மேலும் அறிய

Pongal gift 2024: கடுமையான நிதி நெருக்கடி இருக்கும் சூழலில் கூட ரூ.1000 - அமைச்சர் கே.என்.நேரு மகிழ்ச்சி

ஏழை மக்களுக்கு எடுத்துக்காட்டாக தமிழகம் முதல்வர் இருக்கிறார் என்பதற்கு பொங்கல் பரிசு தொகுப்பே சாட்சி - அமைச்சர் கே என் நேரு பேட்டி

தமிழ்நாடு முழுவதும் அனைத்து அரிசி கார்டுகளுக்கும் பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ.1000 ரொக்கம் இன்று முதல் வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். வரும் 14ம் தேதி வரை ரேஷன் கடைகளில் பொதுமக்கள் பெற்றுக் கொள்ளலாம். தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை அனைத்து தரப்பு மக்களும் சிறப்புடன் கொண்டாடுவதற்காக ஆண்டுதோறும் தமிழ்நாடு அரசு சார்பில் அரிசி, சர்க்கரை, கரும்பு ஆகியவற்றுடன் ரொக்க பணம் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. இந்தாண்டு பொங்கல் பண்டிகை வருகிற 15ம் தேதி (திங்கட்கிழமை) கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இந்த நிலையில் பொங்கல் பண்டிகையையொட்டி, தமிழ்நாடு அரசு சார்பில் பொங்கல் பரிசு தொகுப்புடன், ரூ.1000 ரொக்கப்பணம் வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த 5ம் தேதி அறிவித்தார். அதில் ஒன்றிய, மாநில அரசு ஊழியர்கள், வருமானவரி செலுத்துவோர், பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரிவோர், சர்க்கரை அட்டைதாரர்கள், பொருள் இல்லாத அட்டைதாரர்கள் ஆகியோரை தவிர்த்து மற்ற ரேஷன்கார்டு தாரர்கள் அனைவருக்கும் பொங்கலுக்கு முன்பே ரூ.1000 ரொக்கத்துடன், 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை, முழு கரும்பு ஆகியவை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

இதற்காக தமிழகம் முழுவதும் கடந்த சனிக்கிழமை காலை முதல் நேற்று வரை வீடு, வீடாக டோக்கன் விநியோகம் செய்யப்பட்டது. ஆனால், நிறைய பேரின் பெயர்கள் அதில் இடம் பெறாததால் அவர்களுக்கு டோக்கன் வழங்கப்படவில்லை. எனவே, கடந்த ஆண்டை போல அரிசி அட்டைதாரர்கள் அனைவருக்கும் பொங்கல் பரிசு வழங்க வேண்டும் என்று பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். பொதுமக்களின் கோரிக்கையை உடனடியாக தமிழ்நாடு அரசு பரிசீலித்தது. இதையடுத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும் ரூ.1000 ரொக்கத்துடன் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று அறிவித்தார்.


Pongal gift 2024: கடுமையான நிதி நெருக்கடி இருக்கும் சூழலில் கூட ரூ.1000 - அமைச்சர் கே.என்.நேரு மகிழ்ச்சி

பொதுமக்களின் கோரிக்கையை உடனடியாக ஏற்ற முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பல்வேறு தரப்பில் இருந்து பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. இதையடுத்து டோக்கன் கிடைக்காதவர்கள் அரிசி குடும்ப அட்டையை தங்கள் பகுதிக்கு உட்பட்ட ரேஷன் கடைகளில் காண்பித்து பொங்கல் பரிசை பெற்று கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பொங்கல் பரிசுத் தொகுப்பு இன்று முதல் வழங்கப்படுகிறது. வருகிற 13ம் தேதி வரை பொங்கல் தொகுப்பை ரேஷன் கடைகளில் பெறலாம். டோக்கனில் குறிப்பிட்ட தேதியில் வந்து பொதுமக்கள் ரூ.1000 ரொக்கப் பணம் மற்றும் பொங்கல் தொகுப்பை பெற்றுக்கொள்ளலாம்.

3 நாட்களில் பொங்கல் தொகுப்பை வாங்காதவர்களுக்கு பொங்கல் பண்டிகைக்கு முந்தைய நாளான 14ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) வழங்கப்படும் என்றும் அரசு அறிவித்துள்ளது. கூட்டத்தை கட்டுப்படுத்தும் வகையில் போலீஸ் பாதுகாப்புக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மக்கள் வெயிலில் நிற்பதை தவிர்க்கும் வகையில் சாமினா பந்தல்கள் ரேஷன் கடைகளில் அமைக்கப்பட்டு வருகிறது. பொங்கல் பரிசு தொகுப்பு முறையாக விநியோகிக்கப்படுகிறதா என்பதை கண்காணிக்க மாவட்ட கலெக்டர்கள் மேற்பார்வையில் கண்காணிப்பு குழுக்களும் அமைக்கப்பட்டுள்ளது. இதன்படி, தமிழ்நாடு முழுவதும் 2 கோடியே 19 லட்சத்து 57 ஆயிரத்து 402 குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் தொகுப்பு மற்றும் ரூ.1000 ரொக்கப்பரிசு வழங்கப்படுகிறது.


Pongal gift 2024: கடுமையான நிதி நெருக்கடி இருக்கும் சூழலில் கூட ரூ.1000 - அமைச்சர் கே.என்.நேரு மகிழ்ச்சி

இந்நிலையில் இன்று திருச்சி மாநகர் பீமநகர் பகுதியில் உள்ள நியாவிலைக்கடையில் தமிழ்நாடு நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என். நேரு பொதுமக்களுக்கு பொங்கல் சிறப்பு பரிசு தொகுப்பை வழங்கினார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் நேரு பேசியது.. கடுமையான நிதி நெருக்கடி இருக்கும் சூழலில் கூட அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் தமிழக முதல்வர் ஆயிரம் ரூபாய் வழங்கியிருப்பது மிகப்பெரும் மகிழ்ச்சி அளிக்கிறது என்றார்.. ஏழை மக்களுக்கு எடுத்துக்காட்டாக தமிழகம் முதல்வர் இருக்கிறார் என்பதற்கு இதுவே சாட்சி.. எவ்வளவு சிரமங்கள் இருந்தாலும் அதற்கு மத்தியில் இதற்கு முக்கியத்துவம் கொடுத்து பொங்கல் தொகுப்புடன் ஆயிரம் ரூபாய் வழங்கிய  முதல்வருக்கு பொதுமக்கள் நன்றி தெரிவிக்கிறார்கள். சென்னையில் மெட்ரோ பணிகள் நடைபெற்று வரும் பகுதியில் மட்டும் மழையினால் தண்ணீர் தேங்கி இருப்பதாக சொன்னார்கள் மற்றபடி வேறு எங்கேயும் தண்ணீர் நிற்கவில்லை.. நகராட்சி துறையின் சார்பில் அதற்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறோம். மக்களுக்கு எந்தவித சிரமமின்றி இருக்க தேவையான செலவுகளை செய்து பணிகளை மேற்கொள்ள வேண்டும் என முதல்வர் உத்தரவிட்டுள்ளார் அதனை எங்கள் துறை சார்ந்த அதிகாரிகள் மற்றும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்கள் இணைந்து மேற்கொண்டு வருகிறார்கள் என்றார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

‘We are not allowing’  இந்து முன்னணியினரை தடுத்து நிறுத்திய போலீஸ் கமிஷனர் - யார் இந்த  லோகநாதன் IPS?
‘We are not allowing’ யார் இந்த மதுரை கமிஷனர் லோகநாதன் IPS..?
சென்னை விமான நிலையத்தில் 39 விமானங்கள் ரத்து: பயணிகள் கடும் அவதி! காரணம் என்ன?
சென்னை விமான நிலையத்தில் 39 விமானங்கள் ரத்து: பயணிகள் கடும் அவதி! காரணம் என்ன?
Amit Shah TN Visit : ‘திருப்பரங்குன்றம் விவகாரத்தை கையிலெடுக்கும் பாஜக’ தமிழ்நாடு வருகிறார் அமித் ஷா..!
‘திருப்பரங்குன்றம் விவகாரத்தை கையிலெடுக்கும் பாஜக’ தமிழ்நாடு வருகிறார் அமித் ஷா..!
எடப்பாடி பழனிசாமி - பாமக: கூட்டணி அமைக்குமா அதிமுக? பரபரப்பை கிளப்பிய அரசியல் நகர்வு!
எடப்பாடி பழனிசாமி - பாமக: கூட்டணி அமைக்குமா அதிமுக? பரபரப்பை கிளப்பிய அரசியல் நகர்வு!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

திருப்பரங்குன்றம் தீப பதட்டம் தீபத்தூணில் ஏற்றப்படாத தீபம் நடந்தது என்ன? முழு விவரம் | Madurai | Dheepam 2025 Thiruparankundram Issue |
சினிமா காதலன் AVM சரவணன் காலமானார் அதிர்ச்சியில் திரையுலகம் | AVM Studios AVM Saravanan Death
OPS Delhi Visit |20 நிமிட பேச்சுவார்த்தை!DEAL-ஐ முடித்த குருமூர்த்திOPS அமித்ஷா சந்திப்பின் பின்னணி?
OPS Delhi Visit | OPS டெல்லி விசிட்!தனிக்கட்சியா? பாஜகவா?அரசியலில் திடீர் ட்விஸ்ட்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
‘We are not allowing’  இந்து முன்னணியினரை தடுத்து நிறுத்திய போலீஸ் கமிஷனர் - யார் இந்த  லோகநாதன் IPS?
‘We are not allowing’ யார் இந்த மதுரை கமிஷனர் லோகநாதன் IPS..?
சென்னை விமான நிலையத்தில் 39 விமானங்கள் ரத்து: பயணிகள் கடும் அவதி! காரணம் என்ன?
சென்னை விமான நிலையத்தில் 39 விமானங்கள் ரத்து: பயணிகள் கடும் அவதி! காரணம் என்ன?
Amit Shah TN Visit : ‘திருப்பரங்குன்றம் விவகாரத்தை கையிலெடுக்கும் பாஜக’ தமிழ்நாடு வருகிறார் அமித் ஷா..!
‘திருப்பரங்குன்றம் விவகாரத்தை கையிலெடுக்கும் பாஜக’ தமிழ்நாடு வருகிறார் அமித் ஷா..!
எடப்பாடி பழனிசாமி - பாமக: கூட்டணி அமைக்குமா அதிமுக? பரபரப்பை கிளப்பிய அரசியல் நகர்வு!
எடப்பாடி பழனிசாமி - பாமக: கூட்டணி அமைக்குமா அதிமுக? பரபரப்பை கிளப்பிய அரசியல் நகர்வு!
Fastest Bikes: இந்தியாவின் அதிவேகமான பைக்குகள் - 4.8 விநாடிகளில் 100 கிமீ வேகம் - டாப் ஸ்பீடில் 190KM/h
Fastest Bikes: இந்தியாவின் அதிவேகமான பைக்குகள் - 4.8 விநாடிகளில் 100 கிமீ வேகம் - டாப் ஸ்பீடில் 190KM/h
Cheapest 5 Seater EV: கெத்து காட்டும் டாடா.. 5 சீட்டர் மலிவான ev கார் இது தான்! முழு விவரம்
Cheapest 5 Seater EV: கெத்து காட்டும் டாடா.. 5 சீட்டர் மலிவான ev கார் இது தான்! முழு விவரம்
AVM Saravanan Passed Away: நேற்று பிறந்தநாள்! இன்று மறைவு.. காலமானார் ஏ.வி.எம் சரவணன்.. திரையுலகினர் அஞ்சலி
AVM Saravanan Passed Away: நேற்று பிறந்தநாள்! இன்று மறைவு.. காலமானார் ஏ.வி.எம் சரவணன்.. திரையுலகினர் அஞ்சலி
IPL 2026 Retained Players: ஐபிஎல் மினி ஏலம்.. ஒவ்வொரு அணியிலும் தற்போதுள்ள வீரர்கள் யார்? வலுவான ப்ளேயிங் லெவன்
IPL 2026 Retained Players: ஐபிஎல் மினி ஏலம்.. ஒவ்வொரு அணியிலும் தற்போதுள்ள வீரர்கள் யார்? வலுவான ப்ளேயிங் லெவன்
Embed widget