மேலும் அறிய

முத்தரையர் முன்னேற்ற சங்க நிர்வாகி கார் மீது வெடிகுண்டு வீச்சு - திருச்சியில் பரபரப்பு..!

கொள்ளிடம் நம்பர் 1 டோல்கேட் அருகே முத்தரையர் முன்னேற்ற சங்க நிர்வாகியின் கார் மீது நாட்டு வெடிகுண்டு வீசப்பட்டது. இது தொடர்பாக 7 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.

திருச்சி புத்தூர் நால்ரோட்டைச் சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மகன் திலீப் (வயது 34). இவர் தமிழ்நாடு முத்தரையர் முன்னேற்ற சங்க திருச்சி மாவட்ட இளைஞரணி அமைப்பாளராக உள்ளார். இவருக்கும் வீர முத்தரையர் முன்னேற்ற சங்கத்தை சேர்ந்த சிலருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்ததாக தெரிகிறது. இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு திலீபன் திருச்சியில் இருந்து லால்குடிக்கு காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது, நெ.1 டோல்கேட் அடுத்து அகிலாண்டபுரம் அருகே வாகனம் சென்றுகொண்டிருந்தபோது 7 பேர் கொண்ட கும்பல் திலீபன் ஓட்டிச்சென்ற கார் மீது நாட்டு வெடிகுண்டுகளை வீசி கொலை செய்ய முயன்றுள்ளனர். இதனைச் சுதாரித்துக்கொண்ட திலீபன், காரை நிறுத்தாமல் காருடன் சமயபுரம் காவல் நிலையத்திற்குச் சென்று தஞ்சமடைந்தார். இந்த சம்பவத்தால் கார் கண்ணாடி உடைந்தது. திலீப் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இதுபற்றி தகவல் அறிந்த திருச்சி மாவட்ட காவல் சூப்பிரண்டு சுஜித்குமார், லால்குடி துணை காவல் சூப்பிரண்டு சீதாராமன், சமயபுரம் காவல் ஆய்வாளர் பொன்ராஜ் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர். 


முத்தரையர் முன்னேற்ற சங்க நிர்வாகி கார் மீது வெடிகுண்டு வீச்சு - திருச்சியில் பரபரப்பு..!

இதுகுறித்து திலீப் கொடுத்த புகாரின்பேரில் சமயபுரம் காவல் இன்ஸ்பெக்டர் பொன்ராஜ், சப்- இன்ஸ்பெக்டர் வாசுதேவன் மற்றும் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். வெடிகுண்டு வீசப்பட்ட சம்பவத்தில் தொடர்புடையவர்களை காவல்துறையினர் தீவிரமாக விசாரனை நடத்தினர். மேலும் இந்த சம்பவம் நடந்த பகுதியில் உள்ள அமைக்கபட்டுள்ள சிசிடிவி கேமரா காட்சிகள் மற்றும் சந்தேகத்தின் அடிப்படையில் பலரிடம் தீவிரமாக விசாரனையை மேற்கொண்டனர்.  இந்த சம்பவத்தில் ஈடுபட்டதாக அகிலாண்டபுரம் மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்த பெருமாள் மகன் கோபால கிருஷ்ணன் (28), மாமுண்டி மகன் சுரேஷ் என்ற தாயுமானவன் (21), செந்தில்குமார் (42), ஸ்ரீரங்கம் கீழவாசல் ரெட்டியார் தெருவைச் சேர்ந்த சிதம்பரம் மகன் நந்தகுமார் (25), வினோத் என்ற ஹரிஹரன் (25) உள்ளிட்ட 7 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் அவர்களிடம் இருந்து வெடிக்காத நாட்டு வெடிகுண்டு மற்றும் அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களைப் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சம்பவ இடத்திற்குத் திருச்சி மாவட்ட எஸ்.பி சுஜித்குமார் நேரில் வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினார். இந்த சம்பவம் முன் விரோதம் காரணமாக  தாக்குதல் நடந்துள்ளதாகக் கூறப்படுகிறது என காவல்துறையினர் தகவல் தெரிவித்தனர்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

திருச்சியில் மீண்டும் வேகமெடுக்கும் சாலைப் பணிகள்... தார் விலை உயர்வு பிரச்சனைக்கு தீர்வு 
திருச்சியில் மீண்டும் வேகமெடுக்கும் சாலைப் பணிகள்... தார் விலை உயர்வு பிரச்சனைக்கு தீர்வு 
சாலையா? பிளெக்ஸ் காடா?... திருச்சியில் அதிகரிக்கும் விபத்து அபாயம்
சாலையா? பிளெக்ஸ் காடா?... திருச்சியில் அதிகரிக்கும் விபத்து அபாயம்
திருச்சி பெண்களே ரெடியா? ரூ.5,000 பரிசுடன் விழிப்புணர்வு மாரத்தான்! என்னைக்கு தெரியுங்களா?
திருச்சி பெண்களே ரெடியா? ரூ.5,000 பரிசுடன் விழிப்புணர்வு மாரத்தான்! என்னைக்கு தெரியுங்களா?
திருச்சியில்ஷாக் கொடுக்கும் கோழி இறைச்சி விலை... ஒரே வாரத்தில் ரூ.30 உயர்வு: அசைவ பிரியர்கள் கவலை
திருச்சியில்ஷாக் கொடுக்கும் கோழி இறைச்சி விலை... ஒரே வாரத்தில் ரூ.30 உயர்வு: அசைவ பிரியர்கள் கவலை

வீடியோ

Virudhunagar DMK : திமுக கொடியுடன் வந்த கார்.. சிறுமியை கொல்ல முயற்சி! நெஞ்சை பதறவைக்கும் வீடியோ!
Jolarpettai : ”அவன் பொம்பள பொறுக்கி” காலில் விழுந்து கதறிய பெற்றோர்! உதறிவிட்டு காதலனுடன் சென்ற மகள்
Kanchipuram Viral Video : ஆழி சூழ்ந்த உலகிலே..தம்பிக்கு தாயான அக்கா!வைரல் வீடியோ |
Minister Keerthana:
TVK MLA Saravanan : ”விலை போக மாட்டேன்!”ஆடியோ ஆதாரத்துடன் புகாரளித்த த.வெ.க எம்.எல்.ஏ சரவணன்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஆதவ் அர்ஜூனாவை விட மாட்டோம்.! சிபிஐயிடம் பட்டியலிட்டு புகார் கொடுத்த திமுக- என்ன சொல்லியிருக்கு தெரியுமா.?
ஆதவ் அர்ஜூனாவை விட மாட்டோம்.! சிபிஐயிடம் பட்டியலிட்டு புகார் கொடுத்த திமுக- என்ன சொல்லியிருக்கு தெரியுமா.?
EPS ADMK : ஆடு திருடி சிறை சென்றவர்களையும் அரசு வழக்கறிஞர்களாக்கிய தவெக அரசு.! வெளுத்து வாங்கும் இபிஎஸ்
ஆடு திருடி சிறை சென்றவர்களையும் அரசு வழக்கறிஞர்களாக்கிய தவெக அரசு.! வெளுத்து வாங்கும் இபிஎஸ்
Online Property Registration : பத்திர பதிவிற்கு நேரில் வர தேவையில்லை.! வீட்டில் இருந்து பதிவு செய்யலாம்- புதிய வழிமுறை இதோ..
பத்திர பதிவிற்கு நேரில் வர தேவையில்லை.! வீட்டில் இருந்து பதிவு செய்யலாம்- புதிய வழிமுறை இதோ..
TNPSC Notification: வாவ்… ஒருங்கிணைந்த தொழில்நுட்ப தேர்வு; 839 காலி இடங்கள்- டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
TNPSC Notification: வாவ்… ஒருங்கிணைந்த தொழில்நுட்ப தேர்வு; 839 காலி இடங்கள்- டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
TASMAC SHOP : மதுப்பிரியர்களுக்கு குஷியோ குஷி.! தலைகீழாக மாறப்போகுது டாஸ்மாக் கடை- கலக்கும் தமிழக அரசு
மதுப்பிரியர்களுக்கு குஷியோ குஷி.! தலைகீழாக மாறப்போகுது டாஸ்மாக் கடை- கலக்கும் தமிழக அரசு
Teacher Eligibility Test : டஃப் ஆக இருந்த ஆசிரியர் தகுதி தேர்வு.! கூடுதல் மதிப்பெண் வழங்கப்படுமா.? TRB முக்கிய அறிவிப்பு
டஃப் ஆக இருந்த ஆசிரியர் தகுதி தேர்வு.! கூடுதல் மதிப்பெண் வழங்கப்படுமா.? TRB முக்கிய அறிவிப்பு
TASMAC SALARY HIKE : டாஸ்மாக் ஊழியர்களுக்கு குஷி.! அதிரடியாக உயர்ந்த சம்பளம்.! இத்தனை சதவிகிதமா.? அசத்திய சிஎம் விஜய்
டாஸ்மாக் ஊழியர்களுக்கு குஷி.! அதிரடியாக உயர்ந்த சம்பளம்.! இத்தனை சதவிகிதமா.? அசத்திய சிஎம் விஜய்
Holiday Special Bus : 2 நாள் விடுமுறை... டூர் செல்ல திட்டமா.? காத்திருந்த மக்களுக்கு குட் நியூஸ் சென்ன போக்குவரத்து கழகம்
2 நாள் விடுமுறை... டூர் செல்ல திட்டமா.? காத்திருந்த மக்களுக்கு குட் நியூஸ் சென்ன போக்குவரத்து கழகம்
Embed widget