மேலும் அறிய

அரியலூரில் தண்ணீர் கேட்பது போல் நடித்து அரசுப்பள்ளி ஆசிரியையிடம் 9 சவரன் தாலி சங்கிலி பறிப்பு

அரியலூர் மாவட்டம் வண்ணம்புத்தூர் கிராமத்தில் வீட்டில் இருந்த ஆசிரியையிடம் 9 பவுன் தாலிச்சங்கிலியை மர்ம நபர்கள் பறித்து சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட சாத்தமங்கலம் ஊராட்சி வண்ணம்புத்தூர் கிராமத்தை சேர்ந்த முன்னாள் ராணுவவீரர் ஜெயராமன். இவரது மனைவி மலர்விழி (47) அருங்கால் கிராமத்தில் உள்ள அரசு பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வருகிறார். இவர் பள்ளி முடிந்த பின்னர் அங்கிருந்து வாரணவாசி சமத்துவபுரத்தில் உள்ள சாய்பாபா கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்துவிட்டு அங்கிருந்து வீட்டிற்கு வந்துள்ளார். அவர் வீட்டில் இருந்த போது வெளியில் யாரோ கூப்பிட்டது போல் சத்தம் கேட்டதால் வெளியே வந்து பார்த்தார். அப்போது இருசக்கர வாகனத்துடன் நின்ற 2 பேர் வாகனத்தின் சக்கரம் சுற்றவில்லை என்று கூறி அதனை தட்டுவதற்கு ஏதேனும் இரும்புக்கம்பி தருமாறு, கேட்டுள்ளனர். இதையடுத்து மலர்விழி இரும்பு கம்பியை எடுத்து கொடுத்தார். அதனை கொண்டு வாகனத்தை சரி பார்ப்பது போல் நடித்த அவர்கள், பின்னர் குடிப்பதற்கு தண்ணீர் கேட்டுள்ளனர்.
 
அரியலூரில் தண்ணீர் கேட்பது போல் நடித்து அரசுப்பள்ளி ஆசிரியையிடம் 9 சவரன் தாலி சங்கிலி பறிப்பு
 
இதையடுத்து மலர்வழி தண்ணீர் எடுக்க சென்ற நேரத்தில், 2 பேரில் ஒருவர் வீட்டிற்குள் புகுந்துள்ளான். இதையடுத்து தண்ணீர் கொடுக்க வெளியே வந்த மலர்விழியின் கழுத்தில் கிடந்த 9 பவுன் தாலிச் சங்கிலியை, பின்னால் இருந்த பறித்த அந்த நபர், மலர்விழியை கீழே தள்ளிவிட்டார். இதையடுத்து 2 பேரும் இருசக்கர வாகனத்தில் தப்பி சென்றனர். இதனால் அதிர்ச்சி அடைந்த மலர்விழி சத்தம் போட்டார். இதையடுத்து அந்த வழியாக ஸ்கூட்டரில் சென்றவர்கள், மர்ம நபர்களை பின் தொடர்ந்து சென்றனர். அப்போது அந்த நபர்களின் வாகனம் சாத்தமங்கலம் அருகே பழுதாகி நின்றது. இதைக்கண்டு அவர்களை மடக்கி பிடிக்க முயன்றனர். ஆனால் மர்ம நபர்கள், பின்தொடர்ந்து பிடிக்க வந்தவர்களிடம் கத்தியை காட்டி மிரட்டி, அவர்களிடம் இருந்து பறித்த ஸ்கூட்டரில் திருமானூர் கொள்ளிடம் ஆற்றுப் பாலம் வரை சென்றனர். அங்கு ஸ்கூட்டரை போட்டுவிட்டு ஆற்று வழியாக தப்பிச் சென்றனர். இது குறித்து மலர்விழி கீழப்பழுவூர் காவல் நிலையத்தில்  புகார் அளித்தார். அதன்பேரில் காவல்துறையினர்  வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
 

அரியலூரில் தண்ணீர் கேட்பது போல் நடித்து அரசுப்பள்ளி ஆசிரியையிடம் 9 சவரன் தாலி சங்கிலி பறிப்பு
 
மேலும் கடந்த சில மாதங்களாக அரியலூர் மாவட்டத்தில் தொடர் கொலை, கொள்ளை, திருட்டு சம்பவங்கள் நடைபெற்று வருகிறது. இந்த மர்ம நபர்களை பிடிப்பதற்கு காவல் துறையினர் 24 மணி நேரமும் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இது குறித்து பொதுமக்கள் தெரிவித்தது கடந்த 2 மாதங்களில் மட்டும் அதிக அளவில் திருட்டு சம்பங்கள் நடைபெற்று வருகிறது. குறிப்பாக கிராமபுறங்களில் தனியாக இருக்கும் வீட்டை நோட்டமிட்டு மர்ம நபர்கள் தங்களது கைவரிசையை காட்டியுள்ளனர். இதனால் அரியலூர் மாவட்டத்தில்  பொதுமக்கள் அச்சத்தில் ஆழ்ந்துல்ளனர், ஆகையால் காவல்துறை உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Team India Victory Parade LIVE: கோப்பையுடன் உலாவரும் வீரர்கள்! ஸ்தம்பிக்கும் வான்கடே! உற்சாகமாக வரவேற்கும் ரசிகர்கள் கூட்டம்
Team India Victory Parade LIVE: கோப்பையுடன் உலாவரும் வீரர்கள்! ஸ்தம்பிக்கும் வான்கடே! உற்சாகமாக வரவேற்கும் ரசிகர்கள் கூட்டம்
Pakistan Milk Price: என்னது! ஒரு லிட்டர் பால் விலை ரூ.370 ஆ? - அதிர்ச்சியில் பாகிஸ்தான் மக்கள்! காரணம் என்ன?
Pakistan Milk Price: என்னது! ஒரு லிட்டர் பால் விலை ரூ.370 ஆ? - அதிர்ச்சியில் பாகிஸ்தான் மக்கள்! காரணம் என்ன?
Team India Marine Drive: மிளிரும் டி20 உலகக் கோப்பை.. அதிரும் வான்கடே மைதானம்! வரிசை கட்டி நிற்கும் ரசிகர்கள்
Team India Marine Drive: மிளிரும் டி20 உலகக் கோப்பை.. அதிரும் வான்கடே மைதானம்! வரிசை கட்டி நிற்கும் ரசிகர்கள்
அப்போலோ மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட முன்னாள் துணை பிரதமர் எல்.கே. அத்வானி
அப்போலோ மருத்துவமனையில் இருந்து எல்.கே. அத்வானி டிஸ்சார்ஜ்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Subramanian Swamy | ”சோனியா, ராகுலுடன் டீல்! கொலை வழக்கு பயமா மோடி?” பற்றவைத்த சுப்ரமணியன் சுவாமிTN Cabinet Reshuffle | பதறும் அமைச்சர்கள்.. கட்டம் கட்டிய ஸ்டாலின்! அமைச்சரவையில் மாற்றம்Vikravandi By Election | ’’வராதீங்க ஸ்டாலின்’’தடுக்கும் அமைச்சர்கள்..விக்கிரவாண்டியில் பரபரப்புMayors Resign | ஆட்டம் காட்டிய மேயர்கள்..அடக்கி ஆளும் ஸ்டாலின்!களையெடுப்பு ஆரம்பமா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Team India Victory Parade LIVE: கோப்பையுடன் உலாவரும் வீரர்கள்! ஸ்தம்பிக்கும் வான்கடே! உற்சாகமாக வரவேற்கும் ரசிகர்கள் கூட்டம்
Team India Victory Parade LIVE: கோப்பையுடன் உலாவரும் வீரர்கள்! ஸ்தம்பிக்கும் வான்கடே! உற்சாகமாக வரவேற்கும் ரசிகர்கள் கூட்டம்
Pakistan Milk Price: என்னது! ஒரு லிட்டர் பால் விலை ரூ.370 ஆ? - அதிர்ச்சியில் பாகிஸ்தான் மக்கள்! காரணம் என்ன?
Pakistan Milk Price: என்னது! ஒரு லிட்டர் பால் விலை ரூ.370 ஆ? - அதிர்ச்சியில் பாகிஸ்தான் மக்கள்! காரணம் என்ன?
Team India Marine Drive: மிளிரும் டி20 உலகக் கோப்பை.. அதிரும் வான்கடே மைதானம்! வரிசை கட்டி நிற்கும் ரசிகர்கள்
Team India Marine Drive: மிளிரும் டி20 உலகக் கோப்பை.. அதிரும் வான்கடே மைதானம்! வரிசை கட்டி நிற்கும் ரசிகர்கள்
அப்போலோ மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட முன்னாள் துணை பிரதமர் எல்.கே. அத்வானி
அப்போலோ மருத்துவமனையில் இருந்து எல்.கே. அத்வானி டிஸ்சார்ஜ்!
’குடி’மகன்களுக்கு அதிர்ச்சி! விழுப்புரத்தில் 4 நாட்களுக்கு மதுக்கடைகளை மூட உத்தரவு ! காரணம் என்ன?
’குடி’மகன்களுக்கு அதிர்ச்சி! விழுப்புரத்தில் 4 நாட்களுக்கு மதுக்கடைகளை மூட உத்தரவு ! காரணம் என்ன?
Paris Olympics 2024: பாரிஸ் ஒலிம்பிக்.. இந்திய தடகள வீரர்கள் அறிவிப்பு - 5 தமிழக வீரர்களுக்கு இடம்!
Paris Olympics 2024: பாரிஸ் ஒலிம்பிக்.. இந்திய தடகள வீரர்கள் அறிவிப்பு - 5 தமிழக வீரர்களுக்கு இடம்!
Breaking News LIVE: ஜூலை 8ல் ஜார்க்கண்டில் ஹேமந்த் சோரன் அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு
Breaking News LIVE: ஜூலை 8ல் ஜார்க்கண்டில் ஹேமந்த் சோரன் அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு
Paramedical Counselling: பாராமெடிக்கல் படிப்புகளுக்கு கலந்தாய்வு எப்போது? வெளியான தகவல்
Paramedical Counselling: பாராமெடிக்கல் படிப்புகளுக்கு கலந்தாய்வு எப்போது? வெளியான தகவல்
Embed widget