மேலும் அறிய

திருச்சியில் மாநில அளவிலான துப்பாக்கி சுடும் போட்டி தொடங்கியது

திருச்சி ரைபிள் கிளப்பில் 47-வது மாநில துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டி, பிஸ்டல் மற்றும் ரைபிள் துப்பாக்கி சுடும் போட்டி தொடங்கியது.

திருச்சி மாநகர கே.கே.நகர் ஆயுதப்படை வளாகத்தில் செயல்பட்டு வரும் ரைபிள் கிளப்பில் 47-வது மாநில துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டி, பிஸ்டல் மற்றும் ரைபிள் துப்பாக்கி சுடும் போட்டி  தொடங்கியது. இந்த மைதானத்தில் திருச்சி கே.கே.நகர் மாநகர ஆயுதப்படை வளாகத்தில் உள்ள திருச்சி மாநகர ரைபிள் கிளப் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தொடங்கப்பட்டது. மாவட்ட, தேசிய மற்றும் சர்வதேச துப்பாக்கி சுடும் போட்டிக்கு கலந்து கொள்ள பயிற்சி பெறும் வகையில் திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன் நிர்வாகத்தின் கீழ் செயல்பட்டு வருகிறது. திருச்சி மாநகர ரைபிள் கிளப்பில் மொத்தம் 215 நிரந்தர உறுப்பினர்கள் மற்றும் மாணவர்களும் உள்ளனர். மேற்படி ரைபிள் கிளப்பில் 50 மீட்டர் தூரத்தில் ஒரு சுடு தளமும், 25 மீட்டர் தூரத்தில் ஒரு சுடுதளமும், 10 மீட்டர் தூரத்தில் 3 சுடுதளம் மற்றும் உடற்பயிற்சி கூடமும் உள்ளது. இதில் தமிழகம் முழுவதும் இருந்து துப்பாக்கி சுடுதலில் பயிற்சி பெற்ற சுமார் 1,300 போட்டியாளர்கள் பங்கேற்றனர். தொடக்க விழாவில் கலெக்டர் பிரதீப் குமார், போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன், ரைபிள் கிளப் ஒருங்கிணைப்பு செயலாளர் செந்தூர் செல்வன், பொருளாளர் சிராஜுதீன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினார்கள்.

மேலும் தேசிய ரைபிள் சங்க கவுரவ செயலாளர் ரவிகிருஷ்ணன் தொடக்கவுரையாற்றினார். தமிழ்நாடு துப்பாக்கி சுடும் சங்க செயலாளர் வேல்சங்கர் போட்டிகளை பற்றி விளக்கி கூறினார். இதில்10 மீட்டர், 25 மீட்டர் மற்றும் 50 மீட்டர் சுடு தளத்தில் பிஸ்டல் மற்றும் ரைபிள் துப்பாக்கி சுடுதல் போட்டிகளில் சிறியவர்கள், இளைஞர்கள், முதியவர்கள் என தரம் பிரிக்கப்பட்டு சப்யூத் (16 வயது வரை), யூத் (19 வரை), ஜீனியர் (21 வரை), சீனியர்(21 முதல் 45 வயது வரை), மாஸ்டர் (45 வயது முதல் 60 வயது வரை) மற்றும் சீனியர் மாஸ்டர் (60 வயதிற்கு மேல்) என தனித்தனியாக போட்டிகள் நடத்தப்படுகிறது. 


திருச்சியில் மாநில அளவிலான துப்பாக்கி சுடும் போட்டி தொடங்கியது

பிஸ்டல் துப்பாக்கி சுடுவதற்கான போட்டியாளர்களுக்கு வருகிற 28-ந் தேதி வரை போட்டிகள் நடத்தப்பட்டு, இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பதக்கங்கள் வழங்கப்படுகிறது. 29-ந் தேதி முதல் 31-ந் தேதி வரை ரைபிள் துப்பாக்கி சுடுபவர்களுக்கான போட்டிகள் நடக்கின்றன. இதில் வெற்றி பெறுபவர்கள் தென்னிந்திய அளவிலான துப்பாக்கி சுடுதல் போட்டியில் கலந்து கொள்ள முடியும் என்று கமிஷனர் கார்த்திகேயன் கூறினார். முன்னதாக துப்பாக்கி சுடும் பயிற்சி தளத்தில் கலெக்டர், கமிஷனர் ஆகியோர் துப்பாக்கியால் சுட்டு ஒத்திகை பார்த்தனர். குறிப்பாக தமிழகம் முழுவதும் துப்பாக்கி சுடுதலில் பயிற்சி பெற்ற சுமார் 1300 போட்டியாளர்கள் கலந்து கொள்ளும் போட்டி முதல் முறையாக திருச்சி மாநகர காவல்துறை சார்பில் ரைபிள் கிளப்பில் நடத்தப்படுகிறது. 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

DMK KATPADI CANDIDATE : துரைமுருகன் போட்டியில்லையா.?? காட்பாடி தொகுதியை கைப்பற்றப்போகும் திமுக வேட்பாளர் யார்.?
துரைமுருகன் போட்டியில்லையா.?? காட்பாடி தொகுதியை கைப்பற்றப்போகும் திமுக வேட்பாளர் யார்.?
Anna University: அண்ணா பல்கலை. உதவி பேராசிரியர்கள் போராட்டம் வெற்றி! மீண்டும் பணி! அமைச்சர் அதிரடி!
Anna University: அண்ணா பல்கலை. உதவி பேராசிரியர்கள் போராட்டம் வெற்றி! மீண்டும் பணி! அமைச்சர் அதிரடி!
Guest Lecturers: கவுரவ விரிவுரையாளர்களுக்கு அடித்தது ஜாக்பாட்; அதிரடியாக உயர்த்தப்பட்ட ஊதியம்- எவ்வளவு தெரியுமா?
Guest Lecturers: கவுரவ விரிவுரையாளர்களுக்கு அடித்தது ஜாக்பாட்; அதிரடியாக உயர்த்தப்பட்ட ஊதியம்- எவ்வளவு தெரியுமா?
ICC T20 World Cup: நாலாபக்கமும் அணை கட்டிட்டாங்க..! கட்டம் சொல்வது என்ன? இந்தியாவிற்கான வாய்ப்புகள், ஆப்ஷன்கள்
ICC T20 World Cup: நாலாபக்கமும் அணை கட்டிட்டாங்க..! கட்டம் சொல்வது என்ன? இந்தியாவிற்கான வாய்ப்புகள், ஆப்ஷன்கள்
ABP Premium

வீடியோ

Pudukkottai DMK | புதுக்கோட்டை தொகுதி யாருக்கு? திமுகவில் கடும் போட்டி.. ரேஸில் முந்தும் முத்துராஜா!
Accident News | கட்டுப்பாட்டை இழந்த வேன் கவிழ்ந்து விபத்து பதற வைக்கும் CCTV வீடியோ | Puducherry
TVK issue | ’’தளபதிக்கு விஷயம் போச்சு தலையை வெட்டி வீசிடுவேன்’’ தவெக நிர்வாகி ஆபாச பேச்சு | Vijay
Car Accident | தாறுமாறாக ஓடிய கார் குடிகாரனை வெளுத்த மக்கள் கமுதியில் பரபரப்பு | Ramanathapuram
Mexico El Mencho Killed | PABLO ESCOBAR 2.0 உலக மாஃபியாவின் Kingpin சுட்டுக்கொலை யார் இந்த El Mencho

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK KATPADI CANDIDATE : துரைமுருகன் போட்டியில்லையா.?? காட்பாடி தொகுதியை கைப்பற்றப்போகும் திமுக வேட்பாளர் யார்.?
துரைமுருகன் போட்டியில்லையா.?? காட்பாடி தொகுதியை கைப்பற்றப்போகும் திமுக வேட்பாளர் யார்.?
Anna University: அண்ணா பல்கலை. உதவி பேராசிரியர்கள் போராட்டம் வெற்றி! மீண்டும் பணி! அமைச்சர் அதிரடி!
Anna University: அண்ணா பல்கலை. உதவி பேராசிரியர்கள் போராட்டம் வெற்றி! மீண்டும் பணி! அமைச்சர் அதிரடி!
Guest Lecturers: கவுரவ விரிவுரையாளர்களுக்கு அடித்தது ஜாக்பாட்; அதிரடியாக உயர்த்தப்பட்ட ஊதியம்- எவ்வளவு தெரியுமா?
Guest Lecturers: கவுரவ விரிவுரையாளர்களுக்கு அடித்தது ஜாக்பாட்; அதிரடியாக உயர்த்தப்பட்ட ஊதியம்- எவ்வளவு தெரியுமா?
ICC T20 World Cup: நாலாபக்கமும் அணை கட்டிட்டாங்க..! கட்டம் சொல்வது என்ன? இந்தியாவிற்கான வாய்ப்புகள், ஆப்ஷன்கள்
ICC T20 World Cup: நாலாபக்கமும் அணை கட்டிட்டாங்க..! கட்டம் சொல்வது என்ன? இந்தியாவிற்கான வாய்ப்புகள், ஆப்ஷன்கள்
Renault Duster: ஒரு வழியா தேதி சொல்லிட்டாங்க..! மார்ச் 17 முதல் டஸ்டர் - டெலிவெரி எப்போது? ரெனால்ட் அறிவிப்பு
Renault Duster: ஒரு வழியா தேதி சொல்லிட்டாங்க..! மார்ச் 17 முதல் டஸ்டர் - டெலிவெரி எப்போது? ரெனால்ட் அறிவிப்பு
Edappadi Palaniswamy: நாங்க ஜீரோவா? - தேர்தல் முடிவுல தெரியும்.. திமுகவுக்கு சவால் விட்ட எடப்பாடி பழனிசாமி!
Edappadi Palaniswamy: நாங்க ஜீரோவா? - தேர்தல் முடிவுல தெரியும்.. திமுகவுக்கு சவால் விட்ட எடப்பாடி பழனிசாமி!
TN Roundup: தேர்தல் ஆணையம் ஆய்வு, வேட்புமனு தாக்கல் தொடக்கம், விஜய்க்கு ஆதரவு - தமிழகத்தில் இதுவரை
TN Roundup: தேர்தல் ஆணையம் ஆய்வு, வேட்புமனு தாக்கல் தொடக்கம், விஜய்க்கு ஆதரவு - தமிழகத்தில் இதுவரை
Chennai Metro Free Travel: சென்னை மெட்ரோ ரயிலில் இன்று இலவசமாக பயணிக்கலாம்.! சூப்பர் அறிவிப்பு- யாருக்கெல்லாம் தெரியுமா.?
சென்னை மெட்ரோ ரயிலில் இன்று இலவசமாக பயணிக்கலாம்.! சூப்பர் அறிவிப்பு- யாருக்கெல்லாம் தெரியுமா.?
Embed widget