மேலும் அறிய

திருச்சி அகதிகள் முகாமில் வெளிநாட்டினரிடம் மத்திய அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை

திருச்சி மத்திய சிறை வளாகத்தில் அகதிகளுக்கான சிறப்பு முகாமில் வெளிநாட்டினரிடம் மத்திய அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

திருச்சி மத்திய சிறை வளாகத்தில் அகதிகளுக்கான சிறப்பு முகாம் உள்ளது. வருவாய்த்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த முகாமில் போலி பாஸ்போர்ட்டில் இந்தியா வருதல், போதைப்பொருள் கடத்தல், பாஸ்போர்ட் தேதி காலாவதியாகிய பின்பும் நாடு திரும்பாமல் இந்தியாவில் தங்கி இருத்தல் உள்பட பல்வேறு குற்ற சம்பவங்களில் தொடர்புடைய வெளிநாட்டினர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் மீதான வழக்குகளில் ஜாமீன் பெற்றாலும் நாடு திரும்பும்வரை அவர்களை வெளியே தங்க அனுமதிக்காமல் சிறப்பு முகாமில் வைத்துள்ளனர். திருச்சி சிறப்பு முகாமில் தற்போது இலங்கை, வங்காளதேசம், நைஜீரியா, பல்கேரியா, ருவாண்டா, சீனா, இந்தோனேஷியா உள்பட பல நாடுகளை சேர்ந்த 143 பேர் உள்ளனர். இவர்கள் தங்கள் மீதான வழக்குகளை விரைந்து முடித்து முகாமில் இருந்து விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி அவ்வப்போது பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்தநிலையில் திருச்சி அகதிகள் சிறப்பு முகாமில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் 30-க்கும் மேற்பட்டவர்கள் நேற்று முன்தினம் அதிரடியாக புகுந்து சோதனை நடத்தினர். இவர்களின் பாதுகாப்புக்காக 100-க்கும் மேற்பட்ட துணை ராணுவப்படையினரும் குவிக்கப்பட்டு இருந்தனர். நேற்று முன்தினம் அதிகாலை 5 மணி முதல் மாலை 6 மணி வரை சுமார் 13 மணிநேரம் இந்த சோதனை நடைபெற்றது. முகாமில் அடைக்கப்பட்டுள்ள இலங்கை தமிழரான குணசேகரன், பூக்குட்டி கண்ணன், திலீபன், ஸ்டான்லிபெர்னான்டோ கென்னடி, சுரங்காபிரதீப், கோட்ட காமினி, முகமதுஆஸ்மின், பண்டாரா, முகமதுரிகாஸ், தனுஷ்கா ரோஷன், நிசாந்தன், லடியா சந்திரசேனா உள்ளிட்ட 12 பேரிடம் தீவிர விசாரணை நடத்தினார்கள். 


திருச்சி அகதிகள் முகாமில் வெளிநாட்டினரிடம்  மத்திய அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை

மேலும் திருச்சி பொன்மலைப்பட்டியில் தங்கி இருந்த குணசேகரின் டிரைவர் விக்னேஷ் வீட்டிலும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தினர். கடந்த ஆண்டு மார்ச் மாதம் கேரளா மாநிலம் விழிஞ்ஜம் கடற்கரை பகுதியில் மீன்பிடி படகில் 300 கிலோ ஹெராயின், 5 ஏ.கே.47. ரக துப்பாக்கிகள், 1000 துப்பாக்கி குண்டுகள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக சிறப்பு முகாமில் இந்த சோதனை நடைபெற்றது தெரியவந்தது. இந்த சோதனையில் முகாமில் இருந்து ரூ.2 லட்சத்து 52 ஆயிரம், 57 பவுன் தங்க நகைகள், 90 செல்போன்கள், 60 சிம்கார்டுகள், 1 மடிக்கணினி, 1 பென்டிரைவ் மற்றும் ஆவணங்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.


திருச்சி அகதிகள் முகாமில் வெளிநாட்டினரிடம்  மத்திய அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை

இந்தநிலையில் சென்னையில் இருந்து மத்திய அமலாக்கத்துறை துணை இயக்குனர் அஜய்கவுர் தலைமையில் 4 பேர் கொண்ட அதிகாரிகள் குழுவினர் நேற்று காலை திருச்சி சிறப்பு முகாமுக்கு வந்தனர். அங்கு அடைக்கப்பட்டுள்ள குணசேகரன் உள்ளிட்ட 12 வெளிநாட்டினரிடம் விசாரணை நடத்தினார்கள். வெளிநாட்டில் இருந்து இந்தியாவுக்கு பணம், நகைகள் கொண்டு வந்தது எப்படி?. சட்டவிரோதமாக பண பரிமாற்றம் நடைபெற்றுள்ளதா?. வங்கி மற்றும் செல்போன் நெட்வொர்க் மூலம் பண பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளதா? உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் குறித்து ஆய்வு செய்தனர். சிறப்பு முகாமில் அமலாக்கத்துறையினரின் விசாரணை நேற்று காலை முதல் மாலை வரை நடந்தது. இதன் தொடர்ச்சியாக ஒரு சிலரை காவலில் எடுத்தும் அமலாக்கத்துறை விசாரிக்க வாய்ப்பு இருப்பதாகவும் தகவல்கள் கூறப்படுகிறது. திருச்சி சிறப்பு முகாமில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்திய மறுநாளில் அமலாக்கத்துறையும் விசாரணையில் இறங்கி இருப்பது திருச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Minister Ponmudi : ”மகனுக்கு 2, மஸ்தானுக்கு மூன்றா?” அதிருப்தியில் அமைச்சர் பொன்முடி..?
Minister Ponmudi : ”மகனுக்கு 2, மஸ்தானுக்கு மூன்றா?” அதிருப்தியில் அமைச்சர் பொன்முடி..?
அமைச்சர் துரைமுருகனுக்கு என்னாச்சு? மருத்துவமனைக்கு விரையும் ஸ்டாலின், உதயநிதி!
அமைச்சர் துரைமுருகனுக்கு என்னாச்சு? மருத்துவமனைக்கு விரையும் ஸ்டாலின், உதயநிதி!
விவசாயிகளே... உங்கள் கவனத்திற்கு: வேளாண் துறை ஆலோசனை எதற்கு தெரியுங்களா?
விவசாயிகளே... உங்கள் கவனத்திற்கு: வேளாண் துறை ஆலோசனை எதற்கு தெரியுங்களா?
ரூ.1 கோடி வரை கடன்! காக்கும் கரங்கள் திட்டங்களுக்கு இன்று முதல் விண்ணப்பம்! யாருக்கு என்ன பயன்?
ரூ.1 கோடி வரை கடன்! காக்கும் கரங்கள் திட்டங்களுக்கு இன்று முதல் விண்ணப்பம்! யாருக்கு என்ன பயன்?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Jolarpettai Murder: LIFT-ல் சிக்கிய எம்.பி! 1 மணி நேரம் திக்.. திக்! மயங்கிய காங்.கட்சியினர்”தமிழகத்திற்கு நிதி கிடையாது” தர்மேந்திர பிரதான் பேசியது என்ன? தமிழில் முழு வீடியோNamakkal Transgender Issue : ’’திருநங்கைகளை ஒதுக்காதீங்க’’மக்களுக்கு கலெக்டர் ADVICE | Collector

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Minister Ponmudi : ”மகனுக்கு 2, மஸ்தானுக்கு மூன்றா?” அதிருப்தியில் அமைச்சர் பொன்முடி..?
Minister Ponmudi : ”மகனுக்கு 2, மஸ்தானுக்கு மூன்றா?” அதிருப்தியில் அமைச்சர் பொன்முடி..?
அமைச்சர் துரைமுருகனுக்கு என்னாச்சு? மருத்துவமனைக்கு விரையும் ஸ்டாலின், உதயநிதி!
அமைச்சர் துரைமுருகனுக்கு என்னாச்சு? மருத்துவமனைக்கு விரையும் ஸ்டாலின், உதயநிதி!
விவசாயிகளே... உங்கள் கவனத்திற்கு: வேளாண் துறை ஆலோசனை எதற்கு தெரியுங்களா?
விவசாயிகளே... உங்கள் கவனத்திற்கு: வேளாண் துறை ஆலோசனை எதற்கு தெரியுங்களா?
ரூ.1 கோடி வரை கடன்! காக்கும் கரங்கள் திட்டங்களுக்கு இன்று முதல் விண்ணப்பம்! யாருக்கு என்ன பயன்?
ரூ.1 கோடி வரை கடன்! காக்கும் கரங்கள் திட்டங்களுக்கு இன்று முதல் விண்ணப்பம்! யாருக்கு என்ன பயன்?
பழவந்தாங்கல் ரயில் நிலையத்தில் அதிர்ச்சி - பெண் போலீசுக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்த இளைஞர்!
பழவந்தாங்கல் ரயில் நிலையத்தில் அதிர்ச்சி - பெண் போலீசுக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்த இளைஞர்!
L Murugan :
L Murugan : "யாருடன் கூட்டணி? தாய் மொழிக்கு முக்கியத்துவம்” அடித்து பேசிய எல்.முருகன்..!
ADMK ON Dmk: நியாயமா..! வெளியான கடிதம், திமுகவின் இலட்சணம் இதுதானா? PM SHRI விவகாரம், அதிமுக கேள்வி
ADMK ON Dmk: நியாயமா..! வெளியான கடிதம், திமுகவின் இலட்சணம் இதுதானா? PM SHRI விவகாரம், அதிமுக கேள்வி
P. Chidambaram :  ”தமிழ்நாட்டை பத்தி என்ன தெரியும் ? ஆணவத்தின் உச்சம்” மத்திய அமைச்சரை பொளந்த ப.சிதம்பரம்..!
P. Chidambaram : ”தமிழ்நாட்டை பத்தி என்ன தெரியும் ? ஆணவத்தின் உச்சம்” மத்திய அமைச்சரை பொளந்த ப.சிதம்பரம்..!
Embed widget

We use cookies to improve your experience, analyze traffic, and personalize content. By clicking "Allow All Cookies", you agree to our use of cookies.