மேலும் அறிய

திருச்சி - சார்லபள்ளி வாராந்திர ரயில் நிரந்தரச் சேவையாக மாறுகிறது... ரயில்வே நிர்வாகத்தின் அறிவிப்பு

தெலுங்கானா மாநிலத்திற்கு எளிதாகப் பயணம் செய்யும் வகையில் இயக்கப்பட்டு வந்த சார்லபள்ளி வாராந்திர சிறப்பு ரயில், தற்போது நிரந்தர ரயிலாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

தஞ்சாவூர்: திருச்சி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதி பயணிகள் தெலுங்கானா மாநிலத்திற்கு எளிதாகப் பயணம் செய்யும் வகையில் இயக்கப்பட்டு வந்த சார்லபள்ளி வாராந்திர சிறப்பு ரயில், தற்போது நிரந்தர ரயிலாக (Regularised Express Train) மாற்றம் செய்து தென்னக ரயில்வே உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனால் பயணிகள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

தென் மத்திய ரயில்வே வெளியிட்டுள்ள புதிய அறிவிப்பின்படி, இந்த ரயில் இனி வழக்கமான கால அட்டவணையுடன் கூடிய நிரந்தர விரைவு ரயிலாக இயக்கப்படவுள்ளதால் டெல்டா மாவட்ட பயணிகள் பெரும் உற்சாகம் அடைந்துள்ளனர்.

வியாபாரிகள் மற்றும் ஆன்மீகப் பயணிகளுக்கு வரப்பிரசாதம்

ரயில்வே நிர்வாகத்தின் இந்த அறிவிப்பு, ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களுக்கு அடிக்கடி பயணிக்கும் தமிழக வியாபாரிகளுக்கும், திருப்பதி, காளஹஸ்தி போன்ற ஆன்மீகத் தலங்களுக்குச் செல்லும் சுற்றுலாப் பயணிகளுக்கும் ஒரு மிகச்சிறந்த செய்தியாக அமைந்துள்ளது.

நிரந்தரமாக்கப்பட்டதைத் தொடர்ந்து, இந்த ரயிலுக்குப் புதிய எண்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதன்படி இந்த ரயில் இனி வண்டி எண்: 17077 / 17078 என்ற எண்களுடன் இயக்கப்படும். இதன் சேவை ஜூலை மாதத்திலிருந்து தொடங்குகிறது:

  • சார்லபள்ளியிலிருந்து (வண்டி எண் 17077): ஜூலை 7 முதல் ஒவ்வொரு வாரமும் செவ்வாய்க்கிழமை அன்று தனது வழக்கமான சேவையைத் தொடங்கும்.
  • திருச்சி சந்திப்பிலிருந்து (வண்டி எண் 17078): ஜூலை 8 முதல் ஒவ்வொரு வாரமும் புதன்கிழமை அன்று தனது மறுமார்க்கச் சேவையைத் தொடங்கும்.

விரிவான நேர அட்டவணை

பயணிகள் தங்களின் பயணங்களை முன்கூட்டியே திட்டமிடுவதற்கு ஏதுவாக இந்த ரயிலின் விரிவான நேர அட்டவணையை ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ளது:

வண்டி எண் & வழித்தடம்

புறப்படும் நேரம்

சேரும் இடம் & நேரம்

வண்டி எண் 17077



(சார்லபள்ளி – திருச்சி)

செவ்வாய்க்கிழமை



மாலை 5.20 மணி

புதன்கிழமை



மாலை 6.45 மணிக்கு திருச்சி வந்தடையும்.

வண்டி எண் 17078



(திருச்சி – சார்லபள்ளி)

புதன்கிழமை



இரவு 9.30 மணி

வியாழக்கிழமை



இரவு 9.30 மணிக்கு சார்லபள்ளி சென்றடையும்.

ரயில் நின்று செல்லும் முக்கிய நிலையங்கள்

இந்த விரைவு ரயிலானது திருச்சி - விழுப்புரம் கார்டு லைன் (Chord Line) வழியாக இயக்கப்பட்டு, இரு மாநிலங்களின் பல்வேறு முக்கிய நகரங்களையும், ஆன்மீகத் தலங்களையும் இணைக்கிறது.

  • தமிழகத்தில் நின்று செல்லும் இடங்கள்: ஸ்ரீரங்கம், அரியலூர், விருத்தாசலம், விழுப்புரம், திருக்கோவிலூர், திருவண்ணாமலை, வேலூர் கன்டோன்மென்ட் மற்றும் காட்பாடி.
  • ஆந்திரா & தெலுங்கானாவில் நின்று செல்லும் இடங்கள்: சித்தூர், திருப்பதி, ரேணிகுண்டா, கூடூர், நெல்லூர், ஓங்கோல், சீராலா, பாபட்லா, தெனாலி, குண்டூர், சத்தெனப்பள்ளி, நடிகுடி, மிரியாலகுடா மற்றும் நல்கொண்டா.

நவீன எல்.எச்.பி (LHB) பெட்டிகள் வசதி

பயணிகளுக்கு நவீன மற்றும் வசதியான பயண அனுபவத்தை வழங்கும் வகையில் இந்த ரயிலின் பெட்டிகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. இதில் மொத்தம் 24 பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன:

  • 3 இரண்டடுக்கு ஏசி பெட்டிகள் (AC Two-Tier)
  • 5 மூன்றடுக்கு ஏசி பெட்டிகள் (AC Three-Tier)
  • 10 தூங்கும் வசதி கொண்ட பெட்டிகள் (Sleeper Class)
  • 4 பொது இரண்டாம் வகுப்பு பெட்டிகள் (General Second Class)
  • மாற்றுத்திறனாளிகளுக்கான பிரத்யேக வசதிகள் கொண்ட 2 இரண்டாம் வகுப்பு பெட்டிகள் (Divyangjan friendly)

முன்பதிவு தொடக்கம்: இந்த ரயிலுக்கான முன்தொகை முன்பதிவு (Advance Reservation) தென்னக ரயில்வே முனையங்கள் மற்றும் ஐஆர்சிடிசி (IRCTC) இணையதளங்கள் வழியாகத் தற்போது தொடங்கப்பட்டுள்ளது.

இந்த வாராந்திர சிறப்பு ரயிலை நிரந்தரச் சேவையாக மாற்ற வேண்டும் என்று திருச்சி பகுதி பொதுமக்கள் நீண்ட நாட்களாகக் கோரிக்கை விடுத்து வந்தனர். இக்கோரிக்கையை ஏற்று, திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் துரை வைகோ கடந்த மார்ச் மாதம் ரயில்வே அமைச்சகத்திற்கும், திருச்சி கோட்ட ரயில்வே மேலாளருக்கும் (DRM) தனித்தனியாகக் கோரிக்கை மனுக்களை அனுப்பியிருந்தார். திருச்சி மற்றும் ஸ்ரீரங்கம் பகுதி மக்கள் திருப்பதி, ஹைதராபாத் போன்ற பெருநகரங்களுக்குச் செல்ல இந்த ரயில் பெரிதும் உதவுவதால், இதனை நிரந்தரமாக்க வேண்டும் என அவர் தொடர்ந்து வலியுறுத்தி வந்த நிலையில், தற்போது அவரது முயற்சிக்கு நல்ல பலன் கிடைத்துள்ளது. இந்தச் சார்லபள்ளி விரைவு ரயில், தமிழக - தெலுங்கானா மாநிலங்களுக்கு இடையேயான வணிகம் மற்றும் சுற்றுலாவை மேலும் வலுப்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை.

 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

திருச்சி - சார்லபள்ளி வாராந்திர ரயில் நிரந்தரச் சேவையாக மாறுகிறது... ரயில்வே நிர்வாகத்தின் அறிவிப்பு
திருச்சி - சார்லபள்ளி வாராந்திர ரயில் நிரந்தரச் சேவையாக மாறுகிறது... ரயில்வே நிர்வாகத்தின் அறிவிப்பு
பிரபஞ்சத்தின் ரகசியங்களை அறியலாம்! திருச்சியில் 'டீப் ஸ்கை' விண்வெளி காட்சி அறிமுகம்
பிரபஞ்சத்தின் ரகசியங்களை அறியலாம்! திருச்சியில் 'டீப் ஸ்கை' விண்வெளி காட்சி அறிமுகம்
Trichy Power Shutdown: திருச்சி உறையூரில் நாளை(29-06-2026) மின் தடை.. எவ்வளவு நேரம் கரண்ட் இருக்காது! முழு விவரம்
Trichy Power Shutdown: திருச்சி உறையூரில் நாளை(29-06-2026) மின் தடை.. எவ்வளவு நேரம் கரண்ட் இருக்காது! முழு விவரம்
ஸ்ரீரங்கம் பகுதிகளில் கழிவுநீர் பொங்கி வழிவதால் மக்கள் கடும் அவதி: குழாய்களை மாற்ற விரைவில் நடவடிக்கை?
ஸ்ரீரங்கம் பகுதிகளில் கழிவுநீர் பொங்கி வழிவதால் மக்கள் கடும் அவதி: குழாய்களை மாற்ற விரைவில் நடவடிக்கை?
Advertisement
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

92.22% VOTING
West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

92.67% VOTING
Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

85.01% VOTING
Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

Advertisement
Advertisement

வீடியோ

Vijay warns Ministers |
சுத்துப்போட்ட திமுக கவுன்சிலர்கள்! “பேசவே விடமாட்றாங்க” கடுப்பாகி கிளம்பிய தவெக MLA
உச்சநீதிமன்ற நீதிபதியாகிறார் தமிழ்ப்பெண் வழக்கறிஞர்! யார் இந்த மோகனா?
கோவை சிறுமி வழக்கு 2 பேர் மீதும் குண்டாஸ் வெளியவே வர முடியாது IG ரம்யா அதிரடி
காரை ஓட்டி கொன்ற சிறுவன் ஜாமீனில் வெளிவந்த தந்தை குத்தாட்டம் போட்ட குடும்பம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Minister Ramesh: திருச்செந்தூரில் அடாவடி..! அமைச்சரிடமே ரூ.4000 லஞ்சம் வாங்கிய அர்ச்சகர்கள் - கொத்தாக சிக்கிய கும்பல்
திருச்செந்தூரில் அடாவடி..! அமைச்சரிடமே ரூ.4000 லஞ்சம் வாங்கிய அர்ச்சகர்கள் - கொத்தாக சிக்கிய கும்பல்
Gold Silver Rate May 29th: போச்சுடா.! ரூ.5000 கூடிடுச்சே.! தங்கம், வெள்ளியின் இன்றைய விலை என்ன தெரியுமா.?
போச்சுடா.! ரூ.5000 கூடிடுச்சே.! தங்கம், வெள்ளியின் இன்றைய விலை என்ன தெரியுமா.?
CV Shanmugam: சிவி சண்முகம் தவெக-வில் இணைவது உறுதி? விஜய் தரப்போகும் பதவி என்ன தெரியுமா?
CV Shanmugam: சிவி சண்முகம் தவெக-வில் இணைவது உறுதி? விஜய் தரப்போகும் பதவி என்ன தெரியுமா?
Hardik Pandya: ”நீ கிளிச்ச வரைக்கும் போதும்” சொந்த காசில் சூனியம் - ஹர்திக்கிற்கு கும்புடு, ரோகித்தை நாடும் மும்பை
”நீ கிளிச்ச வரைக்கும் போதும்” சொந்த காசில் சூனியம் - ஹர்திக்கிற்கு கும்புடு, ரோகித்தை நாடும் மும்பை
CM Vijay: அதிகாரிகளுக்கு நோ..! மக்கள் வரி பணத்தில் ஹேர் ஸ்டைலிஸ்டிற்கு ட்ரிப்பா? CM விஜய்க்கு சரமாரி கேள்வி
அதிகாரிகளுக்கு நோ..! மக்கள் வரி பணத்தில் ஹேர் ஸ்டைலிஸ்டிற்கு ட்ரிப்பா? CM விஜய்க்கு சரமாரி கேள்வி
15 வருடமாக வசித்த வீட்டை காலி செய்யும் இபிஎஸ்.! புது வீட்டிற்கு குடியேறுகிறார்- ஏன் தெரியுமா.?
15 வருடமாக வசித்த வீட்டை காலி செய்யும் இபிஎஸ்.! புது வீட்டிற்கு குடியேறுகிறார்- ஏன் தெரியுமா.?
Singappen Special Force: CM விஜயின் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை தொடக்க விழா ரத்து ஏன்? இதுதான் காரணமா?
CM விஜயின் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை தொடக்க விழா ரத்து ஏன்? இதுதான் காரணமா?
Tamilnadu Headlines: சிங்கப்பெண் சிறப்பு படை அதிரடி திட்டம் தொடக்க விழா ரத்து! வெளுக்கப்போகும் மழை - தமிழகத்தில் இதுவரை
Tamilnadu Headlines: சிங்கப்பெண் சிறப்பு படை அதிரடி திட்டம் தொடக்க விழா ரத்து! வெளுக்கப்போகும் மழை - தமிழகத்தில் இதுவரை
Embed widget