மேலும் அறிய

பன்னீர்செல்வம் நிச்சயம் பாஜகவில் இணைவார் - அதிமுக முன்னாள் அமைச்சர் வளர்மதி

  எங்களுக்கு ஒற்றை  தலைமை வேண்டும், அதுவும் எடப்பாடி பழனிசாமியின் தலைமையில் கட்சி இயங்க வேண்டும் என்பதுதான் எங்களுடைய கருத்து - வளர்மதி

ஓ பன்னீர்செல்வம் நிச்சயம் பாஜகவில் இணைவார் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் வளர்மதி கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் திருச்சியில் இன்று அளித்த பேட்டியில், “புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களின் ஆசீர்வாதத்தோடு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஆரம்பிக்கப்பட்டது. இந்த இயக்கத்தின் முக்கிய நோக்கம் தமிழ்நாட்டிலிருந்து தீய சக்தியான கலைஞரையும், திமுகவையும் அப்புறப்படுத்த வேண்டும் என்பதற்காகவே உருவாக்கப்பட்டது ஆகும். இதனை தொடர்ந்து புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களுக்கு பிறகு இந்த இயக்கத்தை திறமையுடனும், வலிமையாகவும் மக்களுக்கு நல்லாட்சியை வழங்கியவர் புரட்சித்தலைவி ஜெயலலிதா ஆவார். அவருக்கு பிறகு இந்த இயக்கம் அழிந்துவிடும், ஒழிந்துவிடும் என்று நினைத்தவருக்கு எல்லாம் ஒரு முற்றுப்புள்ளி வைக்கும் அளவிற்கு எடப்பாடி பழனிசாமி சிறப்பான ஆட்சியை கடந்த 4 ஆண்டுகாலமாக வழங்கினார். மேலும் முதலில் அதிமுகவின் சின்னத்தை முடக்க நினைத்தவர்களை எதிர்த்து போராடி மீண்டும் சின்னத்தை மீட்டெடுத்தவர் ஜெயலலிதா ஆவார். அதன் பிறகு மீண்டும் கட்சி சின்னத்தை முடக்கிய போது அவற்றை மீட்டெடுத்த பெருமை எடப்பாடி பழனிசாமியை சேரும். ஓ. பன்னீர்செல்வம் கட்சியின் ஒருங்கிணைப்பாளராகவும், சட்டமன்ற எதிர்க்கட்சி துணை தலைவராகவும் இருக்கிறார். ஆனால்,  சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் திமுக அமைச்சர்களை பாராட்டி பேசி இருக்கிறார். இதனைத் தொடர்ந்து அவருடைய மகன் ஸ்டாலினை நேரில் சந்தித்து பேசி இருக்கிறார். அதிமுகவின் கொள்கைப்படி திமுகவிடம் யார் உறவு வைத்துக் கொண்டாலும் அவர்களை உடனடியாக அடிப்படை உறுப்பினர் பதவியில்  இருந்து நீக்கப்படுவார்கள் என்பது தான்.


பன்னீர்செல்வம் நிச்சயம் பாஜகவில் இணைவார் - அதிமுக முன்னாள் அமைச்சர் வளர்மதி

புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களால் உருவாக்கப்பட்ட இயக்கம், புரட்சித்தலைவி ஜெயலலிதா அவர்களால் வழிநடத்தப்பட்ட இயக்கம், இந்த இயக்கத்தை யாராலும் எந்த கொம்பனாலும் அளிக்க முடியாது. கடந்த தேர்தல்களில் அதிமுக தோல்வியை தழுவியதற்கு முக்கிய காரணம் இரட்டை தலைமைதான். ஆகையால் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் ஒற்றை  தலைமையை ஏற்று வெற்றி பெற வேண்டும் என்பதே தொண்டர்களின் விருப்பம் ஆகும். தமிழகத்தில் திமுகவை எதிர்த்து வலிமையாக கட்சியை வழிநடத்த வேண்டும் என்றால் அதற்கு ஒரே தலைமை அண்ணன் எடப்பாடி பழனிசாமி தான். ஆகையால் அவர் ஒற்றை தலைமையேற்று கட்சியை சிறப்பாக வழிநடத்த வேண்டும் என்பதே தொண்டர்களின் எண்ணம் விருப்பமாக உள்ளது.  எங்களுக்கு ஒற்றை  தலைமை வேண்டும், அதுவும் எடப்பாடி பழனிசாமியின் தலைமையில் கட்சி இயங்க வேண்டும் என்பதுதான் எங்களுடைய கருத்து.


பன்னீர்செல்வம் நிச்சயம் பாஜகவில் இணைவார் - அதிமுக முன்னாள் அமைச்சர் வளர்மதி

மேலும் ஏற்கனவே நடைபெற்ற பொதுக்குழுவில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் ஆகியோர் கையெழுத்திட்ட கடிதம் கிடைத்த பிறகுதான் அனைவரும் அந்த கூட்டத்தில் பங்கேற்றார்கள்.  இந்நிலையில் ஒற்றை தலைமையை எடப்பாடி பழனிசாமி தலைமை ஏற்கவேண்டும், பொதுச்செயலாளர் ஆக வேண்டும் என்பதே அனைவரின் கருத்தாக இருந்தது. இந்நிலையில், ஓ.பன்னீர்செல்வத்தை அடிப்படை உறுப்பினரில் இருந்து நீக்க வேண்டும் என்றால் அதற்கு பொதுக்குழு உறுப்பினர் தான் முடிவு செய்ய வேண்டும். ஓ பன்னீர்செல்வம் நிச்சயமாக பாஜகவின் இணைவார். மேலும் யார் மக்களுக்கு நல்லது செய்வார், யாருக்கு மக்களுடைய ஆதரவு இருக்கிறதோ அவர்களுக்கு தான் பிரதமர் ஆதரவு. மேலும் பன்னீர்செல்வம் அதிமுக கட்சியை பிளவுபடுத்த நினைக்கிறார். அதிமுகவின் ஒற்றை தலைமையை அண்ணன் எடப்பாடி பழனிசாமி ஏற்ற பிறகு அவருக்கு கீழ் பணிபுரிய விரும்பினால் பன்னீர் செல்வத்தை மீண்டும் கட்சியில் சேர்த்துக் கொள்வோம். அதிமுக கட்சியை வழிநடத்த வேண்டும் என்றால் அதற்கு ஒற்றை தலைமை அவசியம் எடப்பாடி பழனிசாமி தலைமையில் செயல்பட தொண்டர்கள் நாங்கள் அனைவரும் தயாராக உள்ளோம். பெரும்பான்மையான தொண்டர்கள், உறுப்பினர்கள் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக இருக்கின்றனர். பன்னீர்செல்வம் மற்றும் சசிகலாவின் சுற்றுப்பயணம் எந்த விதத்திலும் எங்களை பாதிக்காது” என்றார்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
612
Active
28518
Recovered
157
Deaths
Last Updated: Sun 13 July, 2025 at 12:57 pm | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

லாக்கப் மரணம், மயிலாடுதுறை டிஎஸ்பி புகார்; முதலமைச்சர்  கட்டுப்பாட்டில்தான் காவல்துறை இருக்கிறதா?
லாக்கப் மரணம், மயிலாடுதுறை டிஎஸ்பி புகார்; முதலமைச்சர் கட்டுப்பாட்டில்தான் காவல்துறை இருக்கிறதா?
நல்ல செய்தி சொன்ன அமைச்சர் அன்பில்; 2430 ஆசிரியர்களுக்கு நிரந்தர அரசுப்பணி- விவரம்!
நல்ல செய்தி சொன்ன அமைச்சர் அன்பில்; 2430 ஆசிரியர்களுக்கு நிரந்தர அரசுப்பணி- விவரம்!
MBBS Fees: ஏழைகளுக்கு எட்டாக்கனி ஆகும் எம்பிபிஎஸ்; 10 ஆண்டுகளில் 200% அதிகரித்த மருத்துவப் படிப்பு கட்டணம்
MBBS Fees: ஏழைகளுக்கு எட்டாக்கனி ஆகும் எம்பிபிஎஸ்; 10 ஆண்டுகளில் 200% அதிகரித்த மருத்துவப் படிப்பு கட்டணம்
Virat Kohli: கோலி ரத்தம்டா... கிரிக்கெட் வீரராக உருவெடுத்த விராட் கோலி வாரிசு - ஹைப் எகிறுது
Virat Kohli: கோலி ரத்தம்டா... கிரிக்கெட் வீரராக உருவெடுத்த விராட் கோலி வாரிசு - ஹைப் எகிறுது
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Congress DMK Alliance | ”2026-ல் கூட்டணி ஆட்சிதான்”புயலை கிளப்பும் காங்கிரஸ் மீண்டும் வெடித்த மோதல்?
Spicejet Flight Women Fight : ’’சீட் பெல்ட் போட முடியாது’’PILOT அறைக்குள் சென்ற பெண்கள்அவசரமாக தரையிறங்கிய விமானம்
NDA Alliance | வெளியேற்றப்படும் OPS, TTV? எடப்பாடியை நம்பும் அமித்ஷா! வெளுத்து வாங்கிய புகழேந்தி
PMK ADMK Alliance | கூட்டணிக்கு அழைத்த EPS ”ஆட்சியில் பங்கு வேண்டும்” செக் வைத்த அன்புமணி
O Panneerselvam | செப்டம்பரில் புது கட்சி.. OPS எடுத்த அஸ்திரம்! ஐடியா கொடுத்த அமித்ஷா

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
லாக்கப் மரணம், மயிலாடுதுறை டிஎஸ்பி புகார்; முதலமைச்சர்  கட்டுப்பாட்டில்தான் காவல்துறை இருக்கிறதா?
லாக்கப் மரணம், மயிலாடுதுறை டிஎஸ்பி புகார்; முதலமைச்சர் கட்டுப்பாட்டில்தான் காவல்துறை இருக்கிறதா?
நல்ல செய்தி சொன்ன அமைச்சர் அன்பில்; 2430 ஆசிரியர்களுக்கு நிரந்தர அரசுப்பணி- விவரம்!
நல்ல செய்தி சொன்ன அமைச்சர் அன்பில்; 2430 ஆசிரியர்களுக்கு நிரந்தர அரசுப்பணி- விவரம்!
MBBS Fees: ஏழைகளுக்கு எட்டாக்கனி ஆகும் எம்பிபிஎஸ்; 10 ஆண்டுகளில் 200% அதிகரித்த மருத்துவப் படிப்பு கட்டணம்
MBBS Fees: ஏழைகளுக்கு எட்டாக்கனி ஆகும் எம்பிபிஎஸ்; 10 ஆண்டுகளில் 200% அதிகரித்த மருத்துவப் படிப்பு கட்டணம்
Virat Kohli: கோலி ரத்தம்டா... கிரிக்கெட் வீரராக உருவெடுத்த விராட் கோலி வாரிசு - ஹைப் எகிறுது
Virat Kohli: கோலி ரத்தம்டா... கிரிக்கெட் வீரராக உருவெடுத்த விராட் கோலி வாரிசு - ஹைப் எகிறுது
Akshay Kumar: 650 ஸ்டண்ட் கலைஞர்களுக்கு மிகப்பெரிய உதவி; அசத்திய அக்ஷய் குமார் - என்ன செஞ்சுருக்கார் பாருங்க
650 ஸ்டண்ட் கலைஞர்களுக்கு மிகப்பெரிய உதவி; அசத்திய அக்ஷய் குமார் - என்ன செஞ்சுருக்கார் பாருங்க
Nishikant Dubey: “மோடிக்கு பாஜக தேவையில்லை, பாஜகவிற்கு தான் மோடி தேவை“; ஒரே போடாய் போட்ட எம்.பி நிஷிகாந்த துபே
“மோடிக்கு பாஜக தேவையில்லை, பாஜகவிற்கு தான் மோடி தேவை“; ஒரே போடாய் போட்ட எம்.பி நிஷிகாந்த துபே
MBBS Counselling 2025: இன்னும் 2 நாளில் தொடங்கும் மருத்துவக் கலந்தாய்வு; தரவரிசைப் பட்டியல், மாநில கலந்தாய்வு, வகுப்புகள் எப்போது?
MBBS Counselling 2025: இன்னும் 2 நாளில் தொடங்கும் மருத்துவக் கலந்தாய்வு; தரவரிசைப் பட்டியல், மாநில கலந்தாய்வு, வகுப்புகள் எப்போது?
IPL Players Release: நோ கருணை.. வீரர்களை வெட்டிவிட தயாரான ஓனர்கள் - ஜொலிக்காத ஐபிஎஸ் ஸ்டார்களுக்கு கெட்-அவுட்
IPL Players Release: நோ கருணை.. வீரர்களை வெட்டிவிட தயாரான ஓனர்கள் - ஜொலிக்காத ஐபிஎஸ் ஸ்டார்களுக்கு கெட்-அவுட்
Embed widget