மேலும் அறிய

திருச்சி அருகே சோலார் பேனல் தருவதாக ரூ.9.68 கோடி மோசடி - ஹைதராபாத்தை சேர்ந்த பெண் உள்பட 3 பேர் கைது

திருச்சி மாவட்டத்தில் சோலார் பேனல் தருவதாக ரூ.9.68 கோடி மோசடியில் ஈடுபட்ட ஹைதராபாத்தை சேர்ந்த பெண் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

சென்னையில் உள்ள பிரபல தனியார் நிறுவனம் திருச்சி மாவட்டம் முசிறி அருகே மூவனூரில் சோலார் பேனல் அமைக்கும் பணியில் ஈடுபட்டு வந்தது. இந்த பணிக்கு தேவையான உபகரணங்களை வாங்குவதற்காக தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் உள்ள ஒரு நிறுவனத்தை சென்னை தனியார் நிறுவனம் கடந்த ஆண்டு தொடர்பு கொண்டது. ஐதராபாத் நிறுவனத்தை சேர்ந்த ஷீரிஷாபொலு, இவரது கணவர் பவன்குமார், சோலார் பேனல் விற்பனை பிரதிநிதி செல்வகணேஷ் ஆகியோர் சென்னை மணலியில் உள்ள கிடங்கில் சோலார் பேனல்களை சேமித்து வைத்துள்ளோம். ஒரு சோலார் பேனலின் விலை ரூ.15 ஆயிரத்து 450 என்று தெரிவித்தனர். இதைதொடர்ந்து சென்னை நிறுவனத்தினர் 5,580 சோலார் பேனல்களை வாங்குவதற்காக ஷீரிஷாபொலுவின் வங்கி கணக்குக்கு ரூ.9 கோடியே 68 லட்சத்து 56 ஆயிரத்து 330-ஐ கடந்த 2022-ம் ஆண்டு ஜூலை மாதம் அனுப்பினர். ஆனால் ஐதராபாத் நிறுவனம் கூறியவாறு சோலார் பேனல்களை வழங்கவில்லை. இதுகுறித்து கேட்டபோது கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து திருச்சி மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் கொடுக்கப்பட்டது. அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். மேலும் தனிப்படை போலீசார் ஐதராபாத்துக்கு சென்று ஷீரிஷாபொலு, பவன்குமார், செல்வகணேஷ் ஆகிய 3 பேரையும் நேற்று  கைது செய்தனர். பின்னர் அவர்களை விசாரணைக்காக திருச்சி அழைத்து வந்தனர்.


திருச்சி அருகே சோலார் பேனல் தருவதாக ரூ.9.68 கோடி மோசடி - ஹைதராபாத்தை சேர்ந்த பெண் உள்பட 3 பேர் கைது
 
தமிழ்நாட்டில் கடந்த சில மாதங்களாக மோசடி வழக்குகள் தொடர்ந்து அதிகரித்து வருவதாக காவல்துறை தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து பொதுமக்களுக்கு பல்வேறு கட்டங்களாக காவல்துறை தரப்பில் விழிப்புணர்வும், அறிவுரைகளும் வழங்கினாலும் தொடர்ந்து மக்கள் மோசடிகளில் சிக்கி ஏமாந்து போகிறார்கள் என தெரிவித்தனர். குறிப்பாக நிறுவனத்தில் முதலீடு செய்தால் பல மடங்கு லாபம் தருவதாகவும், பணத்தை இரட்டிப்பாக்க வழிவகை செய்வதாகவும், மிகக் குறைந்த விலையில் தரமான பொருட்களை வாங்கித் தருவதாகவும், இதனால் அதிக அளவில் லாபம் சம்பாதிக்கலாம், என ஆசை வார்த்தைகளை கூறி அப்பாவி பொதுமக்களை தொடர்ந்து ஏமாற்றும் கும்பல் அதிகரித்து வருகிறது. இவற்றை கட்டுப்படுத்த காவல்துறை தரப்பில் தொடர்ந்து கண்காணித்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இருந்தாலும் காவல்துறை எடுக்கும் நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் முழுமையாக ஒத்துழைப்பு கொடுத்தால் மட்டுமே இது போன்ற மோசடி வழக்குகளில் முழுமையாக கட்டுப்படுத்த முடியும் என அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர். 
 
ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Rahul Gandhi: அனுராக் தாக்கூருக்கு ஒரு நியாயம்? எனக்கொரு நியாயமா? - மக்களவை சபாநாயகருக்கு ராகுல் காந்தி கடிதம்
Rahul Gandhi: அனுராக் தாக்கூருக்கு ஒரு நியாயம்? எனக்கொரு நியாயமா? - மக்களவை சபாநாயகருக்கு ராகுல் காந்தி கடிதம்
Breaking News LIVE:
Breaking News LIVE: "நீக்கப்பட்ட உரையை அவைக் குறிப்பில் சேர்த்திடுக” - சபாநாயகருக்கு ராகுல் கடிதம்
TNGASA Admission 2024: மிஸ் பண்ணிடாதீங்க; அரசு கலை கல்லூரிகளில் சேர மீண்டும் விண்ணப்பிக்கலாம்- விவரம்
TNGASA Admission 2024: மிஸ் பண்ணிடாதீங்க; அரசு கலை கல்லூரிகளில் சேர மீண்டும் விண்ணப்பிக்கலாம்- விவரம்
PM Modi: ”ராகுல் காந்தி மாதிரி நடந்துக்காதிங்க” - பாஜக கூட்டணி எம்.பிக்களுக்கு பிரதமர் மோடி அறிவுரை
PM Modi: ”ராகுல் காந்தி மாதிரி நடந்துக்காதிங்க” - பாஜக கூட்டணி எம்.பிக்களுக்கு பிரதமர் மோடி அறிவுரை
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Villupuram Kallasarayam | மீண்டும் கள்ளச்சாரயம்..பட்டப்பகலில் ஆசாமி அலப்பறை விழுப்புரத்தில் பரபரப்புBJP Cadre cheating | ”பணத்தை ஆட்டைய போட்டபாஜக நிர்வாகி!” கதறும் பெண்!A Raja Speaker chair : ”என்னைய பார்த்து பேசுங்க” சபாநாயகர் CHAIR-ல் ஆ.ராசா! அவையை வழிநடத்திய MPDMK Vs PMK | மக்களை அடைத்து வைத்ததா திமுக?போராட்டத்தில் குதித்த பாமக! விக்கிரவாண்டியில் பரபர!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Rahul Gandhi: அனுராக் தாக்கூருக்கு ஒரு நியாயம்? எனக்கொரு நியாயமா? - மக்களவை சபாநாயகருக்கு ராகுல் காந்தி கடிதம்
Rahul Gandhi: அனுராக் தாக்கூருக்கு ஒரு நியாயம்? எனக்கொரு நியாயமா? - மக்களவை சபாநாயகருக்கு ராகுல் காந்தி கடிதம்
Breaking News LIVE:
Breaking News LIVE: "நீக்கப்பட்ட உரையை அவைக் குறிப்பில் சேர்த்திடுக” - சபாநாயகருக்கு ராகுல் கடிதம்
TNGASA Admission 2024: மிஸ் பண்ணிடாதீங்க; அரசு கலை கல்லூரிகளில் சேர மீண்டும் விண்ணப்பிக்கலாம்- விவரம்
TNGASA Admission 2024: மிஸ் பண்ணிடாதீங்க; அரசு கலை கல்லூரிகளில் சேர மீண்டும் விண்ணப்பிக்கலாம்- விவரம்
PM Modi: ”ராகுல் காந்தி மாதிரி நடந்துக்காதிங்க” - பாஜக கூட்டணி எம்.பிக்களுக்கு பிரதமர் மோடி அறிவுரை
PM Modi: ”ராகுல் காந்தி மாதிரி நடந்துக்காதிங்க” - பாஜக கூட்டணி எம்.பிக்களுக்கு பிரதமர் மோடி அறிவுரை
ITR Filing: ஐடிஆர் தாக்கல் : அவகாசமே முடிந்தாலும் அபராதம் கிடையாது - யாருக்கெல்லாம் இந்த சலுகை தெரியுமா?
ஐடிஆர் தாக்கல் : அவகாசமே முடிந்தாலும் அபராதம் கிடையாது - யாருக்கெல்லாம் இந்த சலுகை தெரியுமா?
Pani Puri: பானிபூரியில் புற்றுநோய் அபாயமா? வெளியான அதிர்ச்சி தகவல்..
Pani Puri: பானிபூரியில் புற்றுநோய் அபாயமா? வெளியான அதிர்ச்சி தகவல்..
Side Effects OF AC: ஆத்தாடி..! ஏசி பயன்படுத்தினால் இவ்வளவு பிரச்னைகளா? உஷாரா இருங்க மக்களே..!
ஆத்தாடி..! ஏசி பயன்படுத்தினால் இவ்வளவு பிரச்னைகளா? உஷாரா இருங்க மக்களே..!
PM Modi: வெளுத்து வாங்கிய ராகுல் காந்தி - மக்களவையில் பிரதமர் மோடி இன்று பதிலடி கொடுப்பாரா?
வெளுத்து வாங்கிய ராகுல் காந்தி - மக்களவையில் பிரதமர் மோடி இன்று பதிலடி கொடுப்பாரா?
Embed widget