மேலும் அறிய

Crime : திருச்சியில் கொடூரம்.. ஒரே பெண்ணுக்காக மோதிய நண்பர்கள்.. கொலையில் முடிந்த கள்ளக்காதல்..

முத்துப்பாண்டி அப்பெண்ணை சந்திக்க வருவதை சதீஷ் விரும்பவில்லை. அவருடன் இருக்கும் தொடர்பை துண்டிக்குமாறும் முத்துப்பாண்டியை சதீஷ் மிரட்டியுள்ளார்.

திருச்சியில் ஒரே பெண்ணுடன் தகாத உறவில் இருந்த நண்பர்களிடையே ஏற்பட்ட தகராறு கொலையில் முடிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகேயுள்ள கக்கன் காலனியை சேர்ந்த சதீஷ் என்ற சக்திகுமார் என்பவர் வேன் டிரைவராக உள்ளார். இவருக்கு திருமணமாகி ஒரு மகன் இருக்கும் நிலையில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக மனைவி விவாகரத்து பெற்று தனியாக சென்றுவிட்டார். இதையடுத்து மகன் சதீஷின் பெற்றோருடன் வசித்து வருகிறார். அவர் அதே பகுதியில் தனி வீடு எடுத்து வசித்து வந்தார்.

இதற்கிடையில் திருவெறும்பூர் காந்திநகர் சுருளி கோவில் தெருவை சேர்ந்த கார் டிரைவரான முத்துப்பாண்டி என்பவரும் சதிஷூம் நண்பர்களாக இருந்துள்ளனர். இவருக்கு இன்னும் திருமணமாகாத நிலையில் சதீஷ் வீட்டருகே உள்ள பெண் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் அடிக்கடி முத்துப்பாண்டி அப்பெண்ணின் வீட்டுக்கு வருவதை வழக்கமாக வைத்துள்ளார். இதனிடையே சதீஷூக்கும் அந்த பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது. 

இதனால் முத்துப்பாண்டி அப்பெண்ணை சந்திக்க வருவதை சதீஷ் விரும்பவில்லை. அவருடன் இருக்கும் தொடர்பை துண்டிக்குமாறும், இல்லாவிட்டால் அப்பெண்ணின் சகோதர்களிடம் சொல்லி விடுவேன் எனவும் முத்துப்பாண்டியை சதீஷ் மிரட்டியுள்ளார். ஆனால் நேற்று முன்தினம் அப்பெண்ணின் வீட்டுக்கு மீண்டும் முத்துப்பாண்டி வரவே அதனை சதீஷ் தனது வீட்டு வாசலில் இருந்து பார்த்துள்ளார். 

அவரை அழைத்து எவ்வளவு சொல்லியும் கேட்க மாட்டாயா?, இங்கே வராதே என பல முறை சொல்லியும் நீ கேட்கவில்லை.  அப்பெண்ணின் அண்ணனிடம் சொல்லி விட்டேன். அவர்கள் இங்கே வந்து விட்டால் இனி நீ இங்கே வரமுடியாது என கூறியுள்ளார். இதனையடுத்து பயத்தில் முத்துப்பாண்டி தன்னை காப்பாற்றுமாறு சதீஷின் காலில் விழுந்து கெஞ்சியுள்ளார். அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. 

இதில் ஆத்திரமடைந்த முத்துபாண்டி  மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து சதீஷை சரமாரியாக குத்தினார். இதில் சம்பவ இடத்திலேயே சதீஷ் உயிரிழந்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் முத்துப்பாண்டி கத்தியுடன் திருவெறும்பூர் காவல் நிலையத்தில் சரணடைந்தார். இதனைத் தொடர்ந்து வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்த சிறையில் அடைத்தனர். 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடிபில் வீடியோக்களை காண

 

 

தலைப்பு செய்திகள்

விளையாட்டு வீரர்களின் கனவுக்கு பூட்டு... அரசின் கோடிக்கணக்கான முதலீடு வீணாகும் அபாயம்: எங்கு தெரியுங்களா?
விளையாட்டு வீரர்களின் கனவுக்கு பூட்டு... அரசின் கோடிக்கணக்கான முதலீடு வீணாகும் அபாயம்: எங்கு தெரியுங்களா?
தமிழகத்துக்கே முன்மாதிரி... திருடர்களுக்கு ‘செக்’:  ரூ.40 லட்சம் சொந்த நிதியில் 200 சிசிடிவி கேமராக்கள் பொறுத்திய மக்கள்
தமிழகத்துக்கே முன்மாதிரி... திருடர்களுக்கு ‘செக்’:  ரூ.40 லட்சம் சொந்த நிதியில் 200 சிசிடிவி கேமராக்கள் பொறுத்திய மக்கள்
திருச்சி விமான நிலையத்தில் ரூ. 9.21 கோடியில் மழைநீர் வடிகால் பணிகள் துரிதம்
திருச்சி விமான நிலையத்தில் ரூ. 9.21 கோடியில் மழைநீர் வடிகால் பணிகள் துரிதம்
3,575 சதுர மீட்டர்...10 ஆயிரம் மரக்கன்றுகள் திருச்சியில் உருவாகிறது அடர்ந்த ‘மியாவாக்கி’ குறுங்காடு!
3,575 சதுர மீட்டர்...10 ஆயிரம் மரக்கன்றுகள் திருச்சியில் உருவாகிறது அடர்ந்த ‘மியாவாக்கி’ குறுங்காடு!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: விஜய்க்கு தலைவலியாகும் 2 அமைச்சர்கள்..! எச்சரிக்கும் மத்திய அரசு - என்ன காரணம்? ஆக்‌ஷன் பாயுமா?
விஜய்க்கு தலைவலியாகும் 2 அமைச்சர்கள்..! எச்சரிக்கும் மத்திய அரசு - என்ன காரணம்? ஆக்‌ஷன் பாயுமா?
CM Vijay: “விஜய் உயிரோடு இருக்கமாட்டார், தற்கொலைப்படை தாக்குதல்” கொலை மிரட்டல் விடுத்த ஆர்.பி. உதயகுமார்
“விஜய் உயிரோடு இருக்கமாட்டார், தற்கொலைப்படை தாக்குதல்” கொலை மிரட்டல் விடுத்த ஆர்.பி. உதயகுமார்
TN Weather News: இரண்டு நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை - இன்று எங்கெல்லாம் தெரியுமா? தமிழக வானிலை அறிக்கை
இரண்டு நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை - இன்று எங்கெல்லாம் தெரியுமா? தமிழக வானிலை அறிக்கை
Viswanath and Sons: ஒரே நாளில் சக்ஸஸ் மீட்.. சூர்யாவுக்கு என்னாச்சு.. விஸ்வநாத் அண்ட் சன்ஸ் அவ்வளவு தானா?
Viswanath and Sons: ஒரே நாளில் சக்ஸஸ் மீட்.. சூர்யாவுக்கு என்னாச்சு.. விஸ்வநாத் அண்ட் சன்ஸ் அவ்வளவு தானா?
Maruti Baleno: ரூ.6 லட்சம் பட்ஜெட்டில் 30KM மைலேஜ் - ப்ரீமியம் ஹேட்ச்பேக்கில் அதிரடி அப்க்ரேட்கள் - அம்சங்கள், லாஞ்ச்?
ரூ.6 லட்சம் பட்ஜெட்டில் 30KM மைலேஜ் - ப்ரீமியம் ஹேட்ச்பேக்கில் அதிரடி அப்க்ரேட்கள் - அம்சங்கள், லாஞ்ச்?
Kushboo Condemn Nainar Nagendran: “நீங்கள் தெரிவித்த தரம் தாழ்ந்த கருத்து அருவருப்பானது“: நயினார் நாகேந்திரனை வெளுத்துவிட்ட குஷ்பு
“நீங்கள் தெரிவித்த தரம் தாழ்ந்த கருத்து அருவருப்பானது“: நயினார் நாகேந்திரனை வெளுத்துவிட்ட குஷ்பு
Nainar Nagendran : நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
Embed widget