மேலும் அறிய

நெருங்கும் பருவமழை : திருச்சியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக டெங்கு சிகிச்சை வார்டுகள் அமைப்பு

திருச்சி அரசு மருத்துவமனையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 30 படுக்கைகளுடன் டெங்கு வார்டு தயார் நிலையில் உள்ளதாக மாவட்ட நிர்வாகம் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

திருச்சி அரசு மருத்துவமனையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 30 படுக்கைகளுடன் டெங்கு வார்டு தயார் நிலையில் உள்ளதாக  மாவட்ட நிர்வாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் திருச்சி உட்பட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தினமும் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். இவர்களில் உள் நோயாளிகளாக 700க்கும் மேற்பட்டோர் தங்கியிருந்து சிகிச்சை பெறுகின்றனர். இங்கு தீவிர விபத்து சிகிச்சை பிரிவு, அவசர வார்டு, பிரசவ மற்றும் குழந்தைகள் வார்டு, எறும்பு பிரிவு, கண் நோய் பிரிவு, தீப்புண் வார்டு, உட்பட 16 வார்டுகள் உள்ளன. மேலும் ஒரே கட்டிடத்தில் இயங்கும் வகையில் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் 16 நோய்களுக்கான வார்டுகளில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதில் இதய அறுவை சிகிச்சை மருத்துவம், கிட்னி அறுவை சிகிச்சை மருத்துவம், குடல் (கேஸ்ட்ரோ) நோய்க்கான அறுவை சிகிச்சை மருத்துவம், ஆர்த்தோ அறுவை சிகிச்சை, ஆகியவை துவங்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது சிறுநீரக பாதிப்பு டயாலிசிஸ் நோய்களுக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது.


நெருங்கும் பருவமழை : திருச்சியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக டெங்கு சிகிச்சை வார்டுகள் அமைப்பு

இதற்கிடையில்  தலைமை செயலகத்தில் அனைத்து துறை அதிகாரிகளுடன் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நடத்திய ஆலோசனை கூட்டத்தில் பருவமழை காலம் துவங்க உள்ள நிலையில், பொது மக்களின் உயிருக்கும், உடமைக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படகூடாது என்றார். மேலும் அதற்கு தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மாவட்ட நிர்வாகம் எடுக்க வேண்டும் என தெரிவித்திருந்தார். அதன்படி தற்போது கொரோனா  இரண்டாவது அலையின்  தாக்கத்தை அரசு திறமையாக கையாண்டு குறைத்து வருகிறது. இதில் தற்போது மழைக்கால நோய் பாதிப்பு ஏற்படக்கூடாது என்பதே அடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருச்சி அரசு மருத்துவமனையில் எப்எம் 2 ஆவது வார்டில் 30 படுக்கைகளுடன் கூடிய டெங்கு வார்டு ஏற்படுத்தப்பட்டுள்ளது,  முற்றிலும்  தயாராக வைக்கப்பட்டுள்ளது என்றார்.


நெருங்கும் பருவமழை : திருச்சியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக டெங்கு சிகிச்சை வார்டுகள் அமைப்பு

இதுகுறித்து மருத்துவமனை முதல்வர் வனிதா கூறுகையில் மகாத்மா காந்தி அரசு மருத்துவமனையில் அனைத்து நோய்களுக்கும் சிறப்பான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது தற்போது மழை காலம் துவங்க உள்ள நிலையில் முன்னெச்சரிக்கையாக டெங்கு வார்டு ஏற்படுத்தப்பட்டு அதில் அனைத்து வசதிகளும் செய்து 30 படுக்கை வசதிகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. மேலும் சிகிச்சை அளிக்க கூடிய வகையில் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கும் நியமிக்கப்பட்டுள்ளனர். மாநகரில், மாநகராட்சி ஊழியர் உடன் மருத்துவ குழுவினரும் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். எனவே திருச்சி மாநகர மாவட்ட பொது மக்கள் எவ்வித பயமுமின்றி,  மழைகாலத்தில் டெங்கு, மலேரியா, போன்ற நோய்கள் வருவது வழக்கமான ஒன்று தான் ஆகையால் மக்கள் அதை பற்றி அச்சம் படவேண்டிய அவசியமில்லை,திருச்சி மாநகராட்சியும், மருத்துவக் குழுவும் இணைந்து பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம். ஆகையால் உடலில் எந்தவிதமான ஒரு அறிகுறிகள் தென்பட்டாலும்  உடனடியாக அரசு மருத்துவமனைக்கு வந்து சிகிச்சை பெற்று நலமுடன் செல்லலாம் எனவும் தெரிவித்தார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Actor Dileep Release: நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கு: பிரபல மலையாள நடிகர் திலீப் விடுதலை - நீதிமன்றம் உத்தரவு
Actor Dileep Release: நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கு: பிரபல மலையாள நடிகர் திலீப் விடுதலை - நீதிமன்றம் உத்தரவு
தமிழகத்தை சேர்ந்தவர்களுக்கு கண்டிப்பாக அனுமதி இல்லை.!  தவெகவினருக்கு 10 கட்டளையிட்ட விஜய்
தமிழகத்தை சேர்ந்தவர்களுக்கு கண்டிப்பாக அனுமதி இல்லை.! தவெகவினருக்கு 10 கட்டளையிட்ட விஜய்
Minister KN Nehru: விடாமல் துரத்தும் ED..! கே.என்.நேரு மீது FIR.? டிஜிபிக்கு மீண்டும் பறந்த கடிதம்- என்ன சொல்லியிருக்கு தெரியுமா.?
விடாமல் துரத்தும் ED..! கே.என்.நேரு மீது FIR.? டிஜிபிக்கு மீண்டும் பறந்த கடிதம்- என்ன சொல்லியிருக்கு தெரியுமா.?
Trump Netflix: நெட்ஃப்ளிக்ஸை முடிக்க திட்டம்? கட்டப்பஞ்சாயத்தில் குதித்த ட்ரம்ப் -  வார்னர் ப்ரோஸ் நிலை என்ன?
Trump Netflix: நெட்ஃப்ளிக்ஸை முடிக்க திட்டம்? கட்டப்பஞ்சாயத்தில் குதித்த ட்ரம்ப் - வார்னர் ப்ரோஸ் நிலை என்ன?
ABP Premium

வீடியோ

KN NEHRU ED | ’’உடனே FIR போடுங்க!’’நெருக்கும் அமலாக்கத்துறைசிக்கலில் K.N.நேரு?
பல்லத்தில் கவிழ்ந்த கார் ஒரே குடும்பத்தில் மூவர் பலிபதற வைக்கும் காட்சி | Villupuram Accident News
“என் கல்யாணம் நின்னுருச்சு” இது தான் காரணம்? ஸ்மிருதி மந்தனா பகீர் பதிவு | Palash Muchchal Smriti Mandhana Marriage Called Off
Sabareesan Meet Rahul | DEAL-ஐ முடித்த சபரீசன்! OK சொன்ன ராகுல்.. பிரவீன் சக்ரவர்த்தி அதிர்ச்சி
”பி.ஆர். பாண்டியனுக்கு 13 ஆண்டு சிறை”திருவாரூர் நீதிமன்றம் அதிரடிதீர்ப்பு முழு விவரம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Actor Dileep Release: நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கு: பிரபல மலையாள நடிகர் திலீப் விடுதலை - நீதிமன்றம் உத்தரவு
Actor Dileep Release: நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கு: பிரபல மலையாள நடிகர் திலீப் விடுதலை - நீதிமன்றம் உத்தரவு
தமிழகத்தை சேர்ந்தவர்களுக்கு கண்டிப்பாக அனுமதி இல்லை.!  தவெகவினருக்கு 10 கட்டளையிட்ட விஜய்
தமிழகத்தை சேர்ந்தவர்களுக்கு கண்டிப்பாக அனுமதி இல்லை.! தவெகவினருக்கு 10 கட்டளையிட்ட விஜய்
Minister KN Nehru: விடாமல் துரத்தும் ED..! கே.என்.நேரு மீது FIR.? டிஜிபிக்கு மீண்டும் பறந்த கடிதம்- என்ன சொல்லியிருக்கு தெரியுமா.?
விடாமல் துரத்தும் ED..! கே.என்.நேரு மீது FIR.? டிஜிபிக்கு மீண்டும் பறந்த கடிதம்- என்ன சொல்லியிருக்கு தெரியுமா.?
Trump Netflix: நெட்ஃப்ளிக்ஸை முடிக்க திட்டம்? கட்டப்பஞ்சாயத்தில் குதித்த ட்ரம்ப் -  வார்னர் ப்ரோஸ் நிலை என்ன?
Trump Netflix: நெட்ஃப்ளிக்ஸை முடிக்க திட்டம்? கட்டப்பஞ்சாயத்தில் குதித்த ட்ரம்ப் - வார்னர் ப்ரோஸ் நிலை என்ன?
Top 10 News Headlines: ஸ்டாலின் அட்வைஸ், இந்தியா வரும் ஜெலன்ஸ்கி, அத்துமீறிய பேராசிரியர்கள்  - 11 மணி வரை இன்று
Top 10 News Headlines: ஸ்டாலின் அட்வைஸ், இந்தியா வரும் ஜெலன்ஸ்கி, அத்துமீறிய பேராசிரியர்கள் - 11 மணி வரை இன்று
TVK Sengottaiyan: நாடே அஞ்சப்போகிறது.. தவெக சின்னத்திற்கு பில்டப்பை எகிற வைத்த செங்கோட்டையன் - என்னவா இருக்கும்?
TVK Sengottaiyan: நாடே அஞ்சப்போகிறது.. தவெக சின்னத்திற்கு பில்டப்பை எகிற வைத்த செங்கோட்டையன் - என்னவா இருக்கும்?
அறை எண் 305 ஞாபகம் இருக்கா... பிளாஷ்பேக்கை சொல்லி நாஞ்சில் சம்பத்தை கதறவிடும் திமுக நிர்வாகி
அறை எண் 305 ஞாபகம் இருக்கா... பிளாஷ்பேக்கை சொல்லி நாஞ்சில் சம்பத்தை கதறவிடும் திமுக நிர்வாகி
டிசம்பர் 9, 11, 16... அடுத்தடுத்து உருவாகும் காற்றழுத்த தாழ்வு- தமிழகத்திற்கு அலர்ட் விடுத்த வெதர்மேன்
டிசம்பர் 9, 11, 16... அடுத்தடுத்து உருவாகும் காற்றழுத்த தாழ்வு- தமிழகத்திற்கு அலர்ட் விடுத்த வெதர்மேன்
Embed widget