மேலும் அறிய

திருச்சியில் ரூ.15 ஆயிரம் லஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி கைது - லஞ்ச ஒழிப்புதுறை நடவடிக்கை

திருச்சி மாவட்டத்தில் ரூ.15 ஆயிரம் லஞ்சம் வாங்கிய தொழிலாளர் உதவி ஆய்வாளர், லஞ்ச ஒழிப்புதுறை அதிகாரிகளால் அதிரடியாக கைது செய்யப்பட்டார்.

திருச்சி மாவட்டம்,  ஸ்ரீரங்கத்தை சேர்ந்தவர் மனோகரன் (வயது 37). இவர் திருச்சியில் உள்ள சில தனியார் நிறுவனங்களுக்கு தொழிலாளர் சட்ட ஆலோசகராக பணிபுரிந்து வருகிறார். அதன்படி திருச்சி கண்டோன்மெண்ட் பகுதியில் உள்ள ஒரு பிரபல தொழில் நிறுவனத்திற்கும் ஆலோசகராக உள்ளார். அந்த நிறுவனத்தை கடந்த மாதம் 15-ந்தேதி தொழிலாளர் உதவி ஆய்வாளர் கார்த்திக் ஆய்வு செய்தார். பின்னர் அந்த நிறுவனத்தில் ஆவணங்களை முறையாக பராமரிக்கவில்லை என்று எச்சரிக்கை கடிதம் அனுப்பி உள்ளார். இதைத்தொடர்ந்து ஆலோசகர் மனோகரன், அந்த நிறுவனத்தில் ஆவணங்கள் முறையாக பராமரிக்கப்பட்டுள்ளது என்று கூறி, ஆவணங்களின் நகல்களை தொழிலாளர் உதவி ஆய்வாளர் கார்த்திக்கிடம் கொடுத்துள்ளார். ப்போது தொழிலாளர் உதவி ஆய்வாளர் கார்த்திக், திருச்சியில் உள்ள அனைத்து நிறுவனங்களிலும் எங்களை முறையாக கவனித்து விடுகிறார்கள். ஆனால் உங்கள் நிறுவனத்தில் இருந்து மட்டும் எங்களை கவனிக்காமல் உள்ளீர்கள். நாங்கள் நினைத்தால் உங்களுக்கு எப்படி வேண்டுமானாலும் அபராதம் விதிக்கலாம் என்றும், ரூ.15 ஆயிரம் லஞ்சமாக கொடுங்கள், உங்களுக்கு பிரச்சினை இல்லாமல் பார்த்துக் கொள்கிறேன் என்றும் கூறியுள்ளார். 


திருச்சியில் ரூ.15 ஆயிரம் லஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி  கைது - லஞ்ச ஒழிப்புதுறை நடவடிக்கை

இதனை தொடர்ந்து  லஞ்சம் கொடுக்க விரும்பாத மனோகரன், அந்த நிறுவனத்திடம் அனுமதி பெற்று, தன்னிடம் லஞ்சம் கேட்ட தொழிலாளர் உதவி ஆய்வாளர் கார்த்திக் மீது நடவடிக்கை எடுக்குமாறு திருச்சி லஞ்ச ஒழிப்புத்துறை துணை போலீஸ் சூப்பிரண்டு மணிகண்டனிடம் புகார் அளித்தார். இதையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசாரின் ஆலோசனையின்படி, நேற்று மாலை 4 மணியளவில் தொழிலாளர் உதவி ஆய்வாளர் கார்த்திக்கிடம் ரூ.15 ஆயிரத்தை மனோகரன் வழங்கினார். அந்த பணத்தை கார்த்திக் வாங்கியபோது, அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் விரைந்து வந்து அவரை கையும் களவுமாக பிடித்தனர். பின்னர் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.மேலும் இதுக்குறித்து லஞ்ச ஒழிப்புதுறை அதிகாரிகள் கூறியது.. திருச்சி மாவட்டத்தை பொறுத்துவரை தொடர்ந்து அதிரடியாக நடவடிக்கை எடுக்கபட்டு வருகிறது. குறிப்பாக பொதுமக்கள் மிகுந்த விழிப்புணர்வுடன் செயல்பட்டு வருகிறார்கள். மேலும் மக்கள் கொடுக்கும் புகார்களை அடுத்து தான் நாங்கள் சோதனையில் ஈடுபட்டு கைது நடவடிக்கை எடுத்து வருகிறோம் என்றனர். குறிப்பாக அரசு அலுவலகம் என்பது மக்கள் பணிகளை செய்வது தான் அங்கு இதுபோன்று தவறான செயல்களில் அதிகாரிகள் ஈடுபட்டால் பொதுமக்கள் தயக்கமின்றி உடனடியாக லஞ்ச ஒழிப்புதுறைக்கு தகவல் கொடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டனர். 


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

G V Prakash - Saindhavi: ஆம் நாங்கள் பிரிந்து விட்டோம்.. அதிகாரப்பூர்வமாக அறிவித்த ஜி.வி.பிரகாஷ் - சைந்தவி!
G V Prakash - Saindhavi: ஆம் நாங்கள் பிரிந்து விட்டோம்.. அதிகாரப்பூர்வமாக அறிவித்த ஜி.வி.பிரகாஷ் - சைந்தவி!
IPL 2024 GT vs KKR: வருண பகவான் போட்ட ஸ்கெட்ச்; பறிபோன GT-இன் ப்ளே ஆஃப் வாய்ப்பு; முதல் இடத்தை உறுதி செய்த KKR!
IPL 2024 GT vs KKR: வருண பகவான் போட்ட ஸ்கெட்ச்; பறிபோன GT-இன் ப்ளே ஆஃப் வாய்ப்பு; முதல் இடத்தை உறுதி செய்த KKR!
Olympic Games Paris 2024: இன்னும் பத்தே வாரங்களில் ஒலிம்பிக்; பதக்கங்களை வெல்ல ஆயத்தமாகும் இந்தியா!
இன்னும் பத்தே வாரங்களில் ஒலிம்பிக்; பதக்கங்களை வெல்ல ஆயத்தமாகும் இந்தியா!
T20 World Cup: டி20 உலகக் கோப்பை இந்திய அணிக்கான புதிய ஜெர்சியை அறிமுகம் செய்த பிசிசிஐ!
T20 World Cup: டி20 உலகக் கோப்பை இந்திய அணிக்கான புதிய ஜெர்சியை அறிமுகம் செய்த பிசிசிஐ!
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Savukku Shankar | Arvind Kejriwal Master Plan | ”டெல்லிக்கு கிளம்புங்க உதய்”பறந்து வந்த அழைப்பு..Rahul Gandhi Marriage | ராகுலுக்கு டும்..டும்..டும்..அக்கா பிரியங்கா ஹேப்பி!  MARRIAGE UPDATEVaaname Ellai | மாறும் LIFESTYLE : PHYSIOTHERAPHY படிப்புக்கு பெருகும் வேலைவாய்ப்பு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
G V Prakash - Saindhavi: ஆம் நாங்கள் பிரிந்து விட்டோம்.. அதிகாரப்பூர்வமாக அறிவித்த ஜி.வி.பிரகாஷ் - சைந்தவி!
G V Prakash - Saindhavi: ஆம் நாங்கள் பிரிந்து விட்டோம்.. அதிகாரப்பூர்வமாக அறிவித்த ஜி.வி.பிரகாஷ் - சைந்தவி!
IPL 2024 GT vs KKR: வருண பகவான் போட்ட ஸ்கெட்ச்; பறிபோன GT-இன் ப்ளே ஆஃப் வாய்ப்பு; முதல் இடத்தை உறுதி செய்த KKR!
IPL 2024 GT vs KKR: வருண பகவான் போட்ட ஸ்கெட்ச்; பறிபோன GT-இன் ப்ளே ஆஃப் வாய்ப்பு; முதல் இடத்தை உறுதி செய்த KKR!
Olympic Games Paris 2024: இன்னும் பத்தே வாரங்களில் ஒலிம்பிக்; பதக்கங்களை வெல்ல ஆயத்தமாகும் இந்தியா!
இன்னும் பத்தே வாரங்களில் ஒலிம்பிக்; பதக்கங்களை வெல்ல ஆயத்தமாகும் இந்தியா!
T20 World Cup: டி20 உலகக் கோப்பை இந்திய அணிக்கான புதிய ஜெர்சியை அறிமுகம் செய்த பிசிசிஐ!
T20 World Cup: டி20 உலகக் கோப்பை இந்திய அணிக்கான புதிய ஜெர்சியை அறிமுகம் செய்த பிசிசிஐ!
Watch Video: இந்தோனேசியா மேற்கு சுமத்ராவில் திடீர் கனமழை, வெள்ளம்.. இதுவரை 41 பேர் வரை உயிரிழப்பு என தகவல்!
இந்தோனேசியா மேற்கு சுமத்ராவில் திடீர் கனமழை, வெள்ளம்.. இதுவரை 41 பேர் வரை உயிரிழப்பு என தகவல்!
“அமைச்சர் ரகுபதி என்னை அப்படி சொல்லி இருக்கக்கூடாது” - செங்கோட்டையன் கண்டனம்
“அமைச்சர் ரகுபதி என்னை அப்படி சொல்லி இருக்கக்கூடாது” - செங்கோட்டையன் கண்டனம்
Watch video : கண்ணாடியில் உன் மூஞ்சியை பார்!  ஹீரோவாக ஆசைப்பட்ட நகுலுக்கு கிடைத்த முதல் கமெண்ட்..
கண்ணாடியில் உன் மூஞ்சியை பார்!  ஹீரோவாக ஆசைப்பட்ட நகுலுக்கு கிடைத்த முதல் கமெண்ட்..
En Kalloori Kanavu : என் கல்லூரி கனவு; மாணவர்களுக்கு மே 14 முதல் உயர்கல்வி வழிகாட்டல் திட்டம்.. எங்கெல்லாம்? முழு விவரம் இதோ!
என் கல்லூரி கனவு; மாணவர்களுக்கு மே 14 முதல் உயர்கல்வி வழிகாட்டல் திட்டம்.. எங்கெல்லாம்? விவரம்
Embed widget