மேலும் அறிய

முத்தரையர் முன்னேற்ற சங்க நிர்வாகி கார் மீது வெடிகுண்டு வீச்சு - திருச்சியில் பரபரப்பு..!

கொள்ளிடம் நம்பர் 1 டோல்கேட் அருகே முத்தரையர் முன்னேற்ற சங்க நிர்வாகியின் கார் மீது நாட்டு வெடிகுண்டு வீசப்பட்டது. இது தொடர்பாக 7 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.

திருச்சி புத்தூர் நால்ரோட்டைச் சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மகன் திலீப் (வயது 34). இவர் தமிழ்நாடு முத்தரையர் முன்னேற்ற சங்க திருச்சி மாவட்ட இளைஞரணி அமைப்பாளராக உள்ளார். இவருக்கும் வீர முத்தரையர் முன்னேற்ற சங்கத்தை சேர்ந்த சிலருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்ததாக தெரிகிறது. இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு திலீபன் திருச்சியில் இருந்து லால்குடிக்கு காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது, நெ.1 டோல்கேட் அடுத்து அகிலாண்டபுரம் அருகே வாகனம் சென்றுகொண்டிருந்தபோது 7 பேர் கொண்ட கும்பல் திலீபன் ஓட்டிச்சென்ற கார் மீது நாட்டு வெடிகுண்டுகளை வீசி கொலை செய்ய முயன்றுள்ளனர். இதனைச் சுதாரித்துக்கொண்ட திலீபன், காரை நிறுத்தாமல் காருடன் சமயபுரம் காவல் நிலையத்திற்குச் சென்று தஞ்சமடைந்தார். இந்த சம்பவத்தால் கார் கண்ணாடி உடைந்தது. திலீப் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இதுபற்றி தகவல் அறிந்த திருச்சி மாவட்ட காவல் சூப்பிரண்டு சுஜித்குமார், லால்குடி துணை காவல் சூப்பிரண்டு சீதாராமன், சமயபுரம் காவல் ஆய்வாளர் பொன்ராஜ் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர். 


முத்தரையர் முன்னேற்ற சங்க நிர்வாகி கார் மீது வெடிகுண்டு வீச்சு - திருச்சியில் பரபரப்பு..!

இதுகுறித்து திலீப் கொடுத்த புகாரின்பேரில் சமயபுரம் காவல் இன்ஸ்பெக்டர் பொன்ராஜ், சப்- இன்ஸ்பெக்டர் வாசுதேவன் மற்றும் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். வெடிகுண்டு வீசப்பட்ட சம்பவத்தில் தொடர்புடையவர்களை காவல்துறையினர் தீவிரமாக விசாரனை நடத்தினர். மேலும் இந்த சம்பவம் நடந்த பகுதியில் உள்ள அமைக்கபட்டுள்ள சிசிடிவி கேமரா காட்சிகள் மற்றும் சந்தேகத்தின் அடிப்படையில் பலரிடம் தீவிரமாக விசாரனையை மேற்கொண்டனர்.  இந்த சம்பவத்தில் ஈடுபட்டதாக அகிலாண்டபுரம் மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்த பெருமாள் மகன் கோபால கிருஷ்ணன் (28), மாமுண்டி மகன் சுரேஷ் என்ற தாயுமானவன் (21), செந்தில்குமார் (42), ஸ்ரீரங்கம் கீழவாசல் ரெட்டியார் தெருவைச் சேர்ந்த சிதம்பரம் மகன் நந்தகுமார் (25), வினோத் என்ற ஹரிஹரன் (25) உள்ளிட்ட 7 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் அவர்களிடம் இருந்து வெடிக்காத நாட்டு வெடிகுண்டு மற்றும் அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களைப் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சம்பவ இடத்திற்குத் திருச்சி மாவட்ட எஸ்.பி சுஜித்குமார் நேரில் வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினார். இந்த சம்பவம் முன் விரோதம் காரணமாக  தாக்குதல் நடந்துள்ளதாகக் கூறப்படுகிறது என காவல்துறையினர் தகவல் தெரிவித்தனர்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

ரயில் பயணிகளே உஷார்! திருச்சி கோட்டத்தில் அதிரடி ரயில் ரத்து மற்றும் வழிமாற்றம்!
ரயில் பயணிகளே உஷார்! திருச்சி கோட்டத்தில் அதிரடி ரயில் ரத்து மற்றும் வழிமாற்றம்!
திருச்சி கிழக்கில் விஜய்யின் மாஸ்டர் ஸ்ட்ரோக்?… ஜான் ஆரோக்கியசாமிக்கு சீட்?
திருச்சி கிழக்கில் விஜய்யின் மாஸ்டர் ஸ்ட்ரோக்?… ஜான் ஆரோக்கியசாமிக்கு சீட்?
சிலிண்டர் விநியோகத்தில் முறைகேடு? திருச்சியில் பாரத் கேஸ் ஏஜென்சி முற்றுகை... வாடிக்கையாளர்கள் கடும் குற்றச்சாட்டு!
சிலிண்டர் விநியோகத்தில் முறைகேடு? திருச்சியில் பாரத் கேஸ் ஏஜென்சி முற்றுகை... வாடிக்கையாளர்கள் கடும் குற்றச்சாட்டு!
துறையூர் – முசிறி நெடுஞ்சாலை 28 கி.மீ. சாலை... தினமும் விபத்து அச்சம்! நடவடிக்கை எப்போது?
துறையூர் – முசிறி நெடுஞ்சாலை 28 கி.மீ. சாலை... தினமும் விபத்து அச்சம்! நடவடிக்கை எப்போது?

வீடியோ

TVK on Senthil Balaji : ”MR. மெகா க்ளீன்! ஓடி ஒளிஞ்சா எப்படி?” செந்தில் பாலாஜி மீது TVK அட்டாக்
Tamilnadu Byelection : ”இடைத்தேர்தல் நடத்த கூடாது” செக் வைத்த நீதிமன்றம்! 5 தொகுதிகள் நிலைமை என்ன?
Senthil balaji on Vijay : ”ஓடு... ஓடு... ஓடு! காப்பாத்துனது யாரு விஜய்” கோபமான செந்தில் பாலாஜி
DMK vs BJP : “யாரு பெருசுன்னு அடிச்சுக்காட்டு
Jaipur schoolgirl death CCTV | பள்ளியில் வைத்து தற்கொலை! CLASSROOM-ல் நடந்தது என்ன? வெளியான பகீர் CCTV காட்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
எ.வ.வேலு சிங்கப்பூருக்கு ஓடிப்போய்ட்டாரா.? உண்மையில் நடந்தது என்ன.? போட்டுடைத்த ஆ.ராசா
எ.வ.வேலு சிங்கப்பூருக்கு ஓடிப்போய்ட்டாரா.? உண்மையில் நடந்தது என்ன.? போட்டுடைத்த ஆ.ராசா
DMK Minister: அடுத்த திமுக முன்னாள் அமைச்சரும் சிக்கினார்..! நில அபரிப்பு புகார் - முதல்வருக்கே வந்த லெட்டர்
அடுத்த திமுக முன்னாள் அமைச்சரும் சிக்கினார்..! நில அபரிப்பு புகார் - முதல்வருக்கே வந்த லெட்டர்
S Janaki Funeral: பாடகி எஸ். ஜானகியின் இறுதி சடங்குகள் - எங்கு? எப்போது? அரசு மரியாதையுடன் உடல் அடக்கம் என அறிவிப்பு
பாடகி எஸ். ஜானகியின் இறுதி சடங்குகள் - எங்கு? எப்போது? அரசு மரியாதையுடன் உடல் அடக்கம் என அறிவிப்பு
MBBS Seats: 5 ஆண்டுகளில் முதல்முறை..! திருவள்ளூருக்கு ஜாக்பாட் அடிக்குமா? கூடுதல் மருத்துவ இடங்கள் கிடைக்குமா?
5 ஆண்டுகளில் முதல்முறை..! திருவள்ளூருக்கு ஜாக்பாட் அடிக்குமா? கூடுதல் மருத்துவ இடங்கள் கிடைக்குமா?
TN Weather Update: சென்னை உட்பட எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழை, வெயில் பொளக்கும்? - தமிழக வானிலை அறிக்கை
சென்னை உட்பட எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழை, வெயில் பொளக்கும்? - தமிழக வானிலை அறிக்கை
TVK Vijay: அடக்கி வாசித்தால் திமுகவுக்கு நல்லது.. எச்சரிக்கை விடுத்த தவெக ஐடி விங்.. நடந்தது என்ன?
TVK Vijay: அடக்கி வாசித்தால் திமுகவுக்கு நல்லது.. எச்சரிக்கை விடுத்த தவெக ஐடி விங்.. நடந்தது என்ன?
Tata Tiago: பட்ஜெட்டில் பாதுகாப்பான EV கார் - 285KM ரேஞ்ச், 4 ஸ்டார் ரேட்டிங் - ரூ.4500 போதும், EMI விவரங்கள்
பட்ஜெட்டில் பாதுகாப்பான EV கார் - 285KM ரேஞ்ச், 4 ஸ்டார் ரேட்டிங் - ரூ.4500 போதும், EMI விவரங்கள்
TNEB : மின் இணைப்பை துண்டித்த பிறகும் மின்சாரத்தை பயன்படுத்தினால் இனி அவ்வளவு தான்- எச்சரிக்கும் மின் வாரியம்
மின் இணைப்பை துண்டித்த பிறகும் மின்சாரத்தை பயன்படுத்தினால் இனி அவ்வளவு தான்- எச்சரிக்கும் மின் வாரியம்
Embed widget