மேலும் அறிய

புதுக்கோட்டையில் கடந்த 2 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்ட அரசு அருங்காட்சியகம் புதுப்பிக்கும் பணி

புதுக்கோட்டையில் கடந்த 2 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்ட அரசு அருங்காட்சியகம் புதுப்பிக்கும் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

புதுக்கோட்டை திருக்கோகர்ணத்தில் அரசு அருங்காட்சியகம் அமைந்துள்ளது. இது தமிழகத்திலே 2-வது பெரிய அருங்காட்சியகமாக திகழ்கிறது. கடந்த 1910-ம் ஆண்டு முதலே இந்த அருங்காட்சியகம் செயல்பட்டு வருகிறது. தொண்டைமான் மன்னர்கள் காலத்தில் அமைக்கப்பட்ட பழமையான அருங்காட்சியகம் ஆகும். இதனை தமிழக அரசின் தொல்லியல் துறை நிர்வகித்து வருகிறது. அருங்காட்சியகத்தில் புதுக்கோட்டையை ஆண்ட தொண்டைமான் மன்னர்கள் குறித்த செப்பேடுகள், பதப்படுத்தப்பட்ட விலங்குகள், பறவைகள், கல்வெட்டுகள், கல் சிலைகள், கனிமங்கள், மரப் படிமங்கள், உலர் தாவரங்கள், மூலிகை பொருட்கள், கூத்து கலைப்பொருட்கள், பனையோலைகள், அருங்காட்சியக வெளியீடுகள், உலோகப்படிமங்கள், கலைப்பொருட்கள், தொல் தமிழர்கள் பயன்படுத்திய பொருட்கள், முதுமக்கள் பானைகள், சுடுமண் படிமங்கள், மாந்த உடல் மாதிரிகள், கல் வகைகள், தொல்லுயிரிப் படிமங்கள், கனிமங்கள் உள்ளிட்டவை உள்ளன. மொத்தம் 9 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அரும்பொருட்கள் உள்ளது. 


புதுக்கோட்டையில் கடந்த 2 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்ட அரசு அருங்காட்சியகம் புதுப்பிக்கும் பணி

இந்த நிலையில் அருங்காட்சியகத்தை ரூ.4 கோடி செலவில் புதுப்பிக்கும் பணி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கியது. தற்போது உள்ள பழமையான கட்டிடத்தில் அதன் தொன்மை மற்றும் பழமை மாறாமல் புதுப்பிக்கும் பணி தொடங்கப்பட்டது. இதற்காக அருங்காட்சியகத்தில் உள்ள கற்சிலைகள் பாதுகாப்பாக மூடி வைக்கப்பட்டன. மேலும் பல அரும்பொருட்கள் ஒரு அறையில் வைக்கப்பட்டு 'சீல்' வைக்கப்பட்டுள்ளன. தற்போது பதப்படுத்தப்பட்ட விலங்குகள், பறவைகள், கல்வெட்டுகள் உள்ளிட்ட குறிப்பிட்ட வகையிலான பொருட்கள் மட்டுமே காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இதனை பொதுமக்கள் பார்வையிட்டு வருகின்றனர். இந்த நிலையில் கொரோனா பரவலுக்கு பின் அருங்காட்சியகம் புதுப்பிக்கும் பணி நிறுத்தப்பட்டது. அதன்பின் பணிகள் கடந்த 2 ஆண்டுகளாக தொடங்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. 


புதுக்கோட்டையில் கடந்த 2 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்ட அரசு அருங்காட்சியகம் புதுப்பிக்கும் பணி

நூற்றாண்டு பழமை வாய்ந்த இந்த அருங்காட்சியகத்தில் உள்ள அரியவகை பொருட்களை பொதுமக்கள் பார்க்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது. இதனால் பலர் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர். இதனால் அருங்காட்சியகம் புதுப்பிக்கும் பணி நிறைவடைவது எப்போது? என பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர். புதுப்பிக்கும் பணியை விரைந்து முடித்து அரும்பொருட்கள் அனைத்தையும் பார்வையிட ஏற்பாடு செய்ய வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அருங்காட்சியகத்திற்கு தனியாக காப்பாட்சியர் நியமிக்க வேண்டும், பொருட்கள் பற்றி விளக்கி எடுத்துரைக்க அலுவலக உதவியாளர்கள் நியமிக்க வேண்டும், காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பது அலுவலக தரப்பினரின் கோரிக்கையாக உள்ளது. அருங்காட்சியகம் புதுப்பிக்கும் பணி குறித்து காப்பாட்சியர் (பொறுப்பு) பக்கிரிசாமி கூறுகையில், புனரமைப்பின் அடுத்த கட்ட பணிகள் விரைவில் தொடங்க உள்ளதாக தெரிவித்தார். மேலும் இந்த அரசு அருங்காட்சியத்தை உடனடியாக புதுப்பித்து மீண்டும் பொதுமக்களின் பார்வைக்கு திறந்து விட வேண்டும். மேலும் இங்கு உள்ள பழைய கால வரலாற்று சிறப்புகள், தமிழர்களின் கலைகள், வீரம், திறமை, என அனைத்தையும் வருங்கால சமூதாய மக்கள் அறிந்து கொள்ள வேண்டும் என  சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

விஜய் ஒரு Spoiler .! அதிமுக- பாஜக கூட்டணியின் வெற்றிக்கு சிக்கல்.? போட்டுடைத்த பியூஸ் கோயல்
விஜய் ஒரு Spoiler .! அதிமுக- பாஜக கூட்டணியின் வெற்றிக்கு சிக்கல்.? போட்டுடைத்த பியூஸ் கோயல்
Pongal Gift: பொங்கல் பரிசு தொகுப்பு ரூ.5000.!! பொதுமக்களுக்கு ஜாக்பாட் அடிக்குமா.? இன்று தமிழக அரசு முக்கிய முடிவு
பொங்கல் பரிசு தொகுப்பு ரூ.5000.!! பொதுமக்களுக்கு ஜாக்பாட் அடிக்குமா.? இன்று தமிழக அரசு முக்கிய முடிவு
Bottle Water New Regulations: பாட்டில் குடிநீருக்கு புதிய விதிமுறைகள்; FSSAI கெடுபிடி; ஜனவரி 1 முதல் இதெல்லாம் கட்டாயம்
பாட்டில் குடிநீருக்கு புதிய விதிமுறைகள்; FSSAI கெடுபிடி; ஜனவரி 1 முதல் இதெல்லாம் கட்டாயம்
கல்வெட்டு, தொல்லியலில் ஆர்வமா? ஓராண்டு டிப்ளமோ, சன்டேதான் வகுப்பு- பங்கேற்பது எப்படி?
கல்வெட்டு, தொல்லியலில் ஆர்வமா? ஓராண்டு டிப்ளமோ, சன்டேதான் வகுப்பு- பங்கேற்பது எப்படி?
ABP Premium

வீடியோ

விஜய் சொன்னது பொய் கதை?”மக்களை அடிமையாக்கிய ஜோசப்” சர்ச்சையான KUTTY STORY உண்மை இதுதான்? | Christmas TVK Vijay Speech |
தர்காவில் சந்தனக்கூடு விழா! ”இந்துக்களை விட மாட்டீங்களா” திருப்பரங்குன்றத்தில் மோதல்
”5 வருசம் நான் தான் CM
விஜய்யுடன் 3 மணி நேரம் மீட்டிங்செங்கோட்டையன் கொடுத்த IDEA! MISS ஆன ஆனந்த்
Bus Accident | தூங்கி வழிந்த ஓட்டுநர் ஆம்னி பஸ் கவிழ்ந்து விபத்து!அந்தரத்தில் தொங்கும் காட்சிகள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
விஜய் ஒரு Spoiler .! அதிமுக- பாஜக கூட்டணியின் வெற்றிக்கு சிக்கல்.? போட்டுடைத்த பியூஸ் கோயல்
விஜய் ஒரு Spoiler .! அதிமுக- பாஜக கூட்டணியின் வெற்றிக்கு சிக்கல்.? போட்டுடைத்த பியூஸ் கோயல்
Pongal Gift: பொங்கல் பரிசு தொகுப்பு ரூ.5000.!! பொதுமக்களுக்கு ஜாக்பாட் அடிக்குமா.? இன்று தமிழக அரசு முக்கிய முடிவு
பொங்கல் பரிசு தொகுப்பு ரூ.5000.!! பொதுமக்களுக்கு ஜாக்பாட் அடிக்குமா.? இன்று தமிழக அரசு முக்கிய முடிவு
Bottle Water New Regulations: பாட்டில் குடிநீருக்கு புதிய விதிமுறைகள்; FSSAI கெடுபிடி; ஜனவரி 1 முதல் இதெல்லாம் கட்டாயம்
பாட்டில் குடிநீருக்கு புதிய விதிமுறைகள்; FSSAI கெடுபிடி; ஜனவரி 1 முதல் இதெல்லாம் கட்டாயம்
கல்வெட்டு, தொல்லியலில் ஆர்வமா? ஓராண்டு டிப்ளமோ, சன்டேதான் வகுப்பு- பங்கேற்பது எப்படி?
கல்வெட்டு, தொல்லியலில் ஆர்வமா? ஓராண்டு டிப்ளமோ, சன்டேதான் வகுப்பு- பங்கேற்பது எப்படி?
Gold Rate Historic Peak: அடேங்கப்பா.! வரலாறு காணாத புதிய உச்சத்தில் தங்கம் விலை; இன்று காலையிலேயே ரூ.1,600 உயர்வு
அடேங்கப்பா.! வரலாறு காணாத புதிய உச்சத்தில் தங்கம் விலை; இன்று காலையிலேயே ரூ.1,600 உயர்வு
இளைஞர்களுக்கு அரசு, தனியார் துறைகளில் வாய்ப்புகள்! 2.78 லட்சம் பேருக்கு வேலை, உதவித்தொகை- விவரம்!
இளைஞர்களுக்கு அரசு, தனியார் துறைகளில் வாய்ப்புகள்! 2.78 லட்சம் பேருக்கு வேலை, உதவித்தொகை- விவரம்!
Volkswagen Cars 2026: குவாலிட்டிக்கு பேர் போன ஃபோக்ஸ்வாகன் - புத்தாண்டில் ப்ளான் என்ன? லிஸ்டட் கார்கள் - SUV மட்டுமா?
Volkswagen Cars 2026: குவாலிட்டிக்கு பேர் போன ஃபோக்ஸ்வாகன் - புத்தாண்டில் ப்ளான் என்ன? லிஸ்டட் கார்கள் - SUV மட்டுமா?
120 தொகுதிகளில் இபிஎஸ் போட்டியிட விருப்ப மனு.! ரூ.18 லட்சத்தை அள்ளிக்கொடுத்த கஜேந்திரன் யார்.?
120 தொகுதிகளில் இபிஎஸ் போட்டியிட விருப்ப மனு.! ரூ.18 லட்சத்தை அள்ளிக்கொடுத்த கஜேந்திரன் யார்.?
Embed widget