மேலும் அறிய

தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறினால் புகார் தெரிவிக்க எண் அறிவிப்பு - திருச்சி ஆட்சியர் பிரதீப்குமார்

திருச்சி மாவட்டம் முழுவதும் தேர்தல் பாதுகாப்பு பணியில் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட வேண்டும் - மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் பிரதீப் குமார் உத்தரவு

இந்திய தேர்தல் ஆணையத்தால் பாராளுமன்ற தேர்தல், 2024 அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, தேர்தல் நடத்தை விதிகள் தொடர்பாக திருச்சி  மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் தலைமையில் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினருடன் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் இந்திய தேர்தல் ஆணைத்தால் தமிழகத்திற்கு தேர்தல் தொடர்பான விபரங்களை அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினருக்கு தெரிவிக்கப்பட்டது.

மேலும், வேட்பு மனுத்தாக்கல் வரும் 20ம் தேதி தொடங்குகிறது. வேட்பு மனு தாக்கல் செய்ய மார்ச் 27 ம் தேதி கடைசி நாளாகும். வேட்பு மனு மீதான பரிசீலனை என்பது மார்ச் 28 ம் தேதி நடைபெற உள்ளது. வேட்பு மனு வாபஸ் பெற மார்ச் 30ம் தேதி கடைசி நாளாகும். அதன்பிறகு இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டு ஏப்ரல் 19 ம் தேதி 39 லோக்சபா தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெற உள்ளது. ஓட்டு எண்ணிக்கை என்பது ஜுன் 4ம் தேதி நடைபெற உள்ளது.


தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறினால் புகார் தெரிவிக்க  எண் அறிவிப்பு -  திருச்சி ஆட்சியர் பிரதீப்குமார்

மேலும், திருச்சி மாவட்டத்தில், தேர்தல் நடத்தை விதிகளை கண்காணித்திடும் பொருட்டு, 81 பறக்கும் படைகள். 81 நிலையான கண்காணிப்புக்குழுக்கள், 9 வீடியோ நிலையான கண்காணிப்பு குழுக்கள், வேட்பாளர்களால் தேர்தலுக்காக செலவிடப்படும் தொகையினை கண்காணித்திட 9 செலவு கண்காணிப்பு குழு, 9 வீடியோ கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.

தேர்தல் விதிமீறல் தொடர்பாக புகார் எண் அறிவிப்பு..

மேலும் தேர்தல் நடத்தை விதிமீறல்கள் தொடர்பான புகார்களை 1800 599 5669 என்ற கட்டணமில்லா தொலைபேசியில் தெரிவிக்கலாம். மேலும் புகார்களை 6384001585 என்ற வாட்ஸ் ஆப் எண்ணிற்கும் புகார்களை தெரிவிக்கலாம். புகார்கள் அனைத்திற்கும் 24 மணி நேரத்திற்குள் தீர்வுகள் மேற்கொள்ளப்படும்.

மேலும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், திருத்தம் மற்றும் நீக்கம் தொடர்பான விபரங்களை பொதுமக்கள் பெற ஏதுவாக மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் இயங்கும் வண்ணம் வாக்காளர் மாவட்ட தொடர்பு மையம் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், கட்டணமில்லா தொலைபேசி எண் 1950 ஆகும். எனவே வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், திருத்தம் மற்றும் நீக்கம் தொடர்பாக விபரங்களை 1950 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம் என்ற விபரம் தெரிவிக்கப்படுகிறது.


தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறினால் புகார் தெரிவிக்க  எண் அறிவிப்பு -  திருச்சி ஆட்சியர் பிரதீப்குமார்

மேலும் பொதுமக்கள் தேர்தல் நடத்தை விதி மீறல்கள் தொடர்பான புகார்களை ஊ- ஏபைடை என்ற மொபைல் செயலி மூலமாகவும் தெரிவிக்கலாம். இதில் வரப்பெறும் புகார்களுக்கு 100 நிமிடத்தில் உரிய விசாரணைக்கு பிறகு தீர்வு காணப்படும்.

அரசியல் கட்சியியினர் கூட்டங்கள் மற்றும் இதர அனுமதிகளுக்கு ளுருஏஐனுர்யு என்ற செயலி மூலம் விண்ணப்பம் செய்து உரிய அனுமதி பெற்றுக்கொள்ளலாம். மேலும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினருக்கு இந்திய தேர்தல் ஆணையத்தால் பரிந்துரைக்கப்பட்ட தேர்தல் நடத்தை விதிகள் தொடர்பாக விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.

மேலும், இக்கூட்டத்திற்கு மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் தலைமை தாங்கினார். ராஜலெட்சுமி, மாவட்ட வருவாய் அலுவலர், திருச்சி, சீனிவாசன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(தேர்தல்),
திருச்சி மற்றும் செல்வகணேஷ், தனி வட்டாட்சியர் (தேர்தல்), உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"நெஞ்சில் குடியிருக்கும் இஸ்லாமிய பெருமக்கள்" விஜய் சொன்னவுடன் அதிர்ந்த ஒய்எம்சிஏ மைதானம்!
பாய் குல்லா அணிந்து.. லுங்கியுடன் என்ட்ரி கொடுத்த தவெக தலைவர் விஜய்!
பாய் குல்லா அணிந்து.. லுங்கியுடன் இப்தார் நோன்பு திறந்த தவெக தலைவர் விஜய்!
பாஜக நோட்டா என கிண்டலடித்தார்கள், ஆனால் இப்போ பாருங்க.!...இபிஎஸ் தாக்கிய அண்ணாமலை.!
"இந்த அநியாயத்தை ஏத்துக்க மாட்டோம்" பாஜகவை எதிர்க்க பாஜகவிடமே ஆதரவு கேட்ட ஸ்டாலின்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Daughter in law Surprise: வைர நெக்லஸ்..தங்க கட்டிகள்..1 கோடியில் BIRTHDAY GIFT!மாமியாருக்கு SURPRISESarathkumar BJP : அண்ணாமலைக்கு ஆப்பு! பாஜக தலைவர் சரத்குமார்? கடுப்பில் சீனியர்ஸ்Chandrababu Naidu Praises Tamilnadu : ’’தமிழர்கள் TOP-ல இருக்காங்கதமிழ்நாடு தான் BEST’’புகழ்ந்து தள்ளிய சந்திரபாபுPolice vs Drunken lady : தலைக்கேறிய போதை !நடுரோட்டில் இளம்பெண் அலப்பறை திணறிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"நெஞ்சில் குடியிருக்கும் இஸ்லாமிய பெருமக்கள்" விஜய் சொன்னவுடன் அதிர்ந்த ஒய்எம்சிஏ மைதானம்!
பாய் குல்லா அணிந்து.. லுங்கியுடன் என்ட்ரி கொடுத்த தவெக தலைவர் விஜய்!
பாய் குல்லா அணிந்து.. லுங்கியுடன் இப்தார் நோன்பு திறந்த தவெக தலைவர் விஜய்!
பாஜக நோட்டா என கிண்டலடித்தார்கள், ஆனால் இப்போ பாருங்க.!...இபிஎஸ் தாக்கிய அண்ணாமலை.!
"இந்த அநியாயத்தை ஏத்துக்க மாட்டோம்" பாஜகவை எதிர்க்க பாஜகவிடமே ஆதரவு கேட்ட ஸ்டாலின்!
திருத்தணியில் பேருந்து, லாரி நேருக்கு நேர் மோதி விபத்து.. 5 பேர் பலியான சோகம்!
திருத்தணியில் பேருந்து, லாரி நேருக்கு நேர் மோதி விபத்து.. 5 பேர் பலியான சோகம்!
Local Train Cancelled: அலர்ட் பயணிகளே.. ஞாயிறன்று ரத்தாகும் புறநகர் ரயில்கள்.. எந்த வழித்தடம் தெரியுமா?
Local Train Cancelled: அலர்ட் பயணிகளே.. ஞாயிறன்று ரத்தாகும் புறநகர் ரயில்கள்.. எந்த வழித்தடம் தெரியுமா?
பள்ளி மாணவர்களிடம் பிஸ்கட் கொடுத்து ஏமாற்றும் பாஜகவினர்! – அன்பில் மகேஸ் கொடுக்கும் எச்சரிக்கை
பள்ளி மாணவர்களிடம் பிஸ்கட் கொடுத்து ஏமாற்றும் பாஜகவினர்! – அன்பில் மகேஸ் கொடுக்கும் எச்சரிக்கை
Chennai Madurai Expressway: அடி தூள்.. இனி சென்னை டு மதுரை 6 மணி நேரம்தான்.. தொடங்கிய எக்ஸ்பிரஸ் வே பணிகள்...
அடி தூள்.. இனி சென்னை டு மதுரை 6 மணி நேரம்தான்.. தொடங்கிய எக்ஸ்பிரஸ் வே பணிகள்...
Embed widget