மேலும் அறிய

திருச்சியில் மெட்ரோ ரயில் திட்டபணிகளுக்கான ஆய்வு... விரைவில் தொடக்கம் !

திருச்சியில் மெட்ரோ ரயில் திட்டம் தொடங்க சாத்தியக் கூறுகளை ஆய்வு செய்து அறிக்கை அளிக்க சென்னை மெட்ரோ நிறுவனம் டெண்டர் கோரியுள்ளது.

சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையிலும் பொது போக்குவரத்தை அதிகப்படுத்தி எளிமைப்படுத்தவும், மெட்ரோ ரயில் திட்டம் தொடங்கப்பட்டு செயல்பாட்டில் உள்ளது இதனை தொடர்ந்து திருச்சி ,சேலம், திருநெல்வேலி ஆகிய இரண்டாம் நிலை நகரங்களில் மெட்ரோ, பறக்கும் ரயில் உள்ளிட்ட அதி விரைவு போக்குவரத்து ரயில் திட்டத்தை செயல்படுத்த சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் முடிவு செய்துள்ளது. அதில் முதல்கட்டமாக அதற்கான பூர்வாங்க பணிகளை அந்நிறுவனம் தொடங்கி உள்ளது. இதுகுறித்து அந்நிறுவன வட்டாரங்களில் விசாரித்தபோது.. மாநகரங்களில் ஏற்பட்டு வரும் ஒட்டு மொத்த வளர்ச்சியில் போக்குவரத்து துறை பங்கும் முக்கியமானது ஆகும். அதனை கருத்தில் கொண்டு மாநகர வளர்ச்சியில் பொது போக்குவரத்தின் பங்கை மேம்படுத்தும் வகையில் திருச்சி திருநெல்வேலி சேலம் ஆகிய இரண்டாம் நிலை நகரங்களில் மெட்ரோ, மெட்ரோ லைட்,மெட்ரோ நியோ, பிஆர்டிஎஸ் போன்ற அதி விரைவு போக்குவரத்து திட்டங்களை ( மாஸ் டிரான்ஸிட் அமைப்பு) செயல்படுத்த தமிழக அரசு பரிசீலித்து வருகிறது.


திருச்சியில் மெட்ரோ ரயில் திட்டபணிகளுக்கான ஆய்வு... விரைவில் தொடக்கம் !

 

அதன்படி தமிழகத்தின் இரண்டாம் நிலை மாநகரங்களில் ஒன்றான திருச்சி தமிழகத்தின் 4 வது  பெரிய நகரமாகவும், மாவட்ட தலை நகரமாகவும் உள்ளது. மாநிலத்தின் முக்கிய நகரங்கள் மற்றும் நாட்டின் பிற பகுதிகளுடன் சாலை, ரயில் மற்றும் விமானம் மூலம் திருச்சி மாநகரம் நன்கு இணைக்கப்பட்டுள்ளது. அதன்படி மாநிலத்தில் ஒரு மையமாக செயல்படும் திருச்சி நகரம் மாநிலத்தின் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கின்றது. புகழ்பெற்ற மத மற்றும் சுற்றுலாத் தலங்கள் காரணமாக பயணிகளின் எண்ணிக்கையும் அதிகமாக உள்ளது. மேலும் 2011 ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி திருச்சி மாவட்டத்தின் மக்கள்தொகை 27.22 லட்சமாகவும், மாநகராட்சியின் மக்கள் தொகை 9.16 லட்சமாகவும் உள்ளது. மாநகரத்தின் மக்கள் தொகை 10 லட்சத் துக்கும் அருகில் இருந்தாலும், மாநகரை ஒட்டி உள்ள முக்கிய பகுதிகள் விரிவாக்க பகுதிகள் என அனைத்தும் சேர்த்து விரைவில் மாநகராட்சி விரிவாக்கம் செய்த பின்னர், அடுத்த சில ஆண்டுகளில் மாநகரின் மக்கள் தொகை 20 லட்சத்தை எட்டும். அதனால் எதிர்கால பொதுப் போக்குவரத்து தேவையை கருத்தில் கொண்டும், மாநகரில் நெரிசல் மற்றும் சுற்றுச்சூழல் மாசுபாடு இல்லாத போக்குவரத்து அமைப்பு கொண்ட நிலையை உருவாக்கும் வகையிலும் மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

 


திருச்சியில் மெட்ரோ ரயில் திட்டபணிகளுக்கான ஆய்வு... விரைவில் தொடக்கம் !

மேலும் அதற்கான மெட்ரோ ரயில் நிறுவனத்தின் தொழில்நுட்ப ஆலோசனைப்படி, சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து அறிக்கை அளிக்கும் ஆலோசனை நிறுவனத்தை தேர்வு செய்ய டெண்டர் கோரப்பட்டுள்ளது. இப்பணிக்காக ரூபாய் 5 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. டெண்டர் இறுதி செய்யப்பட்டு பணி தொடங்கும் நாளில் இருந்து 4 மாதங்களுக்குள் இந்த ஆய்வு பணி முடிக்கப்பட்டு அறிக்கை அளிக்க வேண்டும்.  அதன் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றார். ஏற்கனவே ஏபிபி நாடு செய்தி நிறுவனத்திற்கு பேட்டியளித்த திருச்சி மாநகராட்சி மேயர் மு.அன்பழகன் 2 ஆண்டுகளில் திருச்சியில் மெட்ரோ ரயில் திட்ட பணிகள் தொடக்கபடும் என்று தெரிவித்து இருந்தார். இந்நிலையில்  திருச்சியில் மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்த பிள்ளையார் சுழி போடப்பட்டு இருப்பது திருச்சி  மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தலைப்பு செய்திகள்

திருச்சியில் மீண்டும் வேகமெடுக்கும் சாலைப் பணிகள்... தார் விலை உயர்வு பிரச்சனைக்கு தீர்வு 
திருச்சியில் மீண்டும் வேகமெடுக்கும் சாலைப் பணிகள்... தார் விலை உயர்வு பிரச்சனைக்கு தீர்வு 
சாலையா? பிளெக்ஸ் காடா?... திருச்சியில் அதிகரிக்கும் விபத்து அபாயம்
சாலையா? பிளெக்ஸ் காடா?... திருச்சியில் அதிகரிக்கும் விபத்து அபாயம்
திருச்சி பெண்களே ரெடியா? ரூ.5,000 பரிசுடன் விழிப்புணர்வு மாரத்தான்! என்னைக்கு தெரியுங்களா?
திருச்சி பெண்களே ரெடியா? ரூ.5,000 பரிசுடன் விழிப்புணர்வு மாரத்தான்! என்னைக்கு தெரியுங்களா?
திருச்சியில்ஷாக் கொடுக்கும் கோழி இறைச்சி விலை... ஒரே வாரத்தில் ரூ.30 உயர்வு: அசைவ பிரியர்கள் கவலை
திருச்சியில்ஷாக் கொடுக்கும் கோழி இறைச்சி விலை... ஒரே வாரத்தில் ரூ.30 உயர்வு: அசைவ பிரியர்கள் கவலை

வீடியோ

Virudhunagar DMK : திமுக கொடியுடன் வந்த கார்.. சிறுமியை கொல்ல முயற்சி! நெஞ்சை பதறவைக்கும் வீடியோ!
Jolarpettai : ”அவன் பொம்பள பொறுக்கி” காலில் விழுந்து கதறிய பெற்றோர்! உதறிவிட்டு காதலனுடன் சென்ற மகள்
Kanchipuram Viral Video : ஆழி சூழ்ந்த உலகிலே..தம்பிக்கு தாயான அக்கா!வைரல் வீடியோ |
Minister Keerthana:
TVK MLA Saravanan : ”விலை போக மாட்டேன்!”ஆடியோ ஆதாரத்துடன் புகாரளித்த த.வெ.க எம்.எல்.ஏ சரவணன்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஆதவ் அர்ஜூனாவை விட மாட்டோம்.! சிபிஐயிடம் பட்டியலிட்டு புகார் கொடுத்த திமுக- என்ன சொல்லியிருக்கு தெரியுமா.?
ஆதவ் அர்ஜூனாவை விட மாட்டோம்.! சிபிஐயிடம் பட்டியலிட்டு புகார் கொடுத்த திமுக- என்ன சொல்லியிருக்கு தெரியுமா.?
EPS ADMK : ஆடு திருடி சிறை சென்றவர்களையும் அரசு வழக்கறிஞர்களாக்கிய தவெக அரசு.! வெளுத்து வாங்கும் இபிஎஸ்
ஆடு திருடி சிறை சென்றவர்களையும் அரசு வழக்கறிஞர்களாக்கிய தவெக அரசு.! வெளுத்து வாங்கும் இபிஎஸ்
Online Property Registration : பத்திர பதிவிற்கு நேரில் வர தேவையில்லை.! வீட்டில் இருந்து பதிவு செய்யலாம்- புதிய வழிமுறை இதோ..
பத்திர பதிவிற்கு நேரில் வர தேவையில்லை.! வீட்டில் இருந்து பதிவு செய்யலாம்- புதிய வழிமுறை இதோ..
TNPSC Notification: வாவ்… ஒருங்கிணைந்த தொழில்நுட்ப தேர்வு; 839 காலி இடங்கள்- டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
TNPSC Notification: வாவ்… ஒருங்கிணைந்த தொழில்நுட்ப தேர்வு; 839 காலி இடங்கள்- டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
TASMAC SHOP : மதுப்பிரியர்களுக்கு குஷியோ குஷி.! தலைகீழாக மாறப்போகுது டாஸ்மாக் கடை- கலக்கும் தமிழக அரசு
மதுப்பிரியர்களுக்கு குஷியோ குஷி.! தலைகீழாக மாறப்போகுது டாஸ்மாக் கடை- கலக்கும் தமிழக அரசு
Teacher Eligibility Test : டஃப் ஆக இருந்த ஆசிரியர் தகுதி தேர்வு.! கூடுதல் மதிப்பெண் வழங்கப்படுமா.? TRB முக்கிய அறிவிப்பு
டஃப் ஆக இருந்த ஆசிரியர் தகுதி தேர்வு.! கூடுதல் மதிப்பெண் வழங்கப்படுமா.? TRB முக்கிய அறிவிப்பு
TASMAC SALARY HIKE : டாஸ்மாக் ஊழியர்களுக்கு குஷி.! அதிரடியாக உயர்ந்த சம்பளம்.! இத்தனை சதவிகிதமா.? அசத்திய சிஎம் விஜய்
டாஸ்மாக் ஊழியர்களுக்கு குஷி.! அதிரடியாக உயர்ந்த சம்பளம்.! இத்தனை சதவிகிதமா.? அசத்திய சிஎம் விஜய்
Holiday Special Bus : 2 நாள் விடுமுறை... டூர் செல்ல திட்டமா.? காத்திருந்த மக்களுக்கு குட் நியூஸ் சென்ன போக்குவரத்து கழகம்
2 நாள் விடுமுறை... டூர் செல்ல திட்டமா.? காத்திருந்த மக்களுக்கு குட் நியூஸ் சென்ன போக்குவரத்து கழகம்
Embed widget