மேலும் அறிய

திருச்சியில் பிரேக் பிடிக்காத அரசு பேருந்தை சுவரில் மோதி நிறுத்திய டிரைவர்! நடந்தது என்ன?

திருச்சியில் பிரேக் பிடிக்காத அரசு பேருந்தை சுவரில் மோதி நிறுத்திய டிரைவர், அதிர்ச்சி அடைந்த பயணிகள்.

திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் 40-க்கும் மேற்பட்ட இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு தில்லை நகர் வழியாக சத்திரம் பேருந்து நிலையத்திற்கு அரசு டவுன் பஸ் ஒன்று புறப்பட்டது. இந்த பேருந்து காலை 11 மணியளவில் திருச்சி நீதிமன்றம் அருகில் எம்ஜி.ஆர். சிலை ரவுண்டானா பகுதியில் வந்து கொண்டிருந்தது. அப்போது பேருந்தின் வேகத்தை குறைப்பதற்காக பணியில் இருந்த டிரைவர் சகாய சவுரிமுத்து பிரேக்கை காலால் அழுத்தினார். ஆனால் பேருந்தின் வேகம் குறையாமல் தொடர்ந்து சென்று கொண்டிருந்தை அறிந்த அவர் அதிர்ச்சி அடைந்தார். பிரேக் மீது ஏறி நின்று பார்த்தும் பஸ் நிற்கவில்லை. இதற்கிடையே முன்வரிசையில் அமர்ந்து பயணித்த டிரைவரின் செயல்பாட்டால் குழப்பமும், அச்சமும் அடைந்தனர். அப்போது கண்டக்டர் அருகில் வந்து விபரம் கேட்டபோதுதான், பேருந்தில் பிரேக் செயலிழந்து விட்டதாகவும், பேருந்தை நிறுத்த முடியவில்லை என்ற தகவலும் கிடைத்தது. இதைக்கேட்ட பேருந்தில் இருந்த பயணிகள் அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். தொடர்ந்து சென்று கொண்டிருந்த பேருந்து என்ன ஆகப்போகிறதோ, எப்படி நிற்கப்போகிறதோ என்ற திக், திக் மனதுடன் உயிரை கையில் பிடித்தவாறு பயணிகள் அமர்ந்திருந்தனர். இதற்கிடையே ஒருசிலர் பேருந்தில் இருந்து குதிக்கும் முயற்சியிலும் ஈடுபட்டனர். மேலும் பலர் பேருந்தின் பின் பகுதிக்கு சென்றுவிட்டனர்.


திருச்சியில் பிரேக் பிடிக்காத அரசு பேருந்தை சுவரில் மோதி நிறுத்திய டிரைவர்! நடந்தது என்ன?

இந்நிலையில் பயணிகளுக்கு தைரியம் கூறிய டிரைவர் சகாய சவுரிமுத்து, பயணிகளுக்கு பாதுகாப்பு அளிக்கவும், அதே வேளையில் சாலையில் சென்று கொண்டிருப்போர் மீது மோதாமல் இருக்கும் வகையிலும் கோர்ட்டு அருகிலுள்ள எம்.ஜி.ஆர். சிலை ரவுண்டானாவின் சுவற்றில் மோதி பஸ்சை நிறுத்தினார். இந்த விபத்தில் பஸ்சின் முன்பகுதி பலத்த சேதமடைந்தது. மேலும் இரண்டு பயணிகள் படுகாயம் அடைந்தனர். மற்றவர்களுக்கு சிறுசிறு சிராய்ப்பு காயங்கள் ஏற்பட்டன. உடனடியாக அவர்களை மீட்டு அருகிலுள்ள திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து தகவல் அறிந்ததும் போக்குவரத்து போலீசார் விரைந்து வந்து போக்குவரத்தை சரி செய்தனர். பின்னர் பஸ்சை மீட்டு எடுத்துச் சென்றனர். இதுகுறித்து போக்குவரத்து தெற்கு புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அப்பகுதியில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IND vs BAN: கெத்து காட்டிய இந்தியா! வங்கதேசத்தை வாரி சுருட்டி டெஸ்ட் தொடரை வென்று அசத்தல்!
IND vs BAN: கெத்து காட்டிய இந்தியா! வங்கதேசத்தை வாரி சுருட்டி டெஸ்ட் தொடரை வென்று அசத்தல்!
Mulla Periyar Dam: அண்டை மாநில நதிநீர்ப் பிரச்சனையில் அரசியல் லாபம் பார்ப்பதா? ஈபிஎஸ்ஸுக்கு அமைச்சர் துரைமுருகன் கண்டனம்
Mulla Periyar Dam: அண்டை மாநில நதிநீர்ப் பிரச்சனையில் அரசியல் லாபம் பார்ப்பதா? ஈபிஎஸ்ஸுக்கு அமைச்சர் துரைமுருகன் கண்டனம்
Group 4 Vacancy: அதிகரிக்கும் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 பணியிடங்கள்; இந்த மாதத்திலேயே தேர்வு முடிவுகள்- முழு விவரம்!
Group 4 Vacancy: அதிகரிக்கும் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 பணியிடங்கள்; இந்த மாதத்திலேயே தேர்வு முடிவுகள்- முழு விவரம்!
Breaking News LIVE 1st OCT 2024: ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு எதிர்காலத்தில் அனுமதி மறுக்கக்கூடாது - சென்னை உயர்நீதிமன்றம்
Breaking News LIVE 1st OCT 2024: ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு எதிர்காலத்தில் அனுமதி மறுக்கக்கூடாது - சென்னை உயர்நீதிமன்றம்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Kanchipuram Lady : ’’வீடு கட்ட விடமாட்றாங்க’’பெட்ரோலுடன் வந்த பெண்!Rajinikanth Hospitalized : மருத்துவமனையில் ரஜினிகாந்த்! நள்ளிரவில் திடீர் அட்மிட்!Udhayanidhi stalin Secretary | உதயநிதியின் செயலாளர் யார்? ரேஸில் முந்தும் Amudha! ஸ்டாலின் ஸ்கெட்ச்Vijay bussy anand |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IND vs BAN: கெத்து காட்டிய இந்தியா! வங்கதேசத்தை வாரி சுருட்டி டெஸ்ட் தொடரை வென்று அசத்தல்!
IND vs BAN: கெத்து காட்டிய இந்தியா! வங்கதேசத்தை வாரி சுருட்டி டெஸ்ட் தொடரை வென்று அசத்தல்!
Mulla Periyar Dam: அண்டை மாநில நதிநீர்ப் பிரச்சனையில் அரசியல் லாபம் பார்ப்பதா? ஈபிஎஸ்ஸுக்கு அமைச்சர் துரைமுருகன் கண்டனம்
Mulla Periyar Dam: அண்டை மாநில நதிநீர்ப் பிரச்சனையில் அரசியல் லாபம் பார்ப்பதா? ஈபிஎஸ்ஸுக்கு அமைச்சர் துரைமுருகன் கண்டனம்
Group 4 Vacancy: அதிகரிக்கும் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 பணியிடங்கள்; இந்த மாதத்திலேயே தேர்வு முடிவுகள்- முழு விவரம்!
Group 4 Vacancy: அதிகரிக்கும் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 பணியிடங்கள்; இந்த மாதத்திலேயே தேர்வு முடிவுகள்- முழு விவரம்!
Breaking News LIVE 1st OCT 2024: ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு எதிர்காலத்தில் அனுமதி மறுக்கக்கூடாது - சென்னை உயர்நீதிமன்றம்
Breaking News LIVE 1st OCT 2024: ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு எதிர்காலத்தில் அனுமதி மறுக்கக்கூடாது - சென்னை உயர்நீதிமன்றம்
Rajinikanth:  சாதாரண பரிசோதனை.. யாரும் கவலைப்பட தேவையில்லை - லதா ரஜினிகாந்த்
சாதாரண பரிசோதனை.. யாரும் கவலைப்பட தேவையில்லை - லதா ரஜினிகாந்த்
Govinda: அச்சச்சோ! நடிகர் கோவிந்தா உடலில் பாய்ந்த துப்பாக்கி குண்டு! இப்போ எப்படி இருக்கிறார்?
Govinda: அச்சச்சோ! நடிகர் கோவிந்தா உடலில் பாய்ந்த துப்பாக்கி குண்டு! இப்போ எப்படி இருக்கிறார்?
இந்தியர்களே! இனி இலங்கைக்கு போக விசா தேவையில்லை - இன்று முதல் அமல்
இந்தியர்களே! இனி இலங்கைக்கு போக விசா தேவையில்லை - இன்று முதல் அமல்
கபிலன் வைரமுத்து எழுதிய மாக்கியவெல்லி காப்பியத்தை வெளியிட்ட பாரதிராஜா..
கபிலன் வைரமுத்து எழுதிய மாக்கியவெல்லி காப்பியத்தை வெளியிட்ட பாரதிராஜா..
Embed widget