மேலும் அறிய

திருச்சியில் அதிகரித்து வரும் ‘மெட்ராஸ் ஐ’ - டாக்டரின் அட்வைஸ்

திருச்சியில் மெட்ராஸ் ஐ எனப்படும் கண் நோய் அதிகரித்து வருவது குறித்து அரசு மருத்துவமனை டாக்டர் பல்வேறு அறிவுரைகளை கூறியுள்ளார்.

தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளாக கொரோனா தொற்று மட்டுமே மனதில் நிலைத்திருந்த நிலையில் தற்போது மெட்ராஸ் ஐ எனப்படும் கண் நோய் நிலைகொண்டுள்ளது. லேசான கண் உறுத்தலில் தொடங்கும் இந்த நோய் ஒருவருக்கு வந்துவிட்டால் அவரை சார்ந்த, அதாவது குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் பரவுவது தவிர்க்க முடியாததாகி விடுகிறது. மெட்ராஸ் ஐ என்ற பெயர் இருந்தபோதிலும் அதன் தாக்கம் அனைத்து பகுதிகளிலும் தற்போது அதிகரித்துள்ளது. கடந்த காலங்களில் 2 முதல் 3 நாட்கள் வரை மட்டுமே பாதிப்பை ஏற்படுத்தி வந்த இந்த கண் நோயின் வீரியம் அதிகரித்துள்ளதால் இந்த சீசனில் 6 நாட்கள் வரை பாடாய்படுத்தி விடுகிறது. குறிப்பாக கண்களுக்கு அழுத்தம் கொடுக்கும் செயலை செய்யாமல் இருந்தாலே போதுமானது என்ற அறிவுரை கூறப்பட்டு இருந்தாலும் அனைவரையும் பாதிக்க செய்துவிடுகிறது. இந்தநிலையில் திருச்சியில் தற்போது மெட்ராஸ் ஐ கண் நோய் தொற்று வேகமாக பரவி வருகிறது. இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஏற்பட்டு சில நாட்கள் வீட்டுக்குள் முடக்குகிறது. இதனை தடுக்கும் வகையில், திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில், அதற்காக சிறப்பு பிரிவு அமைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து  அரசு மருத்துவர்கள் கூறுகையில், ‘காலநிலை மாற்றத்தின் காரணமாக மெட்ராஸ் ஐ கண் நோய் தற்போது வேகமாக பரவி வருகிறது.


திருச்சியில் அதிகரித்து வரும் ‘மெட்ராஸ் ஐ’ - டாக்டரின் அட்வைஸ்

திருச்சி அரசு மருத்துவமனைக்கு தினமும் 20 முதல் 25 பேர் இதற்கான சிகிச்சை பெறுவதற்காக வருகிறார்கள். இதேபோல பல்வேறு மருத்துவமனைகளிலும், குறிப்பாக கண் மருத்துவமனைகளுக்கும் நூற்றுக்கணக்கானோர் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். இந்த நோய் குழந்தைகளிடம் அதிகம் பரவி, பின் அவர்களிடமிருந்து பெற்றோருக்கு பரவுகிறது. வழக்கமாக மெட்ராஸ் ஐ பாதிப்பு ஏற்பட்டால் 2 முதல் 3 நாட்களில் சரியாகும். ஆனால் தற்போது தொற்றின் வீரியம் அதிகரித்துள்ளதால் 5 முதல் 6 நாட்கள் வரை நீடிக்கிறது. கண் எரிச்சல், விழிப்பகுதி சிவந்து காணப்படுதல், நீர் வந்து கொண்டே இருத்தல், இமைப்பகுதி ஒட்டிக்கொள்ளுதல் உள்ளிட்டவை மெட்ராஸ் ஐ கண் நோயின் அறிகுறிகளாகும்.பொதுவாக ஒருகண்ணில் மெட்ராஸ் ஐ பிரச்சினை ஏற்பட்டால் மற்றொரு கண்ணிலும் அந்த பாதிப்பு தொற்றிக்கொள்ளும். 

மேலும் அதேசமயம் மெட்ராஸ் ஐ பிரச்சினையால் பாதிக்கப்ட்டவர்கள் பார்த்தலே நமக்கும் தொற்று பரவிவிடும் என்பது தவறான கருத்து. இது பார்ப்பதாலோ, காற்றிலோ பரவக்கூடியது அல்ல. மாறாக இப்பிரச்சினையால் பாதிக்கப்பட்டவர்கள் பயன்படுத்திய கைக்குட்டை, கண்ணாடி, உடைகள் ஆகியவற்றை பிறர் உபயோகப்படுத்தும் போது இது பரவுகிறது. எனவே இந்த நோயினால் பாதிக்கப்படுவோர் தங்களை தனிமைப்படுத்தி கொள்வதன் மூலம் பரலை எளிதில் தடுகக்கலாம். அதே சமயம், இது எளிதில் குணப்படுத்தக்கூடிய மிக சாதாரணமாக நோய்த் தொற்றுதான், அச்சப்பட தேவையில்லை. ஆனால் டாக்டரிடம் ஆலோசனை பெறாமல் தவறான கண் மருந்து வாங்கி செலுத்தினால் பார்வை பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. மேலும் திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் மெட்ராஸ் ஐ சிகிச்சைக்கென தனி சிறப்பு பிரிவு அமைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. எனவே கண் நோய் அறிகுறி உள்ளவர்கள் வந்து இலவச சிகிச்சை பெறலாம்” என்றனர்.

தலைப்பு செய்திகள்

திருச்சி விமான நிலையத்தில் ரூ. 9.21 கோடியில் மழைநீர் வடிகால் பணிகள் துரிதம்
திருச்சி விமான நிலையத்தில் ரூ. 9.21 கோடியில் மழைநீர் வடிகால் பணிகள் துரிதம்
3,575 சதுர மீட்டர்...10 ஆயிரம் மரக்கன்றுகள் திருச்சியில் உருவாகிறது அடர்ந்த ‘மியாவாக்கி’ குறுங்காடு!
3,575 சதுர மீட்டர்...10 ஆயிரம் மரக்கன்றுகள் திருச்சியில் உருவாகிறது அடர்ந்த ‘மியாவாக்கி’ குறுங்காடு!
மத ஒற்றுமையை வெளிப்படுத்திய பிரார்த்தனை: மழை வேண்டி கண்ணீர் மல்க சிறப்புத் தொழுகை நடத்திய இஸ்லாமியர்கள்
மத ஒற்றுமையை வெளிப்படுத்திய பிரார்த்தனை: மழை வேண்டி கண்ணீர் மல்க சிறப்புத் தொழுகை நடத்திய இஸ்லாமியர்கள்
பராமரிப்பில்லாத சாலையால் வேதனை... இருள் சூழ்ந்த கிரிவலப்பாதையால் பக்தர்கள் அச்சம்? எங்கு தெரியுங்களா? 
பராமரிப்பில்லாத சாலையால் வேதனை... இருள் சூழ்ந்த கிரிவலப்பாதையால் பக்தர்கள் அச்சம்? எங்கு தெரியுங்களா? 

வீடியோ

CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: சிஎம் விஜயின் அவசர கூட்டம் ஏன்? திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் முடிவு என்ன? அரசியல் சம்பவமா?
சிஎம் விஜயின் அவசர கூட்டம் ஏன்? திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் முடிவு என்ன? அரசியல் சம்பவமா?
Sekar Babu: ”வந்து இருப்பது சேகர் பாபு-யா” ஆனாலும் வண்டியை அனுப்ப முடியாது - திருத்தணியில் நடந்தது என்ன?
”வந்து இருப்பது சேகர் பாபு-யா” ஆனாலும் வண்டியை அனுப்ப முடியாது - திருத்தணியில் நடந்தது என்ன?
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
Indias Best SUV: இங்க எஸ்யுவி-னாலே நாங்க தான்..! உள்ளூரில் கோலோச்சும் டாப் 5 கார் மாடல்கள் - விலையும், வசதிகளும்..
இங்க SUV-னாலே நாங்க தான்..! உள்ளூரில் கோலோச்சும் டாப் 5 கார் மாடல்கள் - விலையும், வசதிகளும்..
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
Maruti Car Offers: ரூபாய் 1.55 லட்சம் தள்ளுபடி.. ஆடி மாத ஆஃபரை அள்ளித்தெளித்த மாருதி சுசுகி - எந்தெந்த காருக்கு?
Maruti Car Offers: ரூபாய் 1.55 லட்சம் தள்ளுபடி.. ஆடி மாத ஆஃபரை அள்ளித்தெளித்த மாருதி சுசுகி - எந்தெந்த காருக்கு?
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
அறிமுகமாகியது டாடாவின் Nexon Camo Edition கார்! இத்தனை வசதிகளா? என்ன விலையா?
அறிமுகமாகியது டாடாவின் Nexon Camo Edition கார்! இத்தனை வசதிகளா? என்ன விலையா?
Embed widget