மேலும் அறிய

திருச்சியில் ரூ.15 ஆயிரம் லஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி கைது - லஞ்ச ஒழிப்புதுறை நடவடிக்கை

திருச்சி மாவட்டத்தில் ரூ.15 ஆயிரம் லஞ்சம் வாங்கிய தொழிலாளர் உதவி ஆய்வாளர், லஞ்ச ஒழிப்புதுறை அதிகாரிகளால் அதிரடியாக கைது செய்யப்பட்டார்.

திருச்சி மாவட்டம்,  ஸ்ரீரங்கத்தை சேர்ந்தவர் மனோகரன் (வயது 37). இவர் திருச்சியில் உள்ள சில தனியார் நிறுவனங்களுக்கு தொழிலாளர் சட்ட ஆலோசகராக பணிபுரிந்து வருகிறார். அதன்படி திருச்சி கண்டோன்மெண்ட் பகுதியில் உள்ள ஒரு பிரபல தொழில் நிறுவனத்திற்கும் ஆலோசகராக உள்ளார். அந்த நிறுவனத்தை கடந்த மாதம் 15-ந்தேதி தொழிலாளர் உதவி ஆய்வாளர் கார்த்திக் ஆய்வு செய்தார். பின்னர் அந்த நிறுவனத்தில் ஆவணங்களை முறையாக பராமரிக்கவில்லை என்று எச்சரிக்கை கடிதம் அனுப்பி உள்ளார். இதைத்தொடர்ந்து ஆலோசகர் மனோகரன், அந்த நிறுவனத்தில் ஆவணங்கள் முறையாக பராமரிக்கப்பட்டுள்ளது என்று கூறி, ஆவணங்களின் நகல்களை தொழிலாளர் உதவி ஆய்வாளர் கார்த்திக்கிடம் கொடுத்துள்ளார். ப்போது தொழிலாளர் உதவி ஆய்வாளர் கார்த்திக், திருச்சியில் உள்ள அனைத்து நிறுவனங்களிலும் எங்களை முறையாக கவனித்து விடுகிறார்கள். ஆனால் உங்கள் நிறுவனத்தில் இருந்து மட்டும் எங்களை கவனிக்காமல் உள்ளீர்கள். நாங்கள் நினைத்தால் உங்களுக்கு எப்படி வேண்டுமானாலும் அபராதம் விதிக்கலாம் என்றும், ரூ.15 ஆயிரம் லஞ்சமாக கொடுங்கள், உங்களுக்கு பிரச்சினை இல்லாமல் பார்த்துக் கொள்கிறேன் என்றும் கூறியுள்ளார். 


திருச்சியில் ரூ.15 ஆயிரம் லஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி  கைது - லஞ்ச ஒழிப்புதுறை நடவடிக்கை

இதனை தொடர்ந்து  லஞ்சம் கொடுக்க விரும்பாத மனோகரன், அந்த நிறுவனத்திடம் அனுமதி பெற்று, தன்னிடம் லஞ்சம் கேட்ட தொழிலாளர் உதவி ஆய்வாளர் கார்த்திக் மீது நடவடிக்கை எடுக்குமாறு திருச்சி லஞ்ச ஒழிப்புத்துறை துணை போலீஸ் சூப்பிரண்டு மணிகண்டனிடம் புகார் அளித்தார். இதையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசாரின் ஆலோசனையின்படி, நேற்று மாலை 4 மணியளவில் தொழிலாளர் உதவி ஆய்வாளர் கார்த்திக்கிடம் ரூ.15 ஆயிரத்தை மனோகரன் வழங்கினார். அந்த பணத்தை கார்த்திக் வாங்கியபோது, அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் விரைந்து வந்து அவரை கையும் களவுமாக பிடித்தனர். பின்னர் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.மேலும் இதுக்குறித்து லஞ்ச ஒழிப்புதுறை அதிகாரிகள் கூறியது.. திருச்சி மாவட்டத்தை பொறுத்துவரை தொடர்ந்து அதிரடியாக நடவடிக்கை எடுக்கபட்டு வருகிறது. குறிப்பாக பொதுமக்கள் மிகுந்த விழிப்புணர்வுடன் செயல்பட்டு வருகிறார்கள். மேலும் மக்கள் கொடுக்கும் புகார்களை அடுத்து தான் நாங்கள் சோதனையில் ஈடுபட்டு கைது நடவடிக்கை எடுத்து வருகிறோம் என்றனர். குறிப்பாக அரசு அலுவலகம் என்பது மக்கள் பணிகளை செய்வது தான் அங்கு இதுபோன்று தவறான செயல்களில் அதிகாரிகள் ஈடுபட்டால் பொதுமக்கள் தயக்கமின்றி உடனடியாக லஞ்ச ஒழிப்புதுறைக்கு தகவல் கொடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டனர். 


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Thiruparankundram Deepam Issue: கார்த்திகை தீபம்; பதற்ற பூமியாக மாறிய திருப்பரங்குன்றம்; 144 தடை உத்தரவு - நடந்தது என்ன.?
கார்த்திகை தீபம்; பதற்ற பூமியாக மாறிய திருப்பரங்குன்றம்; 144 தடை உத்தரவு - நடந்தது என்ன.?
TN School Leave: கனமழை; சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் நாளை(04.12.25) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு
கனமழை; சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் நாளை(04.12.25) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு
IND vs SA 2nd ODI: ஷாக்கான இந்திய அணி.. திருப்பி அடித்த தென்னாப்பிரிக்கா.. 2வது ஒருநாள் போட்டியில் அபார வெற்றி!
IND vs SA 2nd ODI: ஷாக்கான இந்திய அணி.. திருப்பி அடித்த தென்னாப்பிரிக்கா.. 2வது ஒருநாள் போட்டியில் அபார வெற்றி!
Tiruvannamalai Karthigai Deepam 2025 LIVE: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் மகா தீபம் ஏற்றப்பட்டது
Tiruvannamalai Karthigai Deepam 2025 LIVE: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் மகா தீபம் ஏற்றப்பட்டது
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

OPS Delhi Visit |20 நிமிட பேச்சுவார்த்தை!DEAL-ஐ முடித்த குருமூர்த்திOPS அமித்ஷா சந்திப்பின் பின்னணி?
OPS Delhi Visit | OPS டெல்லி விசிட்!தனிக்கட்சியா? பாஜகவா?அரசியலில் திடீர் ட்விஸ்ட்
சென்னையில் மழை தாண்டவாம் டிட்வாவின் LATEST UPDATE எப்போது மழை நிற்கும்? | TN Rain Ditwah Cyclone
திண்டுக்கல் வந்த தனுஷ் சூழ்ந்த நூற்றுக்கணக்கான ரசிகர்கள் SPOT-க்கு ஓடோடி வந்த போலீஸ் | Dhanush

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Thiruparankundram Deepam Issue: கார்த்திகை தீபம்; பதற்ற பூமியாக மாறிய திருப்பரங்குன்றம்; 144 தடை உத்தரவு - நடந்தது என்ன.?
கார்த்திகை தீபம்; பதற்ற பூமியாக மாறிய திருப்பரங்குன்றம்; 144 தடை உத்தரவு - நடந்தது என்ன.?
TN School Leave: கனமழை; சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் நாளை(04.12.25) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு
கனமழை; சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் நாளை(04.12.25) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு
IND vs SA 2nd ODI: ஷாக்கான இந்திய அணி.. திருப்பி அடித்த தென்னாப்பிரிக்கா.. 2வது ஒருநாள் போட்டியில் அபார வெற்றி!
IND vs SA 2nd ODI: ஷாக்கான இந்திய அணி.. திருப்பி அடித்த தென்னாப்பிரிக்கா.. 2வது ஒருநாள் போட்டியில் அபார வெற்றி!
Tiruvannamalai Karthigai Deepam 2025 LIVE: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் மகா தீபம் ஏற்றப்பட்டது
Tiruvannamalai Karthigai Deepam 2025 LIVE: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் மகா தீபம் ஏற்றப்பட்டது
Joy Crizildaa Vs Rangaraj: டேய் தகப்பா.! மாதம்பட்டி ரங்கராஜை மாட்டிவிட்ட பச்சிளம் குழந்தை - ஜாய் கிரிசில்டா பதிவ பாருங்க
டேய் தகப்பா.! மாதம்பட்டி ரங்கராஜை மாட்டிவிட்ட பச்சிளம் குழந்தை - ஜாய் கிரிசில்டா பதிவ பாருங்க
IND Vs SA 2nd ODI: கோலி, கெய்க்வாட் அபாரம்; 359 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இந்தியா - எட்டுவார்களா பவுமா பாய்ஸ்.?
கோலி, கெய்க்வாட் அபாரம்; 359 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இந்தியா - எட்டுவார்களா பவுமா பாய்ஸ்.?
Orange Alert: இன்றைக்கும் சென்னையில் செம சம்பவம் இருக்கு... 7 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்- எங்கெல்லாம் தெரியுமா.?
இன்றைக்கும் சென்னையில் செம சம்பவம் இருக்கு... 7 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்- எங்கெல்லாம் தெரியுமா.?
Imran Khan Alive: தெரிந்தது விடை; உயிரோடு இருக்கும் இம்ரான் கான்; துன்புறுத்தப்படுவதாக சிறையில் சந்தித்த சகோதரி பகீர்
தெரிந்தது விடை; உயிரோடு இருக்கும் இம்ரான் கான்; துன்புறுத்தப்படுவதாக சிறையில் சந்தித்த சகோதரி பகீர்
Embed widget