மேலும் அறிய

தமிழ்நாட்டில் பூரண மதுவிலக்கை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் - விவசாயி அய்யாகண்ணு 

சாராயக்கடைகளை மூடினால் தான் தமிழகத்திற்கு விமோஷனம் பிறக்கும், வருங்கால சந்ததியினருக்கு நன்றாக இருக்கும். - விவசாயி அய்யாக்கண்ணு பேட்டி

தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்புச் சங்கத்தின் மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் இன்று திருச்சி மாநகர காவல்துறை ஆணையர் காமனியை சந்தித்து மனு அளித்தார். அம்மனுவில் கடந்த சில நாட்களுக்கு முன்பு விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்ட போது அவர்களை காவல்துறையினர் கடுமையாக தாக்கினர்.

இதில் அவர்கள் காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வருகின்றனர். எனவே விவசாயிகள் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது ஆணையர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனு அளித்தார்.

இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அய்யாக்கண்ணு பேசியது... 

இந்தியா ஒரு ஜனநாயக நாடு, விவசாயி தான் குத்தகை செய்யும் நிலத்தில் நெல், வாழை, கரும்பு, எள் போன்றவை சாகுபடி என இதை வேண்டுமானாலும் சாகுபடி செய்லாம்.  ஆனால் வருவாய் நீதிமன்ற நீதிபதி செல்வராஜ் குத்தகை விவசாயிகள் நெல் சாகுபடி மட்டுமே செய்ய வேண்டும். வேறு எந்த பயிறும் சாகுபடி செய்ய கூடாது என மிரட்டுகிறார். 

இது சம்பந்தமாக சென்னை சென்று அத்துறை சார்ந்த உயர் அதிகாரிகளிடம் மனு அளிக்க சென்ற விவசாயிகளை மறித்து கைது செய்தனர். மேலும்,  சென்னையில் சட்டமன்ற ஆரம்பித்துவிட்டது அங்கு சென்றால் மறியலில் ஈடுபடுவிர்கள் என போலீஸ் தடுத்தனர். 


தமிழ்நாட்டில்  பூரண மதுவிலக்கை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் - விவசாயி அய்யாகண்ணு 

தமிழ்நாட்டில் மது கடைகளை மூட வேண்டும்.

விவசாயிகளை தடுத்ததால் அவர்களை விடுவிக்க கோரி செல்போன் டவரில் ஏறி போராட்டம் நடத்தினர். அப்போது  மாநகர காவல்துறையினர் டவரில் மேலே ஏறி விவசாயிகளை இறக்காமல் அடித்தனர்.

காவல்துறை  தாக்குதலுக்கு உட்பட்டவர்கள் தற்போது காயம் ஏற்பட்டு, திருச்சி அரசு மருத்துவமனையில் அவரச சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.  விவசாயிகளை தாக்கிய காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

விவசாயிகள் ஜனநாயக நாட்டில் போராட்டம் நடத்துவது உரிமை. பஸ், ரயிலை மறிக்கவில்லை பொதுமக்களுக்கு எந்த இடையூறுயும் கொடுக்கவில்லை. இது தொடர்பாக மாநகர காவல் ஆணையுடன் புகார் அளித்தோம். அவர்களை சஸ்பெண்ட் செய்து நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் மதுக்கடைகளை மூடி இருக்க வேண்டும். அரசாங்கம் நடத்துவதற்கு அதில் வருமானம் வருகிறது என்பதால் நடத்துகின்றனர்.  அதன் விலை அதிகம் உள்ளதால் குறைந்த விலைக்கு வாங்கி குடித்து இறக்கின்றனர். அதில் இறந்தவர்கள் பெரும்பாலும் விவசாயிகளாக இருக்கின்றனர்.


தமிழ்நாட்டில்  பூரண மதுவிலக்கை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் - விவசாயி அய்யாகண்ணு 

தமிழ்நாட்டில் கள்ளு கடை, சாராய கடை எதுவும் இருக்க கூடாது.. 

சாராயக்கடைகளை மூடினால் தான் தமிழகத்திற்கு விமோஷனம் பிறக்கும், வருங்கால சந்ததியினருக்கு நன்றாக இருக்கும்.  கள்ளு கடை திறக்க வேண்டும் என்று கோரிக்கை வருகிறது என்ற கேள்விக்கு பதில் அளித்த அவர், போதையே இருக்கக் கூடாது என்பதுதான் எங்களது கோரிக்கை. போதை இல்லாத தமிழ்நாடு வளமாக இருந்தது. அந்த நிலைமை மறுபடியும் வரவேண்டும். 

தமிழ்நாட்டில் இளைஞர்கள் நன்றாக இருக்க வேண்டுமென்றால் மது கடைகள் மூடப்பட வேண்டும். பக்கத்து மாநிலத்தில் இருப்பதால் அங்கு இருக்கிறது என்று கூறி நம்மை அழித்துக் கொள்ளக் கூடாது. கள்ளுக்கடை திறக்க வேண்டும் என்று கூறப்பட்டு வருகிறது என்ற கேள்விக்கு. கள்ளு சாராயம் அதிக டேஞ்சர் கள்ளும் சரி, சாராயமும் சரி எதுவும் இருக்கக்கூடாது. பூரண மதுவிலக்கு தமிழகத்தில் நடைமுறைப்படுத்த வேண்டும் என தெரிவித்தார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Weather Update: டிட்வா புயல்.. எங்கு, எப்போது? கரையை கடக்கும் - இன்று எங்கெல்லாம் கனமழை - சென்னை, தமிழக வானிலை அறிக்கை
TN Weather Update: டிட்வா புயல்.. எங்கு, எப்போது? கரையை கடக்கும் - இன்று எங்கெல்லாம் கனமழை - சென்னை, தமிழக வானிலை அறிக்கை
Ditwah Cyclone: மிரட்டும் டிட்வா; கனமழை அலெர்ட் விடுத்துள்ள வானிலை மையம்; 3 மாவட்டங்களுக்கு உதவி எண்கள் அறிவிப்பு
மிரட்டும் டிட்வா; கனமழை அலெர்ட் விடுத்துள்ள வானிலை மையம்; 3 மாவட்டங்களுக்கு உதவி எண்கள் அறிவிப்பு
IND Vs SA: ரோகித், கோலி ரன் மழை தொடருமா? தெ.ஆப்., பழிவாங்குமா இந்தியா? இன்று முதல் ஒருநாள் போட்டி
IND Vs SA: ரோகித், கோலி ரன் மழை தொடருமா? தெ.ஆப்., பழிவாங்குமா இந்தியா? இன்று முதல் ஒருநாள் போட்டி
Ditwah Cyclone: மிரட்டும் டித்வா புயல்.. இன்றும், நாளையும் தமிழ்நாட்டில் ரெட் அலர்ட் - எந்த மாவட்டங்களுக்கு?
Ditwah Cyclone: மிரட்டும் டித்வா புயல்.. இன்றும், நாளையும் தமிழ்நாட்டில் ரெட் அலர்ட் - எந்த மாவட்டங்களுக்கு?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”50 வருஷம் போனதே தெரியல அடுத்த ஜென்மத்தில் நான்...” உணர்ச்சிவசப்பட்ட ரஜினி | Rajini Goa Speech
புரட்டிப்போட்ட டிட்வா புயல் மரத்தில் மாட்டிக்கொண்ட நபர் மூழ்கிய இலங்கை | Sri Lanka Ditwah Cyclone
Hindu Muslim | இதாண்டா தமிழ்நாடு! இந்து-முஸ்லீம் கூட்டு பிரார்த்தனை! கடலூரில் மத நல்லிணக்கம்!
Puducherry CM vs People | ’’ஒரு வாரத்துல நடக்கல..’’முதல்வரை மிரட்டிய நபர்புதுச்சேரியில் பரபரப்பு
Cyclone Ditwah | ’’நெருங்கும் டிட்வா புயல்நவம்பர் 30 சம்பவம் இருக்கு!’’பிரதீப் ஜான் எச்சரிக்கை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather Update: டிட்வா புயல்.. எங்கு, எப்போது? கரையை கடக்கும் - இன்று எங்கெல்லாம் கனமழை - சென்னை, தமிழக வானிலை அறிக்கை
TN Weather Update: டிட்வா புயல்.. எங்கு, எப்போது? கரையை கடக்கும் - இன்று எங்கெல்லாம் கனமழை - சென்னை, தமிழக வானிலை அறிக்கை
Ditwah Cyclone: மிரட்டும் டிட்வா; கனமழை அலெர்ட் விடுத்துள்ள வானிலை மையம்; 3 மாவட்டங்களுக்கு உதவி எண்கள் அறிவிப்பு
மிரட்டும் டிட்வா; கனமழை அலெர்ட் விடுத்துள்ள வானிலை மையம்; 3 மாவட்டங்களுக்கு உதவி எண்கள் அறிவிப்பு
IND Vs SA: ரோகித், கோலி ரன் மழை தொடருமா? தெ.ஆப்., பழிவாங்குமா இந்தியா? இன்று முதல் ஒருநாள் போட்டி
IND Vs SA: ரோகித், கோலி ரன் மழை தொடருமா? தெ.ஆப்., பழிவாங்குமா இந்தியா? இன்று முதல் ஒருநாள் போட்டி
Ditwah Cyclone: மிரட்டும் டித்வா புயல்.. இன்றும், நாளையும் தமிழ்நாட்டில் ரெட் அலர்ட் - எந்த மாவட்டங்களுக்கு?
Ditwah Cyclone: மிரட்டும் டித்வா புயல்.. இன்றும், நாளையும் தமிழ்நாட்டில் ரெட் அலர்ட் - எந்த மாவட்டங்களுக்கு?
MK STALIN: குட்ட குட்ட குனிய மாட்டோம்....மோடி அரசுக்கு எதிராக சீறிய ஸ்டாலின்
குட்ட குட்ட குனிய மாட்டோம்....மோடி அரசுக்கு எதிராக சீறிய ஸ்டாலின்
Ditwah Cyclone:: சுழற்றி அடிக்கும் சூறைக்காற்று... கர்ஜிக்கும் கடல்; தாக்குபிடிக்குமா மரக்காணம்?
Ditwah Cyclone:: சுழற்றி அடிக்கும் சூறைக்காற்று... கர்ஜிக்கும் கடல்; தாக்குபிடிக்குமா மரக்காணம்?
கோலி மீண்டும் களத்தில்! தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக 'கிங்'கின் மிரட்டல் சாதனை
கோலி மீண்டும் களத்தில்! தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக 'கிங்'கின் மிரட்டல் சாதனை
Crop insurance for farmers: விவசாயிகளுக்கு குஷியோ குஷி... பயிர் காப்பீடு செய்ய விலக்கு- தமிழக அரசு அசத்தல் அறிவிப்பு
விவசாயிகளுக்கு குஷியோ குஷி... பயிர் காப்பீடு செய்ய விலக்கு- தமிழக அரசு அசத்தல் அறிவிப்பு
Embed widget