மேலும் அறிய

திருச்சி அருகே பல்வேறு வழக்கில் தொடர்புடைய 2 ரவுடிகள் அதிரடியாக கைது

திருச்சி அருகே பல்வேறு குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்த இரண்டு ரவுடிகள் அதிரடியாக கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டனர்.

திருச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் வருண்குமார் பொறுப்பு ஏற்றதிலிருந்து குற்ற சம்பவங்களை தடுப்பதற்கு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். குறிப்பாக சரித்திர பதிவேடுகளில் இருக்கக்கூடிய ரவுடிகளின் பட்டியலை தயார் செய்து அவர்களின் நடத்தையை கண்காணிக்க தனிப்படை அமைத்து தீவிரமாக செயல்பட்டு வருகிறார். 

மேலும் பொது மக்களை அச்சுறுத்தும் விதமாக தொடர் திருட்டு, கொலை, கொள்ளை, வழிப்பறி சம்பவங்களில் யார் ஈடுபட்டாலும் உடனடியாக சட்டரீதியான நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார்.

குறிப்பாக திருச்சி மாவட்டம் முழுவதும் தனிப்படை காவல்துறையினர் 24 மணி நேரமும் ரோந்து பணியில் ஈடுபட வேண்டும். அந்த சமயத்தில் சந்தேகப்படும்படி நபர்கள் சுற்றி பிரிந்தாலோ அல்லது சரித்திர பதிவேடுகள் இருக்கக்கூடிய ரவுடிகள் உரையிடத்தில் கூடினாலோ உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த ரவுடி ரங்கன் திருவெறும்பூர் அருகே முருக்கூரில் உள்ள தனது சகோதரி குழந்தையின் பிறந்தநாள் விழாவுக்குச் சென்று விட்டு, தனது நண்பர்களான திருவனைக்கா பாரதி தெருவை சேர்ந்த ரவுடி அஷ்டபுஜன் (எ) ஜீவா, திருவனைக்கா தெற்கு உள்வீதியை சேர்ந்த ரவுடி டெங்கு மணி (எ) அருண்குமார், உள்ளிட்ட 9 பேருடன் அப்பகுதியில் உள்ள மதுபான கடையில் மது அருந்தி கொண்டிருந்தனர்.


திருச்சி அருகே பல்வேறு வழக்கில் தொடர்புடைய 2 ரவுடிகள் அதிரடியாக கைது

திருச்சி அருகே பல்வேறு குற்ற செயல்களில் ஈடுபட்ட ரவுடிகள் கைது.. 

அப்போது அங்கிருந்த, வேங்கூரைச் சேர்ந்த சிவகுமார், தினேஷ், பரணி ஆகியோருக்கு இடையே அடிதடி தகராறு ஏற்பட்டுள்ளது. இச்சம்பவம் பற்றி தகவலறிந்து அங்கு வந்த திருவெறும்பூர் போலீஸார், வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் மதுபான கடையில் அடிகடி தகராறு நடந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆகையால் மேலும் எந்த குற்றச்சம்பவங்களும் நடக்காத வண்ணம் போலீசார் 24 மணி நேரமும் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 

இந்நிலையில் பல்வேறு குற்ற சம்பவங்களில் ஈடுபட்ட ரவுடிகளை உடனடியாக கைது செய்யும் நடவடிக்கையில் போலீசார்  ஈடுபட்டனர். 

இந்நிலையில் போலீஸார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது பல்வேறு வழக்குகளில் சம்பந்தப்பட்ட திருவெறும்பூர் பகுதியில் ரவுடிகள் ஜீவா மற்றும் அருண்குமார்  ஆகியோரை விசாரணை செய்வதற்காக போலீசார் சென்றனர் அப்போது அவர்கள் அந்தப் பகுதியில் இருந்து தப்பி ஓடினர். 

மேலும் ரவுடிகளை பிடிக்க  போலீஸார் விரட்டி சென்றனர் அப்போது ரவுடி ஜீவா அருகிலிருந்த குவளை வாய்க்காலில் தவறி விழுந்தார். இதில் ஜீவாவின் கால் முறிந்தது. இதையடுத்து போலீஸார், மேற்கண்ட இருவரையும் கைது செய்து, ஜீவாவை சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

மேலும், அருண்குமாரை திருச்சி 6-ஆவது குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். பல்வேறு குற்ற வழக்கில் தொடர்புடைய ரவுடி ரங்கன் உள்ளிட்டோரை தேடி வருகின்றனர்.

திருச்சி மாவட்டத்தை பொருத்தவரை பொதுமக்களை அச்சுறுத்து விதமாக குற்ற செயல்களில் யார் ஈடுபட்டாலும் உடனடியாக சட்டரீதியான கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் சரித்திர பதிவேடுகள் இருக்கக்கூடிய ரவுடிகள் மற்றும் அவர்களுக்கு உடந்தையாக யார் செயல்பட்டாலும் அவர்கள் மீது உடனடியாக கைது நடவடிக்கை எடுக்கப்படும் என திருச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் வருண்குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார். 

தலைப்பு செய்திகள்

இரும்பு உத்தரங்கள் வந்தாச்சு... பணிகள் ஸ்பீடு பிடிச்சாச்சு:திருச்சி கோட்டை மேம்பாலம் ஜனவரிக்குள் திறக்க நடவடிக்கை?
இரும்பு உத்தரங்கள் வந்தாச்சு... பணிகள் ஸ்பீடு பிடிச்சாச்சு:திருச்சி கோட்டை மேம்பாலம் ஜனவரிக்குள் திறக்க நடவடிக்கை?
திருச்சியில் விவசாயிகளுக்கு தேனீ வளர்ப்பு பயிற்சி
திருச்சியில் விவசாயிகளுக்கு தேனீ வளர்ப்பு பயிற்சி
விளையாட்டு வீரர்களின் கனவுக்கு பூட்டு... அரசின் கோடிக்கணக்கான முதலீடு வீணாகும் அபாயம்: எங்கு தெரியுங்களா?
விளையாட்டு வீரர்களின் கனவுக்கு பூட்டு... அரசின் கோடிக்கணக்கான முதலீடு வீணாகும் அபாயம்: எங்கு தெரியுங்களா?
தமிழகத்துக்கே முன்மாதிரி... திருடர்களுக்கு ‘செக்’:  ரூ.40 லட்சம் சொந்த நிதியில் 200 சிசிடிவி கேமராக்கள் பொறுத்திய மக்கள்
தமிழகத்துக்கே முன்மாதிரி... திருடர்களுக்கு ‘செக்’:  ரூ.40 லட்சம் சொந்த நிதியில் 200 சிசிடிவி கேமராக்கள் பொறுத்திய மக்கள்

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: ”எல்லாம் கொடுக்கிறேன், லஞ்சம் மட்டும் வாங்காதீங்க” MLA-க்களுக்கு கார் அறிவித்து CM விஜய் கோரிக்கை
”எல்லாம் கொடுக்கிறேன், லஞ்சம் மட்டும் வாங்காதீங்க” MLA-க்களுக்கு கார் அறிவித்து CM விஜய் கோரிக்கை
Aavin Milk Price: ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்தி அறிவித்த CM விஜய் - ஒரு லிட்டருக்கு எவ்வளவு தெரியுமா?
ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்தி அறிவித்த CM விஜய் - ஒரு லிட்டருக்கு எவ்வளவு தெரியுமா?
Built for Brave: ராணுவ லுக்கில் ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 கோர்க்கா எடிஷன் அறிமுகம்- என்ன மாற்றம்?
Built for Brave: ராணுவ லுக்கில் ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 கோர்க்கா எடிஷன் அறிமுகம்- என்ன மாற்றம்?
IPL 2027: அடுத்த ஐபிஎல் தொடர் தொடங்கும் தேதி என்ன? போட்டிகளின் எண்ணிக்கை உயர்கிறதா? புதிய மாற்றங்கள்
அடுத்த ஐபிஎல் தொடர் தொடங்கும் தேதி என்ன? போட்டிகளின் எண்ணிக்கை உயர்கிறதா? புதிய மாற்றங்கள்
பணிந்த அரசு! ’கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் போராடக்கூடாது’ கடும் எதிர்ப்பால் தடை உத்தரவு வாபஸ்!
பணிந்த அரசு! ’கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் போராடக்கூடாது’ கடும் எதிர்ப்பால் தடை உத்தரவு வாபஸ்!
Kanyakumari District Holiday : 3 நாள் தொடர் விடுமுறை.! மாணவர்களுக்கு மட்டுமல்ல அரசு ஊழியர்களுக்கும் குஷி- வெளியான அறிவிப்பு
3 நாள் தொடர் விடுமுறை.! மாணவர்களுக்கு மட்டுமல்ல அரசு ஊழியர்களுக்கும் குஷி- வெளியான அறிவிப்பு
நடுத்தர SUV போர்; டாடா சியரா வருகையால் கியா செல்டோஸ்-க்கு கடும் போட்டி!- யாருக்கு முதலிடம்?
நடுத்தர SUV போர்; டாடா சியரா வருகையால் கியா செல்டோஸ்-க்கு கடும் போட்டி!- யாருக்கு முதலிடம்?
Hyundai Tucson: ரக்கட் ஆன டிசைன், பேக்கேஜ்ட் அம்சங்கள், ஹைப்ரிட் - முற்றிலும் புதிய டக்சன் SUV - விலை என்ன?
ரக்கட் ஆன டிசைன், பேக்கேஜ்ட் அம்சங்கள், ஹைப்ரிட் - முற்றிலும் புதிய டக்சன் SUV - விலை என்ன?
Embed widget