மேலும் அறிய

மத்திய மண்டலத்தில் போதை பொருட்களை விற்ற 12 பேருக்கு குண்டாஸ்

திருச்சி மத்திய மண்டலத்தில் தடை செய்யபட்ட போதை பொருட்கள் 595 கிலோ பறிமுதல், 417 பேர் கைது, இதில் 12 பேர்கள் மீது குண்டாஸ், மத்திய மண்டல ஐ.ஜி. பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

திருச்சி மத்திய மண்டலத்தில் கடந்த மூன்று மாதத்தில் தடை செய்யப்பட்ட போதை பொருட்களை விற்ற 417 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் ரூபாய் 57 லட்சம் மதிப்பிலான 595 கிலோ போதை பொருட்களை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். தமிழ்நாட்டில்  தடை செய்யப்பட்ட கஞ்சா, குட்கா  உள்ளிட்ட போதைப் பொருட்கள் விற்பனையை தடுக்க தமிழ்நாடு காவல்துறை கடும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இது தொடர்பாக சட்டப்பேரவையில் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த தமிழ்நாடு முதல்வர், போதை பொருட்கள் மற்றும் குட்கா விற்பனை செய்தவர்கள் மீது 10,673 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 11,247 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும் 149.43 டன் குட்கா பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பாக 15 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் கூறினார். இதேபோன்று கஞ்சா விற்பனை செய்த 3,437 பேர் கைது செய்யப்பட்டு 81 பேர் மீது குண்டர் சட்டத்தின் கீழ்  கைது செய்யப்பட்டுள்ளதாகவும், மேலும் 5,937 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். 


மத்திய மண்டலத்தில் போதை பொருட்களை விற்ற 12 பேருக்கு குண்டாஸ்

மேலும் பள்ளி, கல்லூரிகள் அருகே போதை பொருட்களை விற்பனை செய்பவர்கள் மீது கடும் தண்டனை எடுக்கும் வகையில் சட்ட திருத்தம் கொண்டு வரப்பட்டு போதை பொருட்கள் விற்பனை முழுவதும் தடுக்கப்படும் என்றும் சட்டப்பேரவையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் உறுதி அளித்திருந்தார். இதன்படி திருச்சி மத்திய மண்டலத்தில் தடை செய்யப்பட்ட கஞ்சா, குட்கா உள்ளிட்ட போதைப் பொருட்கள் விற்பனை செய்வதை தடுக்க காவல்துறை பல்வேறு சிறப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. குறிப்பாக கஞ்சா, குட்கா  விற்பனை மற்றும் தடை செய்யப்பட்ட போதை பொருட்களை கடத்தி செல்வதை தடுக்கவும் பல்வேறு நடவடிக்கைகளை தொடர்ந்து காவல்துறையினர் எடுத்து வருகிறார்கள். மத்திய மண்டல ஐ.ஜி. பாலகிருஷ்ணன் அறிவுறுத்தலின் பேரில் 9 மாவட்டங்களில் சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு போதை பொருட்களின் பயன்பாடு கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன்படி திருச்சி, புதுக்கோட்டை, கரூர், பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களில் கடந்த 3 மாதங்களில் மொத்தம் 595 கிலோ போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது இதன் மதிப்பு ரூபாய் 57 லட்சம் ஆகும்.


மத்திய மண்டலத்தில் போதை பொருட்களை விற்ற 12 பேருக்கு குண்டாஸ்

 

இது தொடர்பாக 267 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் இதுவரை 417 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் அதிகபட்சமாக தஞ்சாவூர் மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள 86 வழக்குகளில் 154 பேர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர், ரூபாய் 28.83 லட்சம் மதிப்புள்ள 294 கிலோ போதை பொருட்கள் பறிமுதல் செய்யபட்டுள்ளது. மேலும் திருச்சி மாவட்டத்தில் 22 வழக்குகளில் 30 பேர் கைது செய்யப்பட்டு அவர்களிடம் இருந்து 24.61 கிலோ போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதேபோன்று புதுக்கோட்டை 27 வழக்குகளில் 45 பேர் கைது செய்யப்பட்டு 16.38 கிலோ போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது, கரூரில் 40 வழக்குகளில் 47 பேர் கைது செய்யப்பட்டு 51.45 கிலோ போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது, பெரம்பலூரில் 4 வழக்குகளில் 4 பேர்கள் கைது செய்யப்பட்டு 1.60 கிலோ போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது, அரியலூரில் 15 வழக்குகளில் 36 பேர் கைது செய்யப்பட்டு 6.16 கிலோ போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

மத்திய மண்டலத்தை  பொருத்தவரை போதை பொருட்கள் விற்பனை செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். மேலும் மாவட்டம் தோறும் தொடர்ந்து கண்காணிப்பில் காவல்துறையினர் பணியில் நியமிக்கப்பட்டுள்ளனர். அரசு தடையை மீறி யார் செயல்பட்டாலும் அவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய மண்டல ஐஜி பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
6491
Active
6861
Recovered
65
Deaths
Last Updated: Mon 9 June, 2025 at 04:18 pm | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

TN Health Dept. Advice: கர்ப்பிணிகளே உஷார்; மீண்டும் படையெடுக்கும் கொரோனா - சுகாதாரத்துறை கூறியது என்ன தெரியுமா.?
கர்ப்பிணிகளே உஷார்; மீண்டும் படையெடுக்கும் கொரோனா - சுகாதாரத்துறை கூறியது என்ன தெரியுமா.?
Starlink License: அடி தூள்.! விரைவில் வருது ஸ்டார்லிங்க்; உரிமம் வழங்கிய இந்திய அரசு - இனி கலக்கல் தான்
அடி தூள்.! விரைவில் வருது ஸ்டார்லிங்க்; உரிமம் வழங்கிய இந்திய அரசு - இனி கலக்கல் தான்
Bakrid 2025 Wishes: எல்லா புகழும் இறைவனுக்கே.. பக்ரீத் வாழ்த்துகளுக்கு இந்த போட்டோவை ஷேர் பண்ணுங்க..
Bakrid 2025 Wishes: எல்லா புகழும் இறைவனுக்கே.. பக்ரீத் வாழ்த்துகளுக்கு இந்த போட்டோவை ஷேர் பண்ணுங்க..
சென்னைக்கு டாட்டா.. சொந்த ஊருக்கு படையெடுக்கும் மக்கள்.. கொள்ளையடிக்கும் தனியார் பேருந்துகள்
சென்னைக்கு டாட்டா.. சொந்த ஊருக்கு படையெடுக்கும் மக்கள்.. கொள்ளையடிக்கும் தனியார் பேருந்துகள்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Vaniyambadi | ”வேலைக்கு கூப்டா வரமாட்டியா ***” வார்டு உறுப்பினரின் கணவர் ஆபாச பேச்சுVelmurugan Controversy |Annamalai | நயினார் vs அண்ணாமலை ஒரே ஒரு வீடியோ ஆட்டத்தை முடித்த அண்ணாமலை!MK Alagiri vs Moorthy : ’’தம்பி எனக்காக இதை செய் !’’ஸ்டாலினிடம் கேட்ட அழகிரி கலக்கத்தில் மூர்த்தி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Health Dept. Advice: கர்ப்பிணிகளே உஷார்; மீண்டும் படையெடுக்கும் கொரோனா - சுகாதாரத்துறை கூறியது என்ன தெரியுமா.?
கர்ப்பிணிகளே உஷார்; மீண்டும் படையெடுக்கும் கொரோனா - சுகாதாரத்துறை கூறியது என்ன தெரியுமா.?
Starlink License: அடி தூள்.! விரைவில் வருது ஸ்டார்லிங்க்; உரிமம் வழங்கிய இந்திய அரசு - இனி கலக்கல் தான்
அடி தூள்.! விரைவில் வருது ஸ்டார்லிங்க்; உரிமம் வழங்கிய இந்திய அரசு - இனி கலக்கல் தான்
Bakrid 2025 Wishes: எல்லா புகழும் இறைவனுக்கே.. பக்ரீத் வாழ்த்துகளுக்கு இந்த போட்டோவை ஷேர் பண்ணுங்க..
Bakrid 2025 Wishes: எல்லா புகழும் இறைவனுக்கே.. பக்ரீத் வாழ்த்துகளுக்கு இந்த போட்டோவை ஷேர் பண்ணுங்க..
சென்னைக்கு டாட்டா.. சொந்த ஊருக்கு படையெடுக்கும் மக்கள்.. கொள்ளையடிக்கும் தனியார் பேருந்துகள்
சென்னைக்கு டாட்டா.. சொந்த ஊருக்கு படையெடுக்கும் மக்கள்.. கொள்ளையடிக்கும் தனியார் பேருந்துகள்
கூட்ட நெரிசலுக்கு RCBதான் காரணம்.. பழி போட்ட கர்நாடக கிரிக்கெட் சங்கம்.. சிக்கியது சித்தராமையா அரசு
கூட்ட நெரிசலுக்கு RCBதான் காரணம்.. பழி போட்ட கர்நாடக கிரிக்கெட் சங்கம்.. சிக்கியது சித்தராமையா அரசு
Actor Rajesh: உண்மை இதுதான்.. நடிகர் ராஜேஷ் பற்றி பரவிய வதந்திகளுக்கு கண்ணீரோடு கோரிக்கை வைத்த மகள் திவ்யா!
Actor Rajesh: உண்மை இதுதான்.. நடிகர் ராஜேஷ் பற்றி பரவிய வதந்திகளுக்கு கண்ணீரோடு கோரிக்கை வைத்த மகள் திவ்யா!
Krishna Marriage: ஒரே வருடத்தில் விவாகரத்து... 47 வயதில் நடிகர் கிருஷ்ணாவுக்கு நடந்த 2-ஆவது கல்யாணம்! வைரலாகும் திருமண புகைப்படம்!
Krishna Marriage: ஒரே வருடத்தில் விவாகரத்து... 47 வயதில் நடிகர் கிருஷ்ணாவுக்கு நடந்த 2-ஆவது கல்யாணம்! வைரலாகும் திருமண புகைப்படம்!
SpaceX in Trouble: மஸ்க் வாய மூடிட்டு சும்மா இருந்துருக்கலாம்; பறிபோகும் அரசு ஒப்பந்தங்கள், சிக்கலில் ஸ்பேஸ் எக்ஸ்.!
மஸ்க் வாய மூடிட்டு சும்மா இருந்துருக்கலாம்; பறிபோகும் அரசு ஒப்பந்தங்கள், சிக்கலில் ஸ்பேஸ் எக்ஸ்.!
Embed widget