மேலும் அறிய

அரியலூர் மாவட்டத்தில் புலிகள் நடமாட்டமா? பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வனத்துறை அறிவுரை!

அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் அருகே பெரியாத்துகுறிச்சி கிராமத்தில் புலிகள் நடமாட்டம் மக்கள்புகார் மக்கள் பாதுகாப்பாக இருக்க வனத்துறையினர் அறிவுரை வழங்கியுள்ளனர்.

அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே உள்ள பெரியாத்துகுறிச்சி கிராமம் அரியலூர் மற்றும் கடலூர் மாவட்ட பகுதிகளை இணைக்கும் பகுதியில் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் நேற்று மாலை அதே பகுதியை சேர்ந்த பாலகிருஷ்ணன் (வயது 40) என்பவர் அய்யனார் கோவில் அருகே மாடு மேய்த்துக்கொண்டிருந்தார். அப்போது அங்கு 2 புலிகள் நிற்பதை கண்ட மாடுகள் மிரண்டு அங்குமிங்கும் ஓட தொடங்கின. இதனைக்கண்ட பாலகிருஷ்ணன் அலறிக் கொண்டு கிராமத்தை நோக்கி ஓடி சென்றார். அப்போது அந்த புலிகள் பரமசிவம் என்பவரது கரும்பு தோட்டத்துக்குள் புகுந்து ஓடியது. இதுகுறித்து தகவல் அறிந்த அப்பகுதி மக்கள் கரும்பு தோட்டத்துக்கு விரைந்து சென்று பார்த்தனர். அப்போது சில கால் தடங்கள் பதிவாகி இருந்தது. இது புலி அல்லது சிறுத்தையின் கால் தடமாக இருக்கலாம் என அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். இதனால் அப்பகுதி மக்கள் பீதி அடைந்து உள்ளனர். இதையடுத்து, ஆண்டிமடம் போலீசாருக்கும், மாவட்ட வனத்துறைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதன்பேரில் வனத்துறையினர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஆய்வு செய்தனர். அப்போது அந்த கால் தடங்கள் புலியின் கால் தடங்கள் இல்லை என்று தெரிவித்தனர். வேறு ஏதேனும் வன விலங்குகளின் கால் தடமாக இருக்கலாம் என்றும், அதன் பாத சுவடுகளை பதிவு செய்து ஆய்வுக்காக எடுத்துக் கொண்டனர்.
 

அரியலூர் மாவட்டத்தில் புலிகள் நடமாட்டமா? பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வனத்துறை அறிவுரை!
 
மேலும், புலிகள் நடமாட்டம் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ள பகுதிகளில் சுமார் 7 கிலோமீட்டர் தொலைவில் கடலூர் மாவட்டத்தை சேர்ந்த கருவேப்பிலங்குறிச்சி பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி அமைந்துள்ளது. அதேபோல் ஆண்டிமடம் பகுதியில் திருகோணம் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி உள்ளது. இந்தப் பகுதிகளில் இருந்து பெரியாத்துக்குறிச்சி பகுதி வரை புலிகள் வர வேண்டும் என்றால் இடையில் இருக்கும் குடியிருப்புகளை கடந்து தான் வரவேண்டிய நிலை உள்ளது. எனவே புலிகள் பெரியாத்துக்குறிச்சி பகுதிக்கு வந்திருப்பதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு என்று வனத்துறையினர் தெரிவிக்கின்றனர். இருந்தபோதிலும் சந்தேகத்திற்குரிய விலங்கின் கால் தடங்களை சேகரித்ததோடு அப்பகுதி மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு வனத்துறையினர் அறிவுரை கூறினர். மேலும், அருகே உள்ள கடலூர் மாவட்ட பகுதிகளிலும் பொதுமக்கள் எச்சரிக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும் பெரியாத்துக்குறிச்சி பகுதியில் போலீசார், வனத்துறையினர், வருவாய்த்துறையினர் முகாமிட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சம்பவம் காரணமாக அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.
 
 
ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

DMDK Alliance: முந்திரிக் கொட்டை மாதிரி சொல்லனுமா? கூட்டணி அறிவிப்பில் தொண்டர்களை ஏமாற்றிய பிரேமலதா விஜயகாந்த்
DMDK Alliance: முந்திரிக் கொட்டை மாதிரி சொல்லனுமா? கூட்டணி அறிவிப்பில் தொண்டர்களை ஏமாற்றிய பிரேமலதா விஜயகாந்த்
Jana Nayagan: சிக்கலில் சிக்கிய ஜனநாயகன்.. விஜய்க்கு பலமா? பலவீனமா? ஓர் அலசல்
Jana Nayagan: சிக்கலில் சிக்கிய ஜனநாயகன்.. விஜய்க்கு பலமா? பலவீனமா? ஓர் அலசல்
Jana Nayagan Issue: காலையில் சான்றிதழ், மாலையில் தடை- பொங்கலுக்குப் பிறகே ஜனநாயகன்... நீதிமன்றத்தில் நடந்தது என்ன?
Jana Nayagan Issue: காலையில் சான்றிதழ், மாலையில் தடை- பொங்கலுக்குப் பிறகே ஜனநாயகன்... நீதிமன்றத்தில் நடந்தது என்ன?
" இன்ஸ்பெக்டர் எங்கே , இங்க வர சொல்லுங்க " காவல் நிலையத்தில் பெண் காவலரை மிரட்டிய போதை ஆசாமி
ABP Premium

வீடியோ

Aarti Ravi vs Ravi Mohan | ”சுயமரியாதை பத்தி நீ பேசலாமா?”ஒரு உண்மையை சொல்றேன்”ரவி மோகன் Vs ஆர்த்தி
Blinkit Delivery boy saves Girl |BLINKIT ORDER-ல் எலிமருந்து! ஹீரோவாக மாறிய DELIVERY BOY
Saaniya Chandhok | அர்ஜுன் டெண்டுல்கருக்கு டும்..டும்..!BUSINESS MAGNATE-ன் பேத்தியார் இந்த சானியா?
ஜனநாயகன் புது ரிலீஸ் தேதி அதிரடி காட்டும் விஜய் ரசிகர்களுக்கு GOOD NEWS | Jana Nayagan New Release Date
Girish Chodankar On DMK Alliance | பிரவீன் விஜய்யுடன் சந்திப்புராகுல் கொடுத்த ஐடியாவா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMDK Alliance: முந்திரிக் கொட்டை மாதிரி சொல்லனுமா? கூட்டணி அறிவிப்பில் தொண்டர்களை ஏமாற்றிய பிரேமலதா விஜயகாந்த்
DMDK Alliance: முந்திரிக் கொட்டை மாதிரி சொல்லனுமா? கூட்டணி அறிவிப்பில் தொண்டர்களை ஏமாற்றிய பிரேமலதா விஜயகாந்த்
Jana Nayagan: சிக்கலில் சிக்கிய ஜனநாயகன்.. விஜய்க்கு பலமா? பலவீனமா? ஓர் அலசல்
Jana Nayagan: சிக்கலில் சிக்கிய ஜனநாயகன்.. விஜய்க்கு பலமா? பலவீனமா? ஓர் அலசல்
Jana Nayagan Issue: காலையில் சான்றிதழ், மாலையில் தடை- பொங்கலுக்குப் பிறகே ஜனநாயகன்... நீதிமன்றத்தில் நடந்தது என்ன?
Jana Nayagan Issue: காலையில் சான்றிதழ், மாலையில் தடை- பொங்கலுக்குப் பிறகே ஜனநாயகன்... நீதிமன்றத்தில் நடந்தது என்ன?
" இன்ஸ்பெக்டர் எங்கே , இங்க வர சொல்லுங்க " காவல் நிலையத்தில் பெண் காவலரை மிரட்டிய போதை ஆசாமி
DMK CONGRESS Alliance: Shut UP..! கூட்டணி பற்றி யாரும் பேசாதீங்க... காங். நிர்வாகிகளுக்கு ஆர்டர் போட்ட செல்வப்பெருந்தகை
Shut UP..! கூட்டணி பற்றி யாரும் பேசாதீங்க... காங். நிர்வாகிகளுக்கு ஆர்டர் போட்ட செல்வப்பெருந்தகை
WPL 2026 MI vs RCB: தொடங்கியது WPL திருவிழா.. வெற்றியுடன் தொடங்குவது ஆர்சிபியா? மும்பையா?
WPL 2026 MI vs RCB: தொடங்கியது WPL திருவிழா.. வெற்றியுடன் தொடங்குவது ஆர்சிபியா? மும்பையா?
மாணவர்களே.. பள்ளிகளுக்கு முக்கிய அறிவிப்பு! விடுமுறை இல்லை- வெளியான பரபரப்பு தகவல்!
மாணவர்களே.. பள்ளிகளுக்கு முக்கிய அறிவிப்பு! விடுமுறை இல்லை- வெளியான பரபரப்பு தகவல்!
Madurai ; திமுக - அதிமுகவிற்கு சமமாக விஜய் கட்சியை பார்க்கிறேன் - கிருஷ்ணசாமி பேட்டி !
Madurai ; திமுக - அதிமுகவிற்கு சமமாக விஜய் கட்சியை பார்க்கிறேன் - கிருஷ்ணசாமி பேட்டி !
Embed widget