Stampede: பக்தி மோகம், துடிதுடித்த மக்கள்..! டெல்லி கொடூர சம்பவத்தை விளக்கும் கோர புகைப்படங்கள்
Champions Trophy 2025: சாம்பியன்ஸ் ட்ராபி..! துபாய் மைதானம் இந்தியாவிற்கு சாதகமா? வரலாறு சொல்வது என்ன? வெற்றி, தோல்வி புள்ளி விவரங்கள்
Champions Trophy 2025: சாம்பியன்ஸ் ட்ராபி..! துபாய் மைதானம் இந்தியாவிற்கு சாதகமா? வரலாறு சொல்வது என்ன? வெற்றி, தோல்வி புள்ளி விவரங்கள்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Nainar Nagendran Join ADMK : அதிமுகவில் மீண்டும் நயினார்?பாஜகவில் வெடித்த கலகம்!அ.மலை பக்கா ஸ்கெட்ச்Mayiladuthurai Murder | சாராய விற்ற கும்பல் தட்டிக்கேட்ட இளைஞர்கள் படுகொலை செய்த சம்பவம் | CrimePa Ranjith Slams MK Stalin | ”சாதிய வன்கொடுமை! ஒத்துக்கோங்க ஸ்டாலின்”பா. ரஞ்சித் சரமாரி கேள்வி! | DMKDMK Vs VCK | ”2026-ல் ஸ்டாலினை வீழ்த்துவோம் உண்மையான சங்கி திமுக” விசிக நிர்வாகி ஆவேசம்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Delhi Railway Station Stampede: தொடர்ந்து உயிர் பலி வாங்கும் ரயில்வே..! மாறாத நிர்வாகம்..! டெல்லி கோர நிகழ்வுக்கான காரணங்கள் என்ன?
Delhi Railway Station Stampede: தொடர்ந்து உயிர் பலி வாங்கும் ரயில்வே..! மாறாத நிர்வாகம்..! டெல்லி கோர நிகழ்வுக்கான காரணங்கள் என்ன?
CM Stalin: ”பிளாக் மெயில் பண்றீங்களா” எங்க தனிகுணத்தை பாப்பீங்க - மத்திய அரசை எச்சரித்த சிஎம் ஸ்டாலின்
CM Stalin: ”பிளாக் மெயில் பண்றீங்களா” எங்க தனிகுணத்தை பாப்பீங்க - மத்திய அரசை எச்சரித்த சிஎம் ஸ்டாலின்
Delhi Railway Station Stampede: பக்தி மோகம், துடிதுடித்த மக்கள்..! டெல்லி கொடூர சம்பவத்தை விளக்கும் கோர புகைப்படங்கள்
Delhi Railway Station Stampede: பக்தி மோகம், துடிதுடித்த மக்கள்..! டெல்லி கொடூர சம்பவத்தை விளக்கும் கோர புகைப்படங்கள்
Champions Trophy 2025: சாம்பியன்ஸ் ட்ராபி..! துபாய் மைதானம் இந்தியாவிற்கு சாதகமா? வரலாறு சொல்வது என்ன? வெற்றி, தோல்வி புள்ளி விவரங்கள்
Champions Trophy 2025: சாம்பியன்ஸ் ட்ராபி..! துபாய் மைதானம் இந்தியாவிற்கு சாதகமா? வரலாறு சொல்வது என்ன? வெற்றி, தோல்வி புள்ளி விவரங்கள்
Delhi Railway Station Stampede: அச்சச்சோ..! டெல்லி ரயில் நிலையத்தில் திடீர் கூட்ட நெரிசல் - 18 பேர் பலி
Delhi Railway Station Stampede: அச்சச்சோ..! டெல்லி ரயில் நிலையத்தில் திடீர் கூட்ட நெரிசல் - 18 பேர் பலி
Vikatan : “விகடன் இணையதளம் முடக்கமா?” பார்க்க, படிக்க முடியாததால் வாசகர்கள் கேள்வி..!
Vikatan : “விகடன் இணையதளம் முடக்கமா?” பார்க்க, படிக்க முடியாததால் வாசகர்கள் கேள்வி..!
"பிச்சை கேட்கல" நிதி கொடுக்க முடியாது என சொன்ன மத்திய அமைச்சருக்கு அன்பில் மகேஷ் பதிலடி!
"தமிழ்நாட்டிற்கு நிதி கிடையாதுங்க" புதிய கல்விக்கொள்கை விவகாரத்தால் மத்திய அமைச்சர் திட்டவட்டம்
Embed widget

We use cookies to improve your experience, analyze traffic, and personalize content. By clicking "Allow All Cookies", you agree to our use of cookies.