மேலும் அறிய

குளத்தில் மண் எடுக்க அனுமதி வேண்டும் - புதுக்கோட்டை அருகே கடைகள் அடைத்து மக்கள் போராட்டம்

குளத்தில் மண் எடுக்க அனுமதி அளிக்கக்கோரி புதுக்கோட்டை அருகே கடைகளை அடைத்து பொதுமக்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி தாலுகா திருவரங்குளம் ஊராட்சி ஒன்றியத்தில் 48 ஊராட்சிகள் உள்ளன. இதில், கல்லாலங்குடி ஊராட்சியும் ஒன்று. இந்த ஊராட்சியில் 9 வார்டுகளும், 17 குக்கிராமங்களும் உள்ளன. இங்கு 7 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகிறார்கள். இந்தநிலையில், பழுதடைந்த சாலைகளை சீரமைக்க அப்பகுதியில் உள்ள பாலைய குளத்தில் மண் எடுக்க அனுமதி அளிக்கக்கோரி கல்லாலங்குடி ஆர்ச் நுழைவுவாயில் முன்பு 500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் நேற்று காலை உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் அப்பகுதியில் உள்ள 50-க்கும் மேற்பட்ட கடைகளை வியாபாரிகள் அடைத்து போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் தெரிவிக்கையில், “கல்லாலங்குடி ஊராட்சியில் பழுதடைந்த சாலைகளை சீரமைக்க கோரி சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு பலமுறை மனு அளித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் மழைக்காலங்களில் சாலைகளை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து, எங்களின் வேண்டுகோளுக்கு இணங்க கடந்த 2 வாரங்களுக்கு முன்பு கல்லாலங்குடி ஊராட்சி பகுதியில் உள்ள பாலைய குளத்தில் மண் எடுத்து பழுதடைந்த சாலைகள் சமப்படுத்தப்பட்டு வந்தது.
 

குளத்தில் மண் எடுக்க அனுமதி வேண்டும் - புதுக்கோட்டை அருகே கடைகள் அடைத்து மக்கள் போராட்டம்
 
இந்தநிலையில் தனிநபர் அளித்த தவறான புகாரால் மீதமுள்ள சாலைகளை சமப்படுத்த அதிகாரிகள் மண் எடுக்க அனுமதி மறுத்து உள்ளனர். இதனால் சாலைகளை சீரமைக்க முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. மேலும் கல்லாலங்குடி ஊராட்சி பகுதியில் இஸ்லாமியர்களுக்கு மயானம், குடிநீர், தெருவிளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் சரிவர செய்து தரவில்லை என கூறினர். இதுகுறித்து தகவல் அறிந்த திருவரங்குளம் ஒன்றிய ஆணையர் ஆயிஷா ராணி, கிராம வளர்ச்சி அலுவலர் (வட்டார வளர்ச்சி கிராமம்) கோகுலகிருஷ்ணன் மற்றும் ஆலங்குடி போலீஸ் துணை சூப்பிரண்டு தீபக் ரஜினி, ஆலங்குடி இன்ஸ்பெக்டர் அழகம்மை உள்ளிட்டோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். அதன்பிறகு கல்லாலங்குடி ஊராட்சி மன்ற அலுவலகத்தில் பொதுமக்களிடம் மீண்டும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். ஆனால் இதில் எவ்வித உடன்பாடும் ஏற்படவில்லை. எங்கள் கோரிக்கையை நிறைவேற்றவில்லை என்றால் அடுத்தகட்ட போராட்டம் நடைபெறும்” என தெரிவித்தனர்.
 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர.

யூடியூபில் வீடியோக்களை காண.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

புதிய ரயில் சேவைகள்...சுற்றுலா மற்றும் வேலைவாய்ப்பு பெருகும்: பிரதமர் மோடி பெருமிதம்
புதிய ரயில் சேவைகள்...சுற்றுலா மற்றும் வேலைவாய்ப்பு பெருகும்: பிரதமர் மோடி பெருமிதம்
Trichy Traffic Diversion: திணறப்போகும் திருச்சி... திமுக மாநில மாநாடு.. நாளை போக்குவரத்து மாற்றம்!
Trichy Traffic Diversion: திணறப்போகும் திருச்சி... திமுக மாநில மாநாடு.. நாளை போக்குவரத்து மாற்றம்!
தென் மாவட்ட மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி.. பிரதமர் மோடி புதுப்பிக்கப்பட்ட ரயில் நிலையங்களை திறந்து வைக்கிறார் !
தென் மாவட்ட மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி.. பிரதமர் மோடி புதுப்பிக்கப்பட்ட ரயில் நிலையங்களை திறந்து வைக்கிறார் !
விஜயின் அஜெண்டா இதுதான்... திமுகவை ஏன் எதிர்க்கிறார்? - திருமாவளவன் காட்டமான கேள்வி
விஜயின் அஜெண்டா இதுதான்... திமுகவை ஏன் எதிர்க்கிறார்? - திருமாவளவன் காட்டமான கேள்வி
ABP Premium

வீடியோ

Iran Shuts Strait of Hormuz | உயரப்போகும் FUEL PRICE இந்தியாவுக்குப் பேரிடி ஈரான் அதிரடி மூவ்!
“CBI கூப்பிட்டா நான் போவேன்” செந்தில் பாலாஜி பதிலடி பாஜக போடும் ஸ்கெட்ச்? | Senthil Balaji Vs Vijay
கிருத்திகா போட்ட ட்வீட்
Sekar Babu angry | வேலை செய்யாத LIFT! முகம் மாறிய சேகர் பாபு! திட்டிய கோவி செழியன்
Parthiban Trisha | பொளந்தெடுத்த த்ரிஷா! ஆடியோ வெளியிட்ட பார்த்திபன்! ”பெண்ணே ஆகப்பெரும் சக்தி”

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Air India: தாய்லாந்தில் ஓடுபாதையில் டமாலான விமான சக்கரம்.. ஏர் இந்தியா பயணிகள் நிலை என்ன?
Air India: தாய்லாந்தில் ஓடுபாதையில் டமாலான விமான சக்கரம்.. ஏர் இந்தியா பயணிகள் நிலை என்ன?
UPSC CAPF 2026: யுபிஎஸ்சி சிஏபிஎஃப் பணி; நாளை கடைசி- விண்ணப்பிக்க மறந்தால் வாய்ப்பு மிஸ்!
UPSC CAPF 2026: யுபிஎஸ்சி சிஏபிஎஃப் பணி; நாளை கடைசி- விண்ணப்பிக்க மறந்தால் வாய்ப்பு மிஸ்!
Tidal Park : கரூர், புதுக்கோட்டை, நாகப்பட்டினம் மக்களுக்கு ஜாக்பாட்.! ரூ.119 கோடியில் புதிய திட்டம்- கலக்கும் தமிழக அரசு
கரூர், புதுக்கோட்டை, நாகப்பட்டினம் மக்களுக்கு ஜாக்பாட்.! ரூ.119 கோடியில் புதிய திட்டம்- கலக்கும் தமிழக அரசு
மதுரை மக்களுக்கு இனிப்பான செய்தி... முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பேட்டியில் என்ன சொன்னார் தெரியுமா?
மதுரை மக்களுக்கு இனிப்பான செய்தி... முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பேட்டியில் என்ன சொன்னார் தெரியுமா?
LPG Crisis: எரிவாயு தட்டுப்பாடு: IRCTC-யின் அதிரடி நடவடிக்கை! ரயில் பயணிகளுக்கு இனி இப்படித்தான் உணவு?
LPG Crisis: எரிவாயு தட்டுப்பாடு: IRCTC-யின் அதிரடி நடவடிக்கை! ரயில் பயணிகளுக்கு இனி இப்படித்தான் உணவு?
DMK alliance seat allocation : கூடுதல் தொகுதிகள் கேட்கும் கூட்டணி கட்சிகள்.? திமுக போடும் செம பிளான் - என்ன தெரியுமா.?
கூடுதல் தொகுதிகள் கேட்கும் கூட்டணி கட்சிகள்.? திமுக போடும் செம பிளான் - என்ன தெரியுமா.?
LPG Shortage : ‘ஹோட்டல்களை மூடும் நிலை’ முதல்வர் மு.க.ஸ்டாலின் எழுதிய அவசர கடிதம்..!
LPG Shortage : ‘ஹோட்டல்களை மூடும் நிலை’ முதல்வர் மு.க.ஸ்டாலின் எழுதிய அவசர கடிதம்..!
MTC-யின் புதிய 'கோல்ட் பிரீமியம்' பேருந்து! சொகுசு பயணம், குறைந்த கட்டணம்! முன்பதிவு செய்வது எப்படி?
MTC-யின் புதிய 'கோல்ட் பிரீமியம்' பேருந்து! சொகுசு பயணம், குறைந்த கட்டணம்! முன்பதிவு செய்வது எப்படி?
Embed widget