மேலும் அறிய

புதுக்கோட்டையில் கடந்த 2 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்ட அரசு அருங்காட்சியகம் புதுப்பிக்கும் பணி

புதுக்கோட்டையில் கடந்த 2 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்ட அரசு அருங்காட்சியகம் புதுப்பிக்கும் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

புதுக்கோட்டை திருக்கோகர்ணத்தில் அரசு அருங்காட்சியகம் அமைந்துள்ளது. இது தமிழகத்திலே 2-வது பெரிய அருங்காட்சியகமாக திகழ்கிறது. கடந்த 1910-ம் ஆண்டு முதலே இந்த அருங்காட்சியகம் செயல்பட்டு வருகிறது. தொண்டைமான் மன்னர்கள் காலத்தில் அமைக்கப்பட்ட பழமையான அருங்காட்சியகம் ஆகும். இதனை தமிழக அரசின் தொல்லியல் துறை நிர்வகித்து வருகிறது. அருங்காட்சியகத்தில் புதுக்கோட்டையை ஆண்ட தொண்டைமான் மன்னர்கள் குறித்த செப்பேடுகள், பதப்படுத்தப்பட்ட விலங்குகள், பறவைகள், கல்வெட்டுகள், கல் சிலைகள், கனிமங்கள், மரப் படிமங்கள், உலர் தாவரங்கள், மூலிகை பொருட்கள், கூத்து கலைப்பொருட்கள், பனையோலைகள், அருங்காட்சியக வெளியீடுகள், உலோகப்படிமங்கள், கலைப்பொருட்கள், தொல் தமிழர்கள் பயன்படுத்திய பொருட்கள், முதுமக்கள் பானைகள், சுடுமண் படிமங்கள், மாந்த உடல் மாதிரிகள், கல் வகைகள், தொல்லுயிரிப் படிமங்கள், கனிமங்கள் உள்ளிட்டவை உள்ளன. மொத்தம் 9 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அரும்பொருட்கள் உள்ளது. 


புதுக்கோட்டையில் கடந்த 2 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்ட அரசு அருங்காட்சியகம் புதுப்பிக்கும் பணி

இந்த நிலையில் அருங்காட்சியகத்தை ரூ.4 கோடி செலவில் புதுப்பிக்கும் பணி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கியது. தற்போது உள்ள பழமையான கட்டிடத்தில் அதன் தொன்மை மற்றும் பழமை மாறாமல் புதுப்பிக்கும் பணி தொடங்கப்பட்டது. இதற்காக அருங்காட்சியகத்தில் உள்ள கற்சிலைகள் பாதுகாப்பாக மூடி வைக்கப்பட்டன. மேலும் பல அரும்பொருட்கள் ஒரு அறையில் வைக்கப்பட்டு 'சீல்' வைக்கப்பட்டுள்ளன. தற்போது பதப்படுத்தப்பட்ட விலங்குகள், பறவைகள், கல்வெட்டுகள் உள்ளிட்ட குறிப்பிட்ட வகையிலான பொருட்கள் மட்டுமே காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இதனை பொதுமக்கள் பார்வையிட்டு வருகின்றனர். இந்த நிலையில் கொரோனா பரவலுக்கு பின் அருங்காட்சியகம் புதுப்பிக்கும் பணி நிறுத்தப்பட்டது. அதன்பின் பணிகள் கடந்த 2 ஆண்டுகளாக தொடங்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. 


புதுக்கோட்டையில் கடந்த 2 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்ட அரசு அருங்காட்சியகம் புதுப்பிக்கும் பணி

நூற்றாண்டு பழமை வாய்ந்த இந்த அருங்காட்சியகத்தில் உள்ள அரியவகை பொருட்களை பொதுமக்கள் பார்க்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது. இதனால் பலர் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர். இதனால் அருங்காட்சியகம் புதுப்பிக்கும் பணி நிறைவடைவது எப்போது? என பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர். புதுப்பிக்கும் பணியை விரைந்து முடித்து அரும்பொருட்கள் அனைத்தையும் பார்வையிட ஏற்பாடு செய்ய வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அருங்காட்சியகத்திற்கு தனியாக காப்பாட்சியர் நியமிக்க வேண்டும், பொருட்கள் பற்றி விளக்கி எடுத்துரைக்க அலுவலக உதவியாளர்கள் நியமிக்க வேண்டும், காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பது அலுவலக தரப்பினரின் கோரிக்கையாக உள்ளது. அருங்காட்சியகம் புதுப்பிக்கும் பணி குறித்து காப்பாட்சியர் (பொறுப்பு) பக்கிரிசாமி கூறுகையில், புனரமைப்பின் அடுத்த கட்ட பணிகள் விரைவில் தொடங்க உள்ளதாக தெரிவித்தார். மேலும் இந்த அரசு அருங்காட்சியத்தை உடனடியாக புதுப்பித்து மீண்டும் பொதுமக்களின் பார்வைக்கு திறந்து விட வேண்டும். மேலும் இங்கு உள்ள பழைய கால வரலாற்று சிறப்புகள், தமிழர்களின் கலைகள், வீரம், திறமை, என அனைத்தையும் வருங்கால சமூதாய மக்கள் அறிந்து கொள்ள வேண்டும் என  சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Leader of Opposition: மக்களவை எதிர்க்கட்சி தலைவரானார் ராகுல் காந்தி.. காங்கிரஸ் அறிவிப்பு!
மக்களவை எதிர்க்கட்சி தலைவரானார் ராகுல் காந்தி.. காங்கிரஸ் அறிவிப்பு!
Chennai Rain: சென்னையில் திடீரென மின்னல்-இடியுடன் கூடிய மழை:ஆயிரம் விளக்கு, நுங்கம்பாக்கத்தில் வெளுக்கும் மழை
Chennai Rain: சென்னையில் திடீரென மின்னல்-இடியுடன் கூடிய மழை:ஆயிரம் விளக்கு, நுங்கம்பாக்கத்தில் வெளுக்கும் மழை
சபாநாயகர் பதவிக்கான தேர்தல்; காங்கிரஸ் முடிவால் மம்தா அப்செட் - சிக்கலில் இந்தியா கூட்டணி!
சபாநாயகர் பதவிக்கான தேர்தல்; காங்கிரஸ் முடிவால் மம்தா அப்செட் - சிக்கலில் இந்தியா கூட்டணி!
மதுரையில் மூட்டை, மூட்டையாக ரேஷன் அரிசிக் கடத்தல்? விசாரணைக்கு வலியுறுத்தும் சமூக ஆர்வலர்கள்
மதுரையில் மூட்டை, மூட்டையாக ரேஷன் அரிசிக் கடத்தல்? விசாரணைக்கு வலியுறுத்தும் சமூக ஆர்வலர்கள்
Advertisement
Advertisement
Advertisement
metaverse

வீடியோ

DMK MLA on kalla sarayam | ”என் தொகுதியிலேயே சாராயமா?”ON THE SPOT-ல் ரெய்டு! திமுக MLA Mass சம்பவம்!lok sabha Speaker Election | மோதி பார்க்கலாம் மோடி முஷ்டி முறுக்கும் ராகுல்!வரலாற்று சம்பவம் LOADINGAyodhya Ram Temple  rain water leakage | ”அய்யோ ராமா”அலரும் அயோத்தி அர்ச்சகர் கோவில் கூரையின் நிலைAccident News :  BIKE-ல் மோதிய பேருந்து..தூக்கி வீசப்பட்ட இளைஞர் பதற வைக்கும் CCTV காட்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Leader of Opposition: மக்களவை எதிர்க்கட்சி தலைவரானார் ராகுல் காந்தி.. காங்கிரஸ் அறிவிப்பு!
மக்களவை எதிர்க்கட்சி தலைவரானார் ராகுல் காந்தி.. காங்கிரஸ் அறிவிப்பு!
Chennai Rain: சென்னையில் திடீரென மின்னல்-இடியுடன் கூடிய மழை:ஆயிரம் விளக்கு, நுங்கம்பாக்கத்தில் வெளுக்கும் மழை
Chennai Rain: சென்னையில் திடீரென மின்னல்-இடியுடன் கூடிய மழை:ஆயிரம் விளக்கு, நுங்கம்பாக்கத்தில் வெளுக்கும் மழை
சபாநாயகர் பதவிக்கான தேர்தல்; காங்கிரஸ் முடிவால் மம்தா அப்செட் - சிக்கலில் இந்தியா கூட்டணி!
சபாநாயகர் பதவிக்கான தேர்தல்; காங்கிரஸ் முடிவால் மம்தா அப்செட் - சிக்கலில் இந்தியா கூட்டணி!
மதுரையில் மூட்டை, மூட்டையாக ரேஷன் அரிசிக் கடத்தல்? விசாரணைக்கு வலியுறுத்தும் சமூக ஆர்வலர்கள்
மதுரையில் மூட்டை, மூட்டையாக ரேஷன் அரிசிக் கடத்தல்? விசாரணைக்கு வலியுறுத்தும் சமூக ஆர்வலர்கள்
Indian 2 Trailer Review:
Indian 2 Trailer Review: "காந்திய வழியில் நீங்க! நேதாஜி வழியில் நான்" எப்படி இருக்கு இந்தியன் 2 ட்ரெயிலர்?
Breaking News LIVE: மக்களவை எதிர்க்கட்சித் தலைவராக ராகுல் காந்தி தேர்வு - காங்கிரஸ் தொண்டர்கள் மகிழ்ச்சி
Breaking News LIVE: மக்களவை எதிர்க்கட்சித் தலைவராக ராகுல் காந்தி தேர்வு - காங்கிரஸ் தொண்டர்கள் மகிழ்ச்சி
பாலாற்றில் தடுப்பணை! தமிழ்நாட்டுக்கு அதிர்ச்சியளித்த ஆந்திர முதலமைச்சர் - அதிர்ச்சியில் மக்கள்
பாலாற்றில் தடுப்பணை! தமிழ்நாட்டுக்கு அதிர்ச்சியளித்த ஆந்திர முதலமைச்சர் - அதிர்ச்சியில் மக்கள்
Indian 2:
Indian 2: "நான்கு நாட்கள் கயிற்றில் தொங்கிய கமல்" பிரமித்த இயக்குனர் ஷங்கர்!
Embed widget