மேலும் அறிய

செந்தில் பாலாஜி வீட்டில் 150 கிலோ தங்கம் பிடிப்பட்டதா..? - ஹெச். ராஜா கூறுவது என்ன..?

தமிழகத்தில் கள்ளச்சாராயத்தால் 22 பேர் உயிரிழந்த போது அமைச்சர் செந்தில் பாலாஜியை பதவி விலக சொல்லாதவர்கள். எதிர்பாராமல் நடந்த ரயில் விபத்துக்காக பிரதமரை மட்டும் பதவி விலக சொல்வது ஏன் ? - ஹெச்.ராஜா கேள்வி

திருச்சி மாநகர் நீதிமன்றம் அருகே உள்ள மாவட்ட பாஜக அலுவலகத்தில் பாரதிய ஜனதா கட்சியின் 9 ஆண்டு சாதனைகள் குறித்த நிகழ்வில் பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் ஹெச்.ராஜா கலந்துகொண்டார். பின்னர்  செய்தியாளர்களை சந்தித்து அவர் பேசுகையில், “நீண்ட நாட்களாக செய்யாமல் இருக்கும் பிரச்சினைக்கு தீர்வு கண்டால் அது தான் நல்ல அரசாக இருக்கும். அந்த வகையில் பாரதிய ஜனதா கட்சி தீர்க்க முடியாமல் பல ஆண்டுகளாக இருந்த பல பிரச்சினைகளை தீர்த்து வைத்தது. மேலும்  பாஜக, ஆர்டிக்கல் 370 அத்துடன் 35A வை ரத்து செய்தது. குறிப்பாக ராமர் கோவில் பிரச்சினையை மிக சுலபமாக தீர்த்தது. இந்தியாவிலேயே ஒரு மிக பெரிய சிக்கலான விஷயத்தை சரி செய்தது பா.ஜ.க மட்டும் தான். அயோத்தி ராமர் கோவில் விவகாரத்தில் பாரதிய ஜனதா கட்சி என்ன செய்யப் போகிறது என்று அனைவரும் எதிர்பார்த்த நிலையில் மிக சுலபாக இந்த பிரச்சினைக்கு தீர்வு கொண்டு வந்தது” என்றார்.  மேலும், “அனைவருக்கும் வீடு திட்டத்தில் 3 கோடி பேருக்கு வீடு கட்டி கொடுத்துளளோம். ரூபாய் 11 கோடி 72 லட்சம் மக்களுக்கு கழிப்பறை வசதி ஏற்படுத்தி கொடுத்துள்ளோம். ரூபாய் 1 லட்சம் கோடி வேளாண்மை துறையில் முதலீடு செய்துள்ளோம், விளிம்பு நிலை விவசாயிகளுக்கு எண்ணற்ற நல்ல திட்டங்களை கொடுத்துள்ளோம். குறிப்பாக  20 லட்சம் கோடி கடன் விவசாயிகளுக்கு கடன் கொடுக்கப்பட்டுள்ளது.  நாடு முழுவதும் ரூபாய் 1.33 லட்சம் கோடி பிரதம மந்திரியின் பயிர் காப்பீடு திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டுள்ளது.


செந்தில் பாலாஜி வீட்டில் 150 கிலோ தங்கம் பிடிப்பட்டதா..? -  ஹெச். ராஜா கூறுவது என்ன..?

சீனாக்காரன் உற்பத்தி செய்ததில் மிக பெரிய பிரச்னை இந்த கொரோனோ. 250 ஆண்டுகள் நம்மை ஆண்ட பிரிட்டீசிடம் கூட பாராசிட்டமால் இல்லை. ஆனால் நாம் கொடுத்து உதவினோம்” என்று கூறினார்.

தொடர்ந்து பேசிய ஹெச். ராஜா, “என்.ஐ.ஏ சரியான ஆதாரங்கள் இல்லாமல் சோதனை அல்லது கைது நடவடிக்கை எடுப்பதில்லை. இந்தியாவின் வளர்ச்சி விகிதம் 6.1 ஆக உள்ளது. சீனா கூட நமக்கு பின்னர் தான் உள்ளது. 2017ல் இருந்து ஜி.எஸ்.டியை கொண்டு வந்தோம். பொதுமக்கள் நல்ல வரவேற்பை அளித்து வருகின்றனர். உண்மையில் ரயில் விபத்து மிகவும் கவலை அளிக்கும் விஷயம். ரயில் விபத்திற்கான காரணத்தை நாம் கண்டு பிடிப்போம். பிரதமர் நரேந்திர மோடி உடனடியாக சி.பி.ஐ  விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.


செந்தில் பாலாஜி வீட்டில் 150 கிலோ தங்கம் பிடிப்பட்டதா..? -  ஹெச். ராஜா கூறுவது என்ன..?

திருச்சியில் கே.என் நேருவிடம் கேள்வி கேட்டால் என்ன  சொல்கிறார் ? அரசு மற்றும் வேறு எந்த விஷயத்திற்கும் அவர் பதில் கூற மாட்டார். சாக்கடை அடைத்தால் சொல்லு பதில் சொல்கிறேன் என்கிறார். அதேபோல் செந்தில் பாலாஜியை பற்றி பேச எந்த அமைச்சருக்கும் அதிகாரம் கொடுக்கப்படவில்லை. அரசு மதுபான கடைகளில் 10 ரூபாய் பாட்டில் வாங்குவது ரெய்டுக்கு முன் கூட்டியே நடந்து வந்தது.  செந்தில் பாலாஜி வீட்டில் 150 கிலோ தங்கம் பிடிப்பட்டதாக கூறுகிறார்கள்” எனக் கூறினார். ஆனால், இதுதொடர்பான ஆதாரங்களை ஹெச்.ராஜாவிடம் கேட்டபோது அவர் அதை எதையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், பாராளுமன்ற தேர்தல் குறித்த கேள்விக்கு பதில் அளித்த அவர், ஆடு - புலி கதை தான், எதிர் அணிகள் இந்தியாவில் ஒன்று சேர வாய்ப்பு இல்லை என்றார். மல்யுத்த வீரர்கள் போராட்டம் மதிக்கப்டவில்லை என்கிற குற்றச்சாட்டு குறித்த கேள்விக்கு, 6 பேர் கொண்ட கமிட்டி அமைக்கப்பட்டு விசாரணை செய்தனர். இதில்  FIR போடப்பட்டு விசாரணை செய்த காவலர்கள் குற்றம் சாட்டியவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டிய அவசியம் இல்லை என கூறிவிட்டனர். இந்த விவகாரத்தில் வேண்டும் என்றே  தவறாக பொய் செய்தியை பரப்பி வருகிறார்கள் என தெரிவித்தார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Hathras Stampede: உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. முழு விவரம்!
உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. இறந்தவர்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய்!
Hathras Stampede: கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Hathras satsang : ஆன்மிக நிகழ்வில் சோகம்! அதிகரிக்கும் உயிரிழப்புகள்! நடந்தது என்ன?Anurag Thakur INDIA Alliance : Constitution-ல எத்தனை பக்கம் இருக்கு தெரியுமா? திகைத்து போன I.N.D.I.AVillupuram Kallasarayam | மீண்டும் கள்ளச்சாரயம்..பட்டப்பகலில் ஆசாமி அலப்பறை விழுப்புரத்தில் பரபரப்புBJP Cadre cheating | ”பணத்தை ஆட்டைய போட்டபாஜக நிர்வாகி!” கதறும் பெண்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Hathras Stampede: உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. முழு விவரம்!
உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. இறந்தவர்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய்!
Hathras Stampede: கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Sukran Peyarchi 2024: சுக்கிர பெயர்ச்சி!!! கடகத்தில் பெயர்ச்சியாகும் சுக்கிரன் !!!  சந்தோஷத்தில் திளைக்கும் ராசிகள் எவை?
Sukran Peyarchi 2024: சுக்கிர பெயர்ச்சி!!! கடகத்தில் பெயர்ச்சியாகும் சுக்கிரன் !!! சந்தோஷத்தில் திளைக்கும் ராசிகள் எவை?
PM Modi on Rahul: குழந்தைப் பேச்சு; சிறுபிள்ளைத்தனமான சேட்டை! ராகுல் பெயரை சொல்லாமல் கிண்டலடித்த மோடி!
PM Modi on Rahul: குழந்தைப் பேச்சு; சிறுபிள்ளைத்தனமான சேட்டை! ராகுல் பெயரை சொல்லாமல் கிண்டலடித்த மோடி!
Parliament Session: பேசத்தொடங்கிய மோடி:  எதிர்க்கட்சிகளின் அமளியால் ரணகளமான நாடாளுமன்றம் - நடந்தது என்ன?
Parliament Session: பேசத்தொடங்கிய மோடி:  எதிர்க்கட்சிகளின் அமளியால் ரணகளமான நாடாளுமன்றம் - நடந்தது என்ன?
Annamalai: விடுமுறை கேட்டு விண்ணப்பித்துள்ள அண்ணாமலை தலைவர் பதவியிலிருந்து மாற்றப்படுகிறாரா?
Annamalai: விடுமுறை கேட்டு விண்ணப்பித்துள்ள அண்ணாமலை தலைவர் பதவியிலிருந்து மாற்றப்படுகிறாரா?
Embed widget