மேலும் அறிய

திருச்சி தொழிலதிபர் வீட்டில் கொள்ளை போன ரூ.60 லட்சம் மதிப்பிலான பொருட்கள் மீட்பு

திருச்சி மாவட்டம், தொழிலதிபர் வீட்டில் கொள்ளை அடித்த கொள்ளையனிடமிருந்து 60 லட்சத்து 30 ஆயிரம் மதிப்பிலான பொருட்களை திருவெறும்பூர் தனி படை போலீஸ்சார் மீட்டு உள்ளனர்.

திருச்சி மாவட்டம் , திருவெறும்பூர் அருகே உள்ள ஐ.ஏ.எஸ் நகர் பகுதியை சேர்ந்தவர் தேவேந்திரன் தொழிலதிபர் இவரது வீட்டில் கடந்த 23ஆம் தேதி காலை வீட்டின் பூட்டை உடைத்து 92 பவுன், வைரவளையல் மற்றும் நெக்லஸ் (மதிப்பு ரூ.5,00,000), பிளாட்டின ஆரம் (மதிப்பு ரூ.5,00,000/-), லெனோவா லேப்டாப் ஒன்று (மதிப்பு 50,000/-) சோனி லேப்டப் ஒன்று (மதிப்பு ரூ.60,000) 4 ஸ்மார்ட் போன் (மதிப்பு ரூ.50,000/-) மற்றும் 1,50,000/- மதிப்புள்ள வெள்ளி பொருட்கள் திருடுபோனது. இது சம்பந்தமாக தேவேந்திரன் திருவெறும்பூர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். 

அதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு மத்திய மண்டல டிஐஜி சரவணசுந்தர், திருச்சி எஸ்பி சுஜித் குமார் சம்பவ இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இந்தநிலை திருச்சி மத்திய மண்டல காவல் துறை தலைவர்  கார்த்திகேயன்  உத்தரவின் பேரில் திருச்சி மாவட்ட காவல் துணைத்தலைவர்  சரவணசுந்தர்  மேற்பார்வையில் திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித்குமார்  முன்னிலையில் , திருவெறும்பூர் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் அறிவழகன் தலைமையில, திருவெறும்பூர் இன்ஸ்பெக்டர் சந்திரமோகன், துவாக்குடி இன்ஸ்பெக்டர்  ஈஸ்வரன், பெல் இன்ஸ்பெக்டர்  கமலவேணி மற்றும் உதவி ஆய்வாளர்கள் ஆகியோர் தலைமையில் மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டு குற்றவாளியை தொடர்ந்து தேடி வந்தனர். இந்நிலையில் நேற்று அதிகாலை 5 மணிக்கு மஞ்சத்திடல் சோதனை சாவடியில் வாகன சோதனை செய்த போது அந்த வழியாக வந்த  காரை மறித்த போது அது நிற்காமல் சென்றதால் போலீசார் அந்த காரை விரட்டியுள்ளனர்.  


திருச்சி தொழிலதிபர் வீட்டில் கொள்ளை போன ரூ.60 லட்சம் மதிப்பிலான பொருட்கள் மீட்பு

இதனை தொடர்ந்து அந்த காரை கல்லனை ரோட்டில் சென்றபோது வேங்கூர் சுடுகாட்டிற்கு அருகில் மடக்கி பிடித்த போது காரில் இருந்து தப்பி ஓடிய நபரை பிடித்து விசாரிக்க அவர் பெயர் கார்த்திக் (எ) செல்வகார்த்திக் என்றும் அவருக்கு திருவெறும்பூர் நவல்பட்டு காவல் நிலைய குற்ற வழக்குகள் ஏற்கனவே உள்ளதும் தெரியவந்தது. எனவே அந்த காரை சோதனை செய்த போது காரில் 22 பவுன் தங்க நகை மற்றும் ரூ.50,000 பணம் இருந்தது தெரியவந்தது. அதன் அடிப்படையில் அந்த நகையை தேவேந்திரனிடம் எடுத்துச் சென்று காட்டிய போது அது தங்களுடைய நகையினை கூறியதை தொடர்ந்து செல்வா கார்த்தியை போலீசார் கைது செய்து விசாரணை செய்தபோது, தான் திருவையாறில் உள்ள புது அஹ்ரகாரத்தில் உள்ள தனது வீட்டில் மறைத்து வைத்திருந்த 118 பவுன் நகை அதன் மதிப்பு ரூ.47,20,000, பணம் 4 லட்சத்து 50 ஆயிரம் பணம், லேப்டாப், செல்போன் திருட்டுக்கு பயன்படுத்திய கார், பயன்படுத்திய இரும்பு கம்பி மற்றும் திருப்புலி ஆகியவற்றை போலீசார் கைப்பற்றினார்கள். செய்தியாளர்களை சந்தித்து பேசிய திருச்சி சரக்க டி.ஏ.ஜி சரவணன் சுந்தர் பேசுகையில், திருவெறும்பூர் பகுதியில் கடந்த 23ஆம் தேதி நடந்த குற்றம் பாரி குற்றமாகும் இந்த குற்றம் பற்றி சம்பவ இடத்திற்கு நானும் திருச்சி எஸ் பி சுஜித் குமார் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு செய்தோம் முதல் கட்டு விசாரணையில் 150 என புகார் தெரிவித்தனர்.


திருச்சி தொழிலதிபர் வீட்டில் கொள்ளை போன ரூ.60 லட்சம் மதிப்பிலான பொருட்கள் மீட்பு

பின்னர் அவர்கள் திருவெறும்பூர் காவல் நிலையத்தில் 92 பவுன் நகை 5 லட்சம் பணம் 5 கேரட் பிளாட்டினம், 6 கேரட் வைரம் என புகார் கொடுத்திருந்தனர். இந்த நிலையில் திருவெறும்பூர் இன்ஸ்பெக்டர் சந்திரமோகன், தலைமையில் எஸ்ஐ சதீஷ் ஏட்டு செந்தில் மற்றும் போலீசார் சதீஷ்குமார், ஜேம்ஷ் செல்வராஜ், பெல் இன்ஸ்பெக்டர் கமலவேணி தலைமையில் எஸ் ஐ சசிகுமார், ஏட்டுகள் அருண்மொழிவர்மன், இன்ப மணி, ஹரிஹரன், போலீசார் ராஜேஷ், சிலம்பரசன், துவாக்குடி இன்ஸ்பெக்டர் ஈஸ்வரன்தலைமையில் எஸ்ஐகள் மாரிமுத்து, மணிகண்டன், எஸ் எஸ் ஐ வேல்அழகன், ஏட்டு முத்துக்குமார், போலீசார் இளையராஜா, அறிவழகன் ஆகியோர் அடங்கிய தனிப்படை  குற்றவாளிகளை கைது செய்துள்ளனர். அவரிடமிருந்து 118 பவுன்நகை 5லட்சம் மதிப்பிலான பிளாட்டினம், 5 லட்சம் மதிப்புள்ளான வைரம், 1.50 லட்சம் மதிப்பிலான வெள்ளி, 2 லேப்டாப், செல்போன் மற்றும் ராமநாதபுரத்தில் திருடப்பட்ட கார் என ரூபாய் 60.30 லட்சம் மதிப்பிலான பொருட்கள் மீட்கப்பட்டது. நீதிமன்றத்தில் அனுமதி பெற்று உரியவர்களிடம் பொருள் ஒப்படைக்கப்படும். இவர் மீது திருவெறும்பூர் காவல் நிலையத்தில் 2019, நவல்பட்டு காவல் நிலையத்தில் 2021 ஆகிய ஆண்டுகள் வழக்கு உள்ளது என கூறினார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Dhoni wish to indian Team | தட்டி தூக்கிய இந்தியா தோனி கொடுத்த SURPRISE Virat & Rohit Retirement |இடியை இறக்கிய KING - HITMAN.. உச்சக்கட்ட சோகத்தில் ரசிகர்கள்Hardik Pandya | ZERO TO HERO அவசரப்பட்டு திட்டிட்டோம் கொண்டாடிய ஹர்திக் FANSDog Attack Boy | மகனை சுத்துப்போட்ட நாய்கள் நொடியில் காப்பாற்றிய  தந்தை பதற வைக்கும் வீடியோ

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
Sundar Pichai: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ரசிகருக்கு நன்றி சொன்ன சுந்தர் பிச்சை - ஏன்?
Sundar Pichai: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ரசிகருக்கு நன்றி சொன்ன சுந்தர் பிச்சை - ஏன்?
Vidamuyarchi : அஜித் ரசிகர்களே காத்திருந்தது போதும்! விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!
Vidamuyarchi : அஜித் ரசிகர்களே காத்திருந்தது போதும்! விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!
கொடைக்கானலில் மான் வேட்டை! 6 பேரை பிடித்து உள்ளே தள்ளிய போலீஸ்!
கொடைக்கானலில் மான் வேட்டை! 6 பேரை பிடித்து உள்ளே தள்ளிய போலீஸ்!
CHIEF OF THE ARMY: மனோஜ் பாண்டே ஓய்வு! ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்ற உபேந்திர திவேதி!
CHIEF OF THE ARMY: மனோஜ் பாண்டே ஓய்வு! ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்ற உபேந்திர திவேதி!
Embed widget