மேலும் அறிய

புதுக்கோட்டை: கறம்பக்குடி பேருந்து நிலைய கடைகள் ஏலத்தில் வாக்குவாதம்

புதுக்கோட்டை மாவட்டத்தில் 3 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்ட கறம்பக்குடி பேருந்து நிலைய கடைகள் ஏலம் விடப்பட்டதில் வாக்குவாதம் ஏற்பட்டது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் கறம்பக்குடி பேரூராட்சி பஸ் நிலைய கட்டிடம் சிதிலமடைந்ததையடுத்து கடந்த 2017-ம் ஆண்டு, அவற்றை இடித்து அப்புறப்படுத்திவிட்டு 2017-18-ம் ஆண்டு மூலதன மானிய நிதி திட்டத்தின் கீழ் சுமார் ரூ.1 கோடி மதிப்பீட்டில் 18 கடைகள் கட்டப்பட்டன. அப்போது பழைய கடைகளின் ஏலதாரர்கள் கேட்டுக்கொண்டதற்கிணங்க பஸ் நிலைய வளாகத்திலேயே அவர்களுக்கு பேரூராட்சி சார்பில் 16 தற்காலிக கடைகள் அமைத்துக்கொடுக்கப்பட்டது. ஏற்கனவே பேரூராட்சி நிர்வாகம் வாடகையாக நிர்ணயித்த அதே தொகையே தற்காலிக கடைகளுக்கும் நிர்ணயம் செய்யப்பட்டு அட்வான்ஸ் தொகை ரூ.10 ஆயிரம் வசூல் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில்பேரூராட்சி நிர்வாகத்திடம் கட்டிமுடிக்கப்பட்ட புதிய கடைகளை தங்களுக்கே ஒதுக்கி தருமாறு பழைய ஏலதாரர்கள் கோரிக்கை வைத்தனர். இதற்கிடையே பஸ் நிலையத்தில் உள்ள கடைகளை பொது ஏலத்தில் விடவேண்டும் என வலியுறுத்தி தனிநபர் ஒருவர் கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்ததாக கூறப்படுகிறது. இதனால், ஏற்கனவே கடை வைத்திருந்த வாடகை தாரர்களுக்கும் கடை தர முடியாமல், பொது ஏலமும் விட முடியாமல் கடந்த 3 ஆண்டுகளாக பஸ் நிலையத்தில் கடைகள் பூட்டியே கிடந்தன. இதனால் பேரூராட்சிக்கு பல லட்சம் ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டது.


புதுக்கோட்டை: கறம்பக்குடி பேருந்து  நிலைய கடைகள் ஏலத்தில் வாக்குவாதம்
 
இந்நிலையில், 16 கடைகாரர்களும் தங்களுக்கே மீண்டும் கடைகளை ஒதுக்கி தர வேண்டும் என, மதுரை உயர்நீதிமன்றத்தில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு வழக்கு தாக்கல் செய்துள்ளனர். இதற்கிடையே 18 கடைகளில் 16 கடைகள் நேற்று பொது ஏலம் விடப்பட்டது. இதில் 39 பேர் முன்பணம் செலுத்தி ஏலம் கேட்டனர். அப்போது ஏற்கனவே கடை நடத்தியவர்களுக்கும் புதியதாக ஏலம் கேட்க வந்தவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கூச்சல் குழப்பம் நிலவியது. பின்னர் சமாதானம் ஏற்பட்டு ஏலம் நடந்தது. இதில் ஒவ்வொரு கடையும் குறைந்தபட்சம் மாத வாடகை ரூ.5 ஆயிரம் முதல் ரூ.10 ஆயிரம் வரை ஏலம் போனது. பஸ் நிலைய கடைகள் ஏலத்தையொட்டி கறம்பக்குடி பேரூராட்சி வளாகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. நீண்ட இழுபறிக்கு பின்னர் பேரூராட்சி பஸ் நிலைய கடைகள் ஏலம் போனதால் வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். மேலும் கட்டி முடிக்கப்பட்டு 3 ஆண்டுகளாக திறக்கப்படாமல் உள்ள பஸ் நிலைய கட்டிடத்தை விரைவில் திறந்து பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர.

யூடியூபில் வீடியோக்களை காண.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Fishermen Arrest: எல்லை தாண்டி மீன் பிடித்ததாக 10 மீனவர்கள் கைது - இலங்கை கடற்படை நடவடிக்கையால் அதிர்ச்சி
Fishermen Arrest: எல்லை தாண்டி மீன் பிடித்ததாக 10 மீனவர்கள் கைது - இலங்கை கடற்படை நடவடிக்கையால் அதிர்ச்சி
Breaking News LIVE: காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட டெல்லி அமைச்சர் அதிஷிக்கு உடல்நலக் குறைவு
Breaking News LIVE: காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட டெல்லி அமைச்சர் அதிஷிக்கு உடல்நலக் குறைவு
Delhi Water Crisis: தண்ணீர் கொடுக்காத ஹரியானா.. தொடர் உண்ணாவிரதத்தால் டெல்லி அமைச்சர் மருத்துவமனையில் அனுமதி!
தண்ணீர் கொடுக்காத ஹரியானா.. தொடர் உண்ணாவிரதத்தால் டெல்லி அமைச்சர் மருத்துவமனையில் அனுமதி!
T20 World Cup 2024: அரையிறுதியில் இங்கிலாந்தை எதிர்கொள்ளும் இந்தியா.. போட்டி நாளில் 88% மழைக்கு வாய்ப்பு..? என்ன நடக்கும்?
அரையிறுதியில் இங்கிலாந்தை எதிர்கொள்ளும் இந்தியா.. போட்டி நாளில் 88% மழைக்கு வாய்ப்பு..? என்ன நடக்கும்?
Advertisement
Advertisement
Advertisement
metaverse

வீடியோ

Accident News :  BIKE-ல் மோதிய பேருந்து..தூக்கி வீசப்பட்ட இளைஞர் பதற வைக்கும் CCTV காட்சிNEET Exam  : நீட் மறு தேர்வு..எழுத வராத மாணவர்கள்! நடந்தது என்ன?Amudha IAS Transfer? : இப்படி பண்ணிட்டிங்களே. அமுதா IAS Transfer? அப்செட்டில் ஸ்டாலின்!Trichy Surya |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Fishermen Arrest: எல்லை தாண்டி மீன் பிடித்ததாக 10 மீனவர்கள் கைது - இலங்கை கடற்படை நடவடிக்கையால் அதிர்ச்சி
Fishermen Arrest: எல்லை தாண்டி மீன் பிடித்ததாக 10 மீனவர்கள் கைது - இலங்கை கடற்படை நடவடிக்கையால் அதிர்ச்சி
Breaking News LIVE: காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட டெல்லி அமைச்சர் அதிஷிக்கு உடல்நலக் குறைவு
Breaking News LIVE: காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட டெல்லி அமைச்சர் அதிஷிக்கு உடல்நலக் குறைவு
Delhi Water Crisis: தண்ணீர் கொடுக்காத ஹரியானா.. தொடர் உண்ணாவிரதத்தால் டெல்லி அமைச்சர் மருத்துவமனையில் அனுமதி!
தண்ணீர் கொடுக்காத ஹரியானா.. தொடர் உண்ணாவிரதத்தால் டெல்லி அமைச்சர் மருத்துவமனையில் அனுமதி!
T20 World Cup 2024: அரையிறுதியில் இங்கிலாந்தை எதிர்கொள்ளும் இந்தியா.. போட்டி நாளில் 88% மழைக்கு வாய்ப்பு..? என்ன நடக்கும்?
அரையிறுதியில் இங்கிலாந்தை எதிர்கொள்ளும் இந்தியா.. போட்டி நாளில் 88% மழைக்கு வாய்ப்பு..? என்ன நடக்கும்?
IND vs AUS Match Highlights: டி20 உலகக் கோப்பை.. ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது இந்தியா..அரையிறுதி வாய்ப்பு உறுதி!
IND vs AUS Match Highlights: டி20 உலகக் கோப்பை.. ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது இந்தியா..அரையிறுதி வாய்ப்பு உறுதி!
Tamayo Perry: கடித்து குதறிய சுறாக்கள்.. பைரேட்ஸ் ஆஃப் தி கரீபியன் நடிகர் உயிரிழப்பு - ரசிகர்கள் இரங்கல்
கடித்து குதறிய சுறாக்கள்.. பைரேட்ஸ் ஆஃப் தி கரீபியன் நடிகர் உயிரிழப்பு - ரசிகர்கள் இரங்கல்
ரூ.50 லட்சம் செலவில் இந்திரா காந்திக்கு சிலை, அரசு விழாவாக அப்துல் கலாம் பிறந்தநாள்- தமிழ் வளர்ச்சித் துறை
ரூ.50 லட்சம் செலவில் இந்திரா காந்திக்கு சிலை, அரசு விழாவாக அப்துல் கலாம் பிறந்தநாள்- தமிழ் வளர்ச்சித் துறை
Kalki 2898 AD: கல்கி படம் என நினைத்து, வேறு படத்தை ஹவுஸ்புல் ஆக்கிய ரசிகர்கள்.. வேதனையில் பிரபாஸ்!
கல்கி படம் என நினைத்து, வேறு படத்தை ஹவுஸ்புல் ஆக்கிய ரசிகர்கள்.. வேதனையில் பிரபாஸ்!
Embed widget