மேலும் அறிய

திருச்சி அருகே சோலார் பேனல் தருவதாக ரூ.9.68 கோடி மோசடி - ஹைதராபாத்தை சேர்ந்த பெண் உள்பட 3 பேர் கைது

திருச்சி மாவட்டத்தில் சோலார் பேனல் தருவதாக ரூ.9.68 கோடி மோசடியில் ஈடுபட்ட ஹைதராபாத்தை சேர்ந்த பெண் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

சென்னையில் உள்ள பிரபல தனியார் நிறுவனம் திருச்சி மாவட்டம் முசிறி அருகே மூவனூரில் சோலார் பேனல் அமைக்கும் பணியில் ஈடுபட்டு வந்தது. இந்த பணிக்கு தேவையான உபகரணங்களை வாங்குவதற்காக தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் உள்ள ஒரு நிறுவனத்தை சென்னை தனியார் நிறுவனம் கடந்த ஆண்டு தொடர்பு கொண்டது. ஐதராபாத் நிறுவனத்தை சேர்ந்த ஷீரிஷாபொலு, இவரது கணவர் பவன்குமார், சோலார் பேனல் விற்பனை பிரதிநிதி செல்வகணேஷ் ஆகியோர் சென்னை மணலியில் உள்ள கிடங்கில் சோலார் பேனல்களை சேமித்து வைத்துள்ளோம். ஒரு சோலார் பேனலின் விலை ரூ.15 ஆயிரத்து 450 என்று தெரிவித்தனர். இதைதொடர்ந்து சென்னை நிறுவனத்தினர் 5,580 சோலார் பேனல்களை வாங்குவதற்காக ஷீரிஷாபொலுவின் வங்கி கணக்குக்கு ரூ.9 கோடியே 68 லட்சத்து 56 ஆயிரத்து 330-ஐ கடந்த 2022-ம் ஆண்டு ஜூலை மாதம் அனுப்பினர். ஆனால் ஐதராபாத் நிறுவனம் கூறியவாறு சோலார் பேனல்களை வழங்கவில்லை. இதுகுறித்து கேட்டபோது கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து திருச்சி மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் கொடுக்கப்பட்டது. அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். மேலும் தனிப்படை போலீசார் ஐதராபாத்துக்கு சென்று ஷீரிஷாபொலு, பவன்குமார், செல்வகணேஷ் ஆகிய 3 பேரையும் நேற்று  கைது செய்தனர். பின்னர் அவர்களை விசாரணைக்காக திருச்சி அழைத்து வந்தனர்.


திருச்சி அருகே சோலார் பேனல் தருவதாக ரூ.9.68 கோடி மோசடி - ஹைதராபாத்தை சேர்ந்த பெண் உள்பட 3 பேர் கைது
 
தமிழ்நாட்டில் கடந்த சில மாதங்களாக மோசடி வழக்குகள் தொடர்ந்து அதிகரித்து வருவதாக காவல்துறை தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து பொதுமக்களுக்கு பல்வேறு கட்டங்களாக காவல்துறை தரப்பில் விழிப்புணர்வும், அறிவுரைகளும் வழங்கினாலும் தொடர்ந்து மக்கள் மோசடிகளில் சிக்கி ஏமாந்து போகிறார்கள் என தெரிவித்தனர். குறிப்பாக நிறுவனத்தில் முதலீடு செய்தால் பல மடங்கு லாபம் தருவதாகவும், பணத்தை இரட்டிப்பாக்க வழிவகை செய்வதாகவும், மிகக் குறைந்த விலையில் தரமான பொருட்களை வாங்கித் தருவதாகவும், இதனால் அதிக அளவில் லாபம் சம்பாதிக்கலாம், என ஆசை வார்த்தைகளை கூறி அப்பாவி பொதுமக்களை தொடர்ந்து ஏமாற்றும் கும்பல் அதிகரித்து வருகிறது. இவற்றை கட்டுப்படுத்த காவல்துறை தரப்பில் தொடர்ந்து கண்காணித்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இருந்தாலும் காவல்துறை எடுக்கும் நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் முழுமையாக ஒத்துழைப்பு கொடுத்தால் மட்டுமே இது போன்ற மோசடி வழக்குகளில் முழுமையாக கட்டுப்படுத்த முடியும் என அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர். 
 
ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

ADMK EPS: ”ஷூட்டிங் நடத்தினால் மட்டும் போதாது.. களத்திற்கு செல்ல வேண்டும்!” ரவுண்டு கட்டிய இபிஎஸ்
ADMK EPS: ”ஷூட்டிங் நடத்தினால் மட்டும் போதாது.. களத்திற்கு செல்ல வேண்டும்!” ரவுண்டு கட்டிய இபிஎஸ்
செம்பரம்பாக்கம் ஏரிக்கு அதிகரிக்கும் நீர்வரத்து! டிட்வா புயல் எச்சரிக்கை: சென்னைக்கு ரெட் அலர்ட்!
செம்பரம்பாக்கம் ஏரிக்கு அதிகரிக்கும் நீர்வரத்து! டிட்வா புயல் எச்சரிக்கை: சென்னைக்கு ரெட் அலர்ட்!
TN Rain School Holiday:  மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்! கனமழை எச்சரிக்கை! நாளை 4 மாவட்டங்களில்  பள்ளி கல்லுரிகளுக்கு விடுமுறை..
TN Rain School Holiday: மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்! கனமழை எச்சரிக்கை! நாளை 4 மாவட்டங்களில் பள்ளி கல்லுரிகளுக்கு விடுமுறை..
Red Alert: சென்னைக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை - 20 செ.மீ., மேல் அதிகனமழை பெய்யும் அபாயம் - மக்களே உஷார்
சென்னைக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை - 20 செ.மீ., மேல் அதிகனமழை பெய்யும் அபாயம் - மக்களே உஷார்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

TVK - காங்கிரஸ் கூட்டணி?“ செங்கோட்டையனை சந்தித்தேன்..” திருநாவுக்கரசர் பளீச் | Sengottaiyan | Thirunavukkarasar on Sengottaiyan |
சமந்தாவை கரம் பிடித்த ராஜ் கோவையில் இன்று டும் டும் முதல் மனைவி போட்ட ட்வீட் | Raj Nidimoru Samantha Marriage
நாகூர் தர்கா கந்தூரி விழா ஆட்டோவில்  வந்திறங்கிய AR ரகுமான்  AR Rahman in Nagapattinam Nagore Dargah
”50 வருஷம் போனதே தெரியல அடுத்த ஜென்மத்தில் நான்...” உணர்ச்சிவசப்பட்ட ரஜினி | Rajini Goa Speech
புரட்டிப்போட்ட டிட்வா புயல் மரத்தில் மாட்டிக்கொண்ட நபர் மூழ்கிய இலங்கை | Sri Lanka Ditwah Cyclone

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ADMK EPS: ”ஷூட்டிங் நடத்தினால் மட்டும் போதாது.. களத்திற்கு செல்ல வேண்டும்!” ரவுண்டு கட்டிய இபிஎஸ்
ADMK EPS: ”ஷூட்டிங் நடத்தினால் மட்டும் போதாது.. களத்திற்கு செல்ல வேண்டும்!” ரவுண்டு கட்டிய இபிஎஸ்
செம்பரம்பாக்கம் ஏரிக்கு அதிகரிக்கும் நீர்வரத்து! டிட்வா புயல் எச்சரிக்கை: சென்னைக்கு ரெட் அலர்ட்!
செம்பரம்பாக்கம் ஏரிக்கு அதிகரிக்கும் நீர்வரத்து! டிட்வா புயல் எச்சரிக்கை: சென்னைக்கு ரெட் அலர்ட்!
TN Rain School Holiday:  மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்! கனமழை எச்சரிக்கை! நாளை 4 மாவட்டங்களில்  பள்ளி கல்லுரிகளுக்கு விடுமுறை..
TN Rain School Holiday: மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்! கனமழை எச்சரிக்கை! நாளை 4 மாவட்டங்களில் பள்ளி கல்லுரிகளுக்கு விடுமுறை..
Red Alert: சென்னைக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை - 20 செ.மீ., மேல் அதிகனமழை பெய்யும் அபாயம் - மக்களே உஷார்
சென்னைக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை - 20 செ.மீ., மேல் அதிகனமழை பெய்யும் அபாயம் - மக்களே உஷார்
Kongu Region : ‘கொங்கு மண்டலம் யாருக்கு’ மோதும் முக்கிய தலைகள்..!
‘கொங்கு மண்டலம் யாருக்கு’ மோதும் முக்கிய தலைகள்..!
Chennai Heavy Rain: சென்னையில் 8 மணி நேரமாக தொடரும் மழை... தயார் நிலையில் 103 படகுகள்- களத்தில் 22ஆயிரம் ஊழியர்கள்
சென்னையில் 8 மணி நேரமாக தொடரும் மழை... தயார் நிலையில் 103 படகுகள்- களத்தில் 22ஆயிரம் ஊழியர்கள்
MK STALIN: மழையால் பாதித்த பயிர்களுக்கு நிவாரணம்... விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்
மழையால் பாதித்த பயிர்களுக்கு நிவாரணம்... விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்
Chennai Heavy Rain: 2 நாள் சென்னையை வைத்து செய்யப்போகுது மிக கனமழை.! ஆரஞ்ச் அலர்ட் - வானிலை மையம் திடீர் அறிவிப்பு
2 நாள் சென்னையை வைத்து செய்யப்போகுது கனமழை.! ஆரஞ்ச் அலர்ட் - வானிலை மையம் திடீர் அறிவிப்பு
Embed widget