மேலும் அறிய

’லட்சங்கள், கோடிகளில் பத்திரப்பதிவு’ ஊரடங்கில் அதிகரித்த பத்திரப்பதிவுத்துறை வருவாய்..!

திருச்சி உட்பட 4 மாவட்டங்களில் கடந்த ஆறு மாதத்தில் பத்திரப்பதிவு மூலம் ரூ.296 கோடி வருவாய் கிடைத்துள்ளது. மேலும் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு ரூ.82 கோடி அதிகரித்துள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர்.

கொரானா தாக்கத்தால் தமிழகத்தில் பல்வேறு கட்டுப்பாடுகளுடன்  ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. தொற்றின் எண்ணிக்கை குறையும் போது சில தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு மாநில அரசு அவ்வப்போது அறிவித்து வருகிறது. இந்த நிலையில் மாநில அரசுக்கு வருவாயை அதிகரித்து தருவதில் முக்கியமாக செயல்பட்டிருக்கிறது பத்திர பதிவு துறை ஆகும்.  இந்த கொரானா காலக்கட்டத்தில் பத்திர பதிவு துறையில் திருச்சி உட்பட 4 மாவட்டங்களில் கடந்த ஆறு மாதத்தில் பத்திரப்பதிவு மூலம் ரூ.296 கோடி வருவாய் கிடைத்துள்ளது. மேலும் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு ரூ.82 கோடி ரூபாய் வருவாய் அதிகரித்துள்ளது  இதைப்போன்று கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு 21 ஆயிரம் பத்திரப்பதிவுகள் கூடுதலாக நடைபெற்றுள்ளது.’லட்சங்கள், கோடிகளில் பத்திரப்பதிவு’ ஊரடங்கில் அதிகரித்த பத்திரப்பதிவுத்துறை வருவாய்..!
பத்திரப்பதிவு துறையில் அனைத்து பதிவுகளும் முறையாக நடைபெற வேண்டும் என்பதற்காக தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. குறிப்பாக பதிவு அலுவலகத்தில் இடைத்தரகர்கள் இல்லாமல் சரியான கட்டணத்துடன் குறிப்பிட்ட நேரத்துக்குள் ஆவணங்களைப் பதிவு செய்ய வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் பொதுமக்கள் புகார் அளிக்கும் வகையில் புதிதாக கட்டுப்பாட்டு அறை விரைவில் திறக்கப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. குறிப்பாக பத்திரப்பதிவு மற்றும் வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தி மாவட்டங்களுக்கு நேரடியாக சென்று ஆய்வு கூட்டங்களை நடத்தி வருகிறார். மேலும் பத்திரப்பதிவு அலுவலங்களில் திடீர் ஆய்வுகளை மேற்கொண்கொண்டும் வருகிறார். இந்நிலையில் திருச்சி, கரூர், அரியலூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் கடந்த ஆண்டை விட இந்தாண்டு பத்திரப்பதிவு அதிகரித்து உள்ளது தெரியவந்துள்ளது.

’லட்சங்கள், கோடிகளில் பத்திரப்பதிவு’ ஊரடங்கில் அதிகரித்த பத்திரப்பதிவுத்துறை வருவாய்..!

இந்த 4 மாவட்டங்களில் கடந்த ஜனவரியில் ரூ.44.03 கோடி, பிப்ரவரியில் ரூ.48.19 கோடி, மார்ச்சில் ரூ.44.33 கோடி, ஏப்ரலில் ரூ.2.31 கோடி, மே மாதத்தில் ரூ.23.64 கோடி, ஜூனில் ரூ.51.95 கோடி, ஜூலையில் ரூ.47.29 கோடி, ஆகஸ்ட்டில் ரூ.51.51 கோடி, செப்டம்பரில் ரூ. 64.63 கோடி, அக்டோபரில் ரூ.65.79 கோடி, நவம்பரில் ரூ.59.34 கோடி, டிசம்பரில் ரூ.72.52 கோடி என்று மொத்தம் :ரூ. 575.53 கோடி வருவாய் கிடைத்துள்ளது. ஜனவரியில் 14,167, பிப்ரவரியில் 17,344, மார்ச்சில் 16,466, ஏப்ரலில் 795, மே மாதத்தில் 9115, ஜூனில் 19,107, ஜூலையில் 20,003, ஆகஸ்ட்டில் 18,639, செப்டம்பரில் 24,360, அக்டோபரில் 24,232, நவம்பரில் 20,461, டிசம்பரில் 23,760 என்று மொத்தம் 2,08,448 பத்திரப்பதிவுகள் நடைபெற்றுள்ளது. இதைப்போன்று இந்தாண்டு 4 மாவட்டங்களில் ஜனவரி மாதத்தில் ரூ.47.11 கோடி, பிப்ரவரி மாதத்தில் ரூ.73.03 கோடி, மார்ச் மாதத்தில் ரூ.65.43 கோடி, ஏப்ரல் மாதத்தில் ரூ.54.40 கோடி, மே மாதத்தில் ரூ.12.28 கோடி, ஜூன் மாதத்தில் ரூ. 44.30 கோடி என்று மொத்தம் ரூ. 296.55 கோடி வருவாய் கிடைத்துள்ளது. மேலும் ஜனவரி மாதம் 15,022, பிப்ரவரி மாதம் 23,303, மார்ச் மாதம் 23,380, ஏப்ரல் மாதம் 17,919, மே மாதம் 4780, ஜூன் மாதம் 14,228 என்று மொத்தம் 98,632 பத்திரப்பதிவுகள் நடைபெற்றுள்ளது.’லட்சங்கள், கோடிகளில் பத்திரப்பதிவு’ ஊரடங்கில் அதிகரித்த பத்திரப்பதிவுத்துறை வருவாய்..!

இதன்படி பார்த்தால் கடந்த 2020 ஆண்டு ஜூன் மாதம் வரை இந்த 4 மாவட்டங்களில் பத்திரப்பதிவு மூலம் ரூ. 214.46 கோடி வருவாய் கிடைத்தள்ளது. மேலும் 76,994 பத்திரப்பதிவுகள் நடைபெற்றுள்ளது. இந்த ஆண்டு பத்திரப்பதிவு மூலம் ரூ.296 கோடி வருவாய் கிடைத்துள்ளது. 98,632 பத்திரப்பதிவுகள் நடைபெற்றுள்ளது. இதன்படி பார்த்தால் கடந்த ஆண்டை விட இந்தாண்டு ரூ.82.09 கோடி கூடுதலாக வருவாய் கிடைத்துள்ளது. மேலும் 21,638 பத்திரப்பதிவுகள் கூடுலாக நடைபெற்றுள்ளது.

திருச்சி மாவட்டத்தில் கடந்த ஆண்டு ஜனவரியில் ரூ.27.74 கோடி, பிப்ரவரியில் ரூ.22.52 கோடி, மார்ச்சில் ரூ.19.49 கோடி, ஏப்ரலில் ரூ.0.58 கோடி, மே மாதத்தில் ரூ.23.64 கோடி, ஜூன் மாதத்தில் ரூ.23.54 கோடி என்று மொத்தம் ரூ.117.51 கோடி வருவாய் கிடைத்துள்ளது. மேலும் ஜனவரியில் 4528, பிப்ரவரியில் 5272, மார்ச்சில் 4788, ஏப்ரலில் 204, மே மாதத்தில் 2615, ஜூனில் 5414 என்று மொத்தம் 22,821 பத்திரப்பதிவுகள் நடைபெற்றுள்ளது. இந்தாண்டு ஜனவரியில் ரூ.22.29 கோடி, பிப்ரவரியில் ரூ.34.66 கோடி, மார்ச்சில் ரூ.30.64 கோடி, ஏப்ரலில் ரூ.25.14 கோடி, மே மாதத்தில் ரூ.5.2 கோடி, ஜூனில் ரூ.21.84 கோடி என்று மொத்தம் ரூ.87.63 கோடி வருவாய் கிடைத்துள்ளது. மேலும் ஜனவரியில் 4693, பிப்ரவரியில் 7241, மார்ச்சில் 7224, ஏப்ரலில் 5691, மே மாதத்தில் 1424, ஜூனில் 4490 என்று மொத்தம் 30,763 பத்திரப்பதிவு நடைபெற்றுள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர்.

கொரோனா ஊரடங்கில் பலரும் சிரமப்பட்ட நிலையில், லட்சங்கள் முதல் கோடிகள் வரை பலரும் பத்திர பதிவு செய்திருப்பது பொதுமக்கள் மத்தியில் வியப்பை ஏற்படுத்தியுள்ளது

தலைப்பு செய்திகள்

GST Highway Smart Lighting: தாம்பரம்–திண்டிவனம் சாலையில் புதிய மாற்றம்! இரவு பயணிகளுக்கு வரப்போகும் ஸ்மார்ட் வசதி! IOT அதிசயம்!
தாம்பரம்–திண்டிவனம் சாலையில் புதிய மாற்றம்! இரவு பயணிகளுக்கு வரப்போகும் ஸ்மார்ட் வசதி! IOT அதிசயம்!
இரும்பு உத்தரங்கள் வந்தாச்சு... பணிகள் ஸ்பீடு பிடிச்சாச்சு:திருச்சி கோட்டை மேம்பாலம் ஜனவரிக்குள் திறக்க நடவடிக்கை?
இரும்பு உத்தரங்கள் வந்தாச்சு... பணிகள் ஸ்பீடு பிடிச்சாச்சு:திருச்சி கோட்டை மேம்பாலம் ஜனவரிக்குள் திறக்க நடவடிக்கை?
திருச்சியில் விவசாயிகளுக்கு தேனீ வளர்ப்பு பயிற்சி
திருச்சியில் விவசாயிகளுக்கு தேனீ வளர்ப்பு பயிற்சி
விளையாட்டு வீரர்களின் கனவுக்கு பூட்டு... அரசின் கோடிக்கணக்கான முதலீடு வீணாகும் அபாயம்: எங்கு தெரியுங்களா?
விளையாட்டு வீரர்களின் கனவுக்கு பூட்டு... அரசின் கோடிக்கணக்கான முதலீடு வீணாகும் அபாயம்: எங்கு தெரியுங்களா?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay Amit Shah: ஃபைனலி..! அமித் ஷாவை சந்தித்த முதலமைச்சர் விஜய் - பேக்கில் கொடுத்த பரிசு என்ன?
ஃபைனலி..! அமித் ஷாவை சந்தித்த முதலமைச்சர் விஜய் - பேக்கில் கொடுத்த பரிசு என்ன?
MRTC Metro: மெட்ரோ இல்லையாம்..! ஏசி ரயில் சேவை - பீச் ஸ்டேஷன் டூ பரங்கி மலை - 12 நிமிடங்களுக்கு ஒரு ரயில்
மெட்ரோ இல்லையாம்..! ஏசி ரயில் சேவை - பீச் ஸ்டேஷன் டூ பரங்கி மலை - 12 நிமிடங்களுக்கு ஒரு ரயில்
TN Assembly: அந்த மனுசனை எப்படியெல்லாம் புண்படுத்துனீங்க.. விஜயை பற்றி வேதனையுடன் பேசிய ஆனந்த்!
TN Assembly: அந்த மனுசனை எப்படியெல்லாம் புண்படுத்துனீங்க.. விஜயை பற்றி வேதனையுடன் பேசிய ஆனந்த்!
Rasi Palan Today (20-08-2026): கன்னிக்கு பண வரவு.. துலாமுக்கு வெற்றி.. அப்ப உங்க ராசிக்கு இன்று என்ன பலன்?
Rasi Palan Today (20-08-2026): கன்னிக்கு பண வரவு.. துலாமுக்கு வெற்றி.. அப்ப உங்க ராசிக்கு இன்று என்ன பலன்?
Mahindra XEV 9S: கேட்டதை கொடுத்த மஹிந்த்ரா..! புதிய 6 சீட்டர் EV, 670KM ரேஞ்ச், 5 ஸ்டார் ரேட்டிங் - விலை எப்படி?
கேட்டதை கொடுத்த மஹிந்த்ரா..! புதிய 6 சீட்டர் EV, 670KM ரேஞ்ச், 5 ஸ்டார் ரேட்டிங் - விலை எப்படி?
ஊட்டி, கொடைக்கானலில் Rope Car.! ராமேஸ்வரத்திற்கு சொகுசு கப்பல் டூர்- சுற்றுலாத்துறை அசத்தல் அறிவிப்புகள்
ஊட்டி, கொடைக்கானலில் Rope Car.! ராமேஸ்வரத்திற்கு சொகுசு கப்பல் டூர்- சுற்றுலாத்துறை அசத்தல் அறிவிப்புகள்
Netanyahu Fail in Polls: பாழாய் போன பிளான்; போரால் சரிந்த செல்வாக்கு; தேர்தல் கருத்துக்கணிப்பில் சொதப்பிய நெதன்யாகு கட்சி
பாழாய் போன பிளான்; போரால் சரிந்த செல்வாக்கு; தேர்தல் கருத்துக்கணிப்பில் சொதப்பிய நெதன்யாகு கட்சி
Gold and Silver Rate Aug.19th: காலையில் மகிழ்ச்சி, மாலையில் அதிர்ச்சி.! தங்கம் விலை அதிரடி உயர்வு; இப்போ விலை என்ன தெரியுமா.?
காலையில் மகிழ்ச்சி, மாலையில் அதிர்ச்சி.! தங்கம் விலை அதிரடி உயர்வு; இப்போ விலை என்ன தெரியுமா.?
Embed widget