மேலும் அறிய

வார்த்தைகளில் டாக்டர் கலைஞரை வெல்ல யாராலும் முடியாது - அரசு தலைமை கொறடா கோவி.செழியன்

முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, சட்டமன்ற நாயகர் கலைஞர் நடைபெற்ற கருத்தரங்களில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கபட்டது.

முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, சட்டமன்ற நாயகர் கலைஞர் கருத்தரங்கம் வெதிருச்சி தில்லைநகர் கி.ஆ.பெ.விஸ்வநாதம் மேல்நிலைப்பள்ளி மற்றும் மேலசிந்தாமணி இ.ஆர்.மேல்நிலைப்பள்ளிகளில் தமிழ்நாடு அரசு தலைமை கொறடா முனைவர் கோவி.செழியன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இக்கருத்தரங்கில் வெற்றி பெற்ற பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் மற்றும் பாராட்டு சான்றிதழ்களை அரசு தலைமை கொறடா முனைவர் கோவி.செழியன் அவர்கள் வழங்கினார். இதனை தொடர்ந்து அரசு தலைமை கொறடா முனைவர் கோவி.செழியன் அவர்கள் பேசியது.. தந்தை பெரியாரின் மாணவராய், பேரறிஞர் அண்ணாவின் தம்பியாய், வாழ்நாள் முழுவதும் மக்களுக்காகவே வாழ்ந்து தன் வாழ்நாளை அர்ப்பணித்து உயர்ந்த தலைவர் டாக்டர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தமிழ்நாடு சட்டப்பேரவையால் அமைக்கப்பட்டு, 12 குழுக்களில் ஒரு குழுவான 'சட்டமன்ற நாயகர் கலைஞர்" என்ற விழாக்குழுவின் சார்பில் தமிழ்நாடு சட்டமன்ற பேரவையின் குழுத்தலைவர் அவர்களின் தலைமையில் அமைக்கப்பட்ட குழுவின் சார்பில் தமிழ்நாடு முழுவதும் உள்ள மாவட்டங்களில் மாவட்ட அளவில் 3 கல்லூரிகள், 3 பள்ளிகளும் மற்றும் மாநில அளவில் 100 கல்லூரிகள், 100 பள்ளிகள் என தேர்வு செய்யப்பட்டு, மாநில அளவில் இறுதிப்போட்டிகள் நடத்திட வேண்டும் என்ற தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணையின்படி நடைபெற்று வருகிறது.


வார்த்தைகளில் டாக்டர் கலைஞரை வெல்ல யாராலும் முடியாது - அரசு தலைமை கொறடா கோவி.செழியன்

மேலும், இந்த அரங்கம் அற்புதமான பேச்சாளர்களை கொண்ட அரங்கமாக இந்த அரங்கம் உள்ளது. முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் பெண்களின் முன்னேற்றத்திற்காக எண்ணற்ற பல திட்டங்களை தொலைநோக்கு பார்வையுடன் செயல்படுத்தினார்கள். முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்கள் சட்டமன்றத்தில் ஆற்றிய சிறப்பு மிக்க உரைகளை இங்கு பேசிய மாணவ,மாணவிகள் அனைவரையும் நான் மனதார பாராட்டுகிறேன். மேலும், வார்த்தைகளில் டாக்டர் கலைஞர் அவர்களை வெல்ல யாராலும் முடியாது. அவர்களை போற்றி பேசிய உங்களுக்கு எனது பாராட்டுகளையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன். தமிழ்நாடு முழுவதும் நடைபெற்று வரும் இந்த கருத்தரங்கில், மாநில அளவில் நடைபெறும் போட்டிகளில் திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த மாணவ, மாணவியர்கள் வெற்றி பெற்று மாவட்டத்திற்கும் உங்கள் பள்ளிக்கும் பெருமை சேர்க்க வேண்டும் என தெரிவித்தார்.


வார்த்தைகளில் டாக்டர் கலைஞரை வெல்ல யாராலும் முடியாது - அரசு தலைமை கொறடா கோவி.செழியன்

திருச்சி தில்லைநகர் கி.ஆ.பெ.விஸ்வநாதம் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற சட்டமன்ற நாயகர் கலைஞர் கருத்தரங்கு பேச்சுப் போட்டியில் பங்கேற்ற 5 மாணவியர்களுக்கு பங்கேற்பு பாராட்டு சான்றிதழ்களையும் மற்றும் முதல் 3 இடங்களை (முதல் பரிசு ரூ.3,000/-, 2-ம் பரிசு ரூ.2,000/-, 3-ம் பரிசு ரூ.1,000/-) பெற்ற பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு பரிசுகள் மற்றும் பாராட்டு சான்றிதழ்களையும்,  அரசு தலைமை கொறடா அவர்கள் வழங்கி பாராட்டினார்.

இதனைத் தொடர்ந்து, மேலசிந்தாமணி இ.ஆர்.மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற சட்டமன்ற நாயகர் கலைஞர் கருத்தரங்கு பேச்சுப் போட்டியில் பங்கேற்ற 5 மாணவ, மாணவியர்களுக்கு பங்கேற்பு சான்றிதழ்களையும் மற்றும் முதல் 3 இடங்களை (முதல் பரிசு ரூ.3,000/-, 2-ம் பரிசு ரூ.2,000/-, 3-ம் பரிசு ரூ.1,000/-) பெற்ற கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கு பரிசுகள் மற்றும் பாராட்டு சான்றிதழ்களையும்,  அரசு தலைமை கொறடா அவர்கள் வழங்கி பாராட்டினார். இந்த நிகழ்ச்சியில் திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார், திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகன் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட அதிகாரிகள் கலந்துக்கொண்டனர். 

தலைப்பு செய்திகள்

வாடகை பாக்கி வைத்திருந்த கடைகள்... அதிரடியாக பூட்டி சீல் வைத்த திருச்சி மாநகராட்சி
வாடகை பாக்கி வைத்திருந்த கடைகள்... அதிரடியாக பூட்டி சீல் வைத்த திருச்சி மாநகராட்சி
சென்னையிலிருந்து திருச்சிக்கு இனி 3 மணி நேரம்தான்...! இனி டோல்கேட்டில் நிற்கத் தேவையில்லை...
சென்னையிலிருந்து திருச்சிக்கு இனி 3 மணி நேரம்தான்...! இனி டோல்கேட்டில் நிற்கத் தேவையில்லை...
Trichy power cut: திருச்சியில் நாளை (01-8-2026) எங்கெல்லாம் மின்சாரம் இருக்காது? - மின்வாரியம் வெளியிட்ட பட்டியல்
Trichy power cut: திருச்சியில் நாளை (01-8-2026) எங்கெல்லாம் மின்சாரம் இருக்காது? - மின்வாரியம் வெளியிட்ட பட்டியல்
திருச்சி அரசு மருத்துவமனையில் எலி கடித்த சம்பவம்... தூய்மைப்பணிகளை தீவிரப்படுத்திய நிர்வாகம்
திருச்சி அரசு மருத்துவமனையில் எலி கடித்த சம்பவம்... தூய்மைப்பணிகளை தீவிரப்படுத்திய நிர்வாகம்

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
PMK vs Congress: காங்கிரசை இறங்கி அடிக்கும் அன்புமணி! பாமக போடும் ஸ்கெட்ச் என்ன?
PMK vs Congress: காங்கிரசை இறங்கி அடிக்கும் அன்புமணி! பாமக போடும் ஸ்கெட்ச் என்ன?
பனையூருக்கு தூதுவிட்ட முன்னாள் முதல்வர் மகன்! அப்பாவோட வரச் சொன்ன தவெக - நடந்தது என்ன?
பனையூருக்கு தூதுவிட்ட முன்னாள் முதல்வர் மகன்! அப்பாவோட வரச் சொன்ன தவெக - நடந்தது என்ன?
Hardik Pandya: சிஎஸ்கே வருகிறாரா ஹர்திக் பாண்ட்யா? மும்பைக்கு போகப்போகும் சென்னை வீரர் யார்?
Hardik Pandya: சிஎஸ்கே வருகிறாரா ஹர்திக் பாண்ட்யா? மும்பைக்கு போகப்போகும் சென்னை வீரர் யார்?
Upcoming Royal Enfield Bikes: இ பைக் முதல் 750 சிசி பைக் வரை.. ராயல் என்ஃபீல்ட் அறிமுகப்படுத்தப்போகும் 6 டூவீலர்கள்!
Upcoming Royal Enfield Bikes: இ பைக் முதல் 750 சிசி பைக் வரை.. ராயல் என்ஃபீல்ட் அறிமுகப்படுத்தப்போகும் 6 டூவீலர்கள்!
DMK Vs TVK: எதிர்பாராத ட்விஸ்ட்கள், அடுத்தடுத்த தோல்வி - திமுகவின் அடுத்த ப்ளான் என்ன? தயாராகும் தவெக
எதிர்பாராத ட்விஸ்ட்கள், அடுத்தடுத்த தோல்வி - திமுகவின் அடுத்த ப்ளான் என்ன? தயாராகும் தவெக
மேகதாது அணை கட்டப்பட்டால் கபினி நீரும் கிடைக்காது: அன்புமணி எச்சரிக்கை!
மேகதாது அணை கட்டப்பட்டால் கபினி நீரும் கிடைக்காது: அன்புமணி எச்சரிக்கை!
Aadi Peruku: நாளை ஆடிப்பெருக்கு! கண்டிப்பாக செய்ய வேண்டிய விஷயங்கள் என்னென்ன?
Aadi Peruku: நாளை ஆடிப்பெருக்கு! கண்டிப்பாக செய்ய வேண்டிய விஷயங்கள் என்னென்ன?
புக் செய்தது ஸ்பைடர்மேன்... காட்டியது ஜனநாயகன்? ரசிகர்கள் கொந்தளிப்பு
புக் செய்தது ஸ்பைடர்மேன்... காட்டியது ஜனநாயகன்? ரசிகர்கள் கொந்தளிப்பு
Embed widget