மேலும் அறிய

திருநங்கைக்கு பாலியல் தொல்லை விவகாரம் : திருச்சி சிறைக் காவலர் சிறையில் அடைப்பு

திருச்சி மத்திய சிறையில் திருநங்கைக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரம், சிறைக்காவலரை போலீசார் கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைத்தனா்.

திருநங்கைக்கு சிறையில் பாலியல் தொல்லை 

திருச்சி மத்திய சிறையில் கொலை, கொள்ளை, திருட்டு, வழிப்பறி, பாலியல் புகார் சொத்து குவிப்பு வழக்கு உள்ளிட்ட பல்வேறு குற்றச் செயல்களில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் அடைக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக திருச்சி மத்திய சிறையில் 2,517 பேரை அடைக்கும் வசதி உள்ளது. தற்போது இங்கு 836 தண்டனை கைதிகள் உள்பட சுமார் 1,600 கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர்.

இதில் திருச்சியை சேர்ந்த 32 வயது திருநங்கை ஒருவரும் அடைக்கப்பட்டுள்ளார். திருச்சி அரியமங்கலம் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நடந்த திருட்டு வழக்கில் கடந்த சில மாதங்களுக்கு முன் அந்த திருநங்கை கைது செய்யப்பட்டு இருந்தார். திருச்சி மத்திய சிறையில் சி.பி.-1 என்ற தனி அறையில் தங்க வைக்கப்பட்டிருந்தார்.

இந்தநிலையில் கடந்த 4 மாதங்களுக்கு முன் சென்னையில் இருந்து மாரீஸ்வரன் என்ற சிறைக்காவலர் மாற்றாலாகி வந்தார். அவர் தனி அறையில் இருந்த திருநங்கைக்கு அடிக்கடி பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட திருநங்கை, திருச்சி மத்திய சிறை சூப்பிரண்டு ஆண்டாள், சிறைத்துறை டி.ஐ.ஜி. ஜெயபாரதி ஆகியோரிடம் புகார் அளித்தார். ஆனால் அவர்கள் சிறைக்காவலர் மாரீஸ்வரன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல், புகாரை கண்டுகொள்ளாமல் இருந்துவிட்டதாக கூறப்படுகிறது.


திருநங்கைக்கு பாலியல் தொல்லை விவகாரம் :  திருச்சி சிறைக் காவலர் சிறையில் அடைப்பு

திருச்சி சிறைக்காவலர் கைது செய்து சிறையில் அடைப்பு.  

இதனால் மனமுடைந்த திருநங்கை திருச்சி மாவட்ட கோர்ட்டுக்கு ஆஜராக வந்த நேரத்தில், கோர்ட்டு வளாகத்தில் உள்ள இலவச சட்டப்பணிகள் ஆணையத்தில் இதுகுறித்து புகார் அளித்தார். இதைத்தொடர்ந்து சுப்புராமன் என்ற வக்கீல் தலைமையில் விசாரணைக்குழு அமைக்கப்பட்டது. அந்த குழு திருச்சி மத்திய சிறைக்கு சென்று விசாரணை நடத்தியது.

இதனை தொடர்ந்து அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளும் ஆய்வு செய்யப்பட்டது. அப்போது திருநங்கையின் புகார் உண்மை என்று தெரியவந்தது. 

இதனை தொடர்ந்து, திருச்சி மத்திய சிறை டிஐஜி ஜெயபாரதி, மற்றும் சிறை கண்காணிப்பாளா் (எஸ்பி) ஆண்டாள், சிறை (தலைமைக்) காவலா் மாரீஸ்வரன் உள்ளிட்டோரை கடந்த ஜூலை 11 ஆம் தேதி காத்திருப்போா் பட்டியலுக்கு மாற்றி, சிறைத்துறை ஏடிஜிபி மகேஷ்வா் தயாள் உத்தரவிட்டாா். தொடா்ந்து ஜூலை 21 ஆம் தேதி காவலா் மாரீஸ்வரன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.

மேலும், இந்த வழக்கு தொடா்பாக கே.கே. நகா் காவல் ஆய்வாளா் கோசலராமன் தலைமையிலான போலீஸாா், சிறைக் காவலா் மாரீஸ்வரனை ஆகஸ்ட் 31-ஆம் தேதி கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனா். அவா் பணியாற்றிய சிறையிலேயே அவரை அடைக்கக் கூடாது என புகாா் எழுந்தது.

இதனை தொடா்ந்து, மாரீஸ்வரனை சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டாா்.

மேலும் இந்த சம்பவம் தொடா்பாக ஏற்கனவே கேகே நகர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தும் முறையான நடவடிக்கை எடுக்கவில்லை என்ற புகாரின் பேரில், கே.கே.நகா் ஆய்வாளா் அம்சவேணி அண்மையில் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Thiruparankundram Deepam Issue: கார்த்திகை தீபம்; பதற்ற பூமியாக மாறிய திருப்பரங்குன்றம்; 144 தடை உத்தரவு - நடந்தது என்ன.?
கார்த்திகை தீபம்; பதற்ற பூமியாக மாறிய திருப்பரங்குன்றம்; 144 தடை உத்தரவு - நடந்தது என்ன.?
TN School Leave: கனமழை; சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் நாளை(04.12.25) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு
கனமழை; சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் நாளை(04.12.25) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு
IND vs SA 2nd ODI: ஷாக்கான இந்திய அணி.. திருப்பி அடித்த தென்னாப்பிரிக்கா.. 2வது ஒருநாள் போட்டியில் அபார வெற்றி!
IND vs SA 2nd ODI: ஷாக்கான இந்திய அணி.. திருப்பி அடித்த தென்னாப்பிரிக்கா.. 2வது ஒருநாள் போட்டியில் அபார வெற்றி!
Tiruvannamalai Karthigai Deepam 2025 LIVE: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் மகா தீபம் ஏற்றப்பட்டது
Tiruvannamalai Karthigai Deepam 2025 LIVE: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் மகா தீபம் ஏற்றப்பட்டது
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

OPS Delhi Visit |20 நிமிட பேச்சுவார்த்தை!DEAL-ஐ முடித்த குருமூர்த்திOPS அமித்ஷா சந்திப்பின் பின்னணி?
OPS Delhi Visit | OPS டெல்லி விசிட்!தனிக்கட்சியா? பாஜகவா?அரசியலில் திடீர் ட்விஸ்ட்
சென்னையில் மழை தாண்டவாம் டிட்வாவின் LATEST UPDATE எப்போது மழை நிற்கும்? | TN Rain Ditwah Cyclone
திண்டுக்கல் வந்த தனுஷ் சூழ்ந்த நூற்றுக்கணக்கான ரசிகர்கள் SPOT-க்கு ஓடோடி வந்த போலீஸ் | Dhanush

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Thiruparankundram Deepam Issue: கார்த்திகை தீபம்; பதற்ற பூமியாக மாறிய திருப்பரங்குன்றம்; 144 தடை உத்தரவு - நடந்தது என்ன.?
கார்த்திகை தீபம்; பதற்ற பூமியாக மாறிய திருப்பரங்குன்றம்; 144 தடை உத்தரவு - நடந்தது என்ன.?
TN School Leave: கனமழை; சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் நாளை(04.12.25) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு
கனமழை; சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் நாளை(04.12.25) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு
IND vs SA 2nd ODI: ஷாக்கான இந்திய அணி.. திருப்பி அடித்த தென்னாப்பிரிக்கா.. 2வது ஒருநாள் போட்டியில் அபார வெற்றி!
IND vs SA 2nd ODI: ஷாக்கான இந்திய அணி.. திருப்பி அடித்த தென்னாப்பிரிக்கா.. 2வது ஒருநாள் போட்டியில் அபார வெற்றி!
Tiruvannamalai Karthigai Deepam 2025 LIVE: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் மகா தீபம் ஏற்றப்பட்டது
Tiruvannamalai Karthigai Deepam 2025 LIVE: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் மகா தீபம் ஏற்றப்பட்டது
Joy Crizildaa Vs Rangaraj: டேய் தகப்பா.! மாதம்பட்டி ரங்கராஜை மாட்டிவிட்ட பச்சிளம் குழந்தை - ஜாய் கிரிசில்டா பதிவ பாருங்க
டேய் தகப்பா.! மாதம்பட்டி ரங்கராஜை மாட்டிவிட்ட பச்சிளம் குழந்தை - ஜாய் கிரிசில்டா பதிவ பாருங்க
IND Vs SA 2nd ODI: கோலி, கெய்க்வாட் அபாரம்; 359 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இந்தியா - எட்டுவார்களா பவுமா பாய்ஸ்.?
கோலி, கெய்க்வாட் அபாரம்; 359 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இந்தியா - எட்டுவார்களா பவுமா பாய்ஸ்.?
Orange Alert: இன்றைக்கும் சென்னையில் செம சம்பவம் இருக்கு... 7 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்- எங்கெல்லாம் தெரியுமா.?
இன்றைக்கும் சென்னையில் செம சம்பவம் இருக்கு... 7 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்- எங்கெல்லாம் தெரியுமா.?
Imran Khan Alive: தெரிந்தது விடை; உயிரோடு இருக்கும் இம்ரான் கான்; துன்புறுத்தப்படுவதாக சிறையில் சந்தித்த சகோதரி பகீர்
தெரிந்தது விடை; உயிரோடு இருக்கும் இம்ரான் கான்; துன்புறுத்தப்படுவதாக சிறையில் சந்தித்த சகோதரி பகீர்
Embed widget