மேலும் அறிய

Lok Sabha Election 2024: திருச்சி தொகுதியில் இளைஞர்களுக்கு அதிக வேலைவாய்ப்பு உருவாக்கி தருவேன் - அமமுக வேட்பாளர் செந்தில்நாதன்

திருச்சி நாடாளுமன்ற தொகுதியை தமிழ்நாட்டில் முன்மாதிரியான தொகுதியாக மாற்றுவேன் -அமமுக வேட்பாளர் செந்தில்நாதன்

 

திருச்சி மாநகர்  EB சாலையில் அமமுக வேட்பாளர் செந்தில்நாதன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். இந்நிலையில் நமது ஏ.பி.பி. நாடு செய்திக்கு அவர் அளித்த பேட்டியில், “திருச்சியை பொருத்தவரை மும்முனைப் போட்டிகள் கிடையாது, இருமுனைப் போட்டிகள் மட்டுமே, ஒன்று மண்ணின் மைந்தன் எனக்கும், மற்றொன்று பீடி சிகரெட் விக்கிறவர் மற்றும் மண் அழுகிற கும்பல் என இருமுனை போட்டியாக தான் உள்ளது. வாரிசு அரசியலை எதிர்த்து கட்சியிலிருந்து விலகிய அவரின் வாரிசுக்கு சீட் ஒதுக்கப்பட்டு கண்ணீர் வடிக்கும் நாடகம் நடித்து கொண்டிருக்கிறார். திருச்சி மக்கள் இதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். கடந்த பல ஆண்டுகளாக திருச்சியில் எந்த ஒரு முன்னேற்றமும் அடையக்கூடிய திட்டங்களை யாரும் செயல்படுத்தவில்லை. குறிப்பாக சாலைகள் விரிவாக்கம், புதிய தார் சாலை அமைப்பது, போக்குவரத்து நெரிசலை குறைப்பது, பாதாள சாக்கடை திட்ட பணிகளை அமல்படுத்துவது, தேசிய நெடுஞ்சாலைகளில் ரிங் ரோடு அமைப்பது போன்ற திட்டங்கள் எதையும் செயல்படுத்தாமல் இருப்பதால், மக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள்.

மேலும் அவசர அவசரமாக திருச்சியில் பஞ்சப்பூர் பேருந்து நிலையம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. என்னை பொறுத்தவரை பஞ்சப்பூர்  பேருந்து நிலையம் அமைக்கும் பணியை முறையாக செயல்படுத்தவில்லை, சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் போன்றுதான், பஞ்சப்பூர் பேருந்து நிலையத்தில் நிலைமை அமையப்போகிறது என்பது எனது கருத்து. திருச்சி பாராளுமன்ற தொகுதியை பொருத்தவரை திமுக, அதிமுக கூட்டணி வலுவாக இருப்பதாக எனக்கு தெரியவில்லை. திருச்சியை பொறுத்தவரை தேர்தலில் திமுக நேரடியாக போட்டியிட்டால் படுதோலி அடைவார்கள் என்பதால்தான், கூட்டணி கட்சிகளுக்கு வாய்ப்புகள் கொடுத்து வருகிறார்கள்.


Lok Sabha Election 2024: திருச்சி தொகுதியில் இளைஞர்களுக்கு அதிக வேலைவாய்ப்பு உருவாக்கி தருவேன் - அமமுக வேட்பாளர் செந்தில்நாதன்

விருப்பமே இல்லாமல் ஒரு வாரிசு வேட்பாளர் 

ஒரு பலியாடாக வாரிசு அரசியலில் விருப்பமே இல்லாத, ஒரு வாரிசு வேட்பாளரை நிறுத்தி உள்ளார்கள். அதேபோன்று அதிமுகவில் முன்னாள் எம்பி, முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் பலர் இருந்தும் அவர்கள் யாரும் இந்த தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவிக்கவில்லை அப்போது அவர்களுடைய நிலை என்னவாக இருக்கும் என்பது அனைவருக்கும் தெரியும். திருச்சிக்கு தேவையான அனைத்து திட்டங்களையும் மத்தியில் மீண்டும் மோடி அவர்கள் ஆட்சிக்கு வந்தவுடன் இனிமையாக பெற்று தர முடியும் என்பதால் மக்கள் இந்த மண்ணின் மைந்தன் எனக்கு மிகுந்த ஆதரவு அளிக்கிறார்கள்.  

திருச்சியில் முதலில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்திட தொழில் பூங்காக்களை கொண்டு வருவேன். அதேபோன்று திருச்சியில் அடிப்படை வசதிகள் எதுவும் இல்லாமல் மக்கள் தவித்து வருகிறார்கள் சிலர் அதிகாரங்களை பயன்படுத்தி அராஜக போக்கில் எந்த திட்டங்களையும் செயல்படுத்தாமல் உள்ளார்கள். திருச்சி தொகுதியை பொருத்தவரை அன்றாட கூலி வேலை செய்பவர்கள் அடித்தட்டு மக்களே அதிகமாக உள்ளார்கள், அவர்களின் வாழ்க்கையை மேம்படுத்த பல புதிய திட்டங்களை செயல்படுத்துவேன். குறிப்பாக மீண்டும் மத்தியில் பாஜக ஆட்சி அமைத்தயுடன், திருச்சி தொகுதியை மேம்படுத்த பல்வேறு நிறுவனங்களை அழைத்து வந்து, வேலைவாய்ப்பை உருவாக்குவேன்” என வாக்குறுதி அளித்தார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கு குஷி; இனி சம்பளத்தில் பிடித்தம் கிடையாது- வெளியான முக்கிய அறிவிப்பு- யார் யாருக்கெல்லாம்?
பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கு குஷி; இனி சம்பளத்தில் பிடித்தம் கிடையாது- வெளியான முக்கிய அறிவிப்பு- யார் யாருக்கெல்லாம்?
TVK VIJAY: முதல்வர் பதவிக்கு ஆசைப்பட்ட புஸ்ஸி ஆனந்த்.! புதுச்சேரியில் திடீர் டென்சன் ஆன விஜய்- நடந்தது என்ன.?
முதல்வர் பதவிக்கு ஆசைப்பட்ட புஸ்ஸி ஆனந்த்.! புதுச்சேரியில் திடீர் டென்சன் ஆன விஜய்- நடந்தது என்ன.?
புதுச்சேரியிலும் தவெக கொடி பறக்கும் .! ரங்கசாமியை விட்டு விட்டு பாஜகவை விளாசிய விஜய்
புதுச்சேரியிலும் தவெக கொடி பறக்கும் .! ரங்கசாமியை விட்டு விட்டு பாஜகவை விளாசிய விஜய்
சென்னை பன்னாட்டு புத்தகத் திருவிழா 2026: உலக அரங்கில் தமிழ் இலக்கியம்! 100 நாடுகளின் பங்கேற்பு, வேற லெவல் அனுபவம்!
சென்னை பன்னாட்டு புத்தகத் திருவிழா 2026: உலக அரங்கில் தமிழ் இலக்கியம்! 100 நாடுகளின் பங்கேற்பு, வேற லெவல் அனுபவம்!
ABP Premium

வீடியோ

Kanchi Ekambareswarar Temple Kumbabishekam | காஞ்சி ஏகாம்பரநாதர் கோயில்மகா கும்பாபிஷேக விழா!
KN NEHRU ED | ’’உடனே FIR போடுங்க!’’நெருக்கும் அமலாக்கத்துறைசிக்கலில் K.N.நேரு?
பல்லத்தில் கவிழ்ந்த கார் ஒரே குடும்பத்தில் மூவர் பலிபதற வைக்கும் காட்சி | Villupuram Accident News
“என் கல்யாணம் நின்னுருச்சு” இது தான் காரணம்? ஸ்மிருதி மந்தனா பகீர் பதிவு | Palash Muchchal Smriti Mandhana Marriage Called Off
Sabareesan Meet Rahul | DEAL-ஐ முடித்த சபரீசன்! OK சொன்ன ராகுல்.. பிரவீன் சக்ரவர்த்தி அதிர்ச்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கு குஷி; இனி சம்பளத்தில் பிடித்தம் கிடையாது- வெளியான முக்கிய அறிவிப்பு- யார் யாருக்கெல்லாம்?
பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கு குஷி; இனி சம்பளத்தில் பிடித்தம் கிடையாது- வெளியான முக்கிய அறிவிப்பு- யார் யாருக்கெல்லாம்?
TVK VIJAY: முதல்வர் பதவிக்கு ஆசைப்பட்ட புஸ்ஸி ஆனந்த்.! புதுச்சேரியில் திடீர் டென்சன் ஆன விஜய்- நடந்தது என்ன.?
முதல்வர் பதவிக்கு ஆசைப்பட்ட புஸ்ஸி ஆனந்த்.! புதுச்சேரியில் திடீர் டென்சன் ஆன விஜய்- நடந்தது என்ன.?
புதுச்சேரியிலும் தவெக கொடி பறக்கும் .! ரங்கசாமியை விட்டு விட்டு பாஜகவை விளாசிய விஜய்
புதுச்சேரியிலும் தவெக கொடி பறக்கும் .! ரங்கசாமியை விட்டு விட்டு பாஜகவை விளாசிய விஜய்
சென்னை பன்னாட்டு புத்தகத் திருவிழா 2026: உலக அரங்கில் தமிழ் இலக்கியம்! 100 நாடுகளின் பங்கேற்பு, வேற லெவல் அனுபவம்!
சென்னை பன்னாட்டு புத்தகத் திருவிழா 2026: உலக அரங்கில் தமிழ் இலக்கியம்! 100 நாடுகளின் பங்கேற்பு, வேற லெவல் அனுபவம்!
Russia Crude Oil India: “இந்தியா எங்க விரும்புதோ அங்க கச்சா எண்ணெய் வாங்க உரிமை இருக்கு“; சப்போர்ட்டுக்கு வந்த ரஷ்யா
“இந்தியா எங்க விரும்புதோ அங்க கச்சா எண்ணெய் வாங்க உரிமை இருக்கு“; சப்போர்ட்டுக்கு வந்த ரஷ்யா
TVK Vijay: ஒழுங்கா இருக்க மாட்டீங்களா?.. புதுச்சேரியில் புஸ்ஸி ஆனந்தை எச்சரித்த பெண் எஸ்பி!
TVK Vijay: ஒழுங்கா இருக்க மாட்டீங்களா?.. புதுச்சேரியில் புஸ்ஸி ஆனந்தை எச்சரித்த பெண் எஸ்பி!
EV New Cars: 2025ல் மாஸ் எண்ட்ரி கொடுத்த மின்சார கார்கள் - விலை, ரேஞ்ச் - டாடா தொடங்கி டெஸ்லா வரை
EV New Cars: 2025ல் மாஸ் எண்ட்ரி கொடுத்த மின்சார கார்கள் - விலை, ரேஞ்ச் - டாடா தொடங்கி டெஸ்லா வரை
Sanchay Plus: கவலையற்ற திருமண வாழ்க்கை- புதுமணத் தம்பதிகளுக்கு நிதி திட்டமிடல் ஏன் முக்கியமானது?
Sanchay Plus: கவலையற்ற திருமண வாழ்க்கை- புதுமணத் தம்பதிகளுக்கு நிதி திட்டமிடல் ஏன் முக்கியமானது?
Embed widget