மேலும் அறிய

நெருங்கும் பருவமழை : திருச்சியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக டெங்கு சிகிச்சை வார்டுகள் அமைப்பு

திருச்சி அரசு மருத்துவமனையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 30 படுக்கைகளுடன் டெங்கு வார்டு தயார் நிலையில் உள்ளதாக மாவட்ட நிர்வாகம் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

திருச்சி அரசு மருத்துவமனையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 30 படுக்கைகளுடன் டெங்கு வார்டு தயார் நிலையில் உள்ளதாக  மாவட்ட நிர்வாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் திருச்சி உட்பட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தினமும் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். இவர்களில் உள் நோயாளிகளாக 700க்கும் மேற்பட்டோர் தங்கியிருந்து சிகிச்சை பெறுகின்றனர். இங்கு தீவிர விபத்து சிகிச்சை பிரிவு, அவசர வார்டு, பிரசவ மற்றும் குழந்தைகள் வார்டு, எறும்பு பிரிவு, கண் நோய் பிரிவு, தீப்புண் வார்டு, உட்பட 16 வார்டுகள் உள்ளன. மேலும் ஒரே கட்டிடத்தில் இயங்கும் வகையில் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் 16 நோய்களுக்கான வார்டுகளில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதில் இதய அறுவை சிகிச்சை மருத்துவம், கிட்னி அறுவை சிகிச்சை மருத்துவம், குடல் (கேஸ்ட்ரோ) நோய்க்கான அறுவை சிகிச்சை மருத்துவம், ஆர்த்தோ அறுவை சிகிச்சை, ஆகியவை துவங்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது சிறுநீரக பாதிப்பு டயாலிசிஸ் நோய்களுக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது.


நெருங்கும் பருவமழை : திருச்சியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக டெங்கு சிகிச்சை வார்டுகள் அமைப்பு

இதற்கிடையில்  தலைமை செயலகத்தில் அனைத்து துறை அதிகாரிகளுடன் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நடத்திய ஆலோசனை கூட்டத்தில் பருவமழை காலம் துவங்க உள்ள நிலையில், பொது மக்களின் உயிருக்கும், உடமைக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படகூடாது என்றார். மேலும் அதற்கு தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மாவட்ட நிர்வாகம் எடுக்க வேண்டும் என தெரிவித்திருந்தார். அதன்படி தற்போது கொரோனா  இரண்டாவது அலையின்  தாக்கத்தை அரசு திறமையாக கையாண்டு குறைத்து வருகிறது. இதில் தற்போது மழைக்கால நோய் பாதிப்பு ஏற்படக்கூடாது என்பதே அடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருச்சி அரசு மருத்துவமனையில் எப்எம் 2 ஆவது வார்டில் 30 படுக்கைகளுடன் கூடிய டெங்கு வார்டு ஏற்படுத்தப்பட்டுள்ளது,  முற்றிலும்  தயாராக வைக்கப்பட்டுள்ளது என்றார்.


நெருங்கும் பருவமழை : திருச்சியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக டெங்கு சிகிச்சை வார்டுகள் அமைப்பு

இதுகுறித்து மருத்துவமனை முதல்வர் வனிதா கூறுகையில் மகாத்மா காந்தி அரசு மருத்துவமனையில் அனைத்து நோய்களுக்கும் சிறப்பான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது தற்போது மழை காலம் துவங்க உள்ள நிலையில் முன்னெச்சரிக்கையாக டெங்கு வார்டு ஏற்படுத்தப்பட்டு அதில் அனைத்து வசதிகளும் செய்து 30 படுக்கை வசதிகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. மேலும் சிகிச்சை அளிக்க கூடிய வகையில் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கும் நியமிக்கப்பட்டுள்ளனர். மாநகரில், மாநகராட்சி ஊழியர் உடன் மருத்துவ குழுவினரும் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். எனவே திருச்சி மாநகர மாவட்ட பொது மக்கள் எவ்வித பயமுமின்றி,  மழைகாலத்தில் டெங்கு, மலேரியா, போன்ற நோய்கள் வருவது வழக்கமான ஒன்று தான் ஆகையால் மக்கள் அதை பற்றி அச்சம் படவேண்டிய அவசியமில்லை,திருச்சி மாநகராட்சியும், மருத்துவக் குழுவும் இணைந்து பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம். ஆகையால் உடலில் எந்தவிதமான ஒரு அறிகுறிகள் தென்பட்டாலும்  உடனடியாக அரசு மருத்துவமனைக்கு வந்து சிகிச்சை பெற்று நலமுடன் செல்லலாம் எனவும் தெரிவித்தார்.

தலைப்பு செய்திகள்

Trichy power cut: திருச்சியில் நாளை (06-06-2026) எங்கெல்லாம் மின் தடை? - ஏரியாக்களின் லிஸ்ட் இதோ
திருச்சியில் நாளை எங்கெல்லாம் மின் தடை? - ஏரியாக்களின் லிஸ்ட் இதோ
மக்களின் வரிப்பணம் வீணாகிறதா? திருச்சி உறையூரில் முடங்கிக்கிடக்கும் நவீன சந்தை வளாகம்
மக்களின் வரிப்பணம் வீணாகிறதா? திருச்சி உறையூரில் முடங்கிக்கிடக்கும் நவீன சந்தை வளாகம்
15 வயது சிறுமி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாதது கவலையளிக்கிறது – அன்புமணி இராமதாஸ்!
15 வயது சிறுமி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாதது கவலையளிக்கிறது – அன்புமணி இராமதாஸ்!
தூண்கள் இல்லாத அதிநவீன வடிவமைப்பு; டிசம்பருக்குள் மக்கள் பயன்பாட்டிற்கு வரும்: என்ன தெரியுங்களா? 
தூண்கள் இல்லாத அதிநவீன வடிவமைப்பு; டிசம்பருக்குள் மக்கள் பயன்பாட்டிற்கு வரும்: என்ன தெரியுங்களா? 

வீடியோ

DMK On INDIA Alliance | துரோகம் செய்த காங்கிரஸ் திமுகவின் அதிரடி முடிவு பலவீனமான I.N.D.I.A கூட்டணி?
Annamalai New Party |
NEET Exam Student Suicide |
Illegal Relationship | மனைவி உயிரோடுதான் இருக்காங்க குழந்தையுடன் கணவன் தலைமறைவு போலீஸார் விசாரணை!
Annamalai Resignation | பாஜகவுக்கு Bye Bye! புதிய பாதையில் அண்ணாமலை.. வெளியான அறிக்கை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Annamalai: அண்ணாமலையும் இல்ல.. யாரை வச்சு தாமரைக்கு தண்ணி ஊத்துறது? புலம்பும் பாஜக
Annamalai: அண்ணாமலையும் இல்ல.. யாரை வச்சு தாமரைக்கு தண்ணி ஊத்துறது? புலம்பும் பாஜக
Annamalai: 18 மாதமாக பாஜகவில் பிரச்னை.. புது கட்சி தொடங்கப்போவதாக அண்ணாமலை அறிவிப்பு!
Annamalai: 18 மாதமாக பாஜகவில் பிரச்னை.. புது கட்சி தொடங்கப்போவதாக அண்ணாமலை அறிவிப்பு!
TVK Vijay: தமிழ்நாட்டில் சாதி வாரி கணக்கெடுப்பு - பட்ஜெட் உரையிலேயே அறிவிப்பு? பாமக கூட்டத்தில் தவெக பேச்சு
தமிழ்நாட்டில் சாதி வாரி கணக்கெடுப்பு - பட்ஜெட் உரையிலேயே அறிவிப்பு? PMK கூட்டத்தில் TVK பேச்சு
Sathyaraj: கட்டப்பா கண்ணீர் வடிக்கலாமா? சத்யராஜை கலாய்த்து தள்ளும் தவெக பாய்ஸ் - இணையத்தில் இதான் ட்ரெண்ட்
Sathyaraj: கட்டப்பா கண்ணீர் வடிக்கலாமா? சத்யராஜை கலாய்த்து தள்ளும் தவெக பாய்ஸ் - இணையத்தில் இதான் ட்ரெண்ட்
இந்தியா கூட்டணி சிதறிவிடக் கூடாது; திமுக பங்கேற்காதது வருத்தமளிக்கிறது: விசிக தலைவர் திருமாவளவன் பேட்டி!
இந்தியா கூட்டணி சிதறிவிடக் கூடாது; திமுக பங்கேற்காதது வருத்தமளிக்கிறது: விசிக தலைவர் திருமாவளவன் பேட்டி!
வாவ்.. வாட் எ லுக்.. ஸ்டைலும், கம்பீரமும் சேர்ந்த Royal Enfield Shortgun 650! விலை எவ்ளோ?
வாவ்.. வாட் எ லுக்.. ஸ்டைலும், கம்பீரமும் சேர்ந்த Royal Enfield Shortgun 650! விலை எவ்ளோ?
Annamalai: தமிழ்நாட்டு மக்களுக்கு புரியும் மொழியில் பாஜக பேசவில்லை - அண்ணாமலை ராஜினாமா கடித விவரங்கள்
தமிழ்நாட்டு மக்களுக்கு புரியும் மொழியில் பாஜக பேசவில்லை - அண்ணாமலை ராஜினாமா கடித விவரங்கள்
RBI வட்டி விகித அறிவிப்பு இன்று: ரெப்போ ரேட் குறித்து பொருளாதார வல்லுநர்கள் கணிப்பு!..
RBI வட்டி விகித அறிவிப்பு இன்று: ரெப்போ ரேட் குறித்து பொருளாதார வல்லுநர்கள் கணிப்பு!..
Embed widget