மேலும் அறிய

சமயபுரம் மாரியம்மன் கோவில் உண்டியல் காணிக்கை 12 நாட்களில் இவ்வளவா?

திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவயிலில் கடந்த 12 நாட்களில் மட்டும் 93 லட்சம் வரை பக்தர்கள் உண்டியல் காணிக்கைகளை செலுத்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது...

தமிழ்நாட்டில் சக்தி ஸ்தலங்களில் மிகவும் பிரசித்தி பெற்ற ஸ்தலமாக திருச்சி மாவட்டம், சமயபுரம் மாரியம்மன் கோவில் திகழ்ந்து வருகிறது. கேட்டதை தருபவள், நினைத்ததை நிறைவேற்றுபவள், சங்கடங்கள் எத்தனை வந்தாலும் துணை நின்று காப்பவள் என சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்ய செல்வார்கள்.

அதிலும் குறிப்பாக ஆடி மாதம் என்றாலே தமிழ்நாடு மட்டுமல்ல பிற மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் நடைபாதையாக சென்று தங்களது நேற்றிக்கடன் செலுத்துவது வழக்கம்.

ஆடி மாதம் முழுவதும் சமயபுரம் மாரியம்மன் கோவிலில் சிறப்பு பூஜைகள் ஆராதனைகள் தொடர்ந்து நடைபெறும்.

குறிப்பாக ஆண்டு தோறும் நடைபெறும் தேர் திருவிழா மற்றும் மாசி, பங்குனி மாதங்களில் நடைபெறும் பச்சை பட்டினி விரதம் உள்ளிட்ட நிகழ்வுக்கு பல்லாயிரக்கணக்கான மக்கள் தரிசனம் செய்ய வருவார்கள் அப்போது சமயபுரமே விழாக்கோலம் கொண்டிருக்கும்.

சமயபுரம் மாரியம்மனை மனதில் நினைத்து பூஜை செய்தால், வேண்டியவை அனைத்தும் நிறைவேறும். சங்கடங்கள் அனைத்தும் நீங்கும். இத்தகைய உலக சிறப்புமிக்க சமயபுரம் மாரியம்மன் கோவிலில் தினம்தோறும் விழா கோலமாக காட்சி அளிக்கும். 


சமயபுரம் மாரியம்மன் கோவில் உண்டியல் காணிக்கை 12 நாட்களில் இவ்வளவா?

குறிப்பாக சமயபுரம் மாரியம்மன் இடம் எதை வேண்டினாலும் கிடைக்கும் என்ற நம்பிக்கை மக்கள் மத்தியில் பொதுவாக உள்ளது. ஆகையால் மக்கள் தங்களுடைய இன்னல்களை தீர்க்க பலவிதமான நேத்தி கடன்களை வேண்டுதலாக வைத்து சமயபுரம் மாரியம்மனுக்கு பூஜை செய்வார்கள்.

அதேசமயம் பொதுமக்கள் வேண்டுதல் நிறைவேறினால் அவர்களுக்கு ஏற்றவாறு உண்டியலில் காணிக்கை செலுத்தவது வழக்கம். 

அந்த வகையில் பக்தர்கள் கோயில் உண்டியலில் செலுத்திய காணிக்கைகளை கோயிலின் மண்டபத்தில் கோயில் இணை ஆணையர் பிரகாஷ் தலைமையில் உதவி ஆணையர்கள் முன்னிலையில் தன்னார்வலர்கள் , கோயில் பணியாளர்கள், வங்கி பணியாளர்கள் உள்ளிட்டோர் எண்ணுவது வழக்கம்.

கோவில் உண்டியலில் வசூல்
அதேபோல் கடந்த 12 நாட்களில் கோவில் உண்டியலில் வசூல் செய்யப்பட்ட காணிக்கைகள் அனைத்தும் நேற்று எண்ணப்பட்டது. கோவில் இணை ஆணையர் முன்னிலையில் பலத்த பாதுகாப்புடன் கோவில் காணிக்கைகள் அனைத்தும் எண்ணப்பட்டது.


சமயபுரம் மாரியம்மன் கோவில் உண்டியல் காணிக்கை 12 நாட்களில் இவ்வளவா?

சமயபுரம் மாரியம்மன் உண்டியல் காணிக்கை விபரம்..

திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயிலில் பக்தர்கள் செலுத்திய் காணிக்கைகள் கடந்த 12 நாட்களில் கோயில் உண்டியலில் பக்தர்கள் செலுத்திய காணிக்கைகளை எண்ணியதில் 93 லட்சத்து, 57 ஆயிரத்து, 414 ரூபாய் ரொக்கமும், 1 கிலோ 990 கிராம் தங்கமும், 3 கிலோ 475 கிராம் வெள்ளியும், 217 அயல்நாட்டு நோட்டுகளும், 1011 அயல்நாட்டு நாணயங்களும் கிடைக்கப் பெற்றது.

அருள்மிகு ஆதி மாரியம்மன் கோயிலில் உண்டியல் காணிக்கை
அதேபோல் சமயபுரம் மாரியம்மன் கோயிலின் உப கோயிலான அருள்மிகு ஆதி மாரியம்மன் கோயிலில் ரூ.7 லட்சத்து 3 ஆயிரத்து 521 ரூபாய் ரொக்கமும், உஜ்ஜயினி மாகாளியம்மன் கோயிலில் 12 ஆயிரத்து 805 ரூபாய் ரொக்கமும், போஜீஸ்வரர் கோயிலில் ரூ.5 ஆயிரத்து 772 ரொக்கமும் கிடைக்கப் பெற்றன என கோயிலின் இணை ஆணையர் பிரகாஷ் தகவல் தெரிவித்தார்.

குறிப்பாக கடந்த 12 நாட்களில் மட்டும் 93 லட்சம் வரை பக்தர்கள் உண்டியல் காணிக்கைகளை செலுத்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

மேலும் காண
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

MHA Order Mock Drills: வரும் 7-ம் தேதி நாடு தழுவிய போர் பதற்ற ஒத்திகை.. மத்திய அரசு உத்தரவு என தகவல்...
வரும் 7-ம் தேதி நாடு தழுவிய போர் பதற்ற ஒத்திகை.. மத்திய அரசு உத்தரவு என தகவல்...
IPL 2025 SRH vs DC:டெல்லியை சல்லி சல்லியாய் நொறுக்குமா சன்ரைசர்ஸ்? கில்லி போல பேட்டிங் செய்யுமா அக்ஷர் படை?
IPL 2025 SRH vs DC:டெல்லியை சல்லி சல்லியாய் நொறுக்குமா சன்ரைசர்ஸ்? கில்லி போல பேட்டிங் செய்யுமா அக்ஷர் படை?
Israel to Capture Gaza: இனி என்ன நடக்கப் போகுதோ.!? காசாவை முழுமையாக கைப்பற்ற இஸ்ரேல் அமைச்சரவை ஒப்புதல்...
இனி என்ன நடக்கப் போகுதோ.!? காசாவை முழுமையாக கைப்பற்ற இஸ்ரேல் அமைச்சரவை ஒப்புதல்...
சப்போர்ட்டுக்கு நாங்க வர்ரோம்..பிரதமர் மோடிக்கு போன் போட்ட ரஷ்ய அதிபர் புதின்!.ஷாக்கில் பாகிஸ்தான்!
சப்போர்ட்டுக்கு நாங்க வர்ரோம்..பிரதமர் மோடிக்கு போன் போட்ட ரஷ்ய அதிபர் புதின்!.ஷாக்கில் பாகிஸ்தான்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Madurai Aadheenam: திட்டமிட்டு கொல்ல முயற்சியா? குற்றம் சாட்டிய மதுரை ஆதீனம்! வெளியான CCTV காட்சிADMK TVK Alliance | அதிமுக பாஜக கூட்டணியில் தவெக?அமித்ஷா போட்ட ஆர்டர்! விஜய்-க்கு தூது விட்ட இபிஎஸ்CRPF MunirAhmed: பாக்.,பெண்ணுடன் திருமணம்!சிக்கலில் தவிக்கும் CRPF வீரர்! மத்திய அரசு அதிரடி முடிவு”நான் தான் முடிவெடுப்பேன்” கறாராக சொன்ன ஸ்டாலின்! கலக்கத்தில் மா.செ.க்கள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MHA Order Mock Drills: வரும் 7-ம் தேதி நாடு தழுவிய போர் பதற்ற ஒத்திகை.. மத்திய அரசு உத்தரவு என தகவல்...
வரும் 7-ம் தேதி நாடு தழுவிய போர் பதற்ற ஒத்திகை.. மத்திய அரசு உத்தரவு என தகவல்...
IPL 2025 SRH vs DC:டெல்லியை சல்லி சல்லியாய் நொறுக்குமா சன்ரைசர்ஸ்? கில்லி போல பேட்டிங் செய்யுமா அக்ஷர் படை?
IPL 2025 SRH vs DC:டெல்லியை சல்லி சல்லியாய் நொறுக்குமா சன்ரைசர்ஸ்? கில்லி போல பேட்டிங் செய்யுமா அக்ஷர் படை?
Israel to Capture Gaza: இனி என்ன நடக்கப் போகுதோ.!? காசாவை முழுமையாக கைப்பற்ற இஸ்ரேல் அமைச்சரவை ஒப்புதல்...
இனி என்ன நடக்கப் போகுதோ.!? காசாவை முழுமையாக கைப்பற்ற இஸ்ரேல் அமைச்சரவை ஒப்புதல்...
சப்போர்ட்டுக்கு நாங்க வர்ரோம்..பிரதமர் மோடிக்கு போன் போட்ட ரஷ்ய அதிபர் புதின்!.ஷாக்கில் பாகிஸ்தான்!
சப்போர்ட்டுக்கு நாங்க வர்ரோம்..பிரதமர் மோடிக்கு போன் போட்ட ரஷ்ய அதிபர் புதின்!.ஷாக்கில் பாகிஸ்தான்!
IIT Madras: இலவசம்.. 5 ஏஐ படிப்புகளில் சேரலாம்; ஐஐடி சென்னை அசத்தல் அறிமுகம்- என்ன தகுதி? சேர்வது எப்படி?
IIT Madras: இலவசம்.. 5 ஏஐ படிப்புகளில் சேரலாம்; ஐஐடி சென்னை அசத்தல் அறிமுகம்- என்ன தகுதி? சேர்வது எப்படி?
CBSE 10th 12th Result: 10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு; மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்ட சிபிஎஸ்இ!
CBSE 10th 12th Result: 10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு; மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்ட சிபிஎஸ்இ!
Amrit Bharat Express: சென்னை மக்களுக்கு ஒரு குட் நியூஸ்.. வருகிறது அம்ரித் பாரத் ரயில்.. முழு விவரம் இதோ...
சென்னை மக்களுக்கு ஒரு குட் நியூஸ்.. வருகிறது அம்ரித் பாரத் ரயில்.. முழு விவரம் இதோ...
TNEA 2025: பொறியியல் படிப்புகளில் சேர மே 7 முதல் விண்ணப்பம்; தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் அறிவிப்பு
TNEA 2025: பொறியியல் படிப்புகளில் சேர மே 7 முதல் விண்ணப்பம்; தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் அறிவிப்பு
Embed widget