மேலும் அறிய

நெருங்கும் பருவமழை : திருச்சியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக டெங்கு சிகிச்சை வார்டுகள் அமைப்பு

திருச்சி அரசு மருத்துவமனையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 30 படுக்கைகளுடன் டெங்கு வார்டு தயார் நிலையில் உள்ளதாக மாவட்ட நிர்வாகம் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

திருச்சி அரசு மருத்துவமனையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 30 படுக்கைகளுடன் டெங்கு வார்டு தயார் நிலையில் உள்ளதாக  மாவட்ட நிர்வாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் திருச்சி உட்பட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தினமும் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். இவர்களில் உள் நோயாளிகளாக 700க்கும் மேற்பட்டோர் தங்கியிருந்து சிகிச்சை பெறுகின்றனர். இங்கு தீவிர விபத்து சிகிச்சை பிரிவு, அவசர வார்டு, பிரசவ மற்றும் குழந்தைகள் வார்டு, எறும்பு பிரிவு, கண் நோய் பிரிவு, தீப்புண் வார்டு, உட்பட 16 வார்டுகள் உள்ளன. மேலும் ஒரே கட்டிடத்தில் இயங்கும் வகையில் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் 16 நோய்களுக்கான வார்டுகளில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதில் இதய அறுவை சிகிச்சை மருத்துவம், கிட்னி அறுவை சிகிச்சை மருத்துவம், குடல் (கேஸ்ட்ரோ) நோய்க்கான அறுவை சிகிச்சை மருத்துவம், ஆர்த்தோ அறுவை சிகிச்சை, ஆகியவை துவங்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது சிறுநீரக பாதிப்பு டயாலிசிஸ் நோய்களுக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது.


நெருங்கும் பருவமழை : திருச்சியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக டெங்கு சிகிச்சை வார்டுகள் அமைப்பு

இதற்கிடையில்  தலைமை செயலகத்தில் அனைத்து துறை அதிகாரிகளுடன் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நடத்திய ஆலோசனை கூட்டத்தில் பருவமழை காலம் துவங்க உள்ள நிலையில், பொது மக்களின் உயிருக்கும், உடமைக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படகூடாது என்றார். மேலும் அதற்கு தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மாவட்ட நிர்வாகம் எடுக்க வேண்டும் என தெரிவித்திருந்தார். அதன்படி தற்போது கொரோனா  இரண்டாவது அலையின்  தாக்கத்தை அரசு திறமையாக கையாண்டு குறைத்து வருகிறது. இதில் தற்போது மழைக்கால நோய் பாதிப்பு ஏற்படக்கூடாது என்பதே அடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருச்சி அரசு மருத்துவமனையில் எப்எம் 2 ஆவது வார்டில் 30 படுக்கைகளுடன் கூடிய டெங்கு வார்டு ஏற்படுத்தப்பட்டுள்ளது,  முற்றிலும்  தயாராக வைக்கப்பட்டுள்ளது என்றார்.


நெருங்கும் பருவமழை : திருச்சியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக டெங்கு சிகிச்சை வார்டுகள் அமைப்பு

இதுகுறித்து மருத்துவமனை முதல்வர் வனிதா கூறுகையில் மகாத்மா காந்தி அரசு மருத்துவமனையில் அனைத்து நோய்களுக்கும் சிறப்பான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது தற்போது மழை காலம் துவங்க உள்ள நிலையில் முன்னெச்சரிக்கையாக டெங்கு வார்டு ஏற்படுத்தப்பட்டு அதில் அனைத்து வசதிகளும் செய்து 30 படுக்கை வசதிகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. மேலும் சிகிச்சை அளிக்க கூடிய வகையில் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கும் நியமிக்கப்பட்டுள்ளனர். மாநகரில், மாநகராட்சி ஊழியர் உடன் மருத்துவ குழுவினரும் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். எனவே திருச்சி மாநகர மாவட்ட பொது மக்கள் எவ்வித பயமுமின்றி,  மழைகாலத்தில் டெங்கு, மலேரியா, போன்ற நோய்கள் வருவது வழக்கமான ஒன்று தான் ஆகையால் மக்கள் அதை பற்றி அச்சம் படவேண்டிய அவசியமில்லை,திருச்சி மாநகராட்சியும், மருத்துவக் குழுவும் இணைந்து பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம். ஆகையால் உடலில் எந்தவிதமான ஒரு அறிகுறிகள் தென்பட்டாலும்  உடனடியாக அரசு மருத்துவமனைக்கு வந்து சிகிச்சை பெற்று நலமுடன் செல்லலாம் எனவும் தெரிவித்தார்.

தலைப்பு செய்திகள்

தெறித்த ரத்தம் ‘ஜனநாயகன்’ படத்திற்காக நடந்த கொடூரம்! விஜய் ரசிகர் செய்த அதிர்ச்சி காரியம் - கொதித்த மக்கள்
தெறித்த ரத்தம் ‘ஜனநாயகன்’ படத்திற்காக நடந்த கொடூரம்! விஜய் ரசிகர் செய்த அதிர்ச்சி காரியம் - கொதித்த மக்கள்
Trichy power cut: திருச்சியில் நாளை (23-7-2026) எங்கெல்லாம் மின்சாரம் இருக்காது? - மின்வாரியம் வெளியிட்ட பட்டியல்
திருச்சியில் நாளை (23-7-2026) எங்கெல்லாம் மின்சாரம் இருக்காது? - மின்வாரியம் வெளியிட்ட பட்டியல்
Trichy power cut: நாளை (22-07-2026) திருச்சியில் மின்தடை! காலை முதல் மாலை வரை எந்தெந்த பகுதிகளில் கரண்ட் இருக்காது?
நாளை (22-07-2026) திருச்சியில் மின்தடை! காலை முதல் மாலை வரை எந்தெந்த பகுதிகளில் கரண்ட் இருக்காது?
Trichy power cut (18-07-2026): நாளை திருச்சியில் மின்தடை! உங்க ஏரியாவில் கரண்ட் இருக்குமா? உடனே செக் பண்ணுங்க
நாளை திருச்சியில் மின்தடை! உங்க ஏரியாவில் கரண்ட் இருக்குமா? உடனே செக் பண்ணுங்க

வீடியோ

SFI vs Police : அனுமதி இன்றி நுழைந்த SFI “REMAND பண்ணிடுவேன்” மாணவர்கள் VS போலீஸ்
CJI on CJP Protest : டெல்லி மாணவர்கள் தடியடி”எங்களுக்கு டைம் இல்ல” விசாரிக்க மறுத்த தலைமை நீதிபதி
Kangana Ranaut | ”ஐயோ.. பயந்துட்டேன்! விட்டா எங்கள அடிச்சிருப்பாங்க”போராட்டக்காரர்களை திட்டிய கங்கனா
Mallikarjun Kharge | சம்பவம் செய்த கார்கே! சைகை காட்டிய சோனியா! ”ஏய் உட்காரு.. உட்காரு”
Vanni Arasu Slams DMK :”எலும்பு எல்லாருக்கும் இருக்குஞாபகம் வச்சுக்கோங்க” இறங்கி அடித்த வன்னி அரசு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
JanaNayagan Review: FDFS ஷோ ஓவர்..! CM விஜயின் ஜனநாயகன் முழு விருந்தா? எப்படி இருக்கு? திரைப்பட விமர்சனம் இதோ
FDFS ஷோ ஓவர்..! CM விஜயின் ஜனநாயகன் முழு விருந்தா? எப்படி இருக்கு? திரைப்பட விமர்சனம் இதோ
PM Modi: தடியடிக்கு கண்டனம் எல்லாம் இல்லை..! ”இளைஞர்கள் எதிர்காலம் தான் முக்கியம்” - பிரதமர் மோடி ட்வீட்
தடியடிக்கு கண்டனம் எல்லாம் இல்லை..! ”இளைஞர்கள் எதிர்காலம் தான் முக்கியம்” - பிரதமர் மோடி ட்வீட்
Chennai Bengaluru Expressway: சென்னை டூ பெங்களூரு, 263KM நீளம், 7 தொழிற்சாலை மையங்களை இணைக்கும் திட்டம் - இனி 3 மணி நேரமே
சென்னை டூ பெங்களூரு, 263KM நீளம், 7 தொழிற்சாலை மையங்களை இணைக்கும் திட்டம் - இனி 3 மணி நேரமே
JanaNayagan Collection: முதல் நாளே ரூ.100 கோடி வசூல் - கல்லா கட்டும் CM விஜயின் ஜனநாயகன் - வீக் எண்ட் எப்படி?
முதல் நாளே ரூ.100 கோடி வசூல் - கல்லா கட்டும் CM விஜயின் ஜனநாயகன் - வீக் எண்ட் எப்படி?
”சீமான்னா யாரு”
”சீமான்னா யாரு” "அதெல்லாம் வேணாம்னு நீங்க தூக்கி எறிஞ்சது”- அமைச்சரின் அடுத்தடுத்து சர்ச்சை பேச்சு- விளாசிய நெட்டிசன்கள்
CM ஓவர்.. அடுத்த டார்கெட் PM.. காங்கிரசை அலற வைக்கும் விஜய்யின் மாஸ்டர் பிளான்- நடப்பது என்ன.?
CM ஓவர்.. அடுத்த டார்கெட் PM.. காங்கிரசை அலற வைக்கும் விஜய்யின் மாஸ்டர் பிளான்- நடப்பது என்ன.?
Skoda Mileage SUV: ஸ்கோடாவின் பெஸ்ட் மைலேஜ் எஸ்யுவி - 850KM ரேஞ்ச், 5 ஸ்டார் ரேட்டிங் - ரூ.8 லட்சம் பட்ஜெட்டில்
ஸ்கோடாவின் பெஸ்ட் மைலேஜ் எஸ்யுவி - 850KM ரேஞ்ச், 5 ஸ்டார் ரேட்டிங் - ரூ.8 லட்சம் பட்ஜெட்டில்
ஜனநாயகனை பார்த்து தேம்பி தேம்பி அழுத அமைச்சர் பர்வேஷ்.! சோகத்தில் தியேட்டர்- இது தான் காரணமா.?
ஜனநாயகனை பார்த்து தேம்பி தேம்பி அழுத அமைச்சர் பர்வேஷ்.! சோகத்தில் தியேட்டர்- இது தான் காரணமா.?
Embed widget